Like us on Facebook

வெள்ளி, 4 மே, 2018

தேள் கொட்டினால் குணப்படுத்து எளிய மருந்து மற்றும் முதலுதவி

தேள் என்பது நம் வீட்டில் நமக்கே தெரியாமல் வாழும் பூச்சி. தேள் கொட்டியவுடன் மிகவும் வேதனையாகவும் வலி மிகுந்ததாகவும் இருக்கும். தேள் கொட்டினால் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், சரியாக மருத்துவம் எடுக்காதவர்களுக்கும் அலர்ஜி உள்ளவர்களுக்கும் ஆபத்து நிச்சயம் உண்டு. இதற்கான அறிகுறி, முதலுதவி, மருத்துவம் பற்றி கீழே காண்போம்.

அறிகுறி :

தேள் கொட்டிய பகுதியில் சிவத்தல்
தேள் கொட்டிய இடத்தில் சிறிது சிவந்து காணப்படும்.
தேள் கொட்டியவர்க்கு கூச்சம், வலி, எரிச்சல் போன்றவை உண்டாகும்.
உடல் முழுவதும் உணர்வின்மை.
உணவு விழுங்குவதில் சிரமம்.
உயர் இரத்த அழுத்தம் / உயர் ரத்த அழுத்தம்.
துரித இதயத் துடிப்பு.
அதிகமான வியர்த்தல்.
மூச்சு விடுவதில் சிரமம்.
வாந்தி எடுத்தல்.
தவறான கண் இயக்கங்கள்.
மங்களான பார்வை.
அதிகமாக எச்சில் ஊறுதல்.
நாக்கு மரத்துபோதல்.
முதலுதவி :


முதலுதவி
முதலில் தேள் கொட்டிய இடத்தில் சோப்பு போட்டு சுத்தமான நீரால் கழுவ வேண்டும்.
பிறகு தேள் கொட்டிய இடத்தின் மீது 10 நிமிடம் ஐஸ் கட்டியை வைக்க வேண்டும். பின் சிறிது நேரம் கழித்து திரும்ப செய்ய வேண்டும். இதனால் தேள் கொட்டியதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலி குறையும்.
பாதிக்கபட்ட இடத்தை இதய மட்டதிற்கு மேலே வைத்திருக்க வேண்டும்.
சாப்பாடு விழுங்குவது சிரமமாக இருந்தால், சாப்பாடு உண்ண வேண்டாம்.
தேள் கொட்டிய இடத்தில் பிளேடால் அறுக்கவோ, விஷத்தை உறிஞ்சவோ முயற்சிக்க கூடாது.
பதற்றபடாமல் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். இது விஷம் உடல் முழுவதும் பரவுவதை மெதுவாக்கும்.
எளிய மருந்துகள் :

மா இலை :


மாவிலை
புதிதாக பறித்த மாவிலையை நன்கு அரைத்து அதிலிருந்து சாறை பிழிந்து எடுக்க வேண்டும். அந்த சாரை தேள் கொட்டிய இடத்தில் தேய்க்க வேண்டும்.இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முறை என மூன்று நாட்கள் செய்ய வேண்டும்.

பெருங்காய பொடி:


பெருங்காய பொடி
மூன்று தேக்கரண்டி பெருங்காய பொர எடுத்து, அதில் சிறிதளவு சுடு நீர் சேர்த்து பேஸ்டாக மாற்ற வேண்டும். பின் அந்த பேஸ்டை தேள் கொட்டிய இடத்தில் தடவ வேண்டும். இதனை வலி குறையும் வரை தொடர வேண்டும்.

பூண்டு :


பூண்டு
ஐந்து அல்லது ஆறு பூண்டு பற்களை எடுத்து அம்மியில் வைத்து பசை போல் அரைத்து அதனை தேள் கொட்டிய இடத்தில் தடவ வேண்டும். பின் மூன்று மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். வலி இருந்தால் இதனை மீண்டும் செய்ய வேண்டும்.

துளசி இலை :


துளசி இலை
துளசி இலையை கொத்தாக பிடுங்கி அம்மியில் வைத்து அரைத்து ஜுஸ் எடுக்க வேண்டும். இதில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் தடவ வேண்டும். பின் சில மணி நேரம் உட்கார்ந்து இருந்து விட்டு மறுபடியும் இதனை செய்ய வேண்டும்.

