Like us on Facebook

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

வெயில் சருமம் கருத்துப்போகுதா?... இதை செய்தால் இரண்டே நாட்களில் கருமையைப் போக்கி கலர் ஆகிடலாம்




கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், தற்போது பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வருந்துகிறார்கள்.
எனவே கோடையில் கருமையாகும் சருமத்தின் நிறத்தை வெள்ளையாக மாற்ற சில அற்புதமான இயற்கை வழிகளைப் பின்பற்றி, வெயிலில் இருந்து உங்கள் சருமத்தைக் காத்துக் கொள்ள முடியும்.
Advertisement:Replay Ad

Ads by ZINC
3
பேக்கிங் சோடா பேஸ்ட்
பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.
வாழைப்பழம் மற்றும் பால்
வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்.
சூரியகாந்தி விதை
இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.
மாம்பழத் தோல்
மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.
தேன்
தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக்
சர்க்கரை
சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும்.
தேங்காய் தண்ணீர்
தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள தழும்புகள், கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.
தண்ணீர் குடிக்கவும்
முக்கியமாக தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். அதிலும் தினமும் குறைந்தது 9 டம்ளர் தண்ணீரை அவசியம் குடிக்க வேண்டும்.
நன்கு தூங்கவும்
தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் கருவளையங்கள் நீங்கி, முகம் இயற்கையான அழகுடன் காணப்படும்." - வெயிலில் சருமம் கருத்துப்போகுதா?... இதை செய்தால் இரண்டே நாட்களில் கருமையைப் போக்கி கலர் ஆகிடலாம்...


நவக்கிரக தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?


நவக்கிரக தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?



சனி பகவான்

➽ சனிக்கிழமையில் அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம், நீலக்கல், நீலோற்பலம் (கருங்குவளை) ஆகியவற்றால் அலங்காரம் செய்து, சனி பகவானின் மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆர்த்தி எடுத்தால் சனிக்கிரக தோஷம் நீங்கும்.

சூரிய பகவான்

➽ ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்திரம், சிவப்பு மணி, செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் சூரியக் கிரக தோஷம் நீங்கும்.

ராகு பகவான்

➽ ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம், கோமேதக மணி, நீலமந்தாரை, இலுப்பைப்பூ ஆகியவற்றால் அலங்காரம் செய்து, ராகு மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் ராகுக் கிரக தோஷம் நீங்கும்.

கேது பகவான்

➽ ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, பலவர்ண ஆடை, வைடூர்ய மணி, செவ்வல்லி மலர் ஆகியவற்றால் அலங்காரம் செய்து, கேது மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் கேதுக் கிரக தோஷம் நீங்கும்.

சந்திர பகவான்

➽ திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம், முத்துமாலை, வெள்ளை அலரி ஆகியவற்றால் அலங்காரம் செய்து, சந்திர மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் சந்திரக் கிரக தோஷம் நீங்கும்.

அங்காரக பகவான்

➽ செவ்வாய்கிழமைகளில் அபிஷேகம் செய்து, சிவப்பு வஸ்திரம், பவளம், சிவப்பு அலரி ஆகியவற்றால் அலங்காரம் செய்து, அங்காரக மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் அங்காரக கிரக தோஷம் நீங்கும்.

புதன் பகவான்

➽ புதன்கிழமையில் அபிஷேகம் செய்து, பச்சை வஸ்திரம், மரகமணி, வெண்தாமரை ஆகியவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் புதன் கிரக தோஷம் நீங்கும்.

குரு பகவான்

➽ வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்து மஞ்சள் நிற வஸ்திரம், புஷ்பராகமணி, வெண்முல்லை ஆகியவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் குருக் கிரக தோஷம் நீங்கும்.

சுக்கிர பகவான்

➽ வெள்ளிக் கிழமையில் அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம், வைரக்கல், வெண்தாமரை மலர் ஆகியவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் சுக்கிரக் கிரக தோஷம் நீங்கும்.


சனி, 4 பிப்ரவரி, 2017

எதற்கெடுத்தாலும் அதிகமா கோவப்படறீங்களா? படுக்கைக்கு கீழ இத வெச்சு தூங்குங்க...கூலா ஆகிடுவீங்க

"எதற்கெடுத்தாலும் அதிகமா கோவப்படறீங்களா? படுக்கைக்கு கீழ இத வெச்சு தூங்குங்க... கூலா ஆகிடுவீங்க...



சிலர் வாஸ்து, தோஷங்களை நம்புவார்கள். சிலர் அவற்றை மூடநம்பிக்கை என்று புறந்தள்ளி விடுவார்கள். ஆனால் நம் முன்னோர்கள் கணித்துத் தந்திருக்கும் சில வாஸ்து சாஸ்திரங்களும் தோஷங்களைப் போக்கும் வழிமுறைகளும் ஏராளமாக உள்ளன. அதில் சிலவற்றுக்கு அறிவியல் ரீதியான காரணங்களும்கூட இருக்கும்.
அப்படி நம்முடைய வாழ்வில் நாம் தைரியம், சாந்தம், வீரம், மனஉறுதி ஆகியவற்றைப் பெற்றிருத்தல் அவசியம். அதற்கு சில பொருட்களை நம்முடைய படுக்கைக்குக் கீழே வைத்துத் தூங்கினால் சிற்நத பலன்கள் கிடைக்குமெனக் கூறப்படுகிறது.
கோபம் குறைய
எதற்கெடுத்தாலும் சிலர் கோபப்படுவதுண்டு. அதுபோன்ற மனிதர்களை சிடுமூஞ்சி என்று குறிப்பிடுவார்கள். இதுபோல் அளவுக்கதிகமாக கோபம் வரும் ஆட்கள் தங்களுடைய படுக்கைக்கு அடியிலோ அல்லது ஓரத்திலோ செம்புப் பாத்திரத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும்.
தலையணைக்கு அடியில் சிவப்பு சந்தனக் கட்டை சிறிய துண்டை வைத்துத் தூங்கினாலும் கோபம் கட்டுக்குள் இருக்கும்.
மனஉறுதி மேம்பட
படுக்கைக்கு அடியில் வெள்ளிப் பாத்திரத்தில் நீர் நிரப்பி வைக்க வேண்டும். ஏதேனும் ஒரு வெள்ளி ஆபரணத்தை அணிந்திருப்பது அவசியம். இதன்மூலம் நல்ல மாற்றத்தைக் காணமுடியும்.
தைரியம் அதிகரிக்க
தலையணைக்கு அடியில் தங்கம், அல்லது வெள்ளிப் பொருட்களை கட்டிலுக்கு அருகே வைத்துத் தூங்குங்கள். வேண்டுமானால் வெண்கலப் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி கட்டிலுக்கு அடியில் வைத்தும் தூங்கலாம்.
அதிர்ஷ்டம் பெருக
எப்போதுமே தங்களுக்கு அதிர்ஷ்டமே இல்லை என்று வறுத்தப்படுகிறீர்களா?
வெள்ளியாலான மீனை தலையணைக்கு அடியில் வைத்தோ அல்லது நீர் நிரப்பிய வெள்ளிப் பாத்திரத்துக்குள் வைத்தோ தூங்குங்கள்.
கண் திருஷ்டி விலக
கண் திருஷ்டி இருக்கிறது என்று எண்ணினால் 21 நாட்களுக்கு தொடர்ந்து இரும்புப் பாத்திரத்தில் நீர் நிரப்பி, கட்டிலுக்கு அருகில் வைத்துத் தூங்குங்கள்.
அதோடு நீல நிறக்கற்களை தலையணைக்கு அடியில் வைத்துத் தூங்குங்கள்.
இந்த எல்லா செயல்களையும் தொடர்ந்து 21 நாட்களுக்குச் செய்தல் வேண்டும். அப்போது தான் சிறந்த பலனைத் தரும்." - எதற்கெடுத்தாலும் அதிகமா கோவப்படறீங்களா? படுக்கைக்கு கீழ இத வெச்சு தூங்குங்க... கூலா ஆகிடுவீங்க...


புதன், 1 பிப்ரவரி, 2017

ரங்கநாதர் திருக்கோவில் திருவரங்கம்


ரங்கநாதர் திருக்கோவில் திருவரங்கம்



❂ பிரம்மனுக்கு உபதேசம் தந்து, வேதங்களை மீட்டுத் தந்த தலம், சந்திரன் தன் தொழில் வலிமையை திரும்பப் பெற்ற கோவில், ஸ்ரீரங்கத்திற்கும் முந்தைய ஆலயம், சயனக் கோலத்தில் முதன்மை பெற்ற திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டு திகழ்கிறது, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவரங்கம் ரங்கநாதர் திருக்கோவில்.

சுவாமி : ரங்கநாத பெருமாள்.

அம்பாள் : ரங்கவள்ளி தாயார்.

தீர்த்தம் : சந்திரபுஷ்கரணி, தென் பெண்ணைநதி.

விமானம் : சந்தோமய விமானம்.

மாவட்டம் : விழுப்புரம்.

தல வரலாறு :

❂ சோமுகன் என்ற அசுர குல அரசன், தான் மேற்கொண்ட கடுமையான தவங்களின் மூலம் பல்வேறு வரங்களை பெற்றான். அதனால் அவன் ஆணவம் கொண்டு பூவுலகையும், தேவலோகத்தையும் தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும் எனவும், முனிவர்களும் தேவர்களும், தனக்கு அடிமையாக இருந்து சேவை செய்ய வேண்டும் எனவும் ஆசைப்பட்டான்.

❂ அதன்படியே பூலோகத்தையும், தேவலோகத்தையும், மக்களையும், தேவர்களையும், முனிவர்களையும் தன் வசப்படுத்தி, துன்புறுத்தினான். படைக்கும் தெய்வமான பிரம்மனையும் சிறைபிடித்து, அவரிடம் இருந்த வேதங்களைப் பறித்துக்கொண்டான். அதன்பின் தேவர்கள், முனிவர்கள் அனைவரும் திருமாலை சரணடைந்தனர். அவர் அசுரனுடன் போரிட்டார். போரில் தோல்வியை தழுவும் நிலைக்குச் சென்ற அசுரன், திருமாலுக்கு பயந்து, கடலுக்குள் புகுந்து பதுங்கினான்.

❂ அசுரனை அழிப்பதற்காக திருமால் மச்ச அவதாரம் எடுத்து, சோமுக அசுரனை வதம் செய்து கொன்றார். பின்னர் வேதங்கள் அனைத்தையும் மீட்டார்.

❂ பூமிக்கு மேலே வெளிவந்த திருமால், பிரம்மனிடம் வேதங்களை ஒப்படைத்து அவருக்கு உபதேசமும் அருளினார். அந்த இடத்தில் இருந்த அழகிய சோலையும், வற்றாத நதியும் பார்த்த திருமால் அங்கேயே தங்க ஆசைப்பட்டார். ஆனால், திருப்பாற்கடலுக்குத் திரும்ப வேண்டும் என பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் வேண்டினர். முனிவர்களும், மற்றவர்களும் இதே இடத்தில் இருக்க வலியுறுத்தினர்.

❂ திருமால் தேவதச்சனான விஸ்வகர்மாவை அழைத்து, தம்மைப்போன்ற உருவத்தினை பள்ளிகொண்ட கோலத்தில் உருவாக்கிட கூறினார். அதன்பின் தேவர்களும், முனிவர்களும் ஒன்று சேர்ந்து பிரம்மோற்சவத்தை நடத்தினர் என்கிறது தல புராணம்.

தலச்சிறப்பு :

❂ 108 திவ்ய தேச கோவில்களில், திருவரங்கம் ரங்கநாதர் திருக்கோவில் ஆனது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். மேலும் இந்த கோவில் ஆனது அனைத்தையும் விட சிறப்பானது மற்றும் பழமையானது ஆதி திருவரங்கம். ஏன் என்றால் ஆதி திருவரங்கம் திருமாலின் முதல் அவதாரத்தில் நிர்மாணிக்கப்படுகிறது. ஆதி திருவரங்கம் அடுத்து ஸ்ரீரங்கம் என்ற சொல் இங்கு அனைத்து பகுதிகளிலும் பேசப்பட்டு வருகிறது.

❂ தமிழகத்திலேயே மிக பெரிய பெருமாளில் இவரும் ஒருவர். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் 'பெரிய பெருமாள்" என அழைக்கப்படுகிறார்.

ரங்க விமானம் :

❂ திருவரங்கத்தில் இருக்கும் 'ரங்க விமானம்" ஆதியில் தானாகவே உருவானதாக கூறப்படுகிறது. இதைச் சுற்றி 24 கிலோமீட்டர் தூரத்துக்குள் எங்கே இருந்தாலும் முக்தி நிச்சயம் என்கிறார்கள். இந்த விமானம் பொன்னால் வேயப்பட்டு 'ஓம்" என்கிற பிரணவ வடிவில் அமைந்துள்ளது. பிரம்ம தேவன், பல ஆயிரம் ஆண்டுகள் மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததன் பலனாக, பாற்கடலில் இருந்து பெறப்பட்டது ரங்க விமானம்.

❂ நான்கு வேதங்களையும் பிரம்மா இந்த விமானத்தின் முன் ஓதியிருக்கிறார். ரங்க விமானத்தில் அர்ச்சா ரூபமாக அவதரித்த ரங்க நாதரை, இசவாகு மன்னர் தன் குல தெய்வமாக அயோத்தியில் வைத்து பூஜை செய்து வந்தார்.