Like us on Facebook

திங்கள், 5 டிசம்பர், 2016

ஜெயலலிதா நடித்த படங்கள்

ஜெயலலிதா நடித்த படங்கள்
6 Dec. 2016 04:29


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கில மொழி திரைப்படங்களில் ஜெயலலிதா நடித்திருக்கிறார். அதன் விவரம் வருமாறு:-
1961-ம் ஆண்டு 2 படங்கள்
1. ஸ்ரீசைல மகாத்மே (கன்னடம்).
2. எபிஸில் (ஆங்கிலம்).
1962-ம் ஆண்டு 1 படம்
மன்மாஜி (இந்தி).
1964-ம் ஆண்டு 2 படங்கள்
1. மனே அலியா (கன்னடம்).
2. சின்னத கொம்பே (கன்னடம்).
1965-ம் ஆண்டு 6 படங்கள்
1. மாவன மகளு (கன்னடம்).
2. மனசிலு, மாமதலு (தெலுங்கு).
3. வெண்ணிற ஆடை.
4. ஆயிரத்தில் ஒருவன்.
5. கன்னித்தாய்.
6. நன்ன கர்டவியா (கன்னடம்).
1966-ம் ஆண்டு 16 படங்கள்
1. முகராசி.
2. தனிப்பிறவி.
3. ஆஸ்திபரூலு (தெலுங்கு).
4. சந்திரோதயம்.
5. கன்னித்தாய்.
6. பதூகுவா தாரி (கன்னடம்).
7. கவுரி கல்யாணம்.
8. மேஜர் சந்திரகாந்த்.
9. மணி மகுடம்.
10. ஏமே எவரு? (தெலுங்கு).
11. குமரிப்பெண்.
12. நவராத்திரி (தெலுங்கு).
13. யார் நீ?
14. நீ
15. குடச்சாரி 116 (தெலுங்கு).
16. மோட்டார் சுந்தரம்பிள்ளை
1967-ம் ஆண்டு 10 படங்கள்
1. தாய்க்கு தலைமகன்.
2. ஆபூர்வ பிறவிகள்.
3. நான்.
4. மாடிவீட்டு மாப்பிள்ளை.
5. அரசக் கட்டளை.
6. சிக்கடு தொரகாடு (தெலுங்கு).
7. கோபாலுடு பூபாலுடு (தெலுங்கு).
8. காவல்காரன்.
9. கந்தன் கருணை.
10. ராஜா வீட்டுப்பிள்ளை.
1968-ம் ஆண்டு 21 படங்கள்
1. பணக்கார பிள்ளை.
2. எங்க ஊர் ராஜா.
3. புதிய பூமி.
4. தேர் திருவிழா.
5. பிரம்மச்சாரி (தெலுங்கு).
6. குடியிருந்த கோவில்.
7. மூன்று எழுத்து.
8. முத்துச்சிப்பி.
9. காதல் வாகனம்.
10. கணவன்.
11. கலாட்டா கல்யாணம்.
12. சுகா துக்காலு (தெலுங்கு).
13. பொம்மலாட்டம்.
14. கண்ணன் என் காதலன்.
15. நிலவு தொப்பிடி (தெலுங்கு).
16. பாக்தாத் கஜதோங்கா (தெலுங்கு).
17. ஒலி விளக்கு
18. இசாத் (இந்தி).
19. ரகசிய போலீஸ் 115.
20. அன்று கண்ட முகம்.
21. திக்கா சங்கரய்யா (தெலுங்கு).
1969-ம் ஆண்டு 11 படங்கள்
1. ஸ்ரீ ராம கதா (தெலுங்கு).
2. அடர்சா குடும்பம் (தெலுங்கு).
3. நம் நாடு.
4. அதிர்ஷ்டவந்தலு (தெலுங்கு).
5. தெய்வ மகன்.
6. குருதட்சணை.
7. காதனாக்குடு (தெலுங்கு).
8. காதலாடு வாதலாடு (தெலுங்கு).
9. மாட்டுக்கார வேலன்.
10. காந்திகோட ரகசியம் (தெலுங்கு).
11. அடிமைப்பெண்.
1970-ம் ஆண்டு 11 படங்கள்
1. அனாதை ஆனந்தன்.
2. அக்கா செல்லேலு (தெலுங்கு).
3. அலிபாபா 40 தொங்கலு (தெலுங்கு).
4. தேடி வந்த மாப்பிள்ளை.
5. எங்க மாமா.
6. எங்கள் தங்கம்.
7. ஸ்ரீ கிருஷ்ண விஜயம்(தெலுங்கு).
8. தர்ம தாதா (தெலுங்கு).
9. எங்கிருந்தோ வந்தாள்.
10. என் அண்ணன்.
11. பாதுகாப்பு.
1971-ம் ஆண்டு 9 படங்கள்
1. சுமதி என் சுந்தரி.
2. ஆதி பராசக்தி.
3. அன்னை வேளாங்கண்ணி.
4. சவாலே சமாளி.
5. தங்க கோபுரம்.
6. பார்யா பித்தாலு (தெலுங்கு).
7. குமரி கோட்டம்.
8. ஒரு தாய் மக்கள்.
9. நீரும் நெருப்பும்.
1972-ம் ஆண்டு 9 படங்கள்
1. அன்னமிட்ட கை.
2. பட்டிக்காடா பட்டணமா.
3. ஸ்ரீ கிருஷ்ண சத்யா (தெலுங்கு).
4. ராஜா.
5. அக்கா தம்புடு (தெலுங்கு).
6. ராமன் தேடிய சீதை.
7. நீதி.
8. திக்கு தெரியாத காட்டில்.
9. சக்தி லீலை.
1973-ம் ஆண்டு 8 படங்கள்
1. தேவுடு செசினா மனுசுலு (தெலுங்கு).
2. பாக்தாத் பேரழகி.
3. டாக்டர் பாபு (தெலுங்கு).
4. பட்டிக்காட்டு பொன்னையா.
5. ஜீசஸ் (மலையாளம்).
6. வந்தாளே மகராசி.
7. கங்கா கவுரி.
8. சூர்யகாந்தி.
1974-ம் ஆண்டு 7 படங்கள்
1. அன்பைத்தேடி.
2. அன்பு தங்கை.
3. தாய்.
4. இரு தெய்வங்கள்.
5. பிரேமலு பேலிலு (தெலுங்கு).
6. வைரம்
7. திருமாங்கல்யம்.
1975-ம் ஆண்டு 4 படங்கள்
1. அவளுக்கு ஆயிரம் கண்கள்.
2. யாருக்கும் வெட்கம் இல்லை.
3. அவன்தான் மனிதன்.
4. பாட்டும் பரதமும்.
1976-ம் ஆண்டு 2 படங்கள்
1. கணவன் மனைவி.
2. சித்ரா பவுர்ணமி.
1977-ம் ஆண்டு 2 படங்கள்
1. ஸ்ரீ கிருஷ்ண லீலை.
2. உன்னை சுற்றும் உலகம்.
1980-ம் ஆண்டு 4 படங்கள்
1. மாற்றான் தோட்டத்து மல்லிகை. (படம் வெளியாகவில்லை).
2. மணிப்பூர் மாமியார் (ப(.டம் வெளியாகவில்லை).
3. நதியை தேடி வந்த கடல்.
4. நாயகுடு வினாயகுடு (தெலுங்கு).
1982-ம் ஆண்டு 1 படம்.
1. நீங்க நல்லா இருக்கணும்.


3 வது முறையாக முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம்

3 வது முறையாக முதல்வரானார் ஓ.பன்னீர் செல்வம்
6 Dec. 2016 06:27


சென்னை, டிச.06 (டி.என்.எஸ்) தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு உயிரிழந்ததை தொடர்ந்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்றார்.
கடந்த 72 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதா, நேற்று இரவு 11.30 மணிக்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அதற்கு முன்பாக அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிய வந்ததை தொடர்ந்து, நேற்று காலை அதிமுக எம்.எல்.ஏ-க்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திலேயே ஜெயலலிதாவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருப்பார், என்ற முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்து. இதையடுத்து முதல்வரின் உடல் சென்னை போயஸ் கார்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பிறகு, நேற்று இரவு 1.30 மணியளவில் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் வித்யாசகர் பதவி பிராமணம் செய்து வைத்தார்.
அவரைத் தொடர்ந்து 31 அமைச்சர்களும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்கள்.


தமிழகத்தை கலங்க வைத்த டிசம்பர்

தமிழகத்தை கலங்க வைத்த டிசம்பர்
தினமலர் 6 Dec. 2016 04:40
தமிழகத்தைப் பொறுத்த வரை டிசம்பர் மாதம் இழப்பை ஏற்படுத்தும் மாதமாகவே அமைந்துள்ளது.1972, டிசம்பர், 25- சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி காலமானார்.1973, டிசம்பர், 24- தி.க. தலைவர் ஈ.வே.ரா., காலமானார்1987, டிசம்பர், 24- முதல்வர் எம்.ஜி.ஆர்., காலமானார்.2004, டிசம்பர், 26- சுனாமி எனும் பேரலை தாக்கி தமிழகத்தில் பல உயிர்கள் பலியாயின2015, டிசம்பர், 1- சென்னை, கடலூர் பகுதிகளில் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.2016, டிசம்பர், 5- முதல்வர் ஜெயலலிதா காலமானார்.


திங்கள், 14 நவம்பர், 2016

500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வழிமுறைகள்!

500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வழிமுறைகள்!

💰 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் நவம்பர; 9 லிருந்து வழக்கத்திலிருந்து நீக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், 500 மற்றும் 1000 ரூபாய்களை நோட்டுகளை முறையாக மாற்றுவதற்கான வழிமுறைகளை ரிசர;வ் வங்கி அறிவித்துள்ளது.

எதற்கு இந்த மாற்றம்?
💰 நம் நாட்டில் கள்ளநோட்டு மற்றும் கருப்புப் பணத்தை புழக்கத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வழிமுறைகள் என்ன ?

💸 பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நவம்பர; 8ம் தேதியோடு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து அதற்கு நிகரான 500 மற்றும் 2000 ரூபாய் புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

💸 பணப் தட்டுப்பாட்டால் தற்போதைய சு+ழ்நிலையில் தனி ஒரு நபர; ரூ.4,000 மட்டுமே வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும். மீதத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

💸 தற்போதைய நிலையில், முழு தொகையையும் புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள முடியாது. மத்திய அரசு அதனை அனுமதி கொடுக்கவில்லை.

💸 உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைத்து, அதனை காசோலை, டிடி, நெட் பேங் மூலம் பணப் பரிவர;த்தனைகளை செய்து கொள்ளலாம்.

💸 வங்கிகளுக்கு நேரடியாக செல்ல இயலாதவர;கள் அத்தாட்சிக் கடிதத்துடன் பிரதிநிதிகளை அனுப்பிவைக்கலாம்.

💸 ஜன்-தன் யோஜனா கணக்கு மட்டும் வைத்திருப்போர;, வங்கிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.

எங்கு ? எப்படி ?

