Like us on Facebook

வெள்ளி, 14 அக்டோபர், 2016

சூரசம்ஹாரம் நடத்துவது ஏன் ❓

🌠 சு+ரசம்ஹhரம் நடத்துவது ஏன்? 🌠



  அழகு என்ற சொல்லுக்கு முருகன் என்று பெயர். முருகனை நினைத்தால் நினைத்தது நிறைவேறும். அசுரர்களை அழிக்க சிவனின் நெற்றி பொறியில் இருந்து பிறந்த குழந்தை தான் குமரன். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரம் குடிக்கொள்வான். வேண்டியதை அருளும் குமரனின் ஆலயத்தில் சு+ரசம்ஹhரம் நடத்துவது ஏன் தெரியுமா? ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு காரணமுண்டு. அதுப்போல் இந்த நிகழ்விற்கும் ஒரு புராணக்கதை உண்டு.

🌀 கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சு+ரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள். சு+ரபத்மனுக்கு அசுரமுகம். தாரகனுக்கு யானைமுகம். சிங்கமுகனுக்கு சிங்கமுகம். இவர்கள் குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவனை நோக்கித் தவமிருந்தனர்.

🌀 தவப்பயனாக 1008 அண்டங்களையும் ஆட்சிசெய்யும் வரம் பெற்றனர். சு+ரியன், சந்திரன், அக்னிதேவன், குபேரன் முதலிய தேவர்கள் அனைவரும் அசுரர்களின் பணியாளர்களாக மாறினர்.

🌀 தேவர்கள் பிரம்மாவிடம் சென்று தங்கள் நிலையைச் சொல்லி வருந்தினர். சு+ரபத்மனை அழிக்க சிவனால் மட்டுமே முடியும். அதனால் அவரிடம் முறையிட்டால் விடுதலை கிடைக்கும், என்றார் பிரம்மா. தேவர்களும் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். அவருக்கு சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம், அதோமுகம் ஆகிய ஆறு முகங்கள் உண்டு.

🌀 அவற்றில் இருந்து ஆறுநெருப்புப் பொறிகளை உண்டாக்கினார். அவை சரவணப்பொய்கையில் விழுந்து குழந்தைகளாக மாறின. அவற்றை ஒன்று சேர்த்த போது கந்தன் உருவானார். இவர் சு+ரபத்மனை வெற்றி கொண்டு தேவர்களைக் காத்தார். ஐப்பசி சஷ்டிதிதியில் சு+ரசம்ஹhரம் நிகழ்ந்ததாக ஐதீகம். இந்நாளில் அசுரர்களை அழித்து மக்களை காக்க முருகன் சு+ரசம்ஹhரம் நடத்துவார்.


Related Posts:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக