Like us on Facebook

செவ்வாய், 30 ஜனவரி, 2018

கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்! தினமும் ஒரு



கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது. கொய்யாப் பழத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. காரணம் வாதம், பித்தம், கபம் போன்றவை அதிகமாகி தலைசுற்றல் ஏற்படலாம். கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும். கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும். கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது. கொய்யாப் பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். உணவு சாப்பிடுவதற்கு முன்பு கொய்யா சாப்பிடுவது உகந்தது அல்ல. சாப்பிட்ட பின்போ அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட்டால் நல்லது. சருமத்துக்கு மிகவும் நல்லது கொய்யா. முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும். தோல் சுருக்கத்தைக் குறைக்கும். பளபளப்புடன் கூடிய இளமைத் தோற்றத்தைத் தருகிறது. நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். மூல நோய் உள்ளவர்களுக்கும் கொய்யா தீர்வு தரும். மூலக்கதை படிக்க" - கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!

வயிற்று கோளாறுகளை போக்கும் ஓம


நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடை சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வாயு தொல்லையை போக்க கூடியதும், செரிமானத்தை தூண்டவல்லதும், வலி வீக்கத்தை குறைக்க கூடியதும், வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்ய கூடியதுமான ஓமத்தின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
அற்புத மருத்துவ குணங்களை கொண்டது ஓமம். இது, சிறுநீரை பெருக்கும் கூடிய தன்மை கொண்டது. வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றும். செரிமானத்தை தூண்டும். இதய நாளத்துக்கு பலம் தருகிறது. வயிற்று புண்களை ஆற்றும். உடலுக்கும், மனதுக்கும் இதம் தருவதாக ஓமம் விளங்குகிறது. ஓமத்தை பயன்படுத்தி வீக்கம், வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஓமம், விளக்கெண்ணெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதனுடன் வறுத்து பொடி செய்த ஓமத்தை சேர்க்கவும். இதை நன்றாக வேகவைத்த பின்னர் களி பதம் வந்தவுடன் சிறிது விளக்கெண்ணெய் சேர்க்கவும். இதை மேல் பூச்சாக பயன்படுத்தினால் மூட்டு மற்றும் தசைகளில் ஏற்படும் வீக்கம், வலி குறையும். அடிபட்ட காயங்கள், அதனால் உண்டாகும் வீக்கம் விலகி போகும். ஓமம் வீக்கத்தை வற்றச் செய்யும் தன்மை உடையது. புண்களை விரைவில் ஆற்ற கூடியது.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட ஓமத்தை பயன்படுத்தி வாயு தொல்லையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஓமம், மோர், உப்பு. செய்முறை: சிறிது மோர் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் ஓமம், சிறிது உப்பு சேர்த்து கலந்து குடித்துவர வாயு தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகள் நீங்கும். வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் மருந்தாக இது விளங்குகிறது. வயிற்றில் ஏற்படும் வலியை போக்கும். ஓமத்தை பயன்படுத்தி செரிமானத்தை தூண்டும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், பணங்கற்கண்டு. செய்முறை: சிறிது சுக்கு, 10 மிளகு, திப்பிலி, ஒரு ஏலக்காய், சிறிது ஓமம் சேர்த்து நசுக்கி எடுக்கவும். இந்த கலவையை நீரில் போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வயிற்று கோளாறுகள் சரியாகும். செரிமானத்தை தூண்டும். வயிற்றுப்போக்கு, காலரா போன்றவற்றுக்கு ஓமம் மருந்தாகிறது.
உமிழ்நீரை சுரக்கும் தன்மை உடையது. இதன் காரணமாக செரிமானம் நன்றாக இருக்கும். ஓமம் உள் மருந்தாகி வயிற்று கோளாறுகளை போக்கும். வெளி மருந்தாகி வீக்கத்தை வற்றச்செய்யும். புண்களை விரைவில் ஆற்றும். விட்டுவிட்டு வரும் காய்ச்சலை குணப்படுத்தும் எளிய மருந்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ஆடாதோடை, சீரகம், வெட்டிவேர், பனங்கற்கண்டு. செய்முறை: ஆடாதோடையோடு வெட்டிவேர், சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து நீரில் இட்டு காய்ச்சி குடித்துவர விட்டுவிட்டு வரும் காய்ச்சல் குணமாகும்.

உங்களுக்குத் தெரியுமா? சிறுநீரகக் கற்களை உடைத்துக் கரைத்துவிடும் சக்தி படைத்தது ஆப்பிள் சாறு…


நம்முடைய சிறுநீரகங்கள் திரவக் கழிவுகளை வடிகட்டி சிறுநீராக மாற்றி வெளியேற்றுகின்றன. வடிகட்டும்போது கழிவுகளில் உள்ள இரசாயனப் பொருட்களும், உப்புகளும் சிறுநீரகங்களில் தங்கிவிடுகின்றன. இவையே ஒன்று சேர்ந்து கல்லாக சிறுநீர்க் குழாய்களை வந்தடைகின்றன.
அப்போது சிறுநீர் கழிக்க முடியாமல் எரிச்சல் ஏற்படுகிறது. கற்கள் பெரிதாக இருந்தால் அடி முதுகு, அடிவயிற்றில் சுரீரென்று வலி ஏற்படக்கூடும்.
சிலருக்குக் கற்கள் அமைதியாக இருந்து திடீரென்று சிறுநீர் கழிக்க முடியாமல் வேதனை தரும்.
சிறுநீர் கழிக்க எரிச்சலாக இருந்தாலும் சரி. அடிக்கடி அடி முதுகில் வலி மற்றும் விலாவில் திடீரென்று வலி ஏற்பட்டாலும் சரி, உடனே மருத்துவர் மூலம் சிகிச்சை பெறவேண்டும்.
மருத்துவச் சிகிச்சையுடன் உணவு மருத்துவத்தையும் பின்பற்றினால் சிறுநீரகக் கற்களையும், கோளாறுகளையும் முற்றிலும் குணப்படுத்த முடியும்.
சிறுநீரகக் கற்களை உடைத்துக் கரைத்துவிடும் சக்தி படைத்தது ஆப்பிள் சாறு. காலையில் பழத்தை நன்கு கழுவி தோலைச் சீவாமல் கடித்தோ அல்லது சாறாகவோ அருந்தவும்.
கடுமையான வலியைக் குறைத்து கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டது திராட்சை சாறு.
மாதுளம் பழச்சாறும் கற்களைக் கரைக்கும். மாதுளம் பழ விதைகளை ஒரு தேக்கரண்டி அளவு அரைக்கவும். இதை வாயில் போட்டுக்கொண்டு ஒரு டம்ளர் கொள்ளு ரசமும் அருந்தி வர வேண்டும்.
வாழைப்பழத்தில் புரதம் குறைவு, மாவுச்சத்து அதிகம். இதனால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் பாதுகாப்பாக வாழலாம். தினமும் இரண்டு மூன்று வாழைப்பழங்கள் சாப்பிடவும்.
சிறுநீரகங்கள் சிறப்பாக இயங்க அன்னாசிப்பழச்சாறு, கற்களும் பிரச்னைகளும் இருந்தால் ஆப்பிள், திராட்சை, மாதுளை என்று பழ உணவிற்கு முன்னுரிமை கொடுத்து சாப்பிட்டு வரவும்.
நாவல்பழம், இலங்தைப்பழம், பீச் போன்றவையும் சிறுநீரகக் கோளாறுகளையும், கற்களைக் கரைத்து வலியையும் குணமாக்கும் தன்மை கொண்டவை.
எலுமிச்சம் பழ சர்பத் சிறுநீரகங்களில் தங்கியுள்ள உப்புக்களை கரைத்து சிறுநீர் நன்கு பிரியச் செய்யும்.
சிறுநீர் கழிக்க எரிச்சலாகவும், கஷ்டமாகவும் இருந்தால் பரங்கிக்காய், மணத்தக்காளிப்பழம், வெள்ளரிக்காய் முதலியவற்றை உடனடியாக உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் சிறுநீர் வலியின்றி உடனுக்குடன் பிரியும்

இருமல், ஜலதோஷம், தொண்டைப் புண்ணைப் போக்க இதோ உங்களுக்கான எளிய மருத்துவ குறிப்புகள்…

இருமல், ஜலதோஷம், தொண்டைப் புண்ணைப் போக்க இதோ உங்களுக்கான எளிய மருத்துவ குறிப்புகள்…

** இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண்களுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட நல்ல குணம் தெரியும்.
** இரண்டு சிட்டிகை சித்தரத்தைப் பொடி, கொஞ்சம் கல்கண்டு பொடி, 1 ஸ்பூன் நெய், மூன்றையும் குழைத்துச் சாப்பிட, வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது. 
** வெந்நீரில் தேன் கலந்து குடித்தால், ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் உள்ள சளி நீங்கி விடும்.
** வால்மிளகு - 10, அதிமதுரம் 2 செ.மீ, சித்தரத்தை 2 செமீ, திப்பிலி, துளசி இலை 15 போட்டு அவித்து சாறு எடுத்துக் கொண்டு பனங்கற்கண்டுடன் ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் அருந்தவும். இருமலுக்கு மிகவும் நல்லது. மூன்று சொட்டு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சிறு குழந்தைகளுக்குப் புகட்டினால் கக்குவான் இருமல் நிற்கும்.
** தாங்க முடியாத அடுக்கு இருமலுக்கு முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து உள்ளங்கையில் கசக்கவும். சிறிது சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் தடவினால் இருமல் குறையும்.
** அரிசித் திப்பிலியை கடாயில் போட்டு வறுத்துப் பொடி செய்து வைக்கவும். சதா இருமும் குழந்தைகள், பெரியவர்கள் யாரும் இதை உட்கொள்ளலாம். ஒரு டீ ஸ்பூன் பொடியில் சிறிது தேன் விட்டுக் குழைத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். இதை, காம்பு நீக்கிய வெற்றிலையின் நடுவில் அரை ஸ்பூன் வைத்து, வாயில் போட்டு வெற்றிலைச் சாறுடன் சேர்த்து சிறிது சிறிதாக சிறிது நேரம் வாயில் அடக்கிக் கொண்டு சாப்பிட்டால் இருமல் குறையும்.
** துளசிச் சாறையும் கல்கண்டையும் கலந்து சர்பத் போலக் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். வயதுக்குத் தகுந்தபடி இத் துளசிசர்ப்பத்தை சிறிதளவு எடுத்து 2 அல்லது 3 தடவைகள் சாப்பிட இருமல் குணமாகும்.
** வறட்டு இருமலால் அவதிப்படுவோர் அதிமதுர வேரினை அவ்வப்போது 1 துண்டு வாயிலிட்டு சுவைத்து வருவது நல்லது.
** கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதொடை, துளசி இவைகளின் இலை வகைக்கு 1 படி, சித்தரத்தை 1 துண்டு, இஞ்சி 1 துண்டு சேர்த்து இடித்துப் பிழிந்த சாறு 10 முதல் 20 துளி வரையில் வெண்ணையில் கலந்து காலை, மாலை கொடுத்து வர ஓயாத இருமல் நீங்கும். கபக்கட்டு, சிறுபிள்ளைகளுக்குக் காணும் கணைச்சூடு விலகும்

திங்கள், 29 ஜனவரி, 2018

அனைத்தும் அளிக்கும் அன்னாபிஷேகம்




தட்சனுக்கு
ஐம்பது பெண்குழந்தைகள். அவர்களில் அசுபதி தொடங்கி ரேவதி வரையிலான இருபத்தேழு பெண்களை சந்திரனுக்குத் திருமணம் செய்து தந்தான். திருமணத்தின் போதே சந்திரா! இருபத்தேழு பெண்களையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். இல்லையேல் நடப்பதே வேறு... என எச்சரித்து அனுப்பினான் ஆயினும் காலச் சூழலில் சந்திரன் கார்த்திகை, ரோகிணி ஆகிய இருவரிடத்தும் மட்டும் மிகவும் பிரியமாக நடந்துகொண்டான். அதிலும் ரோகியிடம் மட்டும் அதிக நேசம் காட்டினான். அதனாலேயே தமிழில் திங்களும், ரோகிணியும் சேர்ந்திருந்தாற் போல பழமொழி கூட நிலவுகின்றது.
மற்ற பெண்கள் எல்லோரும் சேர்ந்து தந்தையான தட்சனிடம் முறையிட்டார். தட்சன் வெகுண்டு சந்திரனை அழைத்துக் காரணம் கேட்டான். சந்திரன் செய்தறியாது திகைக்கவே இன்றிலிருந்து உனது கலைகள் ஒவ்வொன்றாகத் தேயக்கடவது என்று சாபமிட்டான். சந்திரனின் கலைகள் ஒவ்வொன்றாகத் தேயத் தொடங்கின. சந்திரனும் அபயம் தேடி அங்கும் இங்குமாக தேர்வர்கள் முதல் இந்திரன், பிரம்மா, விஷ்ணு என அனைவரிடமும் தஞ்சம் கேட்டான். காப்பாற்றச் சொல்லித் துடித்தான். தட்சனின் கோபத்திற்கு ஆளாக விரும்பாத அவர்கள் எல்லோரும் மறுத்து விட்டனர்.
இதற்கிடையில்கலைகள் ஒவ்வொன்றாகத் தேய்ந்து மூன்றாம் பிறைக்கு வந்ததது. நேராகக் கைலாசம் சென்று பரமேஸ்வரனை வணங்கித் தஞ்சம் கேட்டான். காப்பாற்ச் சொல்லித் துடித்தான். தட்சனின் கோபத்திற்கு ஆளாக விரும்பாத அவர்கள் எல்லோரும் மறுத்து விட்டனர். இதற்கிடையில் கலைகள் ஒவ்வொன்றாகத் தேய்ந்து மூன்றாம் பிறைக்கு வந்ததது. நேராகக் கைலாசம் சென்று பரமேஸவரனை வணங்கித் தஞ்சம் கேட்டான். பரமேஸ்வரனும் சந்திரனுக்கு அடைக்கலம் தந்து மூன்றாம் பிறைச்சந்திரனை தூக்கித்தன் தலைமேலே சூட்டிக் கொண்டான். சந்திரனை நோக்கி உன் தவற்றை உணர்வதற்காக இன்று முதல் உன் கலைகள் ஒவ்வொன்றாகத் தேயவும், பின் வளரவும் அருளினோம். ஆயினும் ஐப்பசி மாதப் பௌர்ணமி அன்று மட்டும் உன் பூரண பதினாறு கலைகளுடன் நீ மிளிர்வாய் என ஆசிகள் வழங்கினார்.
சந்திரன் பதினாறு கலைகளுடன் பூரணமாக மிகுந்த ஒளியுடன் காட்சி தருகின்றான். அத்தகைய ஐப்பசி மாதப் பௌர்ணமி புனித நாளினில் தான் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. எனவே அதனைக் கொண்டே ஈசனுக்கு அன்னம் செய்து அன்னாபிஷேகம் செய்கின்றோம். மேலும் ஆகாயத்திலிருந்து தோன்றிய காற்றின் உதவியுடன் நெருப்பை மூட்டி மண்ணிலிருந்து விளைந்த அரிசியினை நீரில் வேகவைத்து சாதமாக அன்னமாக உருவாக்கி அதனை அபிஷேகம் செய்வதால்8 பஞ்சபூதங்களையும் தன்வசத்தில் இயக்கும் ஈசனுக்குப் பஞ்ச பூதங்களின் உதவியுடன் செய்த அன்னத்தால் அபிஷேகம் செய்து மகிழ்கின்றோம்.
கலியுகத்தில் உணவுதான் உயிராக விளங்குகின்றது. இறைவன் நமக்களித்த உணவான அன்னத்தை நாம் இந்த ஐப்பசி பௌர்ணமி புனித நன்னாளில் இறைவனுக்கே அபிஷேகம் செய்து நன்றி செலுத்துகின்றோம். கல்லினுள் தேரைக்கும், கருப்பையில் இருக்கும் ஜீவனுக்கும் உணவளிப்பவர் ஈசன். எனவே அன்னமே உயிர்நாடி, அன்னமே பிரம்ம, விஷ்ணு, சிவ ஸ்வரூபமாக விளங்குவதாக வேதங்கள் கூறுகின்றன. அன்னை பார்வதியே அமுது படைக்கும் அன்னபூரணியாக விளங்குகின்றாள். அவளும் ஈசனும் ஒன்றாகையால் ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்து வணங்குகின்றோம்.
அன்னம் ந நிந்த்யாத் - அன்னத்தை நிந்திக்கக் கூடாது என்றும், ப்ராணோவா அன்னம் - எது உயிர் கொடுக்கின்றதோ, அது இல்லாமல் போனால் உயிர் போகின்றது என்றும், அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னம் - அன்னமே இறைவடிவம், மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவில் இருக்கின்றார் என்றும், அன்னமே தானாக இருக்கின்றேன் என்றும் வேதநாயகனான ஈசன் கூறுவதாக வேதங்களும், உபநிடதங்களும் தெரிவிக்கின்றன.
அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு 70 வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப் பெறுகின்றது. அவற்றில் சுத்த அன்னமும் ஒன்றாகும். தினசரி காலை 11.00 மணியளவில் தில்லை நடராஜப் பெருமான் திருக்கோயிலில் ஸ்படிகலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது என்பது சிறப்பான செய்தியாகும். எனவே தான் அப்பர் பெருமானும்
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலுமிப்பூமிசை
என் அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே

எனப்பாடி உருகினார்.
ஈசனை நடராஜப் பெருமானை தரிசிப்பதால் உயிர்க்கு அமுதமாகிய வீட்டின்பமும், உடலின் வளமைக்கு உரிய உணவும் கிடைக்கின்றது. மேலும் பொன்னுலக வாழ்வாகிய தேவர் வாழ்வும் சித்திக்கின்றது. இப்பூவுலகில் கண்டு இன்புறுவதற்கு உரிய திருக்காட்சியினைக் கண்டவர்களுக்கு யாவும் வசமாகும். யாவும் கைவரப் பெறும் இத்தகைய எம்பெருமானை தரிசித்தவர்களுக்கு மீண்டும் பிறவிவாய்க்குமோ? வாய்க்காது என்கிறார் அப்பர் பெருமான்.
ஐப்பசி மாதம் பௌர்ணமியன்று அசுபதி நட்சத்திரத்திற்கு உரிய அன்னத்தால் ஈசனுக்கு அபிஷேகம் செய்வதால் உலகத்திற்கே நன்மை கிடைக்கும் என சிவாகமஞ்கள் தெரிவிக்கின்றன. அபிஷேகம் செய்யப்பெறும் ஒவ்வொரு சாதப்பருக்கையும் சிவலிங்கம் ஆகும். எனவே அன்னாபிஷேகத்தன்று ஈசனை தரிசிப்பதால் கோடிலிங்க தரிசனம் செய்த பலன் கிடைக்கின்றது எனப் பெரியவர்கள் கூறுகின்றார்கள்.
வானியல் அறிவியல் சாஸ்திரப்படியும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதாகவும், அப்போது சந்திரன் மிக ஒளியுடன் காட்சி தருவதாகவும் தெரிவிக்கின்றது. எனவே இப்புனித நாட்களில் சிவாலயங்களில் சாயரட்சை எனப்பெறும் மாலை நேரப்பூஜை வேளையில் அன்னாபிஷேக தரிசனம் நிகழ்கின்றது. அன்னத்தை வடித்து ஆறவைத்து சிவலிங்கத்தின் மேலே அழகாக அலங்காரம் செய்வார்கள் மேலும் புடலங்காய் போன்ற காய்கறிகளை அவித்து மேலே சார்த்துவார்கள். உப்பில்லாமல் வடை செய்து அணிவிப்பது வழக்கம். சிறப்பான அன்னாபிஷேக அலங்கார ஈசனுக்கு சந்திரன் உதயமானவுடன் சிறப்பான பூஜைகள் தீப ஆராதனைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனத்திற்குப் பின் இரவு எட்டு மணியளவில் ஆராதனைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனத்திற்குப் பின் இரவு எட்டு மணியளவில் அன்னாபிஷேக அலங்காரம் பிரிக்கப்பெற்று, சிவலிங்கத் திருமேனிமேல் சார்த்தப்பெற்ற அன்னத்தையும், காய்கறிகளையும், வடைமாலையையும் அர்ச்சகர் தனது தலைமேல் ஒரு கூடையில் சுமந்து கொண்டு தீவட்டி, மேளதாளத்துடன், பக்தர்கள் சிவபுராணம் பாடிய வண்ணம் அல்லது அரஹர, சிவசிவ என நாமம் சொல்லிய வண்ணம் அருகில் உள்ள ஓடும் நீர் நிலைகளிலோ அல்லது ஆலயத் திருக்குளத்திலோ சென்று அதனை நீரில் கரைத்து தீபாராதனை செய்வார்கள். இதன் மூலம் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்களுக்கும் கூட இறைவன் படியளப்பதாக ஐதீகம் சிவலிங்கத் திருமேனியைச் சுற்றியுள்ள அன்னத்தை தயிர் சாதமாக்கிப் பிரசாதமாக வழங்குவார்கள் குறிப்பாக குழந்தைப் பேறு வேண்டுவோர் இந்த அன்னத்தை உண்பதன் மலம் நல்ல குழந்தைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை உண்மையும் கூட.
அன்னாபிஷேகம் செய்வதால் நல்ல மழை பெய்து நல்ல முறையில் விவசாயம் நடைபெறும் எனவும், உணவுப் பஞ்சம் ஏற்படாது எனவும் வேதங்கள் தெரிவிக்கின்றன. அனைத்து சிவ ஆலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனி கொண்ட கங்கை கொண்ட சோழபுரம், தஞ்சைப்பெரிய கோயில் பெரு ஆவுடையார் ஆகியோருக்கு
100 மூட்டைகள் சாதம் வடித்து அன்னாபிஷேகம் நடைபெறுவது உலகப்பிரசித்தமாகும்.
ஐப்பசி மாதப் பௌர்ணமி புனித நன்னாளில் (03.11.2017) சிவாலயங்களுக்கு சென்று அன்னாபிஷேக தரிசனம் செய்வோம். அனைத்து நலன்களையும் பெறுவோம்.

சக்தி வாய்ந்த வயாகரா வீட்டிலேயே தயாரிக்கலாம்!


ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வு அளிக்க பயன்படுத்தப்படுவது தான் வயாகரா. இது இரத்த நாள சுவர்களை விரிவடையச் செய்து, குறிப்பிட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
அதற்காக கடைகளில் விற்கப்படும் வயாகரா மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல், இயற்கை வழிகளை நாடினால் பாலியல் பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும். அப்படியான வயாகராவை பானமாக தயாரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்:
தர்பூசணி



தர்பூசணியில் சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் ஏராளமாக உள்ளது. இது ஆண் குறியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளைத் தடுக்கும்.
தேவையான பொருட்கள்:
தர்பூசணி - 1 எலுமிச்சை - 3
தயாரிக்கும் முறை
தர்பூசணியை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட வேண்டும். குறிப்பாக தர்பூசணியில் உள்ள வெள்ளைப் பகுதியை தவறாமல் சேர்க்க வேண்டும்.
பின் அதை நன்கு அரைத்து 1 லிற்றர் அளவு ஜூஸ் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க வைத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கிளறி, கலவை பாதியானதும் இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து, குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமில்லாத இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.


உட்கொள்ளும் முறை
சக்தி வாய்ந்த இந்த வயாகராவை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூனையும், இரவில் படுக்கும் முன் 2 டேபிள் ஸ்பூனையும் சாப்பிட வேண்டும்.
குறிப்பு
இந்த நேச்சுரல் வயாகராவில் இனிப்பு இல்லை என்பதற்காக, அதில் சர்க்கரையோ அல்லது தேனையோ தப்பித்தவறியும் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால், இதன் முழு பலனையும் பெற முடியாது.
பக்கவிளைவுகள்
இந்த நேச்சுரல் வயாகரா பானத்தை இதய பிரச்சனைகள், உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம், பக்கவாதம், கண் பிரச்சனைகள், கல்லீரல் நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளோர் எவ்வித அச்சமும் இல்லாமல் உட்கொள்ளலாம். பக்கவிளைவுகள் ஏதுமற்ற இயற்கை வயாகரா பானம் இது.

இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு துளசி தான் சிறந்த மருந்து



துளசியை நிழலில் உலர்த்திப் பின் பொடித்து எடுத்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி துளசிப் பொடியை 1தம்ளர் நீரில் இட்டுக் காய்ச்சிக் குடிப்பதால் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுபடுத்தப்படும் ஒரு நாளைக்கு மூன்று வேளை இப்படித் துளசித் தீநீர் சாப்பிட சர்க்கரை அளவு நாளடைவில் குறைந்துவிடும்.
குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி துளசிசாறும் பெரியவர்களுக்கு இரண்டு தேக்கரண்டி அளவும் தினம் இருவேளைப் பருகச் செய்வதால் இருமல், ஆரம்ப நிலை நுரையீரல் தொற்று நோய்கள், மூச்சு விடுவதில் சிரமம், மனஉளைச்சல் காரணமாகத் தோலில் ஏற்படும் நோய்கள், செரிமானமின்மை ஆகிய நோய்கள் போகும்.
1 ஸ்பூன் துளசிச் சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு, 5மிளகு ஆகிய மூன்றையும் ஒரு சேரக் கலந்து உள்ளுக்குக் குடிப்பதால் நுரையீரல் பாதிப்பால் ஏற்படும் ஆஸ்த்துமா குணமாகும். இருமல்,குத்திருமல், வறட்டு இருமல் என வந்தபோதும் துளசிச்சாறோடு தேன் கலந்து குடிப்பதால் இருமல் விரைவில் தணிந்து சுவாசப் பாதை குணம் பெறும்.
துளசி சாறை தோலின் மீது ஏற்படும் வேர்க்குரு போன்ற துன்பங்களுக்கும், பல்வேறு தோல் நோய்களுக்கும் குறிப்பாகத் தேமல் போன்றவற்றுக்கும் மேல்பூச்சு மருந்தாக பூசி வர தோல் நோயகள் தொலைந்து போகும். துளசி சாற்றினை ஓரிரு துளிகள் காதுகளில் விடுவதால் காது நோய் குணமாகும்.
புட்டாலம்மை எனப்படும் பொன்னுக்கு வீங்கி என்னும் நோய் வந்து துன்புறுகையில் காதுகள் இரண்டிலும் துளசிச் சாறு சில துளிகள் விடுவதோடு உள்ளுக்கும் ஓரிரு தேக்கரண்டி பருகச் செய்து வீக்கத்தின் மேல் துளசி சாறும் மஞ்சளும் கலந்து பூசி வருவதால் மேற்சொன்ன நோய் விரைவில் குணமாகும்.
50.மி.லி துளசிச் சாற்றுடன் 5மி.லி தேன் கலந்து அன்றாடம் ஒரு வேளை என 3 மாதங்கள் பருகி வர சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறிவிடும். சிறுநீர்பாதையும் சீர்படும். துளசி இலைச்சாறும் நீரும் கலந்து மணி நேரத்துக்கு 1முறை பருகுவதால் கடுங்காய்ச்சலும் காணாது போகும்.
துளசி இலை, பூக்கள், வேர் ஆகிய அனைத்துமான மூலச்சாறு தேள் மற்றும் பாம்புக் கடி விஷத்தைப் போக்கக் கடிய அருமருந்தாகும். துளசி இதுபோன்ற பல்வேறு இன்ன பிற நோய்களையும் போக்க வல்லது. என்பதால் இன்றே ஒவ்வொரு வீட்டிலும் துளசியை வளர்த்துத் துன்பம் தவிர்க்க வேண்டும்

வெண்டைக்காயை இந்த முறையில் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்


மூன்று முதல் ஐந்து வரை எண்ணிக்கையிலான பசுமையான ‘வெண்டைக்காய்களைத் தேர்ந்து எடுத்து அவற்றை நன்றாக நீரிட்டுக் கழுவி எடுத்துக் கொண்டு அதன் மெல்லிய முனைப் பகுதியில் சிறிதளவும், அதன் அடிப்பகுதியில் சிறிதளம் துண்டித்துவிட்டு வெண்டைக்காய் ஒவ்வொன்றையும் நீளவாக்கில் இரு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு 500 மி.லிட்டர் நீர் விட்டு அடுப்பேற்றி சிறு தீயில் கொதிக்கவிட்டு 3-ல் 2 பங்கு நீர் வற்றியதும் இறக்கி வைத்து ஒரு பாத்திரத்தில் மூடி இரவு முழுவதும் விட்டுவிடவும். காலையில் எழுந்ததும் அந்த காய்களைத் தின்று விட்டு நீரையும் குடித்து விடவும்.
இது ஒரு சிரமமான செயல்தான் என்றாலும் மூட்டு தேய்வு, மூட்டு வலி, வீக்கம் ஆகியவற்றினின்று விடுதலை கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகள் தினம் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை மேற்சொன்ன வகையில் சுத்திகரித்து குறுக்கே துண்டித்து ஒரு தம்ளர் நீரில் விட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் எழுந்து வெறும் வயிற்றில் நீரை மட்டும் தெரிவிறுத்திக் குடித்து விடவும். இப்படி அன்றாடம் குடித்து வரும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நாளடைவில் குறைந்து விடும்.
இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு என்ற துன்பத்துக்கு ஆளானவர்கள் வெண்டைக் காயை மேற்சொன்ன வகையில் உண்டுவர ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை (சீரம் கொலஸ்ட்ரால்) குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்துக்கு துணை நிற்கிறது

சர்க்கரை அளவை குறைக்கும் வெந்தயம்


நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க கூடியதும், தோல்நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மலச்சிக்கலை போக்க கூடியதுமான வெந்தயத்தின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.உணவுக்கு பயன்படும் வெந்தயத்தில் இரும்பு சத்து, புரதச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின்கள், மினரலை கொண்டுள்ள வெந்தயம் சர்க்கரை நோய்க்கு அற்புதமான மருந்தாகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் வெந்தயத்தை சாப்பிட்டுவர சத்துக்குறைபாடு ஈடுசெய்யப்படும். மலச்சிக்கலை சரிசெய்கிறது.
பல்வேறு நன்மைகளை கொண்ட வெந்தயம், புற்றுநோய் உண்டாக காரணமான நச்சுக்களை வெளியேற்றும். உடலுக்கு ஊட்டச்சத்து கொடுப்பதுடன் உணவுக்கு மணத்தை தருகிறது.வெந்தயத்தை பயன்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், கறிவேப்பிலை, திப்லி, மஞ்சள்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதில், ஒரு ஸ்பூன் வெந்தயப் பொடி, கறிவேப்பிலை, திப்லி பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இது, செரிமானத்தை தூண்டுகிறது. நார்ச்சத்து அதிகமுள்ள வெந்தயம், நச்சுக்களை வெளியேற்றுகிறது.
வெந்தயத்தை பயன்படுத்தி மலச்சிக்கலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், தேன்.செய்முறை: ஒரு ஸ்பூன் அளவுக்கு வெந்தயத்தை எடுக்கவும். இதை அரைமணி நேரம் ஊறவைத்து வேக வைக்கவும். பின்னர், இதனுடன் தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டுவர மலச்சிக்கல் சரியாகும். குடல் புண்கள் ஆறும்.வெந்தயத்தை பயன்படுத்தி தலையில் உள்ள பொடுகை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், பால், தேங்காய் எண்ணெய். செய்முறை: வெந்தய பொடியுடன் சிறிது பால் சேர்த்து கலக்கவும். இதனுடன், தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடு பண்ணி சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதை தலையில் தேய்த்து சுமார் 10 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யவும். இதனால், தலையில் உள்ள பொடுகுகள் விலகும். தலைமுடி கொட்டுவது நின்று முடி வளரும். தலை முடிக்கு பலம் தருகிறது. தோல்நோய்கள் குணமாகும். பல்வேறு நன்மைகள், மருத்துவ குணங்களை கொண்ட வெந்தயத்தை பயன்படுத்துவதன் மூலம் உடல் நலம் பெறலாம்.பாத வெடிப்பை சரிசெய்வது குறித்த எளிய மருத்துவத்தை பார்க்கலாம். பாத வெடிப்பால் வலி, வேதனை ஏற்படும். வெடிப்பில் இருந்து ரத்தம் கூடவெளியேறும். இப்பிரச்னைக்கு சோற்றுக் கற்றாழை அற்புதமான மருந்தாகி பயன்தருகிறது. சோற்றுக் கற்றாழை சாறை தினமும் ஓரிரு வேளை தடவிவர சில நாட்களில் பாத வெடிப்பு மறையும். கால்கள் நல்ல வழுவழுப்பு தன்மை பெறும். அழகு பெறும்

துளசி, ஓமவல்லி, கொள்ளு... மழைக்கால நோய்களுக்கு மருந்தாகும் ரசங்கள்

“ரசம்... நமக்கு ஓர் இணை உணவு. வழக்கமாக நம்மில் பலருக்குத் தெரிந்தது புளி ரசமும் மிளகு ரசமும் மட்டுமே. ஆனால், மழைக்காலங்களில் ஏற்படும் சளி, ஜலதோஷம், தலைவலி, மூக்கடைப்பு, வயிற்றுப்பொருமல், வயிறு உப்புசம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது ரசம். துளசி, தூதுவளை, ஓமவல்லி, கண்டதிப்பிலி, வெற்றிலை, கொள்ளு போன்ற ரசங்கள் உடல்நலனுக்குப் பல நன்மைகளை அளிக்கக்கூடியவை’’ என்கிற இயற்கை மருத்துவர் ஜீவா சேகர், எந்த ரசத்தில் என்னென்ன மருத்துவப் பலன்கள் இருக்கின்றன என்பது குறித்து விவரிக்கிறார் இங்கே...


மிளகு ரசம்
தமிழர்களின் அன்றாடச் சமையலில் நிச்சயம் மிளகுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. மிளகு, செரிமானக் கோளாறுகளைப் போக்க உதவும். ஜலதோஷம், தும்மல், சளித்தொல்லைகளிலிருந்து நிவாரணம் தரும். உடல்வலியைத் தீர்க்கும். உணவு செரிமானம் ஆகாமல் இருந்தால் அல்லது மலச்சிக்கலால் வயிற்றுவலி ஏற்பட்டால் அவற்றை மிளகு குறைக்கும். மிளகில் ரசம் வைத்துச் சாப்பிடுவது எளிது. அதோடு இந்த மழைக்காலத்துக்கு இதம் தரும். சரி... மிளகு ரசத்தை எப்படிச் செய்வது?
தேவையானவை:மிளகு - அரை டீஸ்பூன், வெள்ளைப்பூண்டு - 3 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தக்காளி - சிறியது, புளி - நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நெய் அல்லது எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: முதலில் மிளகு, சீரகம், தனியாவை தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக்கொள்ளவும். பூண்டை நசுக்கி வைத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாயை இரண்டாகக் கிள்ளிக்கொள்ளவும். புளியைத் தண்ணீர்விட்டு நன்றாகக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பெருங்காயத்தூள், அரைத்த மிளகுக் கலவையைச் சேர்த்து வதக்கி, கரைத்துவைத்திருக்கும் புளித்தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்க்கவும். ரசம் நுரைத்து வரும்போது கொத்தமல்லித்தழை போட்டு இறக்கினால் மிளகு ரசம் தயார்.


தூதுவளை ரசம்
தூதுவளை இருமல், மூக்கில் நீர் வடிதல், சளி, இளைப்பு, ஆஸ்துமா போன்றவற்றைச் சரிசெய்யும். பெருவயிறு, மந்தம் போன்றவற்றைப் போக்கி நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும். இதை துவையல், ரசம், சூப்... எனச் செய்து சாப்பிடலாம்.
தேவையானவை: தூதுவளை இலை - இரண்டு கைப்பிடி, ரசப்பொடி - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, புளி -எலுமிச்சை அளவு, துவரம் பருப்பு - இரண்டு டீஸ்பூன், மிளகு - சீரகத் தூள் - அரை டீஸ்பூன், தக்காளி - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தூதுவளைக் கீரையைச் சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். துவரம் பருப்பை நன்றாக வேகவைத்து சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். ஊறவைத்து நன்றாகக் கரைத்த புளித்தண்ணீருடன் உப்பு, மஞ்சள் தூள், ரசப்பொடி சேர்த்து வாணலியில் ஊற்றிக் கொதிக்கவிடவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, பச்சை வாசனை போனதும் பருப்புத் தண்ணீரைச் சேர்க்கவும். இவற்றுடன் வடிகட்டி வைத்த தூதுவளைச் சாறு, மிளகு, சீரகப் பொடி சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். நுரைத்து வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். பிறகு வேறொரு வாணலியில் நெய் அல்லது எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்துக் கொட்டினால் மழைக்காலத்தில் இதமளிக்கும் தூதுவளை ரசம் தயார்.

ஓமவல்லி ரசம்
கற்பூரவல்லி அல்லது ஓமவல்லி... இது இருமல், சளி, ஜலதோஷம், நெஞ்சுச்சளி, தொண்டைப்புண், காய்ச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மைகொண்டது. இதைப் பொதுவாகவே வெறுமனே மென்று, தின்று வெந்நீர் குடிப்பது அல்லது சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிடுவது வழக்கம். இன்னும் சிலர் மாலை நேரங்களில் கடலைமாவில் தோய்த்து பஜ்ஜி செய்து சாப்பிடுவார்கள். ஆனால், ஓமவல்லியில் ரசம் செய்து சாப்பிட்டால் மழைக்கால நோய்களுக்கு நிவாரணம் தரும்.
தேவையானவை: ஓமவல்லி இலைகள் - ஒரு கைப்பிடி, புளி - எலுமிச்சை அளவு, பூண்டுப் பற்கள் - மூன்று, தக்காளி - இரண்டு, பச்சை மிளகாய் - இரண்டு, காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன்,பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், தனியா, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இந்த ரசத்தை வழக்கமான மற்ற ரசம்போலவே செய்யலாம். ஆனால் பச்சை மிளகாயுடன் ஓமவல்லி, பூண்டு சேர்த்து அரைத்து ஊற்றி இறக்கினால் தொண்டைக்கு இதம் தரும் ஓமவல்லி ரசம்.
துளசி ரசம்
துளசி... இது சளி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடலில் உள்ள நச்சுத்தன்மை உள்ளிட்டவற்றை சரிசெய்யும். துளசியை வெறுமனே மென்று சாப்பிடுவது, சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிடுவது என இருந்தாலும் இந்த மழைக்கு ரசமாக்கிச் சாப்பிடுவது பலன் தரும்.
தேவையானவை: துளசி இலைகள் - ஒரு கப், மிளகு - இரண்டு டீஸ்பூன், சீரகம், துவரம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, பெருங்காயத்தூள், கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை: முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம் பருப்பை சிறிது நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். துளசியைத் தனியாக அரைத்துக்கொள்ளவும். நன்றாக ஊறவைத்த புளியைக் கரைத்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு அரைத்த மிளகு, சீரகம் உள்ளிட்ட கலவையைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் அரைத்த துளசியைச் சேர்த்து நுரை வந்ததும் இறக்கவும். எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்துச் சேர்த்தால் கமகமக்கும் துளசி ரசம் தயார்.
கொள்ளு ரசம்
கொள்ளுப் பயறு... ஜலதோஷம், இருமல், உடல்வலி மற்றும் சோர்வை நீக்கும். கொள்ளுத் துவையல் சாப்பிடச் சுவையாக இருக்கும். அதில் ரசம் செய்து அருந்துவது மழைக்காலத்துக்கு ஏற்றது. `நீரேற்றமோடு குளிர் சுரம் போம்' என்று கொள்ளின் பயனை அகத்தியர் பாடல் எடுத்துரைக்கிறது, ஆனால் `கொள்ளு ரசம் குடிச்சா ஜலதோஷமெல்லாம் ஜகா வாங்கிடும்' என்று புதிய பழமொழி ஒன்று சொல்லப்படுகிறது. கொள்ளு ரசம் நெஞ்செரிச்சல், வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம் போன்றவற்றுக்கும் நல்ல மருந்து.
தேவையானவை: கொள்ளு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3, தனியா - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - எட்டு, பூண்டுப்பல் - மூன்று, கறிவேப்பிலை, எண்ணெய், கடுகு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொள்ளுப் பயறை குக்கரில் வைத்து மூன்று கப் தண்ணீர்விட்டு, நான்கு விசில் வரும்வரை வேகவைக்கவும். பிறகு வெந்த கொள்ளுப் பயறுடன் காய்ந்த மிளகாய், தனியா, சீரகம் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். தேவையானால் வேகவைத்த தண்ணீருடன் அரைத்த பொருள்களைச் சேர்த்து மஞ்சள்தூள் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, கொதி வந்த கலவையுடன் சேர்த்தால் கொள்ளு ரசம் தயார்.
இதேபோல் பூண்டு, வெற்றிலை, கண்டதிப்பிலி போன்றவற்றிலும் ரசம் செய்து சாப்பிடலாம். இவை மழைக்காலத்துக்கு ஏற்ற இதம் தரும் பானங்கள்!