Like us on Facebook

செவ்வாய், 18 அக்டோபர், 2016

உள்ளாட்சி தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு நீடிப்பு

உள்ளாட்சித் தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு நீடிப்பு
Updated: October 18, 2016 12:13 IST | பால சரவணக்குமார்


திமுக தரப்பும், மாநிலத் தேர்தல் ஆணையமும் 4 வாரங்களுக்குள்

பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரும் மாநிலத் தேர்தல் ஆணைய மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். இதனால், உள்ளாட்சித் தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கில் திமுக தரப்பும், மாநிலத் தேர்தல் ஆணையமும் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் ரத்து உத்தரவுக்கு தடை கோரிய மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மனு இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை உயர் நீதிமன்றம் 2-வது அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழக அரசு மற்றும் திமுக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது மேலும் 4 வாரங்களுக்கு தொடர்கிறது.

வழக்கு பின்னணி:

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் முறைப்படி வெளியிடாததால், தேர்தல் குறித்த அறிவிப்பாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், 17, 19-ம் தேதிகளில் நடக்க இருந்த உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. விதிமுறைகளின்படி, புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணை 18 ஆம் தேதி (இன்று) நடைபெறும் என்று தெரிவித்திருந்தது.

அதன்படி, இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசுக்கும், திமுகவுக்கும் நோட்டீஸ் அனுப்பி வழக்கை மேலும் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.


வெள்ளி, 14 அக்டோபர், 2016

முருகனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

முருகனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!



  'வேலனை வணங்குவதே நமது முதல் வேலை" என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவன் குமரன். அவனை பற்றிய சில தகவல்களை இங்கு பார்ப்போம்.

🌸 முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம் என்னும் ஆறு பகைவர்களை முருகன் அழித்தார்.

🌸 முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

🌸 கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரத்தை தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

🌸 முருகப்பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகியவை உகந்த நாட்கள் ஆகும்.

🌸 முருகன் கங்கையால் தாங்கப்பட்டதால் காங்கேயன் என்றும், சரவணப் பொய்கையில் உதித்ததால் சரவண பவன் என்றும், கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

🌸 அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான். மலைகளில் குடிகொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றொரு பெயர் உள்ளது. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

🌸 முருகனின் துதியை போற்றுவோம். துன்பம் இல்லாமல் நன்மையை பெறுவோம்.

ஆண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் :

ஆண் நட்சத்திரம் - விசாகம் 4-ம் பாதம்.

பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரம் - சதயம்.

ஆண் நட்சத்திரம் - அனுஷம்.

பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரம் - உத்திராடம் 2, 3, 4, பு+ரட்டாதி, ரேவதி, உத்திரம்.

ஆண் நட்சத்திரம் - கேட்டை.

பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரம் - திருவோணம், அனுஷம்.


சூரசம்ஹாரம் நடத்துவது ஏன் ❓

🌠 சு+ரசம்ஹhரம் நடத்துவது ஏன்? 🌠



  அழகு என்ற சொல்லுக்கு முருகன் என்று பெயர். முருகனை நினைத்தால் நினைத்தது நிறைவேறும். அசுரர்களை அழிக்க சிவனின் நெற்றி பொறியில் இருந்து பிறந்த குழந்தை தான் குமரன். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரம் குடிக்கொள்வான். வேண்டியதை அருளும் குமரனின் ஆலயத்தில் சு+ரசம்ஹhரம் நடத்துவது ஏன் தெரியுமா? ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு காரணமுண்டு. அதுப்போல் இந்த நிகழ்விற்கும் ஒரு புராணக்கதை உண்டு.

🌀 கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சு+ரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள். சு+ரபத்மனுக்கு அசுரமுகம். தாரகனுக்கு யானைமுகம். சிங்கமுகனுக்கு சிங்கமுகம். இவர்கள் குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவனை நோக்கித் தவமிருந்தனர்.

🌀 தவப்பயனாக 1008 அண்டங்களையும் ஆட்சிசெய்யும் வரம் பெற்றனர். சு+ரியன், சந்திரன், அக்னிதேவன், குபேரன் முதலிய தேவர்கள் அனைவரும் அசுரர்களின் பணியாளர்களாக மாறினர்.

