Like us on Facebook

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

பெரம்பலூர் செந்தில்

வெளிநாட்டு வேலையைத் துறந்து விவசாயத்தில் கலக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்!வருடம்  ரூ.60 லட்சம்  வருமானம் வரும் வேலையை உதறிவிட்டு, விவசாயம் செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார் பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளத்தை அடுத்துள்ள தேனூரைச் சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி செந்தில்.தேனூர் கிராமம்... சுத்தமான காற்றுடன் உண்மையான பாசம் காட்டும் மனிதர்களின் வாழ்விடம். இந்த ஊருக்கு மேலும் சிறப்பு சேர்த்து வருகிறார் செந்தில்.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் செல்வ செழிப்பில் மயங்கி, அந்த நாடுகளில் வேலை செய்து செல்வம் சேர்க்க ஆசைப்படாதவர்கள் இந்தியாவில் அரிது. இந்த நிலையில், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து, அமெரிக்காவில் வருடம் 60 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் வேலையை விட்டுவிட்டு, சொந்த ஊருக்கு வந்து தன் மக்களின் வாழ்வை மாற்றி ஆச்சரியம் அளித்துள்ளார் செந்தில்.இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை நம்பியே வாழ்கையை நடத்துபவர்கள் தேனூர் மக்கள். ஆனால்  நகர மக்களின் பேராசையால் நரகமாக மாறியது தேனூர் கிராமம். பற்றாக்குறையான பருவமழையால் வறண்டுவிட்ட விவசாய நிலம், இருக்கும் கொஞ்ச நிலத்தடி நீரும் உறிஞ்சப்படுவது ஆகிய காரணத்தால் மனம் ஒடிந்த பாரம்பரிய விவசாயிகள், தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.இந்த நிலையில்தான் 'பயிர்'  எனும் தன்னார்வத்  தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, செந்திலும் அவரின் மனைவி பிரீத்தியும் நடத்தி வருகிறார்கள். பிரீத்தி ஹோமியோபதி மருத்துவர். தேனூர் கிராமத்துக்கு  'பயிர்' மூலம் செய்த உதவிகள் ஏராளம். அவ்வூர் மக்களின் கல்வி, ஆரோக்கியத்தையே முதன்மையாகக்  கொண்டு செயல்படும் தன்னார்வ நிறுவனம்தான் 'பயிர்'.இந்த அமைப்பு மூலம் தேனூர் மக்களுக்கு எம்சிஏ  பட்டதாரிகளைக் கொண்டு கணினிப்  பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது கூடுதல் விசேஷம். போதிய உணவு இல்லாத காரணத்தால் ஏழைக் குழந்தைகள் பலர் நோய்வாய்ப்பட்டனர். அதனால் அவர்களுக்கு சத்து நிறைந்த நிலக்கடலையும், தினையும் வழங்குகிறது 'பயிர்'.சமீபத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், 40 சதவிகித குழந்தைகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. அதன் மூலம், தமிழ்நாடு அரசு தினம் 500 கலோரி சத்துடைய  நிலக்கடலையும் தினையும் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக,  ஏழைக் குடும்ப குழந்தைகளுக்கு மிகக்குறைந்த விலையில் பால் வழங்கி வருகிறது பயிர்.இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை பரப்பும் வகையில் 'பயிர்' அமைப்பு உண்டாக்கிய விழிப்புணர்வால், தேனூரில்  6.77 ஏக்கர் பரப்பு அளவு கொண்ட நிலத்தில் நிலக்கடலை, உளுந்து, நெல் மற்றும் எள் பயிரிடப்படுகிறது. மேலும் வேப்பங்காயை உரமாக மாற்றும் தொழில் மூலம் வருவாய் ஈட்டுகிறார்கள் தேனூர் வாசிகள். விவசாயத்திற்கு உயிர் கொடுத்து இருக்கிறது 'பயிர்' என்றால் மிகையில்லை!