💸 ரிசர;வ் வங்கி, அனைத்து வங்கி மற்றும் வங்கிக் கிளைகள், கூட்டுறவு வங்கிகள், தலைமை தபால் நிலையம் மற்றும் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.

💸 நவம்பர் 24-ம் தேதி வரை பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 4 ஆயிரம் ரூபாய் வரை வங்கிகள், அஞ்சலகங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

💸 அதற்கு மேல் உள்ள தொகையை அவர;களது வங்கிக் கணக்கில் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ரூ.4000-க்கு மேலான தொகையை மாற்றிக் கொள்ள, அவர;களது வங்கிக் கணக்கில் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம்

💸 நவம்பர; 10-ம் தேதி முதல் டிசம்பர; 30-ம் தேதி வரை பழைய நோட்டுகளை வங்கி மற்றும் அஞ்சலக கணக்குகளில் மாற்றலாம். இந்தக் கால அவகாசத்தில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வங்கிகளில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

💸 வாரத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை வரும் காலங்களில் படிப்படியாக அதிகரிக்கப்படும். யுவுஆ-கள் இயங்க தொடங்கி சில நாட்களுக்கு ஒரு அட்டைக்கு 2 ஆயிரம் ரூபாய், வாரத்திற்கு 4 ஆயிரம் ரூபாயும் எடுத்துக் கொள்ளலாம். இத்தொகை பின்னர; படிப்படியாக அதிகரிக்கப்படும்.

💸 காசோலை, வரைவோலை, கிரெடிட் மற்றும் டெபிட் கார;டுகள், நெட் பேங்க்கிங், ஃபண்ட் டிரான்ஸ்ஃபர; ஆகிய பரிமாற்றத்தில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.

💸 அரசு மருத்துவமனைகள், அஞ்சலகங்கள், பெட்ரோல் நிலையம், விமான நிலையங்களில் உள்ள டிக்கெட் மையங்கள், ரயில் டிக்கெட் நிலையங்கள், அரசு பேருந்து மையம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பால் நிலையங்கள் ஆகியவற்றில் நவம்பர; 11-ம் தேதி வரை 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் ஒன்றிணைவோம் !

கறுப்புப் பணத்தை ஒழிப்போம் !!!


புதன், 9 நவம்பர், 2016

முருகனின் வேறு கோலங்கள்!

முருகனின் வேறு கோலங்கள்!



🌟 “முருகு” என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும்;. தமிழ்நாட்டில் முருகன் கோவில்கள், முருக வழிபாடு மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. தமிழ் மொழி மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கடவுளாக முருகப்பெருமான் இருக்கிறார்.

🌟 வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை! முருகன் இருக்க துன்பமில்லை! முருகன் என்று சொன்னால் நினைவுக்கு வருவது மயிலும், வேலும் தான். இந்த கோலம் தவிர முருகனுக்கு வேறு சில கோலங்களும் உள்ளது அதைப் பற்றிப் பார்ப்போம்.

🌀 திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், மூல ஸ்தானத்தில் முருகன் வில்லேந்தியபடி வள்ளி தெய்வானை உடனிருக்க அருள்கிறார்.

🌀 ஆறுமுகன், வள்ளி, தெய்வானை மூவரும் தனித்தனியே மயில் மீது காட்சி தரும் திருத்தலம் திருச்சி அருகே உள்ள திண்ணியம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

🌀 குடந்தை அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் தூண் சிற்பமாக, வேல் ஏந்திய முருகன் மயில் மீது கால் வைத்து நிற்கிறார்.

🌀 சென்னிமலை கோவிலில் குடிக்கொண்டிருக்கும் 'அக்னி ஜாத சுப்பிரமணியர்" இரண்டு தலைகளுடனும், 'சௌரபேய சுப்பிரமணியர்" நான்கு தலைகளுடனும் காட்சி அளிக்கிறார்.

🌀 மதுராந்தகம் பக்கமுள்ள குமார வாடி தலத்திலுள்ள கோவிலில், முருகப் பெருமான் யோக நிலையில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.

🌀 பு+ம்புகார் அருகில் உள்ள சாயா வனம் எனும் தேவாரப் பாடல் பெற்ற பதியில், மூன்றடி உயரத்தில் வில் ஏந்திய முருகன் சிலை உள்ளது.

🌀 மலையைக் குடைந்து வடிக்கப் பெற்ற முருக வேலையும், தேவ குஞ்சரியையும் திருப்பரங்குன்றத்தில் தரிசிக்கலாம்.

🌀 கர்நாடகத்தில் உள்ள 'சுப்ரமணியர்" திருத்தலத்தில் முருகன் புற்று வடிவமாய் காட்சியளிக்கிறார்.

🌀 கரூர் அருகே உள்ள வெண்ணெய் மலை எனும் தலத்தில் வேல், மயில், வள்ளி-தெய்வானை இல்லாமல் தனியாகக் காட்சியளிக்கிறார் முருகப் பெருமான்.

🌀 மூன்று தலைகளையும், ஆறு கரங்களையும் உடைய முருகனை ஈரோடு மாவட்டத்திலுள்ள காசிப்பாளையத்தில் காணலாம்.

🌀 திருச்செந்தூரில் திருவிழா நாட்களில் முருகப் பெருமான், வில்லும் அம்பும், வேலும் வஜ்ராயுதமும் நான்கு கரங்களில் ஏந்திய வண்ணம் வீதி உலா வருகிறார். சங்கு சக்கர முருகன் தனது மாமன் திருமாலைப் போலவே, வலக்கரத்தில் சக்கரமும், இடதுகரத்தில் சங்கும் தாங்கியவராக ஆறுமுகப் பெருமான் மயில் மீது அமர்ந்துள்ள காட்சி வேறெங்கும் காணமுடியாத அபு+ர்வக் காட்சியாகும்.

ஆன்மீக தகவல்கள் :

🌠 திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பு+சிக்கொள்ள சிவ கதி எளிமையாக கிடைக்கும்.

🌠 அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து பு+சிக்கொள்ள கூடாது.

🌠 பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது.


கோவிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்?

கோவிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்?



🌷 மலர்கள் பல வகையாக உள்ளன. அவற்றின் தோற்றம் மற்றும் அதன் மணம் நமக்கு மிகவும் காணதக்கதாக அமைகிறது. நாம் கோவிலுக்கு மலர்களை எடுத்து செல்வது மற்றுமன்றி நாம் கடவுளிடம் வைத்து வணங்குவது மிகவும் நல்லது.

🌷 ஆலயங்களில் நமக்கு அளிக்கப்படும் மலர்கள் மற்றும் அனைத்து பிரசாதங்களும் நிர்மால்யம் என போற்றப்படுகிறது. நிர்மால்யம் எனில் அழுக்கற்றது, தூய்மையானது. அவற்றில் இறைவனின் அருட்சக்தி நிறைந்து இருக்கும். அவற்றை வெறும் மலர் என்றோ அன்னம் என்றோ பார்க்கக்கூடாது.

🌷 பின்பு பெண்கள் கோவிலில் கொடுக்கும் மலர்களை வாங்கி கண்களில் பற்றி கொண்டு பின்னர் தலையில் வைப்பது மிகவும் நல்லது. ஆலயத்தின் வெளியே வந்து தான் மலர்களை பெண்கள் தலையில் சு+ட வேண்டும் என்பது ஒரு ஐதீகம்.

🌷 ரூபாய் நோட்டுக்கும் வெறும் தாளுக்கும் வேறுபாடு இருக்கிறது. ரூபாய் நோட்டுக்களில் அதனில் பதிக்கப்பட்ட எண்களைப் பொறுத்து மதிப்பு மாறுகிறது. அது போன்று ஒவ்வொரு கடவுளின் பிரசாதமும் ஒவ்வொரு சக்தி உடையது. அவற்றை நாம் பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டு, நமது நெற்றியிலும், இருதயத்திலும் வைத்து அந்த இறை அருள் நம்முள் உட்புகுவதாக எண்ணுதல் வேண்டும்.

🌷 பிறகு வீட்டில் பு+ஜை அறை இருப்பின் அங்கு வடக்கிலோ, வடகிழக்கு திசையிலோ ஒரு தாம்பாளத்தின் மீது மலர்களை வைத்துவிடல் வேண்டும். வீட்டில் பெண்கள் அவற்றிலிருந்து சிறிது எடுத்து பக்தியுடன் தலையில் வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காய்ந்த மலர்களை நீர்நிலைகளிலோ, மரங்களின் கீழோ வைத்திட வேண்டும். நமது வீட்டில் உள்ள இறை உருவங்களுக்கு கோவிலில் கொடுக்கும் மலர்களை சாற்றுதல் கூடாது.


ஐயப்பனின் வேறு பெயர்கள்

ஐயப்பனின் வேறு பெயர்கள்

  சாமியே சரணம் ! ஐயப்பா சரணம் ! என்று சரண கோஷமிட்டு சபரி மலை நோக்கி செல்லும் பக்தர்களுக்கு ஐயனின் வேறு பெயர்கள் பற்றி தெரியுமா என்றால் சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் பலருக்கு தெரியாது.

  18-ஆம் படி மேல் வாழும் நெய் அபிஷேக பிரியன் ஐயப்பனை வணங்க துன்பங்கள் அனைத்தும் பயந்து ஓடும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ஐயப்பனின் பெயர்கள் அனைத்தும் தெரிந்ததிருக்க வேண்டும். இது ஆன்ம ஞானத்திற்கு உகந்ததாகும். ஐயப்பனின் வேறு சில பெயர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

🌟 மணிகண்டன்.

🌟 பு+தநாதன்.

🌟 பு+லோகநாதன்.

🌟 தர்மசாஸ்தா எருமேலிவாசன்.

🌟 ஹரிஹரசுதன்.

🌟 ஹரிஹரன்.

🌟 கலியுகவரதன்.

🌟 கருணாசாகர்.

🌟 லக்ஷ்மண பிராணதத்தா.

🌟 பந்தளவாசன்.

🌟 பம்பாவாசன்.

🌟 ராஜசேகரன்.

🌟 சபரி.

🌟 சபரீஷ்.

🌟 சபரீஷ்வரன்.

🌟 சபரி கிரீஷ்.

🌟 சாஸ்தா.

🌟 வீரமணி.

  இந்த பெயர்கள் அனைத்தும் அப்பன் ஐயப்பனின் முக்கியமான பெயர்களாகும். இந்த பெயரை சொல்லி துன்பங்களை நினைத்தால் நினைத்த வேகத்தில் துன்பங்கள் பறந்து ஓடும். கூப்பிட குரலுக்கு ஓடி வரும் சபரி கிரி நாதனை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.


ஏழு மலையானின் பெயர் காரணங்கள்!

ஏழு மலையானின் பெயர் காரணங்கள்!



 திருப்பதி மலையில் வாழும் ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் ஏழுமலையான் என்று அழைக்கிறார்கள். ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட திருமலை நாதனுக்கு ஏழுமலையான் என்று பெயர் வர காரணம் தெரியுமா? ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஏழு மலைகள் உள்ளது. ஒவ்வொரு மலையின் பெயரிலும் ஒரு அர்த்தம் உள்ளது. ஏழு மலைகளை கொண்டுள்ளதால் ஏழுமலையான் என்று அனைவரும் அன்புடன் அழைக்கின்றனர். அந்த ஏழு மலைகளைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.

ஒன்றாம் மலை :

🌟 'வேம்" என்றால் பாவம், 'கட" என்றால் 'நாசமடைதல்". பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இந்த மலைக்கு 'வேங்கட மலை" என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

இரண்டாம் மலை :

🌟 பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். அவதாரத்திற்காக வந்த ஆதிசேஷன் பெயரால் 'சேஷமலை" என்று அழைக்கப்படுகிறது.

மூன்றாம் மலை :

🌟 வேதங்கள் அனைத்தும் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பு+ஜித்தன. எனவே இது 'வேத மலை" என்று அழைக்கப்படுகிறது.

நான்காம் மலை :

🌟 சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இந்த மலை 'கருட மலை" எனப் பெயர் பெற்றது.

ஐந்தாம் மலை :

🌟 விருஷபன் என்ற அசுரன், சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றதால் இம்மலைக்கு 'விருஷப மலை" எனப் பெயர் வந்தது.

ஆறாம் மலை :

🌟 ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை 'அஞ்சன மலை" எனப்படுகிறது.

ஏழாம் மலை :

🌟 ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்குமிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும், ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இந்த மலைக்கு 'ஆனந்த மலை" என்று பெயர் வந்தது. இந்த ஏழுமலைகளின் காரணமாக திருப்பதி வெங்கடாசலபதிக்கு ஏழுமலையான் என்று பெயர் வந்தது.


செவ்வாய், 8 நவம்பர், 2016

கருப்பு பணத்தை மீட்க மோடி அதிரடி நடவடிக்கை

கருப்பு பணத்தை மீட்க மோடி அதிரடி நடவடிக்கை : இன்று இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது


பதிவு செய்த நேரம்:2016-11-08 20:05:21


புதுடெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். நாட்டு மக்களுடன் பல முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக மோடி தெரிவித்தார். உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக சர்வதேவ செலவாணி நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாக மோடி தெரிவித்தார். ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காகவே தமது அரசு அர்ப்பணிப்புடன் பாடுபடுவதாக தெரிவித்த மோடி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தமது அரசின் இலக்காகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் ஊழலும், கருப்பு பணமும் நாட்டின் உறுதி நிலையை சீர்குலைப்பதாக மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். வறுமையை ஒழிப்பதே தமது அரசின் குறிக்கோள் என்றும், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மோடி தெரிவித்தார். 1.25 லட்சம் கோடி கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். எல்லைக்கு அப்பால் உள்ளவர்கள் தீவிரவாதிகளுக்கு பண உதவி அளித்து வருவதாகவும், பயங்கரவாதிகளுக்கு கொடுக்க எதிரிகள் கள்ள நோட்டுகளை அச்சிடுவதாகவும், பாகிஸ்தானை பிரதமர் மோடி மறைமுகமாக சாடினார். தவறுகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது என மோடி தெரிவித்தார்.

இன்று இரவு 12 மணி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோர் அடையாள அட்டை காட்ட வேண்டும், இதற்காக வங்கிகளில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்படும் என்று மோடி தெரிவித்தார். மேலும் நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம். வேலை செய்யாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நவம்பர் 10 முதல் வங்கி மற்றும் தபால் நிலையங்களிலும் ஒப்படைக்கலாம் என்றும், வங்கிகள் ஏற்றுக் கொள்ளாத பணத்தை ரிசர்வ் வங்கியில் கொண்டு மாற்றி கொள்ளலாம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இன்று இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது

500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்

500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோர் அடையாள அட்டை காட்ட வேண்டும்

டிசம்பர் 30-ம் தேதிக்குள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்

டிசம்பருக்கு பிறகு கையிருப்பில் ரூ.500, 1000 நோட்டுகளை மாற்ற முடியாது

நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம். யைமங்கள் வேலை செய்யாது

அரசு மருத்துவமனைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 11-ம் தேதி வரை வாங்கி கொள்வார்கள்

அஞ்சலகங்களிலும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை 100 நோட்டுகளாக மாற்றலாம்

நவம்பர் 11-ம் தேதி வரை பெட்ரோல் பங்குகள் ரயில் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டு செல்லும்

விமான நிலையங்களிலும் ரூ.500, 1000 நோட்டுகள் நவம்பர் 11-ம் தேதி வரை செல்லும் என அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை விடுமுறை என பிரதமர் மோடி அறிவிப்பு

பழைய நோட்டுகளை பெற்றுக் கொண்டு புதிதாக ரூ.500 மற்றும், ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்படும்

மத்திய அரசின் நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது


செவ்வாய், 18 அக்டோபர், 2016

உள்ளாட்சி தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு நீடிப்பு

உள்ளாட்சித் தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு நீடிப்பு
Updated: October 18, 2016 12:13 IST | பால சரவணக்குமார்


திமுக தரப்பும், மாநிலத் தேர்தல் ஆணையமும் 4 வாரங்களுக்குள்

பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரும் மாநிலத் தேர்தல் ஆணைய மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். இதனால், உள்ளாட்சித் தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கில் திமுக தரப்பும், மாநிலத் தேர்தல் ஆணையமும் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் ரத்து உத்தரவுக்கு தடை கோரிய மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மனு இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை உயர் நீதிமன்றம் 2-வது அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழக அரசு மற்றும் திமுக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது மேலும் 4 வாரங்களுக்கு தொடர்கிறது.