🌀 தேவர்கள் பிரம்மாவிடம் சென்று தங்கள் நிலையைச் சொல்லி வருந்தினர். சு+ரபத்மனை அழிக்க சிவனால் மட்டுமே முடியும். அதனால் அவரிடம் முறையிட்டால் விடுதலை கிடைக்கும், என்றார் பிரம்மா. தேவர்களும் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். அவருக்கு சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம், அதோமுகம் ஆகிய ஆறு முகங்கள் உண்டு.

🌀 அவற்றில் இருந்து ஆறுநெருப்புப் பொறிகளை உண்டாக்கினார். அவை சரவணப்பொய்கையில் விழுந்து குழந்தைகளாக மாறின. அவற்றை ஒன்று சேர்த்த போது கந்தன் உருவானார். இவர் சு+ரபத்மனை வெற்றி கொண்டு தேவர்களைக் காத்தார். ஐப்பசி சஷ்டிதிதியில் சு+ரசம்ஹhரம் நிகழ்ந்ததாக ஐதீகம். இந்நாளில் அசுரர்களை அழித்து மக்களை காக்க முருகன் சு+ரசம்ஹhரம் நடத்துவார்.


கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன் ❓

கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்?



  கருணையின் முகம் காண கடவுளை தான் பார்க்க வேண்டும். அன்பின் உருவம் கொண்ட இறைவனை காண கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனுக்காக தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்கிறார்கள். தேங்காயில் அப்படி என்ன விஷேசம் இருக்கிறது. ஏன் அதனை கோவில்களில் உடைக்கிறார்கள்.

👉 தேங்காயை தரும் தென்னை மரம், மக்களுக்கு தம்மிடம் உள்ள அனைத்தையும் தந்து உதவுகிறது. இவற்றின் எந்த பாகமும் வீண் ஆவதில்லை. மனிதனும் அப்படி உலகுக்குப் பயன்பட வேண்டும்.

👉 உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை குறிக்கிறது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.

👉 இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை குறிக்கிறது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது.

👉 அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறைக்கின்றது.

👉 இறைவனின் சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளால் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயல் தான் தேங்காய் உடைப்பது.

👉 இதன் காரணமாகவே முதலில் தேங்காய் உடைத்து பிறகு இறைவனுக்கு பு+ஜை செய்கின்றனர்.


லட்சுமியின் பலன்கள்

லட்சுமியின் பலன்கள்


🌟 ஸ்ரீதனலட்சுமி - போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பெறலாம்.

🌟 ஸ்ரீவித்யாலட்சுமி - யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.

🌟 ஸ்ரீதான்யலட்சுமி - தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான்யட்சுமியின் அருளை பெறலாம்.

🌟 ஸ்ரீவரலட்சுமி - செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

🌟 ஸ்ரீசௌபாக்யலட்சுமி - பிறர் மனது நோகாமல் நடந்தால் சௌபாக்கிய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

🌟 ஸ்ரீசந்தானலட்சுமி - தாயன்புடன் ஸ்ரீசந்தானலட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

🌟 ஸ்ரீகாருண்யலட்சுமி - ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்தால் ஸ்ரீகாருண்யலட்சுமியின் அருளைப் பெறலாம்.

🌟 ஸ்ரீமகாலட்சுமி - பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஸ்ரீமகாலட்சுமி பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.

🌟 ஸ்ரீசக்திலட்சுமி - நம்பிக்கையுடன் ஒரு வேலையை செய்தால் ஸ்ரீசக்திலட்சுமி சக்தியைக் கொடுப்பாள்.

🌟 ஸ்ரீசாந்திலட்சுமி - ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

🌟 ஸ்ரீசாயாலட்சுமி - பலனை எதிர்பாராமல் ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.

🌟 ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி - பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.

🌟 ஸ்ரீசாந்தலட்சுமி - பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

🌟 ஸ்ரீகிருத்திலட்சுமி - நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால் ஸ்ரீகிருத்திலட்சுமியின் அருள் கிடைக்கும்.

🌟 ஸ்ரீவிஜயலட்சுமி - விடாமுயற்சியும், உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.

🌟 ஸ்ரீஆரோக்கிய லட்சுமி - கோபம், பொறுமை, பேராசை போன்றவற்றை நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கியலட்சுமியை வணங்க வேண்டும்.


யாரை வணங்கினால் என்ன பலன் ❓

யாரை வணங்கினால் என்ன பலன்?



🌸 ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஓர் தீர்வு நிச்சயம் உண்டு. தெய்வத்தினை வணங்கினால் அந்த தீர்வு நல்லதாக அமையும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு தெய்வத்தினை வணங்க வேண்டும். நாம் வணங்கும் தெய்வத்திற்கு மலர்கள் கொண்டு பு+ஜித்து வழிபட வேண்டும்.

🌸 தீபம் ஏற்றுவது, அர்ச்சனை செய்வது அபிஷேகம் செய்வது போன்ற தங்களின் வசதிகளுக்கு ஏற்ப தெய்வத்திற்கு ஆராதனை செய்யலாம். எந்த தெய்வத்தினை வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.

🌠 காளி தேவியை வழிபட்டால் பகைவனை வெல்ல முடியும்.

🌠 செல்வம் நிறைந்து இருக்க வேண்டும் என்றால் குபேரர், லட்சுமி, சண்டியை பு+ஜை செய்து வழிபட வேண்டும்.

🌠 அரசர்களை கவர சாம்பவி பு+ஜை செய்து தேவியை வழிபட வேண்டும்.

🌠 துர்க்கையை வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பம் பிறக்கும்.

🌠 மறுமையில் நன்மை பெற வேண்டும் என்றால் துர்க்கையை வழிபட வேண்டும்.

🌠 சுபத்திரையை வழிபாடு செய்தால் மனவிருப்பம் நிறைவேறும்.

🌠 துர்க்கை அம்மனை வழிபாடு செய்தால் போரில் வெற்றிபெற முடியும்.

🌠 ரோகிணியை வணங்க தீராத நோயும் தீரும்.

கசக்கும் கணிதத்தை கற்கண்டாக மாற்ற வேண்டுமா?



நித்ரா கணிதம் மற்றும் அறிவுக்கூர்மை புத்தகம் 480 பக்கங்கள்

எளிமையான தீர்வுகளுடன் 1100 கும் மேற்பட்ட வினா விடைகள் விளக்கமாக.

ஒவ்வொரு வினாவிற்கும் இரண்டிற்கும் மேற்பட்ட தீர்வுகள்.

முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களின் தொகுப்பு இலவச இணைப்பாக


ஹோமங்களின் வகைகள்

ஹோமங்களின் வகைகள்

  ஹோமங்கள் புது வீடு கட்டி புதுமனை புகுவிழா, கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பரிகாரங்களுக்காக நடத்தப்படுகிறது. பல வகையான ஹோமங்கள் உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

🌟 மகா கணபதி ஹோமம் - தடையின்றி செயல்கள் நடைபெறவும், லட்சுமி கடாட்சம் பெறவும் மகா கணபதி ஹோமம் செய்தால் நல்லது கிட்டும்.

🌟 சந்தான கணபதி ஹோமம் - நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் அமர்ந்து செய்திட, புத்திர பாக்கியம் கிட்ட சந்தான கணபதி ஹோமம் செய்தால் நல்லது.

🌟 சண்டி ஹோமம் - தரித்திரம், பயம் விலக சண்டி ஹோமம் செய்தால் நல்லது.

🌟 சுதர்ஸன ஹோமம் - ஏவல், பில்லி, சு+ன்யம் நீங்கவும், வெற்றி பெறவும் சுதர்ஸன ஹோமம் செய்தால் நல்லது.

🌟 நவகிரக ஹோமம் - நவகிரக கேடு நீங்கி, மகிழ்ச்சி பெற நவகிரக ஹோமம் செய்தால் நல்லது.

🌟 ருத்ர ஹோமம் - ஆயுள் விருத்தி உண்டாக ருத்ர ஹோமம் செய்தால் நல்லது.

🌟 குபேர ஹோமம் - செல்வ வளம் தர குபேர ஹோமம் செய்தால் நல்லது.

🌟 தில ஹோமம் - இறந்தவர்களின் சாபம் நீங்க தில ஹோமம் செய்தால் நல்லது கிட்டும்.

🌟 ப்ரத்யங்கரா - எதிரிகள் தொல்லை நீங்க, ப்ரத்யங்கரா ஹோமம் செய்தால் நல்லது நடக்கும்.

🌟 ஸ்வர்ண கணபதி ஹோமம் - வியாபாரம் லாபம் பெற, ஸ்வர்ண கணபதி ஹோமம் செய்தால் நல்லது.

🌟 துர்க்க ஹோமம் - எதிரிகளின் தொல்லை அகல துர்க்கா ஹோமம் செய்தால் நன்மை கிட்டும்.

🌟 வித்யா கணபதி ஹோமம் - கல்வியில் சிறக்க வித்யா கணபதி ஹோமம் செய்தால் பலன் கிட்டும்.

🌟 மோகன கணபதி ஹோமம் - திருமண சுப நிகழ்ச்சிகள் நடக்க மோகன கணபதி ஹோமம் செய்தால் நன்மை பயக்கும்.

🌟 தன்வந்திரி ஹோமம் - நோய் நிவாரணம் காண தன்வந்திரி ஹோமம் செய்தால் நல்லது.

🌟 சுயம்வர கலா - பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூட, சுயம்வர கலா ஹோமம் செய்தால் விரைவில் நல்ல பலன் கிட்டும்.

🌟 ஹோமங்களின் பலன் அறிந்து ஹோமங்களை செய்யவும், வீட்டில் 16 வகையான செல்வங்கள் நிலைக்கவும் இந்த ஹோமங்கள் உதவுகின்றன.

பெண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் :

பெண் நட்சத்திரம் : ரோகிணி

பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் : மிருகசீரிஷம் 1, 2, புனர்பு+சம் 4, உத்திரம் 1, பு+ரட்டாதி, பரணி

பெண் நட்சத்திரம் : மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்

பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் : உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி

பெண் நட்சத்திரம் : மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்

பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் : திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி


செவ்வாய், 4 அக்டோபர், 2016

தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு




தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து; சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு மாற்றம் செய்த நாள்: அக் 04,2016 16:36 எழுத்தின் அளவு: (2)

 சென்னை: வரும் 17 மற்றும் 19 ம் தேதிகளில் நடக்கவிருந்த தமிழக உள்ளாட்சி தேர்தல் ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வேட்பு மனு தாக்கல் செய்த அனைத்து அரசியல் கட்சியினரும் அதிரச்சி அடைந்துள்ளனர். கடந்த செப் 25ம் தேதி தமிழக தேர்தல் கமிஷனர் சீத்தராமன் உள்ளாட்சி தேர்தலை அறிவித்தார். அடுத்த நாள் முதலே வேட்பு மனு தாக்கல் துவங்கியது. நேற்று (3 ம் தேதி ) வேட்பு மனு தாக்கல் கடைசி நாளானது. வரும் 6ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம், அக்.6 வாபஸ் பெற கடைசி நாள், வரும் 17 , 19 தேதிகளில் ஓட்டுப்பதிவும், வரும் 21 ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடப்பதாக இருந்தது.அவ்வளவு அவசர, அவசரமாக தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டது ஏன் என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பினர். 4 லட்சத்திற்கும் மேல் வேட்பு மனு: தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து அரசியல் கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை அவசர, அவசரமாக வேட்பு மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 97 ஆயிரத்து , 840 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் இன்று தெரிவித்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி. பிரிவினர் மற்றும் அந்த பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்றும், எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். நீதிபதி உத்தரவு முழு விவரம்: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தேர்தல் தொடர்பான 3 ஆணைகளை ரத்து செய்யப்படுகிறது. தேர்தல் தேதி தொடர்பாக மறு அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் உத்ததரவில் கூறப்பட்டுள்ளதாவது: * தேர்தல் அறிவிப்பாணை பிரிவு 103, 105, 106 ஆகியன ரத்து செய்யப்படுகிறது. * பெண்கள், பழங்குடி, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான சுழற்சி முறையில் ஒதுக்கீடு குறித்து வெளியிட வேண்டும். * தேர்தல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அவசர கதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. * அரசியல் உள்நோக்கத்துடன் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. * மறு தேதி அறிவித்து வரும் டிசம்பர் 30 ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். * குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், ''2011 செப்., 21ல், தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மறுநாள் வேட்புமனு பெறப்பட்டது; அதேபோல், 2006 செப்., 19ல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மறுநாள் வேட்புமனு பெறப்பட்டது. ஏற்கனவே பின்பற்றிய நடைமுறை தான், இப்போதும் பின்பற்றப்பட்டுள்ளது,'' என்றார். விதி மீறப்பட்டுள்ளதா?: தி.மு.க., தரப்பு மூத்த வழக்கறிஞர், ''இட ஒதுக்கீடு தொடர்பான அரசு உத்தரவை, செப்., 16ல் வெளியிட்டாலும், 23ல் தான் நகல்கள் கிடைத்தன; இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை, ஆறு மாதங்களுக்கு முன் வெளியிட வேண்டும்; அந்த விதி மீறப்பட்டுள்ளது,''என்றார். மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ''இதுபோன்ற குற்றச்சாட்டை, மற்ற கட்சிகள் கூறவில்லை; இதுவரை, 42 ஆயிரம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.