வியாழன், 3 செப்டம்பர், 2015

அண்ணா அசாரே

அண்ணா அசாரே கிசான் பாபட் பாபுராவ் அசாரே அன்னா ஹசாரே பிறப்பு ஜனவரி 15, 1940 (அகவை 75) பிங்கார், மகாராட்டிரம், இந்தியா அறியப்படுவது நீர்ப்பிடிப்பு மேம்பாட்டுத் திட்டங்கள்; தகவல் அறியும் உரிமைச் சட்டம்; ஊழல் எதிர்ப்பு இயக்கம் சமயம் இந்து பெற்றோர் லட்சுமிபாய் அசாரே (தாய்) பாபுராவ் அசாரே (தந்தை) வலைத்தளம் http://www.annahazare.org பரவலாக அண்ணா ஹசாரே (Anna Hazare) என்று அறியப்படும் கிசான் பாபுராவ் அசாரே (Kisan Baburao Hazare, பிறப்பு: சனவரி 15, 1938), ஓர் இந்திய சமூக சேவகர். கிராமப்புற மேம்பாட்டிற்காகவும், வெளிப்படையான அரசாங்க செயல்பாடுகளை அதிகரிக்கவும், விசாரணை மற்றும் உத்தியோக ஊழல்களை தண்டிக்கவும் இயக்கங்கள் அமைத்த இந்திய சமூக ஆர்வலர். அடிமட்ட இயக்கங்களை அமைக்கவும் ஊக்குவிப்பதைத் தவிரவும் ஹசாரே தனது தந்திரோபாயத்தை நினைவுபடுத்தும் வகையில் அடிக்கடி நடத்திய உண்ணாவிரதம் மோகன்தாசு கரம்சந்த் காந்தி [1][2][3] சத்தியாக்கிரக போராட்டத்தை பலருக்கும் நினைவு படுத்தியது. ஹசாரே மகாராஷ்டிரா மாநிலம் அஹமது நகர் மாவட்டம் பர்நேர் தாலுகாவில் ரலேகன் சித்தியில் உள்ள ஒரு கிராமத்தில் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பிற்கு பணியாற்றினார். மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாக இந்த கிராமத்தை ஏற்படுத்துவதில் அவரின் பங்களிப்பிற்காக அவருக்கு நாட்டின் மூன்றாம் மிக உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் 1992 ல் வழங்கப்பட்டது. ஒரு தனி மனிதனின் பேரில் வரும் புகார்களை விசாரிக்கும் குறைகேள் அதிகாரி நிறுவனம் அமைத்து பொது இடங்களில் உள்ள ஊழல்களை சமாளிக்கவும் ஜன லோக்பால் மசோதாவை போல் லோக்பால் மசோதா 2011 அமைத்து கடுமையான ஊழல் எதிர்ப்பு சட்டம் இயற்றவும் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தி ஏப்ரல் 5, 2011-ல் கால வரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. அரசாங்கம் ஹசாரே-வின் கோரிக்கைகளை ஏற்ற ஒரு நாளைக்குப்பிறகு 9 ஏப்ரல் 2011-ம் தேதி உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. அரசாங்கம் மற்றும் மக்கள் சமூக பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு குழு அமைத்து சட்ட வரைவு எழுத அரசாங்கம் ஒரு அரசிதழ் அறிவிப்பு வெளியிட்டது.[4][5] 2011-ன் உலக சிந்தனையாளர்கள் பட்டியலின் முதல் 100 இடங்களில், வெளி நாட்டு கொள்கை இதழ் அவரின் பெயரையும் வெளியிட்டது.[6] மேலும் 2011-ல் அன்னா மும்பையில் வெளியாகும் தேசிய நாளிதழ் மூலம் மிகுந்த மக்கள் செல்வாக்குள்ள மனிதர்கள் பட்டியலில் இடம் பெற்றார்.[7] அவருடைய நீதியை நிலைநாட்டும் சர்வாதிகார கருத்துகெதிராகவும், ஊழல் செய்த பொது அதிகாரிகளின் மரண தண்டனை கொள்கைக்கெதிராகவும், வாசெக்டமி முறை மூலம் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு ஆதரவுக்கெதிராகவும் அவர் மாறுபட்ட விமர்சனங்களை சந்தித்தார்.[8][9] 2009-ல் அன்னா ஹசாரே-வை கொலை செய்யும் சதி வெளிப்படுத்தப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உயர் பதவி வகித்தவரும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் நெருங்கிய உறவினருமான பத்மசிங் படிலே சதிக்கு காரணம் என்று ஹசாரே குற்றம் சாட்டினார். கொலை சதி தொடர்பான வழக்கு நடந்து தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், திருச்சி

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், திருச்சி மலைக்கோட்டையின் மீது இருந்து பார்க்கையில், ‪#‎திருச்சி‬ மாநகரின் எல்லா பக்கமும் ரம்மியமாக தெரியும். மலைக் கோட்டையின் உயரம் 275 அடி. மலைக்கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. இப்படி வடிவமைக்கப்பட்ட கோயிலின் ஆயிரங்கால் புனித மண்டபம் சிறப்பு ... மேலும் படிக்க : http://temple.dinamalar.com/New.php?id=24

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள் 1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். 2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான். 3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர். 4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம். 5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது. 6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார். 7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம். 8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது. 9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன. 10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர். 11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார். 12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். 13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது. 14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார். 15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’ 16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை. 17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார். 18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை. 19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார். 20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு. 21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார். 22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார். 23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார். 24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார். 25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார். 26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார். 27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார். 28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார். 29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான். 30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது. 31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார். 32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது. 33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான். 34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது. 35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும். 36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன. 37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும். 38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம். 39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார். 41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார். 42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார். 43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார். 44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை. 45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார். 46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார். 47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும். இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். 48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார். 49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார். இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன. 50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். நேற்று அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவுற்றது ,,..