மஞ்சள் தூள் :


மஞ்சள் தூள்
இரண்டு தேக்கரண்டி மஞ்சள் தூளுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி பேஸ்டாக மாற்ற வேண்டும். இதனை தேள் கொட்டிய இடத்தில் தடவ வேண்டும். வலி மற்றும் வீக்கம் குறையும் வரை இதை தொடர வேண்டும்.

கவனம் :

கவனம்
வலியும் வீக்கமும் குறையாமல் இருந்தால் உடனே டாக்டரிடம் செல்லவும்.
தேள் முகம் அல்லது கண்களின் அருகில் கொட்டினால் உடனே டாக்டரிடம் செல்லவும்.

திங்கள், 5 மார்ச், 2018

எந்த உணவை எந்த நேரத்தில் சாப்பிடலாம்?... ஆபத்தை நிச்சயம் தெரிஞ்சிக்கோங்க


உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் சரிவிகித டயட் மிகவும் இன்றியமையாதது. நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடல் பிரச்சனைகளின்றி இருக்கும். ஆனால் நம்மில் பலர் சாப்பிடும் பெரும்பாலான உணவுப் பொருட்களை தவறான நேரத்தில் சாப்பிடுகின்றனர். இப்படி தவறான நேரத்தில் குறிப்பிட்ட உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தீங்கு தான் விளையும் என்பது தெரியுமா?
ஆம், குறிப்பிட்ட உணவுப் பொருட்களை தவறான நேரத்தில் சாப்பிட்டால், அதன் விளைவாக அஜீரண கோளாறு, மலச்சிக்கல் மற்றும் இதர வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் நமக்கு எந்த பொருளை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது என்று தெரியாது. முக்கியமாக அன்றாடம் நாம் சாப்பிடும் பொதுவான உணவுப் பொருட்களை எந்த நேரத்தில் சாப்பிடுவது என்று தெரியாமல் கண்ட நேரத்தில் சாப்பிடுகிறோம்.
உதாரணமாக, வாழைப்பழம், பால், தயிர் போன்ற பொதுவான உணவுப் பொருட்களை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது என்று தெரியுமா? இந்த உணவுப் பொருட்களை தவறான நேரத்தில் சாப்பிட்டால், அதனால் எதிர்மறை விளைவுகளைத் தான் சந்திக்க நேரிடும். நாம் பொதுவாக சாப்பிடும் சில உணவுப் பொருட்களை எந்த நேரத்தில் சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நெஞ்செரிச்சலை சரிசெய்ய உதவும் ஆன்டாசிட்டு பண்புகள் அதிகம் உள்ளது. வாழைப்பழத்தை பகல் நேரத்தில் சாப்பிடுவதன் மூலம், உடலின் ஆற்றல் சீராக பராமரிக்கப்படும். அதே வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அதன் விளைவாக சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்படக்கூடும். எனவே எப்போதும் வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது.
தயிர்
தயிரை பகல் நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் செரிமான செயல்பாடுகள் மென்மையாக நடைபெறுவதோடு, குடல் ஆரோக்கியமும் மேம்படும். இந்த தயிரை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது சூட்டைக் கிளப்பிவிடுவதோடு, அசிடிட்டியை ஏற்படுத்துவதோடு, இதர செரிமான கோளாறுகளையும் உண்டாக்கும். அதோடு, இது சுவாச பாதைகளைப் பாதித்து, சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவஸ்தைப்படவும் செய்யும்.
க்ரீன் டீ
க்ரீன் டீயில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் இந்த பானத்தை சரியான நேரத்தில் குடித்தால் தான், இதன் முழு பலனையும் பெற முடியும். க்ரீன் டீயை ஒருவர் அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், அது உடல் வறட்சி மற்றும் அசிடிட்டியை உண்டாக்கிவிடும். ஏனெனில் இதில் காப்ஃபைன் உள்ளது. எனவே இதனை வெறும் வயிற்றில் குடிப்பதை விட, பகல் நேரங்களில் குடிப்பதே சிறந்தது.
சாதம்
ஒருவர் சாதத்தை இரவு நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என அனைத்து ஊட்டச்சத்து நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் இதில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. இதனை இரவு நேரத்தில் சாப்பிட்டால், வயிறு உப்புசத்துடன் இருப்பதோடு, இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமலும் செய்யும். மேலும் இரவு நேரத்தில் சாதத்தை சாப்பிட்டால், அது செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுத்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கும். எனவே சாதத்தை பகலில் மட்டும் சாப்பிடுங்கள்.
பால்
பாலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. ஆனால் இத்தகைய பாலை பகல் வேளையில் குடித்தால், அது சோம்பேறித்தனமாக இருக்க செய்யும். ஏனெனில் இது செரிமானமாவதற்கு நீண்ட நேரம் ஆகும். இதே பாலை இரவு நேரத்தில் ஒருவர் குடித்தால், உடல் முழுமையாக ரிலாக்ஸ் ஆவதோடு, அதில் உள்ள ஊட்டச்சத்துக்களும் சிறப்பான முறையில் முழுமையாக உடலால் உறிஞ்சப்படும்.
ஆப்பிள்
நம் அனைவருக்குமே ஆப்பிள் ஏராளமான முக்கிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகுள் நிறைந்த மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்பது தெரியும். இத்தகைய ஆப்பிளை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது வயிற்றில் அமிலத்தின் அளவை அதிகரித்து, அசிடிட்டியை உண்டாக்கும். எனவே ஆப்பிளை இரவு நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்த்து, பகல் நேரத்தில் சாப்பிடுங்கள். இதனால் குடலியக்கம் சிறப்பாக நடைபெறும்.
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய உட்பொருட்களைக் கொண்டது மற்றும் இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கும். டார்க் சாக்லேட்டில் சர்க்கரை மிகவும் குறைவு மற்றும் கொக்கோ பொருள் அதிகம். இதனை இரவு நேரத்தில் சாப்பிட்டால், மனநிலை சிறப்பாகி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஆகவே டார்க் சாக்லேட்டை இரவு நேரத்தில் சிறிது சாப்பிடுங்கள்.
ரெட் ஒயின்
ரெட் ஒயினில் ஆல்கஹால் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கரோனரி இதய நோய்களைத் தடுக்கும். இத்தகைய ரெட் ஒயினை இரவு உணவு உட்கொண்ட பின் ஒரு டம்ளர் அல்லது மாலை வேளையில் ஒரு டம்ளர் குடித்தால், அது உடலால் விரைவில் உறிஞ்சப்பட்டு, அது ஒருவரை சுறுசுறுப்பாக்கும். ரெட் ஒயினை எப்போதும் பகல் வேளையில் மட்டும் குடிக்காதீர்கள்.
காபி
பலருக்கும் இரவு நேரத்தில் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். இது மிகவும் ஆரோக்கியமற்ற பழக்கங்களுள் ஒன்று. யார் ஒருவர் காபியை இரவு நேரத்தில் குடிக்கிறார்களோ, அவர்களது செரிமான மண்டலத்தில் எரிச்சலை உண்டாக்கும் மற்றும் இதில் உள்ள காப்ஃபைன் ஒருவரை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். எனவே இந்த காபியை இரவு நேரத்தில் குடிப்பதைத் தவிர்த்து, பகல் நேரத்தில் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் இதனை பகல் நேரத்தில் குடித்தால், அது மிகவும் சுறுசுறுப்பானவர்களாக ஆக்குவதோடு, உடலின் மெட்டபாலிச விகிதத்தையும் அதிகரிக்கும். இதற்கு அதில் உள்ள போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் டி தான் காரணம். ஆனால், இந்த ஆரஞ்சு ஜூஸை மட்டும் இரவு நேரத்தில் குடிக்காதீர்கள். ஏனெனில் இது வயிற்றில் அமில சுரப்பின் அளவை அதிகரித்து அசிடிட்டியை உண்டாக்கிவிடும்.
சர்க்கரை
சர்க்கரை கலந்த பானங்களை பகல் வேளையில் குடிப்பதால், அது உடலின் ஆற்றலை அதிகரிக்கும். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். ஆனால் இந்த சர்க்கரை கலந்த பானங்களை இரவு நேரத்தில் குடித்தால், அது உடலில் கொழுப்புக்களின் அளவை அதிகரித்துவிடும். இதற்கு இரவு நேரத்தில் உடல் இயக்கம் இல்லாமல் இருப்பது தான் காரணம்.
read andwin cash
Get Rs50 on download
Install Now
தூங்கும் போது உங்கள் காதில் பூண்டு வைத்து படுத்தால் இது நடக்குமாம்.read andwin cash
ஸ்ரீதேவியின் உடன்பிறந்த தங்கை யார் தெரியுமா?...read andwin cash
உங்களுக்கு வாயில் சிறிய அளவு புண் வந்தாலே புற்றுநோய் என்று பயம் கொள்கிறீர்களாread andwin cash
எந்த உணவை எந்த நேரத்தில் சாப்பிடலாம்?... ஆபத்தை நிச்சயம் தெரிஞ்சிக்கோங்கread andwin cash
இரண்டு கணவனுடன் ஒரே வீட்டில் வாழும் மனைவி..திகைக்கவைக்கும் காரணம்!read andwin cash
தந்தையை திருமணம் செய்யும் மகள்கள்.. இந்த கொடுமை எங்கே தெரியுமா?read andwin cash
விருமாண்டி நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்read andwin cash
காமெடி நடிகர் கொட்டாச்சியின் மனைவி மற்றும் மகள் புகைப்படம் உள்ளேread andwin cash
முதல்வன் படத்தில் நீக்கப்பட்ட காட்சி பல வருடங்களுக்கு பிறகு உண்மையை உடைத்த ஷங்கர்read andwin cash
இந்த வார ராசிபலன் மார்ச் 5 முதல் 11 வரை 12 ராசிகளுக்கும்read andwin cash
Get Rs50 on download
Install Now

எந்த உணவை எந்த நேரத்தில் சாப்பிடலாம்?... ஆபத்தை நிச்சயம் தெரிஞ்சிக்கோங்க


உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் சரிவிகித டயட் மிகவும் இன்றியமையாதது. நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடல் பிரச்சனைகளின்றி இருக்கும். ஆனால் நம்மில் பலர் சாப்பிடும் பெரும்பாலான உணவுப் பொருட்களை தவறான நேரத்தில் சாப்பிடுகின்றனர். இப்படி தவறான நேரத்தில் குறிப்பிட்ட உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தீங்கு தான் விளையும் என்பது தெரியுமா?
ஆம், குறிப்பிட்ட உணவுப் பொருட்களை தவறான நேரத்தில் சாப்பிட்டால், அதன் விளைவாக அஜீரண கோளாறு, மலச்சிக்கல் மற்றும் இதர வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் நமக்கு எந்த பொருளை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது என்று தெரியாது. முக்கியமாக அன்றாடம் நாம் சாப்பிடும் பொதுவான உணவுப் பொருட்களை எந்த நேரத்தில் சாப்பிடுவது என்று தெரியாமல் கண்ட நேரத்தில் சாப்பிடுகிறோம்.
உதாரணமாக, வாழைப்பழம், பால், தயிர் போன்ற பொதுவான உணவுப் பொருட்களை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது என்று தெரியுமா? இந்த உணவுப் பொருட்களை தவறான நேரத்தில் சாப்பிட்டால், அதனால் எதிர்மறை விளைவுகளைத் தான் சந்திக்க நேரிடும். நாம் பொதுவாக சாப்பிடும் சில உணவுப் பொருட்களை எந்த நேரத்தில் சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நெஞ்செரிச்சலை சரிசெய்ய உதவும் ஆன்டாசிட்டு பண்புகள் அதிகம் உள்ளது. வாழைப்பழத்தை பகல் நேரத்தில் சாப்பிடுவதன் மூலம், உடலின் ஆற்றல் சீராக பராமரிக்கப்படும். அதே வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அதன் விளைவாக சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்படக்கூடும். எனவே எப்போதும் வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது.
தயிர்
தயிரை பகல் நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் செரிமான செயல்பாடுகள் மென்மையாக நடைபெறுவதோடு, குடல் ஆரோக்கியமும் மேம்படும். இந்த தயிரை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது சூட்டைக் கிளப்பிவிடுவதோடு, அசிடிட்டியை ஏற்படுத்துவதோடு, இதர செரிமான கோளாறுகளையும் உண்டாக்கும். அதோடு, இது சுவாச பாதைகளைப் பாதித்து, சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவஸ்தைப்படவும் செய்யும்.
க்ரீன் டீ
க்ரீன் டீயில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் இந்த பானத்தை சரியான நேரத்தில் குடித்தால் தான், இதன் முழு பலனையும் பெற முடியும். க்ரீன் டீயை ஒருவர் அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், அது உடல் வறட்சி மற்றும் அசிடிட்டியை உண்டாக்கிவிடும். ஏனெனில் இதில் காப்ஃபைன் உள்ளது. எனவே இதனை வெறும் வயிற்றில் குடிப்பதை விட, பகல் நேரங்களில் குடிப்பதே சிறந்தது.
சாதம்
ஒருவர் சாதத்தை இரவு நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என அனைத்து ஊட்டச்சத்து நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் இதில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. இதனை இரவு நேரத்தில் சாப்பிட்டால், வயிறு உப்புசத்துடன் இருப்பதோடு, இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமலும் செய்யும். மேலும் இரவு நேரத்தில் சாதத்தை சாப்பிட்டால், அது செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுத்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கும். எனவே சாதத்தை பகலில் மட்டும் சாப்பிடுங்கள்.
பால்
பாலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. ஆனால் இத்தகைய பாலை பகல் வேளையில் குடித்தால், அது சோம்பேறித்தனமாக இருக்க செய்யும். ஏனெனில் இது செரிமானமாவதற்கு நீண்ட நேரம் ஆகும். இதே பாலை இரவு நேரத்தில் ஒருவர் குடித்தால், உடல் முழுமையாக ரிலாக்ஸ் ஆவதோடு, அதில் உள்ள ஊட்டச்சத்துக்களும் சிறப்பான முறையில் முழுமையாக உடலால் உறிஞ்சப்படும்.
ஆப்பிள்
நம் அனைவருக்குமே ஆப்பிள் ஏராளமான முக்கிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகுள் நிறைந்த மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்பது தெரியும். இத்தகைய ஆப்பிளை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது வயிற்றில் அமிலத்தின் அளவை அதிகரித்து, அசிடிட்டியை உண்டாக்கும். எனவே ஆப்பிளை இரவு நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்த்து, பகல் நேரத்தில் சாப்பிடுங்கள். இதனால் குடலியக்கம் சிறப்பாக நடைபெறும்.
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய உட்பொருட்களைக் கொண்டது மற்றும் இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கும். டார்க் சாக்லேட்டில் சர்க்கரை மிகவும் குறைவு மற்றும் கொக்கோ பொருள் அதிகம். இதனை இரவு நேரத்தில் சாப்பிட்டால், மனநிலை சிறப்பாகி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஆகவே டார்க் சாக்லேட்டை இரவு நேரத்தில் சிறிது சாப்பிடுங்கள்.
ரெட் ஒயின்
ரெட் ஒயினில் ஆல்கஹால் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கரோனரி இதய நோய்களைத் தடுக்கும். இத்தகைய ரெட் ஒயினை இரவு உணவு உட்கொண்ட பின் ஒரு டம்ளர் அல்லது மாலை வேளையில் ஒரு டம்ளர் குடித்தால், அது உடலால் விரைவில் உறிஞ்சப்பட்டு, அது ஒருவரை சுறுசுறுப்பாக்கும். ரெட் ஒயினை எப்போதும் பகல் வேளையில் மட்டும் குடிக்காதீர்கள்.
காபி
பலருக்கும் இரவு நேரத்தில் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். இது மிகவும் ஆரோக்கியமற்ற பழக்கங்களுள் ஒன்று. யார் ஒருவர் காபியை இரவு நேரத்தில் குடிக்கிறார்களோ, அவர்களது செரிமான மண்டலத்தில் எரிச்சலை உண்டாக்கும் மற்றும் இதில் உள்ள காப்ஃபைன் ஒருவரை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். எனவே இந்த காபியை இரவு நேரத்தில் குடிப்பதைத் தவிர்த்து, பகல் நேரத்தில் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் இதனை பகல் நேரத்தில் குடித்தால், அது மிகவும் சுறுசுறுப்பானவர்களாக ஆக்குவதோடு, உடலின் மெட்டபாலிச விகிதத்தையும் அதிகரிக்கும். இதற்கு அதில் உள்ள போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் டி தான் காரணம். ஆனால், இந்த ஆரஞ்சு ஜூஸை மட்டும் இரவு நேரத்தில் குடிக்காதீர்கள். ஏனெனில் இது வயிற்றில் அமில சுரப்பின் அளவை அதிகரித்து அசிடிட்டியை உண்டாக்கிவிடும்.
சர்க்கரை
சர்க்கரை கலந்த பானங்களை பகல் வேளையில் குடிப்பதால், அது உடலின் ஆற்றலை அதிகரிக்கும். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். ஆனால் இந்த சர்க்கரை கலந்த பானங்களை இரவு நேரத்தில் குடித்தால், அது உடலில் கொழுப்புக்களின் அளவை அதிகரித்துவிடும். இதற்கு இரவு நேரத்தில் உடல் இயக்கம் இல்லாமல் இருப்பது தான் காரணம்.
read andwin cash
Get Rs50 on download
Install Now
தூங்கும் போது உங்கள் காதில் பூண்டு வைத்து படுத்தால் இது நடக்குமாம்.read andwin cash
ஸ்ரீதேவியின் உடன்பிறந்த தங்கை யார் தெரியுமா?...read andwin cash
உங்களுக்கு வாயில் சிறிய அளவு புண் வந்தாலே புற்றுநோய் என்று பயம் கொள்கிறீர்களாread andwin cash
எந்த உணவை எந்த நேரத்தில் சாப்பிடலாம்?... ஆபத்தை நிச்சயம் தெரிஞ்சிக்கோங்கread andwin cash
இரண்டு கணவனுடன் ஒரே வீட்டில் வாழும் மனைவி..திகைக்கவைக்கும் காரணம்!read andwin cash
தந்தையை திருமணம் செய்யும் மகள்கள்.. இந்த கொடுமை எங்கே தெரியுமா?read andwin cash
விருமாண்டி நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்read andwin cash
காமெடி நடிகர் கொட்டாச்சியின் மனைவி மற்றும் மகள் புகைப்படம் உள்ளேread andwin cash
முதல்வன் படத்தில் நீக்கப்பட்ட காட்சி பல வருடங்களுக்கு பிறகு உண்மையை உடைத்த ஷங்கர்read andwin cash
இந்த வார ராசிபலன் மார்ச் 5 முதல் 11 வரை 12 ராசிகளுக்கும்read andwin cash
Get Rs50 on download
Install Now

வியாழன், 8 பிப்ரவரி, 2018

சீரகத்தின் மருத்துவ குணங்கள்!


* சீரகத்தை வாயில் போட்டு, குளிர்ந்த தண்ணீரை குடித்தால், தலைச் சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
* திராட்சை ஜூஸுடன், சீரகம் கலந்து பருகி வர, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், மன நோய் குணமாகும். 
* சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து, கொட்டைப்பாக்கு அளவு சாப்பிட்டு வந்தால், நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
* சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து உலர்த்தி, துாளாக இடித்து, ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை, தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு, மோர் குடித்து வந்தால், மார்பு வலி நீங்கும்.
* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து பருகினால், வாயுத் தொல்லை நீங்கும். 
* சீரகத்தை இஞ்சி மற்றும் எலுமிச்சம் பழ சாற்றில் கலந்து, ஒருநாள் ஊற வைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம், மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் குறையும்.
* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றை பொடித்து, தேனில் கலந்து சாப்பிட்டால், எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தை பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.
* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறுடன் சேர்த்து பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன், கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெற்று, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
*சீரகத்தை துாள் செய்து, தேனுடன் கலந்து லேகியமாக தர, ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாவர்.

தலைவலி குறைய

 மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.
அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. மகிழம்பூ
  2. சுக்கு.
  3. சீரகம்.
  4. சோம்பு.
  5. ரோஜாப்பூ.
  6. ஏலக்காய்.
  7. அதிமதுரம்.
  8. சித்தரத்தை
  9. தேன்.
செய்முறை:
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.

மருத்துவ உலகின் மகிமை ராணி கற்றாழை


நோய்கள விரட்ட உதவும் பல மருந்துகளுடன் சேர்க்கப் பயன்படும் மூலிகை, கற்றாழைக்கு குறிப்பிட்ட இடமுண்டு. நம் ஊரில் சாதாரணமாக முள் வேலிகளில் வளர்ந் வரும் கற்றாழகளின் அளப்பரிய மருத்துவ குணங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் : 

கற்றாழை உலகம் பூராவும் 17ம் நூற்றாண்டு முதல் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.சோற்றுக் கற்றாழயின் மருத்துவ குணங்களப் பற்றிச் சிலவற்றைத் தெரிந்கொண்டு, எளிய முறையில் பயன்படுத்தினால் பல நன்மைகளப் பெறலாம்.

சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

தீராத வயிற்றுப் புண்களுக்கு... சிறுநீர் குழாய்களிலும், பிறப்பு உறுப்புக்களிலுமுள்ள நோய்களை சோற்றுக் கற்றாழை நன்கு செயல்பட்டு முழுமையாக நிவர்த்தி செய்யும். வயிற்றின் சூட்டைத் தணிக்கும். வாய்வுத் தொல்லைகளை நீக்கும். நீடித்த மலச்சிக்கலைப் போக்குவதில் மிகவும் சிறப்பானது. கழுவிச் சுத்தம் செய்த சோற்றுக் கற்றாழையை அரைக்கிலோ எடுத்துக்கொண்டு, இதில் விளக்கெண்ணெய் ஒரு கிலோவும், பனங்கற்கண்டு அரைக்கிலோவும், வெள்ளை வெங்காயச் சாறு கால்கிலோவும் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வைதது அடுப்பில் சிறு தீயாக எரிக்க வேண்டும். சாறுகள் சுண்டியபின் இந்த நெயi;ய எடுதது;வதை;துக் கொண்டு, நோயாளிகள் ஒரு தேக்கரண்டி வீதம், காலை, மாலை சாப்பிட்டு வந்தால், தீராத வயிற்று வலியும், வயிற்றுப் புண்ணும், சூன்மக் கட்டிகளும் நிவர்த்தியாகும்.
செரிமான சக்தியை அதிகரிக்கும். பசியை உண்டாக்கும்.

இந்த மருந்து பால்வினை நோய்களில் ஒன்றான கனோரியா நோயை முழுமையாகக் குணமாக்கிவிடும். கனோரியாவை நீக்குவதில் மிகவும் சக்தி வாய்ந்தது. நம்பிக்கயானது. வெட்டை நோய்கள் குணமாக....கனோரியா நோயினால் ஏற்படும் எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, நிறம் மாறிய சிறுநீர் வெளியேறுதல். இந்திரிய ஒழுக்கு, அரையாப்பு, ஜனன உறுப்பில் உள்ளுக்கும், வெளியிலும் புண் ஏற்பட்ட நிலை, சீழ் பிடித்தல், வெள்ளை வெடi;ட நோய்கள் ஆகியன பூரணமாகக் குணமாகும். மருந்து சாப்பிடும் காலங்களில் காரத்தையும், புளியையும் சேர்க்காமல் உணவு உட்கொள்ள வேண்டும்.

சோற்றுக் கற்றாழை மடல் சுத்தம் செய்து எடுத்து, இதில் சிறிது படிக்காரத்தூளைத் தூவினால் நீர்த்து தண்ணீராகிவிடும். இதில் வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத் தூள் சேர்தது; சாப்பிட்டால் மூத்திரக் கிரிச்சரம், மேக நோயால் ஏற்பட்ட வெட்ட நோய் நீங்கிவிடும்.கழுவிச் சுத்தம் செய்த சோற்றுக்கற்றாழை ஒரு கப் சேகரம் செயது; கொண்டு, இதில் சிறிய வெங்காயம் ஒரு கப் நறுக்கிச் சேர்தது; விளக்கெண்ணெய் 300 கிராம், பனங்கற்கண்டு 300 கிராம் இவை யாவையும் ஒன்று சேர்த்து, அடுப்பில் வைதது; சிறு தீயாக லேகிய பதம் வரும் வரை எரிதது; எடுத்துக்கொண்டு காலை, மாலை, ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் அனைத்து வகையான வயிற்று வலியும், வயிற்றுப் புண்களும் குணமாகும்.சிறுநீர் எளிதில் வெளியேற....கழுவி எடுத்த சோற்றுக் கற்றாழையில் ஒரு மடல் அளவு கற்றாழைத் துண்டுகள நீர் ஆகாரத்தில் கலந்து குடிக்க வேண்டும். மடல் துண்டுகள் ஐந்து தேக்கரண்டிக்குக் குறையக் கூடாது இதை, காலையில் ஒருவேள சாப்பிட வேண்டும். மூன்று நாள் உபயோகத்தில் சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல் நின்று விடும். இதே முறையில், மூன்று தினங்கள் சாப்பிட்டால் நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். கழுவிச் சுத்தம் செய்த கற்றாழைத் துண்டு ஒரு கப் எடுததுக் கொண்டு, இதில் சின்ன வெங்காயம் சுட்டுப்பொடியாக்கிய ஐந்து வெங்காயத்துக்குக் குதறயாமல் சேர்த்துக் கொண்டு, இதத கற்றாதழச் சோற்றில் கலந்து, கடுக்காய் பொடிகள் மூன்று கடுக்காயில் சேகரித்து, எல்லாவற்தறயும் ஒன்றாக்கி சிறிது தண்ணீர் விட்டு மூடி வத்தால், கால் மணி நேரத்தில் நீர்த்து தண்ணீராகிவிடும். இந்தத் தண்ணீதர வடிகட்டிச் சாப்பிட்டால் அதர மணி நேரத்தில் சிறுநீர்க்கட்டு நீங்கிவிடும். தாராளமாக சிறுநீர் வெளியேறிவிடும்.

புண்கள் ஆற....கழுவி எடுத்த கற்றாதழச்சோறு 25 - 50 கிராம் பசும் பாலில் கலந்து காதல, மாதல சாப்பிட்டு வந்தால் பத்து தினங்களில் மூலச் சூடு தணியும். சொறி, அரிப்பு நீங்கும். விந்து உற்பத்தி அதிகரிக்கும். பால்விதன நோயான சொருக்கு நோய் வந்தவர்களின் ஆண் உறுப்பில் புண்கள் உண்டாகும். இதனால் வீக்கமும், புண்ணும் இருக்கும். கழுவி எடுத்த சோற்றுக் கற்றாழையை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். இரவு படுக்கும்போது இப்படிச் செய்து கொள்ளலாம். இவ்வாறு சில தினங்கள் கட்டி வந்தால், புண்கள் ஆறிவிடும். வீக்கம் வடிந்விடும்.

பெண்களின் வெள்ளை நோய் குணமாக....பெரிய கற்றாழை மடலை நீளவாக்கில் கீறிப் பிளந்து இதில் மூன்று தேக்கரண்டியளவு வெந்தயத்தைப் பதித்து மூடி, நூலால் கட்டி இரவு கூரைமேல் வைத்து எடுத்தால், மூன்றாவது நாளில் பிரித்துப் பார்க்கும் போது வெந்தயம் முளை கட்டியிருக்கும். இந்த வெந்தயத்தை மூன்று பாகமாக்கி மூன்று தினங்கள் சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்பட்ட வெள்ள நோய் குணமாகும்.

தாம்பத்திய உறவு மேம்பட....சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்க்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.கூந்தல் வளர....சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.கண்களில் அடிபட்டால்....கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும். குளிர்ச்சி தரும் குளியலுக்கு....மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.

அழகு சாதனப் பொருளில் கற்றாழை முக்கியப் பொருளாகச் சேர்த்து தயாரிக்கப்படும் ஜெல் சருமத்தின் பாதுகாவலனாகச் செயல்படுகிறது. சருமத்தின் ஈரப் பசையப் பாகாக்கிற.து சரும நோய்களுக்குச் சிறந்த மருந்தாகிறது. கற்றாழை மடல் சாறு பயன்படுத்தப்படுவதால், சூரிய வெப்பமாக்குதல் குறைகிறது. எக்ஸ்ரே கதிர் வீச்சின் கடுமையத் தடுத்து பாகாப்பு அளிக்கிறது மொத்தத்தில் மருத்துவ உலகின் ராணியாக கற்றாழை வலம் வருகிறது

வேர்க்கடலையில் இத்தனை மருத்துவ குணங்களா?


உடல் பருமன் குறைய, ரத்தம் சீராக ஓட, ரத்த அழுத்தம் குறைய, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது. புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்கள் அழிய, நரம்புகள் நன்றாகக் செயல்பட, நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைய, பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க, கடைகளில் எளிதாக குறைந்த விலையில் கிடைக்கும் முட்டை இது என்று வேர்க்கடலையைப் பற்றி கவிஞர் ஒருவர் பாடி வைத்தார். காந்தி தாத்தா தினம் கொறித்தது, கடலை என்பது மிகவும் பிரபல்யம். 

கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும். ஆச்சர்யமாக இருக்கிறதா? கட்டுரையை முழுமையாக படியுங்கள்.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?

வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். 

வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். 

அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு. 

சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள். வேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. 

அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். 

மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.

வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன?

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.

வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. 

உடல் பருமன் குறையும்.

இன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், ''சாப்பிட்டது போதும்'' என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. 

இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.

வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. 

இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவேகர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.
வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன

குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.

வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.

நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். 

இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.

ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.

வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். 

பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன. 

இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது. 

வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? அது உடலுக்குக் கெடுதி இல்லையா?

தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள். 

எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.

கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது. 

ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது. 

அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். இப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா? 

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.

சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. 

ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா?ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். 

ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. 

வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். 
ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.

ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.

வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. 

கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. 

எனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.