வழக்கு பின்னணி:

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் முறைப்படி வெளியிடாததால், தேர்தல் குறித்த அறிவிப்பாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், 17, 19-ம் தேதிகளில் நடக்க இருந்த உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. விதிமுறைகளின்படி, புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணை 18 ஆம் தேதி (இன்று) நடைபெறும் என்று தெரிவித்திருந்தது.

அதன்படி, இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசுக்கும், திமுகவுக்கும் நோட்டீஸ் அனுப்பி வழக்கை மேலும் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.


வெள்ளி, 14 அக்டோபர், 2016

முருகனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

முருகனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!



  'வேலனை வணங்குவதே நமது முதல் வேலை" என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவன் குமரன். அவனை பற்றிய சில தகவல்களை இங்கு பார்ப்போம்.

🌸 முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம் என்னும் ஆறு பகைவர்களை முருகன் அழித்தார்.

🌸 முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

🌸 கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரத்தை தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

🌸 முருகப்பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகியவை உகந்த நாட்கள் ஆகும்.

🌸 முருகன் கங்கையால் தாங்கப்பட்டதால் காங்கேயன் என்றும், சரவணப் பொய்கையில் உதித்ததால் சரவண பவன் என்றும், கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

🌸 அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான். மலைகளில் குடிகொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றொரு பெயர் உள்ளது. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

🌸 முருகனின் துதியை போற்றுவோம். துன்பம் இல்லாமல் நன்மையை பெறுவோம்.

ஆண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் :

ஆண் நட்சத்திரம் - விசாகம் 4-ம் பாதம்.

பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரம் - சதயம்.

ஆண் நட்சத்திரம் - அனுஷம்.

பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரம் - உத்திராடம் 2, 3, 4, பு+ரட்டாதி, ரேவதி, உத்திரம்.

ஆண் நட்சத்திரம் - கேட்டை.

பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரம் - திருவோணம், அனுஷம்.


சூரசம்ஹாரம் நடத்துவது ஏன் ❓

🌠 சு+ரசம்ஹhரம் நடத்துவது ஏன்? 🌠



  அழகு என்ற சொல்லுக்கு முருகன் என்று பெயர். முருகனை நினைத்தால் நினைத்தது நிறைவேறும். அசுரர்களை அழிக்க சிவனின் நெற்றி பொறியில் இருந்து பிறந்த குழந்தை தான் குமரன். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரம் குடிக்கொள்வான். வேண்டியதை அருளும் குமரனின் ஆலயத்தில் சு+ரசம்ஹhரம் நடத்துவது ஏன் தெரியுமா? ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு காரணமுண்டு. அதுப்போல் இந்த நிகழ்விற்கும் ஒரு புராணக்கதை உண்டு.

🌀 கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சு+ரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள். சு+ரபத்மனுக்கு அசுரமுகம். தாரகனுக்கு யானைமுகம். சிங்கமுகனுக்கு சிங்கமுகம். இவர்கள் குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவனை நோக்கித் தவமிருந்தனர்.

🌀 தவப்பயனாக 1008 அண்டங்களையும் ஆட்சிசெய்யும் வரம் பெற்றனர். சு+ரியன், சந்திரன், அக்னிதேவன், குபேரன் முதலிய தேவர்கள் அனைவரும் அசுரர்களின் பணியாளர்களாக மாறினர்.

🌀 தேவர்கள் பிரம்மாவிடம் சென்று தங்கள் நிலையைச் சொல்லி வருந்தினர். சு+ரபத்மனை அழிக்க சிவனால் மட்டுமே முடியும். அதனால் அவரிடம் முறையிட்டால் விடுதலை கிடைக்கும், என்றார் பிரம்மா. தேவர்களும் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். அவருக்கு சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம், அதோமுகம் ஆகிய ஆறு முகங்கள் உண்டு.

🌀 அவற்றில் இருந்து ஆறுநெருப்புப் பொறிகளை உண்டாக்கினார். அவை சரவணப்பொய்கையில் விழுந்து குழந்தைகளாக மாறின. அவற்றை ஒன்று சேர்த்த போது கந்தன் உருவானார். இவர் சு+ரபத்மனை வெற்றி கொண்டு தேவர்களைக் காத்தார். ஐப்பசி சஷ்டிதிதியில் சு+ரசம்ஹhரம் நிகழ்ந்ததாக ஐதீகம். இந்நாளில் அசுரர்களை அழித்து மக்களை காக்க முருகன் சு+ரசம்ஹhரம் நடத்துவார்.


கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன் ❓

கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்?



  கருணையின் முகம் காண கடவுளை தான் பார்க்க வேண்டும். அன்பின் உருவம் கொண்ட இறைவனை காண கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனுக்காக தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்கிறார்கள். தேங்காயில் அப்படி என்ன விஷேசம் இருக்கிறது. ஏன் அதனை கோவில்களில் உடைக்கிறார்கள்.

👉 தேங்காயை தரும் தென்னை மரம், மக்களுக்கு தம்மிடம் உள்ள அனைத்தையும் தந்து உதவுகிறது. இவற்றின் எந்த பாகமும் வீண் ஆவதில்லை. மனிதனும் அப்படி உலகுக்குப் பயன்பட வேண்டும்.

👉 உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை குறிக்கிறது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.

👉 இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை குறிக்கிறது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது.

👉 அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறைக்கின்றது.

👉 இறைவனின் சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளால் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயல் தான் தேங்காய் உடைப்பது.

👉 இதன் காரணமாகவே முதலில் தேங்காய் உடைத்து பிறகு இறைவனுக்கு பு+ஜை செய்கின்றனர்.


லட்சுமியின் பலன்கள்

லட்சுமியின் பலன்கள்


🌟 ஸ்ரீதனலட்சுமி - போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பெறலாம்.

🌟 ஸ்ரீவித்யாலட்சுமி - யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.

🌟 ஸ்ரீதான்யலட்சுமி - தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான்யட்சுமியின் அருளை பெறலாம்.

🌟 ஸ்ரீவரலட்சுமி - செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

🌟 ஸ்ரீசௌபாக்யலட்சுமி - பிறர் மனது நோகாமல் நடந்தால் சௌபாக்கிய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

🌟 ஸ்ரீசந்தானலட்சுமி - தாயன்புடன் ஸ்ரீசந்தானலட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

🌟 ஸ்ரீகாருண்யலட்சுமி - ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்தால் ஸ்ரீகாருண்யலட்சுமியின் அருளைப் பெறலாம்.

🌟 ஸ்ரீமகாலட்சுமி - பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஸ்ரீமகாலட்சுமி பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.

🌟 ஸ்ரீசக்திலட்சுமி - நம்பிக்கையுடன் ஒரு வேலையை செய்தால் ஸ்ரீசக்திலட்சுமி சக்தியைக் கொடுப்பாள்.

🌟 ஸ்ரீசாந்திலட்சுமி - ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

🌟 ஸ்ரீசாயாலட்சுமி - பலனை எதிர்பாராமல் ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.

🌟 ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி - பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.

🌟 ஸ்ரீசாந்தலட்சுமி - பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

🌟 ஸ்ரீகிருத்திலட்சுமி - நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால் ஸ்ரீகிருத்திலட்சுமியின் அருள் கிடைக்கும்.

🌟 ஸ்ரீவிஜயலட்சுமி - விடாமுயற்சியும், உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.

🌟 ஸ்ரீஆரோக்கிய லட்சுமி - கோபம், பொறுமை, பேராசை போன்றவற்றை நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கியலட்சுமியை வணங்க வேண்டும்.


யாரை வணங்கினால் என்ன பலன் ❓

யாரை வணங்கினால் என்ன பலன்?



🌸 ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஓர் தீர்வு நிச்சயம் உண்டு. தெய்வத்தினை வணங்கினால் அந்த தீர்வு நல்லதாக அமையும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு தெய்வத்தினை வணங்க வேண்டும். நாம் வணங்கும் தெய்வத்திற்கு மலர்கள் கொண்டு பு+ஜித்து வழிபட வேண்டும்.

🌸 தீபம் ஏற்றுவது, அர்ச்சனை செய்வது அபிஷேகம் செய்வது போன்ற தங்களின் வசதிகளுக்கு ஏற்ப தெய்வத்திற்கு ஆராதனை செய்யலாம். எந்த தெய்வத்தினை வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.

🌠 காளி தேவியை வழிபட்டால் பகைவனை வெல்ல முடியும்.

🌠 செல்வம் நிறைந்து இருக்க வேண்டும் என்றால் குபேரர், லட்சுமி, சண்டியை பு+ஜை செய்து வழிபட வேண்டும்.

🌠 அரசர்களை கவர சாம்பவி பு+ஜை செய்து தேவியை வழிபட வேண்டும்.

🌠 துர்க்கையை வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பம் பிறக்கும்.

🌠 மறுமையில் நன்மை பெற வேண்டும் என்றால் துர்க்கையை வழிபட வேண்டும்.

🌠 சுபத்திரையை வழிபாடு செய்தால் மனவிருப்பம் நிறைவேறும்.

🌠 துர்க்கை அம்மனை வழிபாடு செய்தால் போரில் வெற்றிபெற முடியும்.

🌠 ரோகிணியை வணங்க தீராத நோயும் தீரும்.

கசக்கும் கணிதத்தை கற்கண்டாக மாற்ற வேண்டுமா?



நித்ரா கணிதம் மற்றும் அறிவுக்கூர்மை புத்தகம் 480 பக்கங்கள்

எளிமையான தீர்வுகளுடன் 1100 கும் மேற்பட்ட வினா விடைகள் விளக்கமாக.

ஒவ்வொரு வினாவிற்கும் இரண்டிற்கும் மேற்பட்ட தீர்வுகள்.

முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களின் தொகுப்பு இலவச இணைப்பாக


ஹோமங்களின் வகைகள்

ஹோமங்களின் வகைகள்

  ஹோமங்கள் புது வீடு கட்டி புதுமனை புகுவிழா, கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பரிகாரங்களுக்காக நடத்தப்படுகிறது. பல வகையான ஹோமங்கள் உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

🌟 மகா கணபதி ஹோமம் - தடையின்றி செயல்கள் நடைபெறவும், லட்சுமி கடாட்சம் பெறவும் மகா கணபதி ஹோமம் செய்தால் நல்லது கிட்டும்.

🌟 சந்தான கணபதி ஹோமம் - நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் அமர்ந்து செய்திட, புத்திர பாக்கியம் கிட்ட சந்தான கணபதி ஹோமம் செய்தால் நல்லது.

🌟 சண்டி ஹோமம் - தரித்திரம், பயம் விலக சண்டி ஹோமம் செய்தால் நல்லது.

🌟 சுதர்ஸன ஹோமம் - ஏவல், பில்லி, சு+ன்யம் நீங்கவும், வெற்றி பெறவும் சுதர்ஸன ஹோமம் செய்தால் நல்லது.

🌟 நவகிரக ஹோமம் - நவகிரக கேடு நீங்கி, மகிழ்ச்சி பெற நவகிரக ஹோமம் செய்தால் நல்லது.

🌟 ருத்ர ஹோமம் - ஆயுள் விருத்தி உண்டாக ருத்ர ஹோமம் செய்தால் நல்லது.

🌟 குபேர ஹோமம் - செல்வ வளம் தர குபேர ஹோமம் செய்தால் நல்லது.

🌟 தில ஹோமம் - இறந்தவர்களின் சாபம் நீங்க தில ஹோமம் செய்தால் நல்லது கிட்டும்.

🌟 ப்ரத்யங்கரா - எதிரிகள் தொல்லை நீங்க, ப்ரத்யங்கரா ஹோமம் செய்தால் நல்லது நடக்கும்.

🌟 ஸ்வர்ண கணபதி ஹோமம் - வியாபாரம் லாபம் பெற, ஸ்வர்ண கணபதி ஹோமம் செய்தால் நல்லது.

🌟 துர்க்க ஹோமம் - எதிரிகளின் தொல்லை அகல துர்க்கா ஹோமம் செய்தால் நன்மை கிட்டும்.

🌟 வித்யா கணபதி ஹோமம் - கல்வியில் சிறக்க வித்யா கணபதி ஹோமம் செய்தால் பலன் கிட்டும்.

🌟 மோகன கணபதி ஹோமம் - திருமண சுப நிகழ்ச்சிகள் நடக்க மோகன கணபதி ஹோமம் செய்தால் நன்மை பயக்கும்.

🌟 தன்வந்திரி ஹோமம் - நோய் நிவாரணம் காண தன்வந்திரி ஹோமம் செய்தால் நல்லது.

🌟 சுயம்வர கலா - பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூட, சுயம்வர கலா ஹோமம் செய்தால் விரைவில் நல்ல பலன் கிட்டும்.

🌟 ஹோமங்களின் பலன் அறிந்து ஹோமங்களை செய்யவும், வீட்டில் 16 வகையான செல்வங்கள் நிலைக்கவும் இந்த ஹோமங்கள் உதவுகின்றன.

பெண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் :

பெண் நட்சத்திரம் : ரோகிணி

பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் : மிருகசீரிஷம் 1, 2, புனர்பு+சம் 4, உத்திரம் 1, பு+ரட்டாதி, பரணி

பெண் நட்சத்திரம் : மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்

பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் : உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி

பெண் நட்சத்திரம் : மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்

பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் : திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி


செவ்வாய், 4 அக்டோபர், 2016

தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு




தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து; சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு மாற்றம் செய்த நாள்: அக் 04,2016 16:36 எழுத்தின் அளவு: (2)

 சென்னை: வரும் 17 மற்றும் 19 ம் தேதிகளில் நடக்கவிருந்த தமிழக உள்ளாட்சி தேர்தல் ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வேட்பு மனு தாக்கல் செய்த அனைத்து அரசியல் கட்சியினரும் அதிரச்சி அடைந்துள்ளனர். கடந்த செப் 25ம் தேதி தமிழக தேர்தல் கமிஷனர் சீத்தராமன் உள்ளாட்சி தேர்தலை அறிவித்தார். அடுத்த நாள் முதலே வேட்பு மனு தாக்கல் துவங்கியது. நேற்று (3 ம் தேதி ) வேட்பு மனு தாக்கல் கடைசி நாளானது. வரும் 6ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம், அக்.6 வாபஸ் பெற கடைசி நாள், வரும் 17 , 19 தேதிகளில் ஓட்டுப்பதிவும், வரும் 21 ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடப்பதாக இருந்தது.அவ்வளவு அவசர, அவசரமாக தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டது ஏன் என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பினர். 4 லட்சத்திற்கும் மேல் வேட்பு மனு: தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து அரசியல் கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை அவசர, அவசரமாக வேட்பு மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 97 ஆயிரத்து , 840 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் இன்று தெரிவித்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி. பிரிவினர் மற்றும் அந்த பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்றும், எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். நீதிபதி உத்தரவு முழு விவரம்: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தேர்தல் தொடர்பான 3 ஆணைகளை ரத்து செய்யப்படுகிறது. தேர்தல் தேதி தொடர்பாக மறு அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் உத்ததரவில் கூறப்பட்டுள்ளதாவது: * தேர்தல் அறிவிப்பாணை பிரிவு 103, 105, 106 ஆகியன ரத்து செய்யப்படுகிறது. * பெண்கள், பழங்குடி, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான சுழற்சி முறையில் ஒதுக்கீடு குறித்து வெளியிட வேண்டும். * தேர்தல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அவசர கதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. * அரசியல் உள்நோக்கத்துடன் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. * மறு தேதி அறிவித்து வரும் டிசம்பர் 30 ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். * குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், ''2011 செப்., 21ல், தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மறுநாள் வேட்புமனு பெறப்பட்டது; அதேபோல், 2006 செப்., 19ல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மறுநாள் வேட்புமனு பெறப்பட்டது. ஏற்கனவே பின்பற்றிய நடைமுறை தான், இப்போதும் பின்பற்றப்பட்டுள்ளது,'' என்றார். விதி மீறப்பட்டுள்ளதா?: தி.மு.க., தரப்பு மூத்த வழக்கறிஞர், ''இட ஒதுக்கீடு தொடர்பான அரசு உத்தரவை, செப்., 16ல் வெளியிட்டாலும், 23ல் தான் நகல்கள் கிடைத்தன; இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை, ஆறு மாதங்களுக்கு முன் வெளியிட வேண்டும்; அந்த விதி மீறப்பட்டுள்ளது,''என்றார். மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ''இதுபோன்ற குற்றச்சாட்டை, மற்ற கட்சிகள் கூறவில்லை; இதுவரை, 42 ஆயிரம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.

சனி, 17 செப்டம்பர், 2016