Like us on Facebook

வியாழன், 8 பிப்ரவரி, 2018

சீரகத்தின் மருத்துவ குணங்கள்!


* சீரகத்தை வாயில் போட்டு, குளிர்ந்த தண்ணீரை குடித்தால், தலைச் சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
* திராட்சை ஜூஸுடன், சீரகம் கலந்து பருகி வர, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், மன நோய் குணமாகும். 
* சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து, கொட்டைப்பாக்கு அளவு சாப்பிட்டு வந்தால், நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
* சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து உலர்த்தி, துாளாக இடித்து, ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை, தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு, மோர் குடித்து வந்தால், மார்பு வலி நீங்கும்.
* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து பருகினால், வாயுத் தொல்லை நீங்கும். 
* சீரகத்தை இஞ்சி மற்றும் எலுமிச்சம் பழ சாற்றில் கலந்து, ஒருநாள் ஊற வைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம், மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் குறையும்.
* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றை பொடித்து, தேனில் கலந்து சாப்பிட்டால், எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தை பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.
* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறுடன் சேர்த்து பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன், கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெற்று, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
*சீரகத்தை துாள் செய்து, தேனுடன் கலந்து லேகியமாக தர, ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாவர்.

தலைவலி குறைய

 மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.
அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. மகிழம்பூ
  2. சுக்கு.
  3. சீரகம்.
  4. சோம்பு.
  5. ரோஜாப்பூ.
  6. ஏலக்காய்.
  7. அதிமதுரம்.
  8. சித்தரத்தை
  9. தேன்.
செய்முறை:
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.

மருத்துவ உலகின் மகிமை ராணி கற்றாழை


நோய்கள விரட்ட உதவும் பல மருந்துகளுடன் சேர்க்கப் பயன்படும் மூலிகை, கற்றாழைக்கு குறிப்பிட்ட இடமுண்டு. நம் ஊரில் சாதாரணமாக முள் வேலிகளில் வளர்ந் வரும் கற்றாழகளின் அளப்பரிய மருத்துவ குணங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் : 

கற்றாழை உலகம் பூராவும் 17ம் நூற்றாண்டு முதல் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.சோற்றுக் கற்றாழயின் மருத்துவ குணங்களப் பற்றிச் சிலவற்றைத் தெரிந்கொண்டு, எளிய முறையில் பயன்படுத்தினால் பல நன்மைகளப் பெறலாம்.

சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

தீராத வயிற்றுப் புண்களுக்கு... சிறுநீர் குழாய்களிலும், பிறப்பு உறுப்புக்களிலுமுள்ள நோய்களை சோற்றுக் கற்றாழை நன்கு செயல்பட்டு முழுமையாக நிவர்த்தி செய்யும். வயிற்றின் சூட்டைத் தணிக்கும். வாய்வுத் தொல்லைகளை நீக்கும். நீடித்த மலச்சிக்கலைப் போக்குவதில் மிகவும் சிறப்பானது. கழுவிச் சுத்தம் செய்த சோற்றுக் கற்றாழையை அரைக்கிலோ எடுத்துக்கொண்டு, இதில் விளக்கெண்ணெய் ஒரு கிலோவும், பனங்கற்கண்டு அரைக்கிலோவும், வெள்ளை வெங்காயச் சாறு கால்கிலோவும் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வைதது அடுப்பில் சிறு தீயாக எரிக்க வேண்டும். சாறுகள் சுண்டியபின் இந்த நெயi;ய எடுதது;வதை;துக் கொண்டு, நோயாளிகள் ஒரு தேக்கரண்டி வீதம், காலை, மாலை சாப்பிட்டு வந்தால், தீராத வயிற்று வலியும், வயிற்றுப் புண்ணும், சூன்மக் கட்டிகளும் நிவர்த்தியாகும்.
செரிமான சக்தியை அதிகரிக்கும். பசியை உண்டாக்கும்.

இந்த மருந்து பால்வினை நோய்களில் ஒன்றான கனோரியா நோயை முழுமையாகக் குணமாக்கிவிடும். கனோரியாவை நீக்குவதில் மிகவும் சக்தி வாய்ந்தது. நம்பிக்கயானது. வெட்டை நோய்கள் குணமாக....கனோரியா நோயினால் ஏற்படும் எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, நிறம் மாறிய சிறுநீர் வெளியேறுதல். இந்திரிய ஒழுக்கு, அரையாப்பு, ஜனன உறுப்பில் உள்ளுக்கும், வெளியிலும் புண் ஏற்பட்ட நிலை, சீழ் பிடித்தல், வெள்ளை வெடi;ட நோய்கள் ஆகியன பூரணமாகக் குணமாகும். மருந்து சாப்பிடும் காலங்களில் காரத்தையும், புளியையும் சேர்க்காமல் உணவு உட்கொள்ள வேண்டும்.

சோற்றுக் கற்றாழை மடல் சுத்தம் செய்து எடுத்து, இதில் சிறிது படிக்காரத்தூளைத் தூவினால் நீர்த்து தண்ணீராகிவிடும். இதில் வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத் தூள் சேர்தது; சாப்பிட்டால் மூத்திரக் கிரிச்சரம், மேக நோயால் ஏற்பட்ட வெட்ட நோய் நீங்கிவிடும்.கழுவிச் சுத்தம் செய்த சோற்றுக்கற்றாழை ஒரு கப் சேகரம் செயது; கொண்டு, இதில் சிறிய வெங்காயம் ஒரு கப் நறுக்கிச் சேர்தது; விளக்கெண்ணெய் 300 கிராம், பனங்கற்கண்டு 300 கிராம் இவை யாவையும் ஒன்று சேர்த்து, அடுப்பில் வைதது; சிறு தீயாக லேகிய பதம் வரும் வரை எரிதது; எடுத்துக்கொண்டு காலை, மாலை, ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் அனைத்து வகையான வயிற்று வலியும், வயிற்றுப் புண்களும் குணமாகும்.சிறுநீர் எளிதில் வெளியேற....கழுவி எடுத்த சோற்றுக் கற்றாழையில் ஒரு மடல் அளவு கற்றாழைத் துண்டுகள நீர் ஆகாரத்தில் கலந்து குடிக்க வேண்டும். மடல் துண்டுகள் ஐந்து தேக்கரண்டிக்குக் குறையக் கூடாது இதை, காலையில் ஒருவேள சாப்பிட வேண்டும். மூன்று நாள் உபயோகத்தில் சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல் நின்று விடும். இதே முறையில், மூன்று தினங்கள் சாப்பிட்டால் நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். கழுவிச் சுத்தம் செய்த கற்றாழைத் துண்டு ஒரு கப் எடுததுக் கொண்டு, இதில் சின்ன வெங்காயம் சுட்டுப்பொடியாக்கிய ஐந்து வெங்காயத்துக்குக் குதறயாமல் சேர்த்துக் கொண்டு, இதத கற்றாதழச் சோற்றில் கலந்து, கடுக்காய் பொடிகள் மூன்று கடுக்காயில் சேகரித்து, எல்லாவற்தறயும் ஒன்றாக்கி சிறிது தண்ணீர் விட்டு மூடி வத்தால், கால் மணி நேரத்தில் நீர்த்து தண்ணீராகிவிடும். இந்தத் தண்ணீதர வடிகட்டிச் சாப்பிட்டால் அதர மணி நேரத்தில் சிறுநீர்க்கட்டு நீங்கிவிடும். தாராளமாக சிறுநீர் வெளியேறிவிடும்.

புண்கள் ஆற....கழுவி எடுத்த கற்றாதழச்சோறு 25 - 50 கிராம் பசும் பாலில் கலந்து காதல, மாதல சாப்பிட்டு வந்தால் பத்து தினங்களில் மூலச் சூடு தணியும். சொறி, அரிப்பு நீங்கும். விந்து உற்பத்தி அதிகரிக்கும். பால்விதன நோயான சொருக்கு நோய் வந்தவர்களின் ஆண் உறுப்பில் புண்கள் உண்டாகும். இதனால் வீக்கமும், புண்ணும் இருக்கும். கழுவி எடுத்த சோற்றுக் கற்றாழையை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். இரவு படுக்கும்போது இப்படிச் செய்து கொள்ளலாம். இவ்வாறு சில தினங்கள் கட்டி வந்தால், புண்கள் ஆறிவிடும். வீக்கம் வடிந்விடும்.

பெண்களின் வெள்ளை நோய் குணமாக....பெரிய கற்றாழை மடலை நீளவாக்கில் கீறிப் பிளந்து இதில் மூன்று தேக்கரண்டியளவு வெந்தயத்தைப் பதித்து மூடி, நூலால் கட்டி இரவு கூரைமேல் வைத்து எடுத்தால், மூன்றாவது நாளில் பிரித்துப் பார்க்கும் போது வெந்தயம் முளை கட்டியிருக்கும். இந்த வெந்தயத்தை மூன்று பாகமாக்கி மூன்று தினங்கள் சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்பட்ட வெள்ள நோய் குணமாகும்.

தாம்பத்திய உறவு மேம்பட....சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்க்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.கூந்தல் வளர....சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.கண்களில் அடிபட்டால்....கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும். குளிர்ச்சி தரும் குளியலுக்கு....மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.

அழகு சாதனப் பொருளில் கற்றாழை முக்கியப் பொருளாகச் சேர்த்து தயாரிக்கப்படும் ஜெல் சருமத்தின் பாதுகாவலனாகச் செயல்படுகிறது. சருமத்தின் ஈரப் பசையப் பாகாக்கிற.து சரும நோய்களுக்குச் சிறந்த மருந்தாகிறது. கற்றாழை மடல் சாறு பயன்படுத்தப்படுவதால், சூரிய வெப்பமாக்குதல் குறைகிறது. எக்ஸ்ரே கதிர் வீச்சின் கடுமையத் தடுத்து பாகாப்பு அளிக்கிறது மொத்தத்தில் மருத்துவ உலகின் ராணியாக கற்றாழை வலம் வருகிறது

வேர்க்கடலையில் இத்தனை மருத்துவ குணங்களா?


உடல் பருமன் குறைய, ரத்தம் சீராக ஓட, ரத்த அழுத்தம் குறைய, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது. புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்கள் அழிய, நரம்புகள் நன்றாகக் செயல்பட, நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைய, பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க, கடைகளில் எளிதாக குறைந்த விலையில் கிடைக்கும் முட்டை இது என்று வேர்க்கடலையைப் பற்றி கவிஞர் ஒருவர் பாடி வைத்தார். காந்தி தாத்தா தினம் கொறித்தது, கடலை என்பது மிகவும் பிரபல்யம். 

கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும். ஆச்சர்யமாக இருக்கிறதா? கட்டுரையை முழுமையாக படியுங்கள்.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?

வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். 

வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். 

அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு. 

சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள். வேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. 

அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். 

மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.

வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன?

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.

வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. 

உடல் பருமன் குறையும்.

இன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், ''சாப்பிட்டது போதும்'' என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. 

இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.

வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. 

இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவேகர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.
வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன

குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.

வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.

நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். 

இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.

ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.

வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். 

பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன. 

இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது. 

வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? அது உடலுக்குக் கெடுதி இல்லையா?

தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள். 

எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.

கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது. 

ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது. 

அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். இப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா? 

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.

சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. 

ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா?ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். 

ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. 

வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். 
ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.

ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.

வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. 

கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. 

எனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.

மூட்டுவலியை நீக்கும் முடக்கத்தான் கீரை

மூட்டு வலியைப் போக்க ஒரு அருமருந்துதான் இந்த முடக்கத்தான் கீரை..  



மூட்டு வலிக்கு முக்கிய காரணமே மூட்டுத் தேய்மானம்தான். இது வயதாக வயதாக அனைவருக்கும் உண்டாகும் நோய்தான்.. இதிலிருந்து தப்புவது என்பது பெரும்பாலானோருக்கு முடியாத ஒன்று. 

இளவயதிலேயே மூட்டுவலியா? அப்படியென்றால் நிச்சயம் நீங்கள் குண்டாக இருப்பீர்கள். அளவுக்கதிமாக வயதுக்கு மீறிய எடையுடன் இருப்பீர்கள். அல்லது காலுக்கு அழுத்தம் கொடுத்து செய்யக்கூடிய வேலைப் பார்ப்பவராக இருப்பீர்கள்.. 

நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டு வேலை செய்பராக இருக்கக்கூடும். அதிக எடையை சுமக்கக்கூடிய வேலை செய்பவராக இருக்ககூடும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

குறிப்பிட்ட வயதுக்கு மேல் எலும்பு தேய்மானத்தால் பெரும்பாலானவர்களுக்கு இந்த மூட்டுவலி வந்துவிடுகிறது. 

மருத்துவரைப் பார்த்து, வைத்தியங்கள் செய்து கொண்டு வந்தால் அன்றைக்கு அல்லது ஓரிரு நாட்கள் வலி குறைந்ததுபோல இருக்கும். மருத்துவர்கள் இவர்களுக்கு கொடுப்பது வலி நிவாரணிகளைத்தான். இந்த வலி நிவாரணி மாத்திரைகள் என்ன செய்யும் தெரியுமா? வலியை மறத்துப்போகச் செய்யும். அதாவது வலி உணர்வை மட்டுமே போக்கும்..மாத்திரைகள் அனைத்தும் வலியைக் கட்டுப்படுத்தக்கூடியவை மட்டுமே.. அப்போதைக்கு குறைப்பது போலிருக்கும். ஆனால் அவை நிரந்தரமல்ல.. தொடர்ந்து மூட்டுவலியைக் கட்டுக்குள் கொண்டு வர தினமும் இந்த வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு வரும் பக்கவிளைவுகள் ஆபத்தை ஏற்படுத்தலாம். இரத்தத்தில் மாத்திரையின் சாரம் குறையும்போது மீண்டும் பல்லவிதான்.. மூட்டுவலி.. மூட்டுவலி.. மேலும் மூட்டுவலி.. 

சிலருக்கு வலியைத் தாங்கக்கூடிய சக்தி இருக்கும். ஒரு சிலருக்கு உயிர்போகிற வலி இருக்கும்.. மூட்டுவலியால் இவர்கள் அவதிப்படும்போது காண சகிக்காது...

இதற்கு காரணம் மூட்டுகளில் தங்கும் கொழுப்பு, புரதம், கொழுப்பு, பாஸ்பரஸ் போன்ற படிகங்கள்தான்.

இத்தகைய துன்பம் தரும் மூட்டு வலியை நீக்க அருமையான இயற்கை முறை, இயற்கை மூலிகை உள்ளது. 

முடக்கத்தான் கீரை:

பெயரே முடக்கத்தான் கீரை..அதாவது மூட்டுவலிகளை, உடல் வலிகளை முடக்கம் செய்துவிடும் குணம் உள்ளதால் இதற்கு முடக்கத்தான் கீரை என பெயரிட்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன். 

கிராம்ப்புறங்களில் இக்கீரை அதிகமாக காணப்படும். வயல்வெளிகள், ஏரிக்கரைகள், கிணற்றடியில் என நீர்வளம் மிக்க எங்கும் இது காணப்படும். 

பயன்படுத்தும் முறை:

முடக்கத்தான் கீரையில் அனைத்துப் பகுதிகளையும் பயன்படுத்தலாம். முடக்கத்தான் கீரை, முடக்கத்தான் தண்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளுங்கள். இதை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்துக்கொண்டு, இதனுடன் தேவையான இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சிறிய வெங்காயம் இவற்றை ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெய் விட்டு வதக்கவும்.  வதங்கிய பிறகு அதில் இரண்டு குவளை நீர் விட்டு நன்றாக வேக வையுங்கள். நன்றாக கீரை வெந்த பிறகு கீரையின் சத்துகள் அனைத்தும் நீரில் இறங்கியிருக்கும். இப்போது அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். வடிகட்டிய சாறை சிறிது சிறிதாக பருகலாம்.

முதலில் சாறை கொஞ்சமாக  எடுத்து பயன்படுத்தவேண்டும். ஒரு சிலருக்கு சேராமல் பேதியாகும். ஆனால் பேதியால் உடலுக்கு எந்த விட கெடுதியும் ஏற்படாது. இரண்டொரு நாளில் முடக்கத்தான் சாறு உங்கள் உடலுக்கு ஒத்துப்போய்விடும். பிறகு தினம்தோறும் இவ்வாறு சாறெடுத்து பருகலாம்.

வயதானர்களுக்கு மட்டுமல்ல.. அனைத்து வயதினருடைய மூட்டுவலிகளை முடக்கத்தான் கீரை போக்கிவிடும். மூட்டு வலிகள் மட்டுமல்ல.. உடல், முதுகு தண்டுவடம், கை, கால் வலிகள் போன்ற அனைத்துவலிகளை முடக்கத்தான் போக்கிவிடும்.

பயன்படுத்திப் பார்த்துவிட்டு நீங்களே சொல்வீங்க...

"முடக்கத்தான் கீரை 'மூட்டு வலி'யை முடக்கத்தான்" என்று.

நன்றி நண்பர்களே

புதன், 7 பிப்ரவரி, 2018

வாழையின் மருத்துவ குணங்களும் பயன்களும்....

மனித வாழ்வில் இன்றியமையாத ஒரு அங்கமாகவே இருந்துவருகிறது வாழை. வாழைமரத்தில் அனைத்துப் பாகங்களும் பயன்படுகிறது என்பதை ஆதிநாள் முதலே மனிதன் கண்டறிந்துகொண்டான். அதனால்தான் எந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருந்தாலும் வாழைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். மணப்பந்தலில் வாழை, மரண வாசலிலும் வாழை.. என ஒவ்வொரு நல்லது கெட்டதிற்கும் வாழையைப் பயன்படுத்துவதன் மூலம் வாழையின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம். இத்தகைய வாழை மரத்தின் பாகங்கள் நமக்கு எவ்வாறெல்லாம் பயன்படுகிறது? அதன் மருத்துவ குணங்கள் என்னென்ன?




வாழை இலையில் சாப்பிடுவது நல்லதா? இது என்னங்க கேள்வி... எல்லா வீட்டு விஷேசங்களுக்கும், பொது விழாக்களுக்கும் வாழை இலைதானே பயன்படுத்துகிறோம் என்கிறீர்களா? நீங்கள் நினைப்பதும் சரிதான்.

இன்றையச் சூழலில் வாழையிலைச் சாப்பாடு என்பது மிகவும் அருகிவிட்டது. ரெடிமேடாக தயாராகிய பிளாஸ்டிக் தட்டுகள்,பிளாஸ்டிக் டம்ளர் போன்றவையே பல நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஆரோக்கிய கேட்டை விளைவிக்கும். வாழையின் மகத்துவத்தை கொஞ்சம் பார்ப்போமே..

வாழை இலையின் மருத்துவ குணங்கள்: 
(The medicinal properties of banana leaf)

வாழைமரத்தின் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. அதிலும் இலையின் பங்கு மகத்தானது. வாழையிலையில் சாப்பிடுவதால் முகம் பொலிவு பெறும். வாழையின் மற்றப் பகுதிகள் அனைத்தும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பழம், வாழைப்பூ ஆகியவற்றை உடலின் உட்புறம் மருந்தாக பயன்படுத்திறோம். உடலின் வெளிப்புறத்தில் மருந்தாக பயன்படுவது இந்த வாழை இலை. 

தீக்காயம் குணமாக:

வாழை இலை சருமத்தில் ஏற்படும் பல காயங்கள் தீக்காயங்கள் உட்பட குணமாகப் பயன்படுகிறது. 

தீக்காயம், வெந்நீர்பட்டு ஏற்பட்ட காயம், கொதித்த சூடான எண்ணைய் பட்ட காயம் போன்றவற்றிற்கு வாழையின் குருத்து இலையை எடுத்து காயத்தின் மீது சுற்றி குருத்து இலையை கட்டாக போடலாம்.

மேலும் தீக்காயங்கள், சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்களை வாழையிலையில் தேன் தடவி படுக்க வைக்க வேண்டும். இவ்வாறு தினமும் ஒரு சில மணிநேரம் வாழையிலையில் தேன் தடவி படுக்க வைப்பதன் மூலம் விரைவாக தீக்காயங்களிலிருந்து குணம்பெறலாம். 

வாழை வேரின் பயன்: 
(Use of banana roots:)
குடற்புழுக்கள், நீரிழிவு, அமில நோய், தொழுநோய், இரத்த சோகை போன்ற நோய்களை வாழையின் வேர் குணமாக்குகிறது. இதற்கு வாழையின் வேரை எடுத்து நெருப்பில் சுட்டு வரும் சாம்பலை தேனுடன் குழைத்து சாப்பிட மேற்கண்ட நோய்கள் குணமாகும். 

வாழைப்பழத்தின் பயன்: 
(Use of banana fruit)
நேந்திரம் வாழைப்பழத்துடன் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து பழத்துடன் குழைத்து சாப்பிட்டு வர கடுமையான இருமல் மட்டுப்படும். 

மன அழுத்தத்தைப் போக்க: 
(To get rid of stress )
மன அழுத்தத்தைப் போக்க வாழையிலையில் ஐஸ் கட்டிகள் வைத்து மசாஜ் செய்ய வேண்டும். 

குழந்தைகளின் அரிப்பு நோயைக் குணப்படுத்த: 
(The erosion of curing children)
குழந்தைகளுக்கு டயாஃபர் போன்றவை அணிவதால் ஏற்படும் அரிப்புகளைப் போக்கவும், கொசுக்கடியிலிருந்து காக்கவும் வாழை இலையை முக்கிய மூலப்பொருளாக்க் கொண்டு தயாரிக்கப்படும் கிரீம்கள் உதவும். இவற்றை வீட்டிலும் தயாரிக்கலாம். வாலையிலையுடன், ஆலிவ் எண்ணை, தேன்மெழுகு இவற்றைக் கலந்து கீரிம்போல செய்து பயன்படுத்தலாம். 

அழகுப் பொருட்களில் வாழை:
(Banana in the use of cosmetic products)
வாழை இலையில் கிருமி நாசினி இருப்பதால் இவை, விஷ ஜந்துக்கள் கடித்தல், தேனீக்கடி, சருமத்தில் ஏற்படும் அரிப்புகள் ஆகியவற்றிற்கு ஏற்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. அழகுப் பொருட்களிப் பயன்படுத்தப்படும் Allantoin என்னும் பொருள் வாழையிலிருந்தே எடுக்கப்படுகிறது. 

தோல்நோய் நீங்க: 
(To remove the skin disease:)
தோலில் ஏற்படும் வெடிப்புகள் போன்ற தோல் பிரச்னைகள், பொடுகுத் தொல்லை, சிரங்கு, சொறி ஆகியவற்றிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. 

வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்ய: 
(To correct abdominal problems)
அஜீரணக் கோளாறுகளை வாழைப்பழம் சரிசெய்கிறது.
தேனுடன் வாழைப்பழம் கலந்து இருவேளை சாப்பிட்டு வர அஜீரணக்கோளாறுகள் நீங்கும்.

மூலநோய் குணமாக: 
(To cure piles )
அரைக்கப் தயிருடன், ஒரு டம்ளர் இளநீர், ஒரு டீஸ்பூன் தேன், இவற்றுடன் வாழைப்பழத்தையும் பிசைந்து இருவேளை சாப்பிட்டு வர மூல நோய் மற்றும் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.


வாழை - சில சுவராஷ்யமான தகவல்கள்: 
(Special news for banana tree)

இந்தியாவில்தான் வாழைப்பழம் உற்பத்தி அதிகம்.

வருடத்திற்கு மூன்று லட்சம் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

ஆசிரியாவில் தோன்றிய வாழை, மற்ற வெப்ப மண்டல நாடுகளான ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் பரவியிருக்கிறது. 

வாழைமரம் எனச் சொல்வதே தவறு. மரத்திற்குரிய குணங்களில் எதுவும் அதில் இல்லை.. அதாவது கிளைகள், கடினமான தண்டு, கடினமான வேர்கள் இவை எவையும் இதில் காணப்படுவதில்லை.. எனவே இது மரவகையைச் சேர்ந்தது அல்லது. இது ஒரு தாவரம். 

வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன்படும். எனவே இது ஒரு பூரண மருத்துவ குணம் கொண்ட தாவரமாகும். 

வாழை நார் கொண்டு பட்டுப்போன்ற மிருதுவான துணிகள் நெய்யப்படுகின்றன. ஜப்பானின் பாரம்பரிய ஆடைத் தயாரிப்பில் இது பயன்படுகிறது. 

வாழை அனைத்துவித்திலும் பயனுள்ளதாக இருக்கிறது..அதேபோல ஒரு முறை வாழைக் குலைத்தள்ளிய பிறகு இறந்துவிடுகிறது.. ஆனால் அதன் சந்ததிகள் வாழைமரம் கூடவே தோன்றிவிடுவதால் வாழை ஓரிடத்தில் தன்னுடைய சந்ததிகளை விட்டுச்செல்லும். எனவேதான் பெரியோர்கள் வாழ்த்தும்போது "வாழையடி வாழையாக வாழ்வாயாக" என வாழ்த்துவர். 

வாழையின் பயன்கள் இப்பதிவின் வழி அறிந்துகொண்டோம். நன்றி நண்பர்களே...! மற்றுமொரு பதிவின் வழி சந்திப்போம்

21 இயற்கை மருத்துவக் குறிப்புகள்

21 இயற்கை மருத்துவக் குறிப்புகள்

மனிதர்கள் சந்திக்கும் நோய்கள் பல. அவற்றை தீர்க்க எத்தனையோ வித மருத்துவ முறைகளை கையாள்கிறோம். சில நோய்கள் விரைவில் குணமடையும். சில நோய்கள் குணமடைய நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். ஒரு சில நோய்கள் தீர்க்கப்படாமலேயே இருக்கும். இதைத் தீராத வியாதிகள் என்பர். நமது முன்னோர்கள் வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் எளிதாக கிடைக்கக்கூடிய இயற்கை மூலிகைகளிலிருந்து உடலில் ஏற்படும் நோய்களுக்கு தீர்வு கண்டுள்ளனர். அவற்றில் 21 வகையான மருத்துவமுறைகளை இங்கு பதிந்துள்ளேன். படித்துப் பயன்பெறுங்கள். நன்றி..!

அருகம் புல் சாறின் அருமை:
ஆபத்துக்கு உதவுவது அருகம்புல். திடீர் வண்டுக்கடி, அலர்ஜி(Allergy) என்ற ஒவ்வாமை(), கடித்தது என்னவென்று தெரியாத விஷக்கடி(Poisonous bite) போன்றவற்றிற்கு, நச்சு நீக்கியாக அருகம்புல் சாறு உதவும்.

இடுப்பு வலியா?(Pelvic pain?)
வருத்த உளுந்து மாவு நூறு கிராம், நல்லெண்ணெய் 200 கிராம். கருப்பட்டி அல்லது பனை வெல்லம் 200 கிராம். அமுக்கிரா கிழங்கு மாவு 100 கிராம். நல்லெண்ணெயை வாணலியில் இட்டு அடுப்பில் வைத்து எரித்து அதில் மற்ற மேலே கூறிய பொருட்களை இட்டு இளகம் போல் செய்து காலை- மாலை ஒரு கோலி அல்லது ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் குனிய நிமிர முடியாத இடுப்பு வலிகள் குணமாகும்.

உடம்பு எரிச்சல் குணமாக
உடம்பு எரிச்சல் குணமாக தினமும் காலையில் கரும்புச்சாறு 100 மில்லி தயிர் 100 மில்லிகலந்து சாப்பிட உடம்பு எரிச்சல் சரியாகும்.

கண் பார்வை குறைவா?
(To correct vision loss)
கொத்து மல்லிக்கீரையில் பல அரிய சத்துக்கள நிரம்பியுள்ளன. வாசனை மிகுதி. தினமும் கொத்து மல்லியை வாயிலிட்டு மென்று தின்றால் கண்பார்வை தெளிவு பெறும்.

கால்வெடிப்பு குணமாக
கால்வெடிப்பு வராமல் தடுக்க, இரவில் படுக்கச் செல்லும்போது பாதங்களில் இலுப்பை எண்ணெய் அல்லது வேப்பை எண்ணெய் தடவுங்கள். காலையில் பல் துலக்கி நீராகாரம் அல்லது மோர் எலுமிச்சை ஊறுகாயுடன் அருந்துங்கள்.

குடல்புண் குணமாக
(Intestinal ulcer cured)
முட்டைகோஸ் ஐம்பது கிராம் எடுத்து இருநூறு மில்லி தண்ணீரில் வேகவைத்து அந்த நீரை பருகுங்கள். வேறு மருந்து தேவையில்லாமல் குடற்புண் குணமாகும்.

சளியைத் துரத்தும் தூதுவளை:
(making it possible to cure)
தூதுவளை, பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதன் இலைகள் சளியால் ஏற்படும் தொண்டை வலிக்கு மிகச் சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அதிக உஷ்ணத் தன்மை கொண்டது. எனவே, கபத்தை உடைக்கும் தன்மை கொண்டது. இதைத் தொடர்ந்து உட்கொண்டால், நல்ல உடல் வனப்பும், கட்டான உடலமைப்பும் பெறுவர். இக்கீரை, மூலநோய்க்கு(Hemorrhoids) நல்ல மருந்தாகும். அதிக உஷ்ணம் கொண்டதால் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடலாம். இதை தண்ணீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி, அந்த தண்ணீரை பருகி வந்தால், இருமல் குணமாகும்.

சொரி சிறங்கு குணமாக
(to cure itch)
கற்பூரம், சந்தனம், மிளகு சமஅளவு எடுத்து அரைத்து உடம்புக்கு தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால் சொரி சிரங்கு குணமாகும்.
வசம்பு 50 கிராம் எடத்து 200 மில்லி தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடம் பில் பூசி வர சொரி சிறங்குகள் அகலும்.

சோற்று கற்றாழையின் மருத்துவ குணங்கள்
(Medicinal properties of aloes)
இதன் ஜெல் சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது. முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி, முகப்பருக்களை போக்க உதவுகிறது. சிறிதளவு கற்றாழை ஜெல்லுடன் 10 சொட்டு பாதாம் எண்ணெய் விட்டு முகத்தில் தடவி வர, வறண்ட சருமம் சரியாகும். கிளிசரின் ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழ எண்ணெய் இரண்டு சொட்டு ஆகியவற்றுடன், கற்றாழை ஜெல்லை (Aloe vera gel)கலந்து முகத்தில் போட்டால், சருமம் மிருதுவாகும்.
குறிப்பு: கடையில் ரெடிமேடாக கிடைக்கும் கற்றாழை ஜெல்களை வாங்கி பயன்படுத்துவதை விட, வீட்டில் செடி வளர்த்து, அந்த இலைகளிலிருந்து நாமே பிரஷ்ஷாக ஜெல் எடுத்து பயன்படுத்தினால், கூடுதல் பலன் பெறலாம்.

பல் சொத்தை ஆவதை தவிர்க்க
சிறுவர்கள் சர்க்கரைப் பொருட்கள், இனிப்புப் பொருட்கள், சாக்லெட், மிட்டாய், ஐஸ் கிரிம், கிரஷ, குளிர்ந்த பானங்கள் சாப்பிடும்போது சர்க்கரை பல்லில் ஒட்டி எனாமல்போய் கிருமிகள் உண்டாகி சொத்தை ஆகின்றன. இவற்றை தவிர்ப் பது நல்லது.
புண்கள் ஆற வேண்டுமா?
(To treat ulcers)
வெள்ளை வெங்காயத்தை அடிக்கடி உணவில் பயன்படுத்துங்கள். வயிற்றிலும் குடலிலும் உண்டாகும் புண்களை ஆற்றிவிடும்.
இளம் ஆண்- பெண்களுக்கு ஏற்படும் முகப்பருக்கள் போக, காய்ச்சி ஆறிய ஒரு கோப்பை நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து சீனிச்சர்க்கரை கலந்து சாப்பிட குணம் கிடைக்கும்.

மசக்கை வாந்தியா?
(to control vomiting)
பெண்கள் மசக்கை வாந்திக்கு காய்ச்சிய பசும்பாலில் ஆறிய பிறகு நாட்டுக் கோழி முட்டையின் வெண்கரு(Nucleus of the egg white), கால் பாட்டில் சோடா நீர்(Soda Water) கலந்து சாப்பிட கர்ப்பணிக்கு ஏற்பட்ட மசக்கை வாந்தி உடனே நிற்கும்.

மூளைப் பலப்பட தாமரைப்பூ இளகம்
(The treatment of brain power)
  • உலர்ந்த வெண்தாமரை- செந்தாமரை சூரணங்கள் 70 கிராம், 
  • காசினி சூரணம் 50 கிராம், 
  • திராட்சை விதையுள்ளது (உலர்ந்தது) 70 கிராம், 
  • சீந்தில் கொடி சூரணம் 70 கிராம், 
  • நெல்லி வற்றல் சூர ணம் 70 கிராம், 
  • திப்பிலி சூரணம் 50 கிராம், 
  • பசும்பால் 3 லிட்டர், 
  • சர்க்கரை 500 கிராம் அல்லது பனைவெல்லம் நெய் 200 கிராம். 
இவற்றை சேர்த்து சூரணமாக்கி சாப்பிட்டால் அறிவு விசாலமாகும்(Widen knowledge). இதயம், மூளை பலப்படும்.

நீர் கடுப்பு உடல் எரிச்சல் தீர
வெள்ளரிக்காய், தக்காளிப்பழம், வெங்காயம், பச்சைப் பருப்பு சேர்த்து கூட்டு சாப்பிடுங்கள். குணமாகும்.

தேள் கடித்து விட்டதா?
(cure scorpion bites)
தேங்காய் அரை மூடியை திருகி பால் எடுத்து கொஞ்சம்கொஞ்சமாக குடியுங்கள். கடுப்பு குணமாகும். வெங்காயத்தை கொட்டிய பாகத்தின் மேல் தேய்த்துக் கொண்டிருக்க வலி கொட்டிய இடத்துக்கு வந்துவிடும். 

தோல் வியாதி குணமாக்கும் திருநீற்றுபச்சை:
(to cure skin problem)
படை மற்றும் தோல் வியாதிகளுக்கு பயன்படுகிறது. முகப்பரு, வேனல் கட்டி போன்றவற்றிற்கு இந்த இலையின் சாற்றை போட்டால் குணமாகும். இதன் சாறை தேள் கடித்த இடத்தில் தடவ, கடுப்பு நீங்கும்.

பருத்த உடலை இளைக்கச் செய்ய - (நீங்கள் ஒல்லியாக வேண்டுமா?)
ஐம்பது கிராம் கொள்ளு எடுத்து அரைலிட்டர் தண்ணீரில் இரவில் ஊறவைத்து காலையில் கொதிக்க வைத்து, சிறிது இந்துப்பு சேர்த்து சாப்பிடவும். அதேபோல் காலையில் ஊறவைத்து இரவில் சாப்பிட வேண்டும். இப்படியாக 48 நாட்கள் சாப்பிட்டால் சரிரம் இளைத்து விடும்.

ஜீரண சக்தி கோளாறா?
(Digestive problem?)
நன்றாக ஜீரணமாகவேண்டுமா? சுவையான காய்கறி பண்டங்களில் கரு வேப்பிலைசேர்த்துக் கொள்ளுங்கள். வாசனையோடு பண்டங்களுக்கு சுவையூட்டி நல்ல ஜீரணமும் கொடுக்கும் இந்த கருவேப்பிலை(Curry leaves). பருப்பு அல்லது தேங்காய் புளி மிளகாய் சேர்த்து துவையல் செய்து சாப்பிடுங்கள்.

வாய்ப்புண் குணமாக
(To treat thrush)
வாயில் புண் அடிக்கடி வருகிறதா? அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை மாற்றி மாற்றி வெங்காயம் சேர்த்து சாப்பிடுங்கள். தேங்காய் துருவி பால் சாப்பிடுங்கள். மரு தோன்றி இலையை நீரில் இரவில் ஊறவைத்து காலையில் வாய் கொப்பளிக்க புண்கள் ஆறிவிடும்.

வேம்புவின் மருத்துவ குணங்கள்:
(Medicinal neem)
மருத்துவ குணம் கொண் டது. சின்னம்மை தாக்கிய பின், முதலில் குளிக்கும் போது இதன் இலையை போட்டு குளிப்பது வழக்கம். வேப்பிலைகளை பெட்டிகள் மற்றும் பீரோவில் போட்டு வைப்பதால், கரப்பான் பூச்சிகள் அண்டாது.

வேதனைகளைப் போக்கும் வில்வம்:
(Therapeutic Bilva)
வில்வ மரத்தின் இலை, பூ, காய், வேர் ஆகிய எல்லாமே மருந்தாக பயன்படும். வில்வ இலை மூன்று இலை சேர்ந்த மாதிரி அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பு. வில்வ இலை மாலை கண் நோய்(Eye disease in the evening) மற்றும் தோல் வியாதிகளுக்கு(Skin Diseases) சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

வில்வ பழம் (Bow saw fruit)பித்தத்தை போக்கும். இப்பழத்துடன் சர்க்கரை சேர்த்து, காலையில், 21 நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் அடியோடு ஒழியும். வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வாய்ப்புண், வாய் வெந்திருத்தல் போன்றவற்றிற்கு வில்வப் பழத்துடன்(Arcuate fruit) சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மூன்றே நாளில் நலமாகும்.

உடல் பருமன் குறைய எத்தனையோ வழிமுறைகள் இருக்கிறது. இயற்கையான முறையில் உடல் பருமனைக் குறைப்பதற்கு என்ன வழி என்று பார்ப்போம். கரிசலாங்கண்ணி கீரை


  

கரிசலாங்கண்ணி கீரையை பருப்பு சேர்த்து,சாதாரண கீரையைப் போல உணவில் பயன்படுத்திவந்தால் உங்கள் உடல் பருமன் விரைவில் குறையும். இவற்றை இரவில் சாப்பிடக்கூடாது. கீரைகள் இரவு உணவாக எப்போதும் எடுத்துக்கொள்ளங்கூடாது. 

சில உபயோகமான குறிப்புகள்: 
(Some useful tips:)

இரத்தசோகை நீங்க: 
(To treat anemia)
இரும்புச் சத்துக் குறைவால் சாதாரணமாக இரத்தசோகை ஏற்படும். இவற்றை இயற்கையான முறையில் தடுக்க காய்ச்சிய பசும்பாலின் தேன்(Honey) கலந்து காலையிலும், மாலையிலும் அருந்திவர இரத்த சோகை(Chlorosis) வெகு விரைவில் குணமாகும்: 

தொண்டையில் சதை ஏற்படாமல் இருக்க: 



தும்பைப் பூவை கொஞ்சம் வாயில் போட்டு மென்று தின்றுவர தொண்டைப் புண்(Sore throat,), தொண்டையில் சதை வளர்ச்சி (muscle growth Control  in the throat) ஆகியவற்றை குணமாக்கும். இந்த தும்பைப் பூவுக்கு மற்றொரு மருத்துவ குணமும் இருக்கிறது. பெண்களுக்கு மாத விலக்கு பிரச்னை (The problem of menstrual) சீர்பட இது உதவும். தும்பைப் பூவோடு, தும்பை இலை, உத்தாமணி இலை ஆகியவற்றை சம பங்கெடுத்து நன்றாக மை போல அரைத்து ஒரு சுண்டைக் காய் அளவு எடுத்து காலை, மாலை இருவேளைகள் மாத்திரையைப் போல விழுங்கி வர மாத விலக்குப் பிரச்னைகள் குணமாகும்.

சேற்றுப் புண் நீங்க: 
(cure Muddy ulcer)
மழைக்காலங்களில் இது பெரும்பாலானோர்க்கு கால்களில் வரும். மேலும் விவசாயிகள் வயல்வெளியில் வேலைகளில் ஈடுபடுவோருக்கும் சேற்றுப்புண் வரும். சேற்றுப் புண் septic ஆகிவிட்டால் வலி அதிகரிக்கும். இவற்றை குணப்படுத்த தேனுடன் மஞ்சள் கலந்து பூச விரலிடுகளில் பூசினால் சேற்றுப்பண்ணிலிருந்து விடுதலைப் பெற்றுவிடலாம். மருந்திடுவதற்கு (before apply the paste) முன்பு சேற்றுப்புண் உள்ள காலை நன்றாக வெண்ணீரில் கழுவி துடைத்தப் பிறகே மஞ்சள், தேன் கலந்த கலவையை(Turmeric, honey Mixture) சேற்றுப்புண் உள்ள இடங்களில் பூச வேண்டும். இந்தக் கவலை விரைவில் சேற்றுப் புண்ணை குணமாக்கும். 

தோல்வியாதி தீர: 

தோல் நோய்கள் வந்து சிலருக்கு தோல்கள் தடித்துக் (Callus) காணப்படும். இதை சீராக்க கொத்தமல்லி இலையை நன்றாக அரைத்து (Coriander leaf paste) தடித்த தோல்பகுதியில் பூசி வர மூன்று நாட்களில் தோல் மிருதுவாகும். தோலும் அழகாக மாறும் (get soft skin ). செய்து பாருங்கள்.. நிச்சயம் பலன் தெரியும். 

கேஸ் ட்ரபுள் நீங்க: 

(Cure Gas Trouble)
கேஸ் ட்ரபிள் பிரச்சனை நிறையப் பேருக்கு இருக்கும். தற்கால உணவுவகைகளால் அதிகமானவர்கள் வாய்வுத் தொல்லைக்கு ஆளாகிறார்கள்.   வாய்வுத் தொல்லையை நீக்க பெருங்காயம் பெரும் பங்காற்றுகிறது. பெருங்காயத்தை தினமும் உணவில் சேர்த்துவர வாய்வுத்தொல்லை நீங்கும். பெருங்காயம் வாய்வை களைத்துவிடும். (Asafoetida removes the Gas Trouble. வாய்வுத்தொல்லையின்றி வாழ கட்டாயம் பெருங்காயம் உணவில் சேர்த்தக்கொள்ள வேண்டும்.

புதினா ஒரு மருத்துவ மூலிகை

புதினா ஒரு மருத்துவ மூலிகை

புதினா Mentha spicata ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியவற்றிற்கு உதவுகிறது. கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர்.

புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.


புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.

ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது.

புதினாக் கீரை வாங்கும்போது இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை மண்ணில் ஊன்றி வைத்தால் அவை தளிர்த்துப் புதிய இலைகளைக் கொடுக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும். தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.