Like us on Facebook

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஜெயலலிதா அதிகாலை 3.30 மணிக்கே கண் விழித்த ஜெயலலிதா

அதிகாலை 3.30 மணிக்கே கண் விழித்த ஜெயலலிதா பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 28, 1:28 PM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது38 பிரதி சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த ஜெயில் ஏற்கனவே மிக பலத்த பாதுகாப்பு செய்யப்பட்ட ஜெயிலாகும். தற்போது ஜெயலலிதா அங்கு அடைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அறை எண் 23–ல் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, நேற்றிரவு நீண்ட நேரம் தூங்கவில்லை. தனிமையில் சிந்தனை செய்தபடி இருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் கழித்து தூங்கச் சென்றாலும் இன்று அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் அவர் கண் விழித்தார். சிறை அறைக்குள்ளேயே அவர் சற்று நேரம் நடந்ததாக ஜெயில் அதிகாரி ஒருவர் கூறினார். காலை 6 மணிக்கு பிறகு அவர் சுறுசுறுப்புடன் காணப்பட்டார். அவருக்கு படிக்க 2 தமிழ்நாளிதழ்களும் 3 ஆங்கில நாளிதழ்களும் வழங்கப்பட்டன. அந்த நாளிதழ்களை அவர் நீண்ட நேரம் படித்துக் கொண்டே இருந்தார். அதன்பிறகு அவரை 4 மந்திரிகளும், அரசு அதிகாரிகளும் வந்து சந்தித்தனர். சிறையில் உள்ள ஜெயலலிதாவை சந்தித்துப் பேச அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது. அவர்கள் ஜெயலலிதாவை சந்தித்து பேச அனுமதிக்கக் கோரி பரப்பன அக்ரஹார மத்திய சிறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் இந்த விஷயத்தில் எல்லாரது மனுவும் ஏற்கப்படவில்லை. ஜெயலலிதா சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அவரை சந்திக்க அனுமதிப்போம் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

Google

புது டெல்லி     லட்சம் ஜி-மெயில் பாஸ்வேர்டுகள் திருட்டு: கூகுள் விளக்கம்   ஜி-மெயில்.| கோப்புப் படம். சுமார் 50 லட்சம் ஜி-மெயில் கணக்காளர்களின் பயனர் பெயர், பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் இணையத்தில் வெளியிட்டது தொடர்பாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-கிளவுட் மூலம் சேகரிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகைகளின் நூற்றுக்கணக்கான அந்தரங்க படங்கள், ஹேக்கர்களால் கடந்த வாரம் இணையத்தில் கசியவிடப்பட்டது, தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இன்னும் தீர்வு ஏற்படாத நிலையில், கூகுள் கணக்குகளின் இ-மெயில் சேவையான ஜி- மெயில் வாடிக்கையாளர்களில் சுமார் 50 லட்சம் கணக்குகளின் பயனர் பெயர்கள், கடவுச் சொற்கள் உள்ளிட்ட விவரங்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டு புதன்கிழமை இணையத்தில் கசிய விடப்பட்டுள்ளது. பிட்காய்ன் என்ற பாதுகாப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த விவரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டது. இத்துடன் ஹேக்கர்களால் கசியவிடப்பட்ட தகவல்களின் விவரங்களும் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக பரவிய செய்தியால் ஜி-மெயில் பயன்படுத்தும் பயனீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். கூகுள் சேவைகளான ஜி-மெயில், யூ டியூப், ஹேங்அவுட், டிரைவ், மேப் உள்ளிட்ட பல சேவைகளுக்கு பயனீட்டாளர்களின் ஒரே பயனர் பெயர் மற்றும் கடவுச் சொற்கள் உபயோகப்படுத்தப்படுவதால் இணையவாசிகள் மத்தியில் இந்தச் செய்தி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும், 60% கணக்குகளின் கடவு சொற்கள் மாற்றப்படாமலேயே உள்ளதாகவும், அந்த ஹேக்கிங் நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது. இது குறித்து கூகுள் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், " 50 லட்சம் ஜி-மெயில் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து நாங்கள் ஆராய்ந்ததில், அவற்றில் 2% கணக்குகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இவையும், மற்ற இணையதளங்களில், மெயில் விவரங்களை பகிர்வது போன்ற செயல்களால் நடக்கும் பிரச்சினைகளால் நடந்ததுதான். இது போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 2% கணக்குகளின் தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து பார்த்துவிட்டோம். கூகுள் சேவையில், ஹேக்கர்களை கண்டறிவதற்காக, தானியங்கி தடுப்பு அமைப்புகள் கொண்ட வழிமுறைகள் கையாளப்படுகிறது, கடவுச்சொற்கள் மற்றும் பயனர் பெயர்கள் திருடப்படுவதை இந்த தானியங்கி தடுப்பு அமைப்பு நிறுவனத்திற்கு சர்வரின் மூலம் தெரியப்படுத்தும். ஜி-மெயில் கணக்குகள் என்றுமே பாதுகாப்பானவை. பயனீட்டாளர்களும் தங்களது தரப்பில் கணக்குகளுக்கு பாதுகாப்பான கடவுச்சொற்களை ஏற்படுத்த வேண்டும். எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டிய மற்ற மெயில் விவரங்கள் மற்றும் தொலைப்பேசி எண் உள்ளிட்டவற்றை உரிய முறையில் பதிவேற்றி, தம் கணக்குகளை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் " என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஜி-மெயில் பயனாளர்கள் தங்களது இ-மெயில் கணக்கு பாதுக்காப்புடன் உள்ளதா என்று அறிந்துகொள்ள https://isleaked.com/en.php என்ற காஸ்பர்ஸ்கி நிறுவனத்தின் லிங்க்-யையும் கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. அதில், தங்களது ஜி-மெயில் கணக்கு பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளலாம்.