Like us on Facebook

திங்கள், 14 நவம்பர், 2016

500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வழிமுறைகள்!

500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வழிமுறைகள்!

💰 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் நவம்பர; 9 லிருந்து வழக்கத்திலிருந்து நீக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், 500 மற்றும் 1000 ரூபாய்களை நோட்டுகளை முறையாக மாற்றுவதற்கான வழிமுறைகளை ரிசர;வ் வங்கி அறிவித்துள்ளது.

எதற்கு இந்த மாற்றம்?
💰 நம் நாட்டில் கள்ளநோட்டு மற்றும் கருப்புப் பணத்தை புழக்கத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வழிமுறைகள் என்ன ?

💸 பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நவம்பர; 8ம் தேதியோடு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து அதற்கு நிகரான 500 மற்றும் 2000 ரூபாய் புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

💸 பணப் தட்டுப்பாட்டால் தற்போதைய சு+ழ்நிலையில் தனி ஒரு நபர; ரூ.4,000 மட்டுமே வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும். மீதத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

💸 தற்போதைய நிலையில், முழு தொகையையும் புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள முடியாது. மத்திய அரசு அதனை அனுமதி கொடுக்கவில்லை.

💸 உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைத்து, அதனை காசோலை, டிடி, நெட் பேங் மூலம் பணப் பரிவர;த்தனைகளை செய்து கொள்ளலாம்.

💸 வங்கிகளுக்கு நேரடியாக செல்ல இயலாதவர;கள் அத்தாட்சிக் கடிதத்துடன் பிரதிநிதிகளை அனுப்பிவைக்கலாம்.

💸 ஜன்-தன் யோஜனா கணக்கு மட்டும் வைத்திருப்போர;, வங்கிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.

எங்கு ? எப்படி ?

💸 ரிசர;வ் வங்கி, அனைத்து வங்கி மற்றும் வங்கிக் கிளைகள், கூட்டுறவு வங்கிகள், தலைமை தபால் நிலையம் மற்றும் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.

💸 நவம்பர் 24-ம் தேதி வரை பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 4 ஆயிரம் ரூபாய் வரை வங்கிகள், அஞ்சலகங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

💸 அதற்கு மேல் உள்ள தொகையை அவர;களது வங்கிக் கணக்கில் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ரூ.4000-க்கு மேலான தொகையை மாற்றிக் கொள்ள, அவர;களது வங்கிக் கணக்கில் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம்

💸 நவம்பர; 10-ம் தேதி முதல் டிசம்பர; 30-ம் தேதி வரை பழைய நோட்டுகளை வங்கி மற்றும் அஞ்சலக கணக்குகளில் மாற்றலாம். இந்தக் கால அவகாசத்தில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வங்கிகளில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

💸 வாரத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை வரும் காலங்களில் படிப்படியாக அதிகரிக்கப்படும். யுவுஆ-கள் இயங்க தொடங்கி சில நாட்களுக்கு ஒரு அட்டைக்கு 2 ஆயிரம் ரூபாய், வாரத்திற்கு 4 ஆயிரம் ரூபாயும் எடுத்துக் கொள்ளலாம். இத்தொகை பின்னர; படிப்படியாக அதிகரிக்கப்படும்.

💸 காசோலை, வரைவோலை, கிரெடிட் மற்றும் டெபிட் கார;டுகள், நெட் பேங்க்கிங், ஃபண்ட் டிரான்ஸ்ஃபர; ஆகிய பரிமாற்றத்தில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.

💸 அரசு மருத்துவமனைகள், அஞ்சலகங்கள், பெட்ரோல் நிலையம், விமான நிலையங்களில் உள்ள டிக்கெட் மையங்கள், ரயில் டிக்கெட் நிலையங்கள், அரசு பேருந்து மையம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பால் நிலையங்கள் ஆகியவற்றில் நவம்பர; 11-ம் தேதி வரை 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் ஒன்றிணைவோம் !

கறுப்புப் பணத்தை ஒழிப்போம் !!!


Related Posts:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக