Like us on Facebook

வியாழன், 28 செப்டம்பர், 2017

பாரம்பரியம் போற்றும் ஆயுதபூஜை வழிபாடு

"பாரம்பர்யம் போற்றும் ஆயுதபூஜை வழிபாடு! 'பயன்படு கருவிகளுக்குப் படையல்' என்பது தொன்மைச் சமூகங்கள் கடைப்பிடிக்கும் ஒரு நடைமுறை. அதனுடைய தொடர்ச்சியே தற்போது ஆயுத பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட கற்கோடரிகள் போன்ற கற்கருவிகள், வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்ட உழவுக்கலப்பை போன்ற கருவிகள், போருக்கு பயன்படுத்தப்பட்ட வாள், வேல், வில் போன்ற கருவிகளை வழிபடும் முறை ஆதி காலம் தொட்டே இருந்துவருகிறது.

'கருவிகள்' வெறும் வேட்டையாடலுக்கானது மட்டும் அல்ல. தொன்மை வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் சான்றுகளாகவும் இருக்கின்றன. உதாரணமாக, `சென்னை அத்திரப்பாக்கத்தில் கிடைத்த பண்டைய கற்கோடரிகள் கிட்டத்தட்ட 16 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டவை’ என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பண்டைய மனிதர்களின் இறந்த உடல்களோ, எலும்புகளோ, அவர்கள் பயன்படுத்திய பொருள்களோ கிடைக்காத இடங்களில்கூட அவர்கள் வேட்டையாடிய கற்கருவிகள் அதிகமாகக் கிடைத்திருக்கின்றன. அந்தக் கருவிகளில் படிந்திருக்கும் ரத்தக் கறைகளை வைத்துதான் அவர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கிடுகிறார்கள் ஆய்வாளர்கள். கற்காலம் முதல் இக்காலம் வரை மனிதனை வாழவைத்துக்கொண்டிருப்பது கருவிகளே. அதன் பரிணாம வளர்ச்சியே இன்று இயந்திரங்களாக மாறி இருக்கின்றன. வில், அம்பு, வேல், அரிவாள், ஆண்டலையடுப்பு, ஈர்வாள், உடைவாள், கதிரருவாள், கதை, கவை, கல்லிடு கூடை, கணையம், கழுகுப்பொறி, கவசம், குத்துவாள், கைவாள், கொடுவாள், கோல், சிறுவாள், தகர்ப்பொறி, தொடக்கு, பிண்டிபாலம், ஞாயில், மழுவாள், விளைவிற்பொறி, அரிதூற்பொறி, இருப்பு முள், எரிசிரல், கழு, கருவிலூகம், கல்லமிழ் கவண், கற்றுப்பொறி, கழுமுள், குந்தம், கூன்வாள், கைபெயர், கோடாரி, சதக்கணி, தண்டம், தூண்டில், தோமரம், புதை, நாராசம், வஜ்ஜிரம் ஆகியவை சங்க காலத்தில் தொழிலுக்கும் போருக்கும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்.


 தமிழர்களின் திணை வாழ்வில் கொற்றவை வழிபாடே முதன்மையானது. தமிழர்களின் தாய் தெய்வம் கொற்றவை. புரட்டாசி மாதம், அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோண நாள் வரை பெண் தெய்வ வழிபாடு செய்யப்படுவது வழக்கம். அதில் ஒன்பதாம் நாளன்று போரில் வெற்றிபெற உதவும் ஆயுதங்களை வைத்து வழிபடும் நடைமுறையும் உண்டு. இதற்கு 'வாண்மங்கல விழவு', 'வாளுடை விழவு' என்று பெயர். இதுபற்றி சிலப்பதிகாரத்தில், `கலையமர் செல்வி கடனுணின் அல்லது சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்’ என்ற பாடலில், `கொற்றவைக்குச் செய்யவேண்டிய சடங்குகளைச் செய்யாவிட்டால், அவள் வில்லுக்கு வெற்றி தர மாட்டாள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனில் ஆயுத வழிபாடு என்பது பண்டைய தமிழரின் வழிபாட்டு முறை என்பது உறுதியாகிறது. ஆயுதங்களை மட்டுமல்லாமல் போருக்குப் பயன்படுத்தப்பட்ட யானைகள், குதிரைகள், தேர் ஆகியவற்றைச் சுத்தப்படுத்தி மங்கல விழாவில் வழிபடுவது பற்றி பெரியபுராணத்தில் `பட்டவர்த் தனமாம் பண்பு பெற்றவெங் களிறு கோலம் பெருகுமா நவமி முன்னாள் மங்கல விழவு கொண்டு வருநதித் துறைநீ ராடி...’ என்ற பாடலில் குறிப்பு இருக்கிறது. இதன் தொடர்ச்சிதான் இன்று வாகனங்களுக்கு பூஜை செய்யும் நடைமுறையாக தொடர்ந்துவருகிறது. தொல்காப்பியத்திலும் `மானார்ச் சுட்டிய வாண்மங்கலமும்’ என்று ஆயுத வழிபாடு பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. போர் வீரர்கள் கேடயத்தையும் வாளையும் வாகைப் பூ மாலை சூடி வணங்கிய செய்தியை, 'றொன்மிசைந் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற் றார்புரிந் தன்ன வாளுடை விழவிற் போர்படு மள்ளர் போந்தோடு தொடுத்த கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்ப' என்ற பதிற்றுப்பத்து பாடல் மூலம் அறிய முடிகிறது. தமிழ் மூதாட்டி ஔவையாரும் ஆயுத வழிபாடு பற்றி அழகாகப் பாடியுள்ளார். பண்டையத் தமிழ் குறுநில மன்னர்களான அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் ஒருமுறை போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இதைக் கண்ட ஔவைக்கு நெஞ்சம் பதறியது. போரைத் தடுக்கும் பொருட்டு தொண்டைமானிடம் தூதுக்குச் செல்கிறார் ஔவை. அப்போது ஆயுத சாலையில் அத்தனை ஆயுதங்களுக்கும் மாலை சூடி வணங்கப்பட்டிருப்பதைக் கண்ட ஔவை, "இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து, கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே, பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து, கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும் உண் டாயின் பதம் கொடுத்து, இல் லாயின் உடன் உண்ணும், இல்லோர் ஒக்கல் தலைவன், அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே." இவ்வாறு பாடி அதியமானின் படைபலத்தைப் பற்றி மறைமுகமாக உணர்த்தியதாகவும், அதன்பின்னர் தொண்டைமான் சமாதானம் ஆனதாகவும் சொல்லப்படுகிறது.


குலதெய்வங்களாகட்டும்காவல் தெய்வங்களாகட்டும் ஆயுதங்கள் இல்லாமல் யாரும் இல்லை. தெய்வங்களுக்கு படையலிடும்போது ஆயுதங்களுக்கும் சேர்த்தே படையலிடுகிறோம். முருகப்பெருமான் கூட கையில் வேலுடன்தான் காட்சிதருகிறார். வாகனங்களும், ஆயுதங்களும் இல்லாமல் காட்சி தரும் தெய்வங்கள் அரிது. ஆண்கள் மட்டும் இன்றி பண்டைய கால பெண்களின் வீரத்தைச் சொல்லும் வகையில் பெண்கள் கத்திச் சண்டையிடும் எண்ணற்ற சிற்பங்கள் கோயில்களில் இன்றும் உள்ளன. பண்டைய காலங்களில் ஆயுதங்களை ஏன் வழிபட்டோம் என்பது பற்றி நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் கூறுகிறார்...``கருவிகளை வழிபடுவது என்பது உலகளாவிய மரபு. படைக்கருவிகளுக்கு மட்டும் அல்ல... தொழில்கருவிகளும் இதில் அடக்கம். அதாவது ஒவ்வொரு கருவிக்குள்ளும் ஒரு அணங்கு இருக்கும் என்று நம்பப்படுகிறது. மானுடவியலில் இது அனிமிசம் (ஆன்ம வாதம்) என்று சொல்லப்படும். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஆயுதங்களுக்குப் படையல் வைத்து வணங்கி வந்தார்கள். அதனுடைய தொடர்ச்சிதான் இன்று கருவிகளை வைத்து ஆயுதபூஜையாக வழிபடுவதும். இன்று துப்பாக்கிகளுக்குக்கூட பொட்டு வைத்து வணங்குகிறார்கள். என்னதான் விஞ்ஞானம் நவீன வளர்ச்சியை நோக்கிச் சென்றாலும் படையல் என்ற பண்டைய, பண்பாட்டு மரபு இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று.’’

 நம்மை நாம் மேம்படுத்திக்கொள்ள தொழில் கருவிகளாகவும், நம்மை தற்காத்துக்கொள்ள போர்க் கருவிகளாகவும் ஆயுதங்கள் விளங்குகின்றன. பண்டைய தமிழ் மரபின்படி நமக்குப் பயன்படும் கருவிகளை வழிபடுவோம்... பாரம்பர்யத்தைப் போற்றுவோம்! உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்" - பாரம்பர்யம் போற்றும் ஆயுதபூஜை வழிபாடு!

இந்த ஆண்டு இறுதிக்குள் நிலநடுக்கம், சுனாமி: வைரலாகும் செய்தி உண்மையா?

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் நிலநடுக்கமும் சுனாமியும் வரும் என சமூக வலைதளங்களில் ஒரு கடிதம் வைரலாகி வருகிறது.
2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மிகப்பெரிய நிலநடுக்கம் இந்தியாவில் நிகழ இருப்பதாகவும் சுனாமி தாக்கும். கேரளாவை சேர்ந்த இ.கே.ஆய்வகம் பிரதமருக்கு எழுதிய எச்சரிக்கை கடிதம் இது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என வைரலாகி வரும் இக்கடிதம் பொதுமக்களை பீதியடைய வைத்துள்ளது. நிலநடுக்கத்தை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது என்றும் அதிகாரபூர்வமற்ற தகவலை நம்பி மக்கள் அச்சப்பட வேண்டாம் புவியியல் துறையை சேர்ந்தவர்கள் இன்றும் கூறுகின்றனர்.
பூமியில் உள்ள நிலதட்டுகள் மோதிக்கொள்வதாலேயே நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்தியாவின் நிலப்பரப்பை பார்க்கும்போது தமிழகம் மற்றும் தென் மாநிலங்கள் நிலதட்டுகளின் எல்லையில் அமைந்திருப்பதால் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு குறைவு என்றும் நிலநடுக்கம் ஏற்பட்டால் இமயமலைபகுதிகள், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களே அதிகம் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற கடிதங்கள் யூகத்தின் அடிப்படையிலானது என்றும், ஆதாரமில்லாமல் மக்கள் எதையும் நம்பவேண்டாம் என்பதே அறிவிலாளர்களின் கருத்து

​உலகின் மிக காரமான மிளகாய் - தப்பித்தவறி சுவைத்தால் உடனே மரணம்!

உலகின் மிகவும் காரமான மிளகாயால் தயாரான SAUCEகள் மிக வேகமாக அமெரிக்காவில் விற்பனையாகி வருகின்றன.
இதற்கு முன்னதாக கரோலினா ரீப்பர் என்ற மிளகாய், மிகவும் காரமானது என கூறப்பட்டது. இந்நிலையில் பெப்பர் X என பெயரிடப்பட்டுள்ள இந்த மிளகாய் காரத்திற்கான அளவுகோலில் கரோலினா பெப்பரை விட1.6 கோடி மடங்கு காரமானது என இதனை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த காரமான மிளகாயை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தில் உள்ள டென்பிஸ்சரில் இருக்கக்கூடிய மைக் ஸ்மித் என்பவராவார். நாட்டிங்ஹாம் பல்கலையுடன் இணைந்து அவர் இந்த மிளகாயை உருவாக்கியுள்ளார். ஸ்மித் இதைப்பற்றி கூறும் போது, நான் இத்தகைய மிளகாயை திட்டமிட்டு உருவாக்கவில்லை என்றும், ஒரு விபத்தைப் போலவே இத்தகைய ஒரு மிளகாய் உருவாகியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
100 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் அதிகபட்சம் சுமார் 4.72 கிராம் அளவுள்ள காரத்தை தாங்கும் திறன் பெற்றிருப்பார். ஆனால், இந்த மிளகாய் சுமார் 3.18 மில்லியன் அளவிற்கு காரச்சுவையை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது.
இந்த மிளகாயை நேரடியாக சுவைத்தால் அதிர்ச்சியில் உடனே இறந்துவிடும் அபாயம் உள்ளது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய மிளகாயிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த sauce நீர்த்துப்போன வினிகர், இஞ்சி வேர், சந்தன வகைகள், சீரக, கொத்தமல்லி, கடுகு போன்றவற்றைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.

மிளகு விசித்திரமான உண்மைகள்


மிளகின் அறிய வகையான உண்மைகளை தெரிந்துக்கொள்வோம்..!
மிளகு கொடியின் வகையை சார்ந்தது. இந்த மிளகு சித்த மருத்துவத்திலும் சிறப்பிடம் உள்ளது. நறுமணப் பொருட்களின் அரசனாக கருதப்படுவது இந்த மிளகைத்தான். மிளகு உற்பத்தியில் கேரளா முன்னிலையில் உள்ளது. அதற்கடுத்தபடியாக, கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
வால்மிளகு : ஒரு அறிய வகையான மூலிகைக் கொடியில் காய்ப்பதாகும். மிளகின் ஒரு வகையான இது மிளகைப்போலவே, ஆனால் காம்புடன் இருப்பதால் இதை வால்மிளகு என்பர்கள். இதனை மணத்திற்காகவும் சமையலில் முக்கியமாக பயன்படுத்தப் படுகிறது. மேலும், இதில் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இதன் காரத்தன்மையால், பசியினைத் தூண்டுவது மற்றும் உடல் வெப்பத்தை அதிகரிப்பது ஆகிய குணங்களைக் கொண்டுள்ளது. இது சித்த மருத்துவத்திலும் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
மிளகு கலர்கள் : வெண்மிளகு, பச்சை மிளகு, சிவப்பு மிளகு, கருமிளகு என்று உள்ளது
சிவப்பு மிளகு : வினிகரில் ஊற வைத்து பாதுகாக்கப்பட்ட பழுத்த மிளகு சிறு பழங்கள், இளஞ்சிவப்பு மிளகு என்றும், சிவப்பு மிளகு என்றும் அழைக்கப்படுகிறது. பழுத்த மிளகுப் பழங்களை சில வேதியல் பொருள்களின் துணையுடன் உலர வைப்பதன் மூலமும் சிவப்பு மிளகு தயாரிக்கப்படுகிறது. மற்றும் சிவப்பு மிளகில் அதிகம் காரம் கொண்டவை. இதன் விலை மிகவும் அதிகம், கிலோ, 375 முதல், 400 ரூபாய் வரை, விலை போகின்றன.
வெண் மிளகு : பெரும்பான்மையான நாடுகளில் கருமிளகே உபயோகத்தில் இருப்பினும், சில பகுதிகளில், வெண்மிளகும் பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய வழிமுறைகளைப் போலின்றி, வெண்மிளகு உற்பத்திக்கு பழுத்த மிளகுப் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பழங்கள் ஏறத்தாழ ஒரு வாரம் நீரில் ஊறவைக்கப்படுகின்றன. இதன் மூலம், பழத்தின் சதைப்பகுதி அழுக வைக்கப்படுகிறது. பின், பழத்தின் சதைப் பகுதி தேய்த்து அகற்றப்பட்டு, விதைகள் உலர்த்தப்படுகின்றன. உலர வைக்கப்பட்ட வெண்நிற விதைகள் வெண்மிளகாக சந்தைப்படுத்தப்படுகிறது. மற்ற சில முறைகளும் உபயோகத்தில் உள்ளன. இவற்றில் சிலவற்றில் பழுக்காத மிளகுக் காய்களும் வெண்மிளகு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
பச்சை மிளகு : கருமிளகைப் போலவே பழுக்காத சிறு மிளகுக் காய்களை உலர வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. காய்களின் பச்சை நிறத்தைத் தக்கவைத்துக் கொள்ள, கந்தக டை ஆக்சைடுடன் கலக்குதல், உறைய வைத்து உலர்த்துதல் ஆகிய சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வினிகருடன் ஊற வைக்கப்பட்ட பச்சை மிளகுக் காய்களும் பச்சை நிறத்தைக் கொண்டுள்ளன. ஆசிய சமையல் முறைகளில் ஒன்றான, தாய்லாந்து நாட்டுச் சமையல் முறையில், புதிதாக பறிக்கப்பட்ட பச்சை மிளகுப் பழங்கள் பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது.
கரு மிளகு பயன்கள் : பச்சையான பழுக்காத சிறு மிளகு காய்கள் கொடிகளில் இருந்து பறிக்கப்பட்டு, சூடான நீரில் சிறிது நேரம் ஊற வைக்கப்பட்டு, பின்னர் உலர வைக்கப்படுகின்றன. இக்காய்களின் வெளித்தோல் சூட்டினால் உறிக்கப்படுவதனால், இக்காய்கள் வேகமாக உலருவதோடு, அதன் சதைப்பகுதி விதையுடன் காய்ந்து, சுருங்கி, பூஞ்சைகளின் மூலமாகக் கருநிறத்தைப் பெறுகிறது. இக்காய்களை உலர்த்துவதற்கு இயற்கையான சூரிய ஒளியும், பல இயந்திரங்களும், இடத்திற்கேற்ப பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு உலர்த்தப்பட்ட மிளகு, பின் சரியான பொதிகளில் அடைக்கப்பட்டு சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது.
மிளகின் மருத்துவகுணங்கள் :
# சிறிதளவு மிளகை இடித்து, அதை நீரில் கொதிக்க வைத்து பனவெல்லம் கலந்து அருந்தினால் சளி, இருமல் குணமாகும்.
# மிளகை பொடி செய்து, அருகம்புல் சிறிதளவு சேர்த்து, நீரில் கொதிக்க வைத்து குடித்தால் பூச்சி கடி காரணமாக ஏற்படும் தோல் தடிப்பு, அரிப்பு போன்றவை குணமாகும்.
# ஒரு வெற்றிலையை மிளகுடன் சேர்த்து அதை நீரில் கொதிக்கவைத்து அருந்தினால் தும்மல், கண்களை சுற்றிய அரிப்பு, மூக்கில் நீர் வழிதல் போன்றவை குணமாகும்.
# மிளகு, பெருஞ்சீரகம் இவை இரண்டும் பொடி செய்து தேனில் கலந்து சாபிட்டால் மூல நோய் குணமாகும்.
# மிளகு பொடியுடன் உப்பு கலந்து பல் தேய்தால் பல் கூச்சம் மற்றும் பல் சொத்தை போன்றவை குணமாகும்.
# மிளகுடம் சிறிது உப்பு சேர்த்து சாபிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
# உடல் பருமனை குறைக்க உதவுகிறது.
# உடலில் வியர்வையை அதிகரித்து உடலில் நச்சுப் பொருட்களை அகற்ற கின்றன
# தலையில் இருக்கும் பொடுகை ஒழிக்கவும் பயன்படுகிறது
# வாய்வு கோளாறு ஏற்படும்போது நீரில் மிளகினை கொதிக்க வைத்து பனவெல்லம் கலந்து அருந்தினால் வாய்வுக் கோளாறு உடனே தீர்ந்துவிடும்.
# சரியாக ஜீரணமாகாமல் அல்லது மலச்சிக்கலால் ஏற்படும் வயிற்று வலியை கருப்பு மிளகு பெரிதும் குறைக்கிறது
x

உடலுறுவில் அதிக ஆசை கொள்வது நல்லதா?... கெட்டதா?...

உடலுறுவில் அதிக ஆசை கொள்வது நல்லதா?... கெட்டதா?...


உடலுறவு வைத்துக்கொள்வது என்பது அவரவர் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைப் பொருத்து ஆளுக்கு ஆள் மாறுபடும். சிலருக்கு தினமும் உடலுறவு வைத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. சிலருக்கு வாரத்துக்கு இரண்டு முறை, மற்றும் சிலருக்கு மாதம் இருமுறை இருந்தால் கூட போதும். ஏன் இந்த வித்தியாசம் தெரியுமா?
ஒவ்வொருவரது உடற்கூறைப் பொருத்து உடலுறவின் தேவை ஏற்படும். உடலுறவு கொள்ளாத பிரம்மசாரிகளை விட குடும்ப வாழ்கையில் ஈடுபட்டவர்களே அதிக ஆயுள் உள்ளவர்களாக இருக்கிறார்கள். மனிதனின் தேவைகளில் உணவுக்கு அடுத்தபடியாக உடலுறவு இரண்டாவது இடத்தை பெறுகிறது.

மனிதன் உணவு இல்லாமல் உயிர் வாழ முடியாது. அதைப்போல உடலுறவு இல்லாமல் மனிதன் தொடர்ந்து வாழ முடியாது. அத்துடன் உடலும் உள்ளமும் வளமாக இருந்தால் உயிர் உடலில் நீண்ட நாள் இருக்கும். உடலையும், மனதையும் வளமாக வைத்திருக்க உடலுறவு உதவுகிறது என்பதை மருத்துவ அறிவியல் நிரூபிக்கிறது.



காதலும், காமமும், உடலுறவும் வாழ்கையில் இன்றியமையாதவை. அவற்றைச் சொல்லவேண்டிய முறையில் சொன்னால்தான் மகாபாரதம், ராமாயணம், சாகுந்தலம், சங்கப் பாடல்கள், திருக்குறள் உட்பட எல்லா இலக்கியங்களையும் சுவைத்து அனுபவிக்க முடியும்.
மணமாகாத வாலிபர்களின் இச்சையைத் தூண்டப் பச்சை பச்சையாக உடலுறவுகளை வர்ணித்து சதை வியாபாரம் செய்யும் மலிவு பதிப்புகள், சாலையோர புத்தகக் கடைகளில் மறைத்து விற்கப்படுகின்றன. அவை எல்லாம் ஆபாசமானவை.
வடநாட்டில் கஜூரா, கோனார்க் கோயிலில் உடலுறவு நிலையை அற்புத சிற்பங்களாக வடித்துள்ளனர். தென்னிந்திய கோயில்களிலும் இத்தகைய உடலுறவு நிலைச் சிற்பங்களைக் காணலாம்.
மதம், இதிகாசம், இலக்கியம், சிற்பம், சித்திரம் அனைத்திலும் பாலுறவு பற்றி எழுதப்பட்டுள்ளது. அது தவறானது என்றால் அவ்வாறு எழுதுவார்களா? மனித இனம் ஆதியிலிருந்து இன்றுவரை பாலுறவின் பற்று கொண்டிருக்கிறது. காரணம் அதில் கிடைக்கும் இன்பத்துக்கு ஈடாக வேறு இன்பம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
எல்லாப் பிரச்னைகளையும், நோய்களையும் ஒரே ஒரு மருந்தால் தீர்க்க முடியுமா?
முடியும். அது குடும்ப வாழ்க்கையில் உள்ள உடலுறவு  ஒன்றால்தான் முடியும்.
தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி, மனநோய் எல்லாவற்றையும் தீர்க்கமுடியும். உடலுறவுதான் உடலிலுள்ள தடுப்பு சக்தியான இம்யூன்(immune)  என்னும் சக்தியைத்  துரிதப்படுத்துகிறது. இதனால் அனைத்து உடல் வலிகளும், தசை வலிகளும், நரம்பு வலிகளும், மனநோயும் தீருகின்றன.
ஒருவன் குடும்ப வாழ்கையில் உடலுறவு கொள்ளாதவனாக இருந்தால் மனதில் இறுக்கமும் ஒரு வேகமான கோபமான நிலையும் ஏற்படும். இதற்க்கு காரணம் உடலுறவு கொள்ளாததால் அட்ரினலின் ஹார்மோன் சுரப்பது தான். உடலுறவு கொள்வதால் உயர் ரத்த அழுத்தம் இதய நோயைக் குறைத்து ரத்தத்தை விருத்தியடையச் செய்யும். பெண்களுக்கு மார்பில் கட்டி ஏற்படாது. சளி பிடிக்காது.
அடிக்கடி உடலுறவு கொள்வதால் தேவையான அளவு ரத்த ஓட்டம் அதிகரித்து பெண்களின் உடலிலுள்ள அனைத்து வலிகளும் தீர்ந்து விடும்.
 உடலுறவின்போது ஹார்மோன் சுரப்பது தூண்டப்பட்டு பலவிதமான ரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. அவை வலி நிவாரணியாக மருந்தாகப் பெண்களுக்கு அமைந்து நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும்.
சரியான அளவில் அடிக்கடி உடலுறவு கொள்பவர்களுக்கு செரிமானம் செரிமானம் அதிகமாகிப் பசியெடுக்கும். நல்ல தூக்கம் வரும். அதனால் மன இருக்கம் , கவலை தீரும். மனதில் அமைதி, நிதானம், மகிழ்ச்சி ஏற்படும்

சபரிமலை: ஒரு ஆண்டு பணி கட்டாயம்


சபரிமலை: ஒரு ஆண்டு பணி கட்டாயம்


கொச்சி: திருவிதாங்கூர் தேவசம் போர்டின் ஆண் ஊழியர்கள், சபரிமலையில், ஒரு ஆண்டு கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.சபரிமலையில் சீசன் காலத்தில், ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. எனவே தேவசம் போர்டு கடந்த செப்., 16ம் தேதி வெளியிட்டுள்ள ஒரு உத்தரவில், ' தேவசம் போர்டின் நான்காம் நிலை ஊழியர்களில் இருந்து துணை கமிஷனர் வரையும், தேவசம் போர்டு கீழ் வரும் பொதுப்பணித்துறையில் கீழ் நிலை ஊழியர் முதல் நிர்வாக இன்ஜினியர் வரை, சபரிமலையில் ஒரு ஆண்டு கட்டாயம் பணியாற்ற வேண்டும்.

பணி பெயரேட்டில் அவ்வாறு பணியாற்றியதை குறிப்பிட வேண்டும். இந்த நடைமுறை இன்னும் ஒன்றரை மாதத்தில் துவங்க உள்ள சபரிமலை சீசனில் இருந்து அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், தேசவம் போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் இதை மறுத்துள்ளார். ஊழியர்கள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்று கூறவில்லை. ஊழியர்களின் விருப்பத்தின் பேரிலேயே அவர்கள் சபரிமலையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறினார். 

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

தற்போதைய செய்தி PrevNext திருமலை அறைகளுக்கு புது கட்டுப்பாடு


Next


திருப்பதி: திருமலையில், பக்தர்கள் தங்கும் வாடகை அறைகளுக்கு புது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேர சலுகை

திருமலையில், பல வகை கட்டணங்களில் வாடகைக்கு அறைகள் கிடைக்கும். இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். கடந்த காலங்களில், அறையை காலி செய்யும் போது, கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும். அதற்கு பிறகு தாமதமானால் மட்டுமே கூடுதலாக தொகை வசூலிக்கப்படும். ஆனால், கடந்த வாரம் முதல் இந்த சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஒரு நிமிடம் தாமதம் ஆனால் கூட, ஒரு நாள் வாடகையை வசூலித்து விடுகின்றனர். இது பக்தர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அறைக்கு முன் பதிவு செய்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை கண்டுபிடிப்பதற்கே ஒரு மணி நேரம் ஆகி விடுகிறது. சில நேரங்களில் அறை கிடைத்தாலும், அதை சுத்தம் செய்து தர அரை மணி நேரத்திற்கு மேல் எடுத்து கொள்கின்றனர். நிலைமை இப்படி இருக்க, ஒரு மணி நேர சலுகையை ரத்து செய்வது சரியல்ல என்பது பக்தர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

அதிகாரிகள் விளக்கம்

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது:அறையை காலி செய்யும் பக்தர்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட சலுகையால், ஏற்கனவே அறைக்கு பதிவு செய்துள்ள பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. திருமலையில் தற்போது பிரமோற்சவம் நடந்து வருகிறது. தற்போது அறைகள் கிடைக்காமல் ஏராளமான பக்தர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு தான், புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய முறைபடி சரியான நேரத்தில் அறை ஒதுக்கப்படும். எனவே, பக்தர்கள் சிரமம் குறையும்.

திருமலை அறைகளுக்கு புது கட்டுப்பாடு



திருப்பதி: திருமலையில், பக்தர்கள் தங்கும் வாடகை அறைகளுக்கு புது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேர சலுகை

திருமலையில், பல வகை கட்டணங்களில் வாடகைக்கு அறைகள் கிடைக்கும். இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். கடந்த காலங்களில், அறையை காலி செய்யும் போது, கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும். அதற்கு பிறகு தாமதமானால் மட்டுமே கூடுதலாக தொகை வசூலிக்கப்படும். ஆனால், கடந்த வாரம் முதல் இந்த சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஒரு நிமிடம் தாமதம் ஆனால் கூட, ஒரு நாள் வாடகையை வசூலித்து விடுகின்றனர். இது பக்தர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அறைக்கு முன் பதிவு செய்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை கண்டுபிடிப்பதற்கே ஒரு மணி நேரம் ஆகி விடுகிறது. சில நேரங்களில் அறை கிடைத்தாலும், அதை சுத்தம் செய்து தர அரை மணி நேரத்திற்கு மேல் எடுத்து கொள்கின்றனர். நிலைமை இப்படி இருக்க, ஒரு மணி நேர சலுகையை ரத்து செய்வது சரியல்ல என்பது பக்தர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

அதிகாரிகள் விளக்கம்

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது:அறையை காலி செய்யும் பக்தர்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட சலுகையால், ஏற்கனவே அறைக்கு பதிவு செய்துள்ள பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. திருமலையில் தற்போது பிரமோற்சவம் நடந்து வருகிறது. தற்போது அறைகள் கிடைக்காமல் ஏராளமான பக்தர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு தான், புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய முறைபடி சரியான நேரத்தில் அறை ஒதுக்கப்படும். எனவே, பக்தர்கள் சிரமம் குறையும்.



இவ்வாறு அவர்கள் கூறினர். 

விலை குறைவுதான்; சருமத்தை அழகாக்குவதில் உயர்வுதான்



திருச்சி :மெக்னீசியம் குளோரைடு அடங்கிய முல்தானி மெட்டி சருமத்திற்கு அழக்கூட்டும் ஒரு ஒப்பனை பொருள். மிகவும் குறைந்த விலையில் இது கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.
முல்தானி மெட்டி சருமத்தை சுத்தப்படுத்தி, தெளிவடையச் செய்யும். முல்தானி மெட்டியில் மெக்னீஷியம் குளோரைடு அடங்கி உள்ளது. இது சருமத்தில் உள்ள பருக்களையும், கசடுகளையும் நீக்குகிறது.
முல்தானி மெட்டியானது, மாவு போல பிசையப் பட்டு நேரடியாக முகத்தில் தடவப்படுகிறது. இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது. இதனால் எவ்வித எதிர்விளைவுகளும் ஏற்படுவதில்லை.
முல்தானி மெட்டியுடன் தயிர், க்ரீம், பன்னீர் மற்றும் எலுமிச்சை சாறு போன்றவை சேர்த்து நாமே பேஸ் பேக்குகள் தயாரிக்கலாம். இது தோலின் நிறத்தையும், அழகையும் கூட்டுகிறது.
முல்தானி மெட்டி என்பது இன்றைய காலக் கட்டத்தில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய ஒப்பனைப் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலைதான் குறைவு. இதனால் அடையக்கூடிய நன்மைகள் ஏராளம்.
அதிக அளவில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய இயற்கையான ஒப்பனைப் பொருளாக இது விளங்குகிறது

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

SAKTHI















நரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும்

"நரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும்! இயற்கை ‘வயாகரா’ முருங்கைப்பூ முருங்கைப்பூ பால், முருங்கைப்பூ சூப், முருங்கைப்பூ சாதம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முருங்கை என்றதும் அதன் காய்களும் கீரைகளும் மட்டுமே நமக்குத் தெரியும். அதில் மருத்துவக் குணங்கள் இருப்பதாகச் சொல்லக்கேட்டு விதம்விதமாய் சமைத்து உண்டு ருசித்து ரசித்திருப்போம். ஆனால், முருங்கைப்பூவில் இருக்கும் சத்துகள் மட்டுமல்ல, அதில் இருக்கும் ரகசியங்கள் நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று! அதன் மகிமை அறிந்த ஒருவர் கவிதையாக வடித்துள்ளார். ‘அவென்யூ அழகுபெறட்டுமே என்று பூச்செடிகள் வளர்க்க... அதில் தப்பி வளர்ந்தது முருங்கை ஒன்று! அதை வெட்டவேண்டும் என சொன்னபோது பூச்சொரிந்து நின்றது. முருங்கைப்பூ பால்கூட்டும் முளைத்த பிஞ்சுக்குழம்பும் ருசியோ ருசி! பிரசவித்த அக்காவுக்கு மருந்தாகக் கொடுக்கையில் நானும் ருசித்து ரசித்தேன்!' சிலாகித்து எழுதும் அளவுக்கு முருங்கைப்பூவில் அத்தனை சத்துகள் நிறைந்திருக்கின்றன. முருங்கையின் பலன் பற்றி சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் பலன் பற்றி அறிந்ததாலேயே சித்தர்கள் முருங்கையை 'பிரம்ம விருட்சம்' என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை எங்கு பார்த்தாலும் பரவிக் காணப்படுகிறது முருங்கை! வீடுகள் மற்றும் தோட்டங்களில் முருங்கை மரங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால் நம்மில் எத்தனைபேர் முருங்கைப்பூவை சமைத்துச் சாப்பிட்டிருப்போம்..? காரணம் அந்தப் பூக்களின் மருத்துவ குணம் பற்றி தெரியாதது மட்டுமல்ல... முருங்கைப்பூவை விட முருங்கைக்காயையே நாம் அதிகம் சமையலுக்குப் பயன்படுத்திப் பழகியிருக்கிறோம். முருங்கைப்பூக்களின் பயன் அறிந்து இனிமேலாவது அவற்றைச் சமைத்து ருசிப்போமா? முருங்கைப் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி கடலூரைச் சேர்ந்த இயற்கை வைத்தியர் அன்னமேரி பாட்டி, “இன்றைக்கு பல்வேறு காரணங்களால் குழந்தையின்மைக் குறைபாடு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அந்தப் பிரச்னைக்கு மிகச் சிறந்த தீர்வாக அமைந்திருக்கிறது இந்த முருங்கைப்பூ. இதை `இயற்கையின் வயாகரா' என்று சொல்வார்கள். இன்றைய அவசர யுகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு பகலாக ஓய்வின்றி உழைப்பது, கம்ப்யூட்டரே கதி என்று மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பது போன்றவற்றால் மனஅழுத்தம், மன உளைச்சல் ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. . அதிக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக நரம்புகள் செயலிழந்து நரம்புத்தளர்ச்சி ஏற்படும். அந்த நேரங்களில் முருங்கைப்பூவை கஷாயம் வைத்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத்தளர்ச்சி சரியாகும். மேலும், பலருக்கு தாம்பத்ய உறவில் நாட்டம் இருப்பதில்லை. இதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து குடித்து வந்தால் தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும். முருங்கைப்பூவை காய வைத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து அதே ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும். முருங்கைப்பூக்களுடன் பால், பாதாம் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு விந்து முந்துதல் பிரச்னை குறையும். முருங்கைப்பூக்களை உணவாகவோ மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் தாம்பத்யம் சிறக்கும். அரைக்கீரையுடன் அரைப் பங்கு முருங்கைப்பூ சேர்த்துக் கடைந்து சோற்றுடன் சாப்பிட்டு வரலாம். முருங்கைப்பூவை துவையல் செய்தும் சாப்பிடலாம். இப்படி ஏதோ ஒரு வகையில் முருங்கைப்பூக்களை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். இதை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் சூடு தணியும். பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, மேக நோய்கள் போன்றவற்றையும் குணப்படுத்தும். மேலும், மாதவிலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, வயிற்றுவலி எனப் பல்வேறுவிதமான மனம், உடல் அவதிகளுக்கு ஆளாவார்கள். அப்போது முருங்கைப் பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் மனம் அமைதி பெறும். உடல் கோளாறுகளும் நீங்கும். பள்ளி, கல்லூரி பயிலும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் இருந்தால்தான் அவர்கள் நல்லமுறையில் தேர்ச்சி பெறமுடியும். ஆகவே குழந்தைகளுக்கு நினைவாற்றல் பெருகவும் முதியோருக்கு வரக்கூடிய மறதி நோயைத் தடுக்கவும், வந்த நோயை விரட்டவும் இது நல்ல மருந்தாகிறது. கைப்பிடி அளவு முருங்கைப்பூவை அரைத்து அல்லது பாலில் கலந்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை எனக் குடித்து வந்தால் பலன் கிடைக்கும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் நாம் எல்லோருமே கண்களுக்கு அதிக வேலை கொடுக்கிறோம். கம்ப்யூட்டரில் பணியாற்றுபவர்களுக்கு 40 வயதுக்குமேல் ஆகிவிட்டால் கண்ணாடி அணியாமல"நரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும்! இயற்கை ‘வயாகரா’ முருங்கைப்பூ முருங்கைப்பூ பால், முருங்கைப்பூ சூப், முருங்கைப்பூ சாதம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முருங்கை என்றதும் அதன் காய்களும் கீரைகளும் மட்டுமே நமக்குத் தெரியும். அதில் மருத்துவக் குணங்கள் இருப்பதாகச் சொல்லக்கேட்டு விதம்விதமாய் சமைத்து உண்டு ருசித்து ரசித்திருப்போம். ஆனால், முருங்கைப்பூவில் இருக்கும் சத்துகள் மட்டுமல்ல, அதில் இருக்கும் ரகசியங்கள் நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று! அதன் மகிமை அறிந்த ஒருவர் கவிதையாக வடித்துள்ளார். ‘அவென்யூ அழகுபெறட்டுமே என்று பூச்செடிகள் வளர்க்க... அதில் தப்பி வளர்ந்தது முருங்கை ஒன்று! அதை வெட்டவேண்டும் என சொன்னபோது பூச்சொரிந்து நின்றது. முருங்கைப்பூ பால்கூட்டும் முளைத்த பிஞ்சுக்குழம்பும் ருசியோ ருசி! பிரசவித்த அக்காவுக்கு மருந்தாகக் கொடுக்கையில் நானும் ருசித்து ரசித்தேன்!' சிலாகித்து எழுதும் அளவுக்கு முருங்கைப்பூவில் அத்தனை சத்துகள் நிறைந்திருக்கின்றன. முருங்கையின் பலன் பற்றி சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் பலன் பற்றி அறிந்ததாலேயே சித்தர்கள் முருங்கையை 'பிரம்ம விருட்சம்' என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை எங்கு பார்த்தாலும் பரவிக் காணப்படுகிறது முருங்கை! வீடுகள் மற்றும் தோட்டங்களில் முருங்கை மரங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால் நம்மில் எத்தனைபேர் முருங்கைப்பூவை சமைத்துச் சாப்பிட்டிருப்போம்..? காரணம் அந்தப் பூக்களின் மருத்துவ குணம் பற்றி தெரியாதது மட்டுமல்ல... முருங்கைப்பூவை விட முருங்கைக்காயையே நாம் அதிகம் சமையலுக்குப் பயன்படுத்திப் பழகியிருக்கிறோம். முருங்கைப்பூக்களின் பயன் அறிந்து இனிமேலாவது அவற்றைச் சமைத்து ருசிப்போமா? முருங்கைப் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி கடலூரைச் சேர்ந்த இயற்கை வைத்தியர் அன்னமேரி பாட்டி, “இன்றைக்கு பல்வேறு காரணங்களால் குழந்தையின்மைக் குறைபாடு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அந்தப் பிரச்னைக்கு மிகச் சிறந்த தீர்வாக அமைந்திருக்கிறது இந்த முருங்கைப்பூ. இதை `இயற்கையின் வயாகரா' என்று சொல்வார்கள். இன்றைய அவசர யுகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு பகலாக ஓய்வின்றி உழைப்பது, கம்ப்யூட்டரே கதி என்று மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பது போன்றவற்றால் மனஅழுத்தம், மன உளைச்சல் ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. . அதிக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக நரம்புகள் செயலிழந்து நரம்புத்தளர்ச்சி ஏற்படும். அந்த நேரங்களில் முருங்கைப்பூவை கஷாயம் வைத்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத்தளர்ச்சி சரியாகும். மேலும், பலருக்கு தாம்பத்ய உறவில் நாட்டம் இருப்பதில்லை. இதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து குடித்து வந்தால் தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும். முருங்கைப்பூவை காய வைத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து அதே ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும். முருங்கைப்பூக்களுடன் பால், பாதாம் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு விந்து முந்துதல் பிரச்னை குறையும். முருங்கைப்பூக்களை உணவாகவோ மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் தாம்பத்யம் சிறக்கும். அரைக்கீரையுடன் அரைப் பங்கு முருங்கைப்பூ சேர்த்துக் கடைந்து சோற்றுடன் சாப்பிட்டு வரலாம். முருங்கைப்பூவை துவையல் செய்தும் சாப்பிடலாம். இப்படி ஏதோ ஒரு வகையில் முருங்கைப்பூக்களை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். இதை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் சூடு தணியும். பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, மேக நோய்கள் போன்றவற்றையும் குணப்படுத்தும். மேலும், மாதவிலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, வயிற்றுவலி எனப் பல்வேறுவிதமான மனம், உடல் அவதிகளுக்கு ஆளாவார்கள். அப்போது முருங்கைப் பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் மனம் அமைதி பெறும். உடல் கோளாறுகளும் நீங்கும். பள்ளி, கல்லூரி பயிலும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் இருந்தால்தான் அவர்கள் நல்லமுறையில் தேர்ச்சி பெறமுடியும். ஆகவே குழந்தைகளுக்கு நினைவாற்றல் பெருகவும் முதியோருக்கு வரக்கூடிய மறதி நோயைத் தடுக்கவும், வந்த நோயை விரட்டவும் இது நல்ல மருந்தாகிறது. கைப்பிடி அளவு முருங்கைப்பூவை அரைத்து அல்லது பாலில் கலந்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை எனக் குடித்து வந்தால் பலன் கிடைக்கும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் நாம் எல்லோருமே கண்களுக்கு அதிக வேலை கொடுக்கிறோம். கம்ப்யூட்டரில் பணியாற்றுபவர்களுக்கு 40 வயதுக்குமேல் ஆகிவிட்டால் கண்ணாடி அணியாமல

வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்யக் கூடாத அந்த 5 விஷயங்கள் இவை தான்!


குழந்தைப்பருவத்தின்பள்ளிகளிலேயே கழிகிறது. விளையாட்டுப் பருவத்தில் அதாவது, இரண்டரை வயதிலேயே குழந்தைகள் பிரீ ஸ்கூலுக்கு அனுப்பப்படுகின்றனர். 3 வயதில் கிண்டர் கார்டன் வாழ்க்கைத் தொடங்கி விடுகிறது. மூன்று வயது குழந்தைக்கு ஹோம் வொர்க், கிளாஸ் வொர்க், அசைன்மெண்ட் என எக்கச்சக்க டென்ஷன்.


அறிவு, நடத்தை, மொழி உட்பட பல விஷயங்களையும் குழந்தைகள் பள்ளி வாழ்வில் இருந்தே கற்றுக் கொள்கின்றனர். ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவு மதிப்பு சார்ந்ததாக இருந்த காலத்தில், ஆசிரியர்கள் நல்லொழுக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பவர்களாக இருந்தனர். ஆனால் இன்றைய ஆசிரியர்களின் பணிச்சுமை மற்றும் ஆசிரியர், மாணவருக்கு இடையிலான உறவு எல்லாமே நெருக்கடி மிகுந்ததாக மாறிவிட்டது. ஆசிரியர்கள் சொன்னதை வேதவாக்காக மாணவர்கள் எடுத்துக்கொண்ட காலகட்டம் இதுவல்ல. இன்று மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொல்ல தினமும் தன்னை மேம்படுத்திக்கொண்டு படிக்க வேண்டிய நிலைக்கு மாறியிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.
ஆனாலும் ஆசிரியர்கள் மாணவர்களை உளவியல் ரீதியாக அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேசினார் உளவியல் ஆலோசகர் பாபுரங்கராஜன்
‘‘பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் இடையில் முரண்பாட்டைக் களைய ஆசிரியர்கள் சில விஷயங்களின் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. வகுப்பறையில் அவர்கள் கண்டிப்பாக 5 விஷயங்களைத் தவிர்த்தாக வேண்டும்.
இன்று நடத்தும் பாடத்தை நாளை படித்து வர வேண்டும் என்பது பொதுவான விதி. அதையே ஆசிரியர்கள் கடுமையான கட்டளையாக சொல்லக்கூடாது. படிக்காமல் வந்தால் 10 முறை இம்போசிஷன் எழுத வைப்பேன் எனப் பயமுறுத்துவது போன்ற பாணியில் படிக்க வைக்க முயல்வது தவறு. இது, அந்தப் பாடத்தின் மீதும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் ஒருவித வெறுப்பினை உண்டாக்கும். அதே போல் குறிப்பிட்ட ஒரு மாணவன் மீது காரணம் இல்லாமல் வெறுப்பினைக் காட்டுவது, முதல் நாள் ஒரு விஷயத்தை ஃபாலோ செய்யச் சொல்லிவிட்டு மறு நாள் வேறு ஒன்றை வலியுறுத்துவது, முன்னுக்குப் பின் முரணான கட்டளைகள் இடுவது, போன்றவை மாணவர்களைக் குழப்புவதோடு மன உளைச்சலுக்கும் ஆளாக்கும். இது ஆசிரியர்- மாணவர் இணக்கத்தை இருவருக்குமான கெடுத்துவிடும். இது போன்ற செயல்களை ஆசிரியர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
ஒரு நாளில் என்ன வேலைகளையெல்லாம் மாணவனால் செய்ய முடியும் என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ப அவர்களுக்கு வேலைகளை பிரித்துக் கொடுக்க வேண்டும். மாணவர்களிடம் மனப்பாடம் செய், எழுது என்று செய்ய இயலாத அளவுக்கு வேலைகளை வாங்கும்போது, மாணவர்களின் கவனம் படிப்பிலிருந்து விலகிச் செல்ல நேரிடும். எந்த மாணவரிடமிருந்து எப்படிப்பட்ட திறனை எதிர்பார்க்க முடியும் என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்ப வேலை வாங்கினால் ரிசல்ட் திருப்திகரமாக இருக்கும்.
இன்றைய குழந்தைகள் சுயமரியாதையை அதிகம் எதிர்பார்ப்பவரகளாக இருக்கிறார்கள். ஐந்து வயது குழந்தையாக இருந்தால்கூட மற்றவர் முன்னிலையில் தான் திட்டுவாங்குவதை அவர்கள் விரும்புவதில்லை. அதையும் மீறி திட்டினால் அதைப் பெருத்த அவமானமாக நினைத்து விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள். இது மாணவர்களின் படிப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம். பாராட்டுவதை எல்லோர் முன்னிலையிலும், திட்டுவதை தனியாகவும் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் எஜமானர்கள் போலவும், மாணவர்கள் தொழிலாளிகள் போலவும் நடத்துவதை நிறுத்த வேண்டும்.
ஆசிரியர்கள், தாங்கள் உதிர்க்கும் வார்த்தைகளில் கவனம் கொள்ள வேண்டும். தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி திட்டுவது, அடிப்பது போன்ற செயல்கள் வேண்டாம். தவறு மனித இயல்பு. தவறு செய்வதை புரியும்படி திருத்தினாலே அவை மீண்டும் நிகழாது. இன்றைய குழந்தைகள் அதிகநேரம் இருப்பது வகுப்பறையில்தான். எனவே மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் ஆசிரியர்கள் நடந்துகொண்டாலே போதுமானது. நன்கு படிப்பவர்களே அறிவாளிகள் என்கிற சிந்தனையை ஆசிரியர்கள் தங்கள் மனங்களில் இருந்து நீக்கினாலே போதும். மாணவர்கள் மிளிர்வார்கள்



மழைக்காலத்தில் வதைக்கும் சேற்றுப்புண்கள்... குணமாக்கும் எளிய வழிமுறைகள்


மழைக்காலத்தில் நம்மை தொந்தரவு செய்யும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று சேற்றுப்புண். சாலைகளில் தேங்கிக் கிடக்கும் சேறு சகதி, கழிவு நீர் கலந்த மழைநீரை மிதித்து நடப்போருக்கும், சேற்றில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கும் எளிதில் இந்தப் பாதிப்புத் தொற்றிகொள்ளும்.


சேற்றுப்புண், சாதாரணமாகத் தொடங்கும். படிப்படியாக தொந்தரவு அதிகமாகிவிடும். இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்படும். காலணிகள், பயன்படுத்த முடியாது. நடப்பதற்கே சிரரமாகிவிடும்.
சேறு, நீண்ட நாள் தேங்கிய தண்ணீர், கழிவு நீர் ஆகியவற்றிலிருந்து உருவாகும் நுண்கிருமிகளின் தொற்றினால் கால்களில் உண்டாகும் புண்களையே சேற்றுப்புண் என்கிறோம். மண், சேறு சகதியில் உள்ள பாக்டீரியா, நுண்கிருமிகள் கால் விரல்களின் இடுக்குகளில் தங்கிவிடும். வியர்வை காரணமாக வேகமாக வளரத்தொடங்கும். கால்களை சரியாக சுத்தப்படுத்தாமல் விட்டால், சேற்றுப்புண் வரும். இந்த புண்கள் பெரும்பாலும் பாதங்களிலும், விரல்களுக்கு நடுவிலும் வந்து பாடாய்ப் படுத்தி எடுக்கும்.
"மிகுந்த கவனத்துடன் கால்களைப் பராமரிப்பதன் மூலம் சேற்றுப்புண்ணை தவிர்க்கலாம்" என்கிறார் ஆயுர்வேத மருத்துவர்

ஆர்.பாலமுருகன்.

சேற்றுப்புண்ணில் இருந்து கால்களை எப்படி காத்துக்கொள்வது? சேற்றுப்புண்ணால் அவதிப்படுபவர்களுக்கு என்ன தீர்வு? விரிவாக விளக்குகிறார் அவர்.
“மழை காலத்தில் வந்து நம்மை அவதிக்கு உள்ளாக்கும் சேற்றுப்புண் குறித்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேத மருத்துவ நூல்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு சமஸ்கிருதத்தில் 'அல்ச' என்று பெயர். 'இது சகதியில் பாதங்களை வைப்பதால் ஏற்படுகிறது என்றும் இது பாதங்களில் இரண்டு விரல்களுக்கு நடுவே அரிப்பையும் புண்ணையும் ஏற்படுத்தும்' என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.
எப்படி வருகிறது?
தொடர் மழையால் தேங்கி நிற்கும் நுண்கிருமிகள் தாக்குதல் இந்த சேற்றுப்புண் தொந்தரவுக்கு ஆளாக வேண்டியுள்ளது. மேலும், மழைக்காலத்தில் எப்போது ஈரப்பதமான இடங்களில் நின்று கொண்டு வேலை செய்பவர்களை சேற்றுப்புண் அதிகம் பாதிக்கும். மழைநீர், சேற்றுநீர், சுகாதாரமற்ற நீரில் நடப்பது மற்றும் நீண்ட நேரம் நிற்பது, பாதங்களில் அழுக்கு சேர்வது போன்ற காரணங்களால் இது தீவிரமாகும்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன?
சேற்றுப்புண் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஈரப்பதம். துணி துவைப்பது போன்ற வேலைகளின்போது, அதிக நேரம் தண்ணீரில் நிற்க வேண்டியிருக்கும். அதுபோன்ற வேலைகளை முடித்துவிட்டு, மென்மையான துணியைக்கொண்டு கால்விரல்களையும் இடுக்குகளையும் நன்றாகத் துடைக்க வேண்டும். அதேபோல, மழைநீரில் நனைந்த கால்களை வீட்டிற்கு வந்ததும் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.
காலணிகளையும் நன்றாக கழுவிய பின் சுத்தம் செய்து உலர்ந்தபின்பு மீண்டும் பயன்படுத்த வேண்டாம். வெந்நீரில் சிறிதளவு உப்பு போட்டோ, எழுமிச்சம்பழச் சாறு கலந்தோ கால்களை கழுவலாம்.


ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையுடன் நீர் சேர்த்து, அதை கொதிக்க வைத்த பின் அந்த நீரைக்கொண்டும் பாதங்களை கழுவலாம்.
வீட்டில் அரிசியை அலசும் தண்ணீரை சேகரித்து, அதை கொதிக்க வைத்து அந்த தண்ணீரை கொண்டு பாதங்களை கழுவிய பின்பு ஈரப்பதம் இல்லாமல் துடைத்து விட வேண்டும்.
தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளைக் சேர்த்து, குளிப்பதற்கு முன்பு, காலில் தடவிக் குளித்தால், சேற்றுப்புண் வராது.
சேற்றுப்புண் பாதித்தவர்கள் செய்ய வேண்டியவை என்ன?
மேற்கண்ட வழிமுறைகளில் ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்றி பாதங்களை நன்றாக கழுவி பின்பு ஒரு கைப்பிடி வேப்பிலையுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்துப் பூச வேண்டும். அதேபோல, அறுகம்புல்லுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து சேற்றுப்புண் உள்ள இடங்களில் பூசலாம்.
மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசலாம். மஞ்சளை மட்டும் நீர்விட்டு அரைத்துப் பூசலாம். அம்மான் பச்சரிசி இலையை அரைத்தும் பூசலாம். வேப்பெண்ணெயைக் காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் பூசலாம். வேப்பிலையும் எள்ளையும் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் உள்ள இடங்களில் தடவலாம்.


இது தவிர ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் 'சிந்துராதி லேபம்', 'மகாதிக்தக லேபம்' போன்ற மருத்துகளை காலை மாலை இரு வேளை பூசிக் கொள்ளலாம் சுத்தமான தேங்காய் எண்ணெயும் சூடு செய்து பூசலாம்.
குழந்தைகளுக்கு காலில் சேற்றுப்புண் வந்தால் சிறிதளவு வெண்ணெயைத் தடவலாம். இதனால் எரிச்சல் இல்லாமல் இருக்கும்.
சர்க்கரை நோயாளிகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு சேற்றுப்புண் வந்தால் பெரும்பாலும் விரைவில் ஆறாது. எனவே மருத்துவரைப் பார்ப்பது நல்லது. பொதுவாக, சேற்றுப்புண் வராமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது.." என்கிறார்.

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

உஷார்: பெண்களுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால் ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்...

பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்?

1.. பெண்களே உங்கள் மாதவிடாய் நேரத்திற்கு முன்பாக, மாதவிடாய் நிற்கும் காலத்தில், கர்ப்ப காலத்தில் உடல் உப்பியது போலவும் எரிச்சலாகவும், உங்களின் முழு சக்தியோடு நீங்கள் செயல்பட முடியாதது போலவும் இருந்தால் உங்களுக்கு ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

2.. முறையான பருவ காலத்தில் 21 & 35 நாட்களுக்குள் மாதவிலக்கு ஏற்படும். இதுமாதம் தோறும் முறையாக நிகழாவிட்டால் ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

பின் குறிப்பு: மாதவிடாய் நிற்க முன்வரும் காலத்தில் மாதவிடாய் முறையற்று இருக்கக் கூடும் என்பது இயற்கையே.

3.. சரிவர தூக்கம் இல்லையெனில் ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

பின் குறிப்பு:

இரவில் அதிக வியர்வை, படபடப்பு போன்றவை குறைந்த ஹைட்ரஜன் ஹார்மோன் அளவினால் இருக்கலாம்.

4.. மாத விடாய்க்கு முன்னால் ஓரிரு பளு இயற்கையே. ஆனால் தீரா தொடர் அடர்ந்த பளு பாதிப்பு எனில் ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

5. பெண்களுக்கு உணவு செரிமான பாதிப்பு ஏற்பட்டாலும் ஹார்மோன்கள் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

6.. தொடர் சோர்வு, தூக்கம் போன்றவை இருந்தாலும் ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

7.. பிறப்புறுப்பில் வறட்சி, தலைவலி, எடை கூடுதல் இவையெல்லாம் ஹார்மோனின் காரணத்தினால் ஏற்படும்

திருச்சி சிறையில் என்னை நிர்வாணப்படுத்தினார்கள்: மாணவி வளர்மதிக்கு நிகழ்ந்த கொடுமை!

திருச்சி சிறையில் என்னை நிர்வாணப்படுத்தினார்கள்: மாணவி வளர்மதிக்கு நிகழ்ந்த கொடுமை!
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்தார் என்பதற்காக மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார்.


சிறையில் இருந்து வெளியே வந்து அனிதாவுக்கு ஆதரவாகவும் நீட்டுக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த வளர்மதியிடம் பிரபல தமிழ் வார இதழின் இணையதளம் ஒன்று பேட்டி கண்டுள்ளது. அந்த பேட்டியில் முன்னதாக சிறைகளில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பேசியுள்ளார் மாணவி வளர்மதி.
திருச்சி சிறையில் வளர்மதியை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாக கூறப்பட்டது. மேலும் கோவை சிறையில் வளர்மதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர் எனவும் கூறப்பட்டது. இது குறித்து வளர்மதியிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த வளர்மதி திருச்சியில் நடந்தது உண்மைதான் என கூறினார். நான் வெளிப்படையாக கூறுவதால் எனக்கு மட்டும் தான் அப்படி நடந்ததாக நினைக்க வேண்டாம். சாதாரண வழக்குல சிறைக்கு செல்பவர்களுக்குக்கூட இந்த கொடுமைகள் நடக்கின்றன.
ஒரு பெண் கூனிக்குறுகி மற்றவர்கள் முன்னிலையில் நிர்வாணமா நிற்கும் மனநிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எல்லா சிறைச்சாலைகளும் இப்படித்தான் இருக்கின்றன. ஆனால் கோவையில் இந்த கொடுமைகளுக்கு நான் ஆளாக்கப்படவில்லை. ஆனால் வேறுவிதமான தொல்லைகள் கொடுத்தார்கள் என வளர்மதி கூறியுள்ளார்.

அடப்பாவிகாளா இத்தனை பேர் இருந்திங்களா??வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

வாகன ஓட்டிகள் கண்டிப்பாக அசல் ஓடுநர் உரிமம் வைதிருக்க வேண்டும் என்ற உத்தரவை அடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் சனிகிழமை விடுமுறை நாட்களிலும் அலுவலகங்களில் கூட்டம் பயங்கரமாக அலைமோதுகிறது.

வாகன ஓட்டுநர்கள் தங்கள் கையில் அசல் ஓடுநர் உரிமத்தை கையில் கண்டிபாக வைதிருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. இதனால் விடுமுறை நாளான இன்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அசல் ஓட்டுநர் உரிமம் கையில் வைதிருக்க வேண்டும் என ஒரு கட்டாயம் இல்லாதபோதே போக்குவரத்து காவல்துறையினர் அசல் ஓட்டுநர் உரிமத்தை கேட்பது வழக்கம். தற்போது சொல்லவா வேண்டும்??.

இதனால் சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், தவறவிட்டார்கள் என உள்ளிட்ட கூட்டமும் வட்டார போக்குவரத்து அலுவலங்களில் குவிந்து வருகிறார்கள்.

உடலுறவு பற்றிய இந்த கட்டுக்கதைகள் உங்களுக்கு தெரியுமா?

உடலுறவு என்று வரும் போது இருவேறு பாலினருக்கும் இடையே உள்ள எதிர்பார்ப்புகள், ஆசைகள், கருத்துக்கள் என அனைத்தும் வேறுபடுகிறது. ஒருவரின் தேவையை பற்றி மற்றொருவர் புரிந்து கொள்ள முடியாத நிலை ஒன்று உருவாகிறது. இதனால் பலருக்கு உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போகிறது.
இன்றைய சூழ்நிலையில் பலரும் உடலுறவில் ஈடுபாடு குறைந்துவிட்டது என்ற கருத்தை முன் வைக்கின்றனர். நல்ல ஒரு கணவன் மனைவி உறவுக்கு உடலுறவும் ஒரு முக்கியகூறாக இருக்கிறது. பாலியல் பற்றிய சில கட்டுக்கதைகள் ஆண்களின் மீது உடலுறவில் ஏற்படுத்தும் தாக்கத்தை என்ன என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்..!


எப்போதும் தயாராக இருப்பது:
ஆண்கள் உடலுறவுக்கு பெரும்பாலும் அனைத்து நேரங்களிலும் தயாராக இருக்கின்றனர் என்ற ஒரு கட்டுக்கதை உள்ளது. ஆண்கள் தயாராக உள்ள நேரத்தில், பெண்கள் உடலுறவுக்கு நோ சொல்லும் போது எல்லாம் ஆண்கள் மனதில் உடலுறவு ஆசை குறைந்து விடுகிறது.
பெண்கள் என்ன நினைக்கிறார்கள்:
ஆண்கள் எந்த நேரமும் உடலுறவுக்கு தயாராக இருக்கும் போது, பெண்கள் மனதில் இவரது குணமே இப்படியா? ஏதேனும் உடலுறவு சம்பந்தப்பட்ட பாதிப்பா? என்ன இது எப்போது பார்த்தாலும் இதே வேலையாக இருக்கிறார் போன்ற எண்ணங்கள் எழலாம்.


இது வேண்டாமே:
ஆண்கள் மனதளவில் உடலுறவுக்கு தயாராகவும் நேரத்தை விட, பெண்கள் மனதளவில் உடலுறவுக்கு தயாராக வெகுநேரம் எடுத்துக்கொள்கிறார்கள். அதை புரிந்து கொள்ளாமல், உங்களது துணை உடலுறவுக்கு தயாராகும் முன்னரே அவருடன் உடலுறவு வைத்துக்கொள்வது கூடாது.
வேறுபட்ட எண்ணம்:
ஆண்களை பொருத்தவரையில் உடலுறவு என்றால் அதற்கு உடலுறவு என்ற அர்த்தம் மட்டும் தான். மற்ற பிற உணர்வுகள் இதனுடன் சேராது..! ஆனால் பெண்களுக்கு அவ்வாறு இல்லை..! உடலுறவு என்றால் காதல், அன்பு என பலவும் அடங்கும். உணர்வு பூர்வமான உடலுறவுக்கு ஆண்கள் பழக்கப்பட வேண்டும். பெண்கள் உடலுறவுக்கு முன்னர் அதீத காதலை தன் துணையிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்.


உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவி:
ஆண்கள் தங்களது மனதில் உள்ள காதல் போன்ற உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த முடிவதில்லை. மனதில் காதல் இருந்தாலும் கூட அதனை பெண்கள் அளவிற்கு ஆண்களால் வெளிப்படுத்த முடிவதில்லை. தன் அன்பை வெளிப்படுத்தும் கருவியாக உடலுறவு அமைகிறது.
அதிக உடலுறவு:
உடலுறவுக்கு அடிமையாதல் மிகவும் கொடியது. உடலுறவு தேவை அதிகரிப்பதால் பல உறவுகள் பிரிந்து விடுகின்றன. இது ஆண், பெண் என இருபாலருக்கும் தீங்கானது. இது பிறரிடம் உங்களை தவறானவராக கூட வெளிப்படுத்தும். எனவே உங்களுக்கு உடலுறவு பற்றிய அதீத சிந்தனைகள் இருந்தால், அதனை கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சு தான்…!

சனி, 9 செப்டம்பர், 2017

இன்று ஒரு முக்கியமான நாள்...!!! தமிழருக்கு "கொடுமைகள்" பல இழைத்திட்ட எதேச்சாதிகார காமராஜர் அரசு 1967-ல் தூக்கி எறியப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாள்..





இன்று ஒரு முக்கியமான நாள்...!!!
தமிழருக்கு "கொடுமைகள்" பல இழைத்திட்ட எதேச்சாதிகார காமராஜர் அரசு 1967-ல் தூக்கி எறியப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாள்..
1) காமராஜர் முதல்வராக 1954-ல் பதவி ஏற்றபோது தமிழ் நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் 7 %. அவர் 1963-ல் பதவி விலகியபோது எழுத்தறிவு சதவீதம் 37% கொடுமை நெம்பர் 1 !
2) ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம்: ஏழை பணக்காரன் பேதம் இளம் பிஞ்சுகள் மனத்தை பாதிக்காமல் இருக்க பள்ளிகளில் சீருடை திட்டம் .. கொடுமை நெம்பர் 2 !
3) வைகை அணை, மணிமுத்தாறு, சாத்தனூர் அணை, கீழ் பவானி, மேல் பவானி அணைகள், அமராவதி, புள்ளம்பாடி, பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம், நெய்யாறு .. இப்படி பல நீர்ப்பாசனத் திட்டங்கள். இதில் கீழ் பவானி திட்டத்தால் மட்டும் 207000 ஏக்கர் (842 ச .கிமீ ) நிலங்கள் சாகுபடி பயன் பெற்றன... கொடுமை நெம்பர் 3 !
4) BHEL திருச்சி, ஆவடி ரயில் பெட்டித் தொழிற்சாலை, ஊட்டியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம், நெய்வேலி நிலக்கரி சுரங்கம், சௌத் இந்தியா விஸ்கோஸ் இப்படி பல தொழில் வளர்ச்சி "கொடுமைகளும்" நடந்தேறின! கொடுமைகள் நெம்பர் 4)
இதுபோக மந்திரிகள் தங்களை பிரபல படுத்திக் கொள்ளாமை, பதவி போனவுடன் அரசாங்க டவுன் பஸ்ஸில் - கக்கன் போல- வீடு திரும்பும் எளிமை, அரசாங்க செலவில் நடைபெறும் நலத் திட்டங்களில் தங்கள் முகத்தை போஸ்டரில் போட்டு, ஏதோ தங்கள் கைக் காசில் அவற்றை நடத்துவதுபோல "வள்ளலே, ஏழைகளின் இதயத் துடிப்பே" என்றெல்லாம் ஜால்ராக்களை வைத்து எழுத வைக்காத எளிமை...
இப்படிப் பல உப "கொடுமைகளும்" செய்த "கொடிய எதேச்சாதிகார " காமராஜா் ஆட்சி "தோற்கடிக்கப்பட்ட" பொன் நாள்" இந்த நன்னாள்!
ஒரே ஒரு கார்ப்பரேஷன் கக்கூஸ் கட்டி விட்டால் கூட, தெரு முழுக்க டியூப் லைட் போட்டு, ஆளுயர போஸ்டர் அடித்து "வரலாற்று சாதனை" என்று வர்ணிக்கும் அடுக்கு மொழி வித்தகர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நாள்..
இன்னும் பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் என்று சகலத்திலும் "காசு பார்ப்பதாக" குற்றச் சாட்டுகள் எழுந்த "பொற்காலத்தின்" ஆரம்ப விதை போடப்பட்ட நாள்!
"தமிழக அரசியலில் விஷக் கிருமிகள் புகுந்துவிட்டன" - என்று, முப்பது வருஷம் மந்திரியாய் இருந்தும் பத்து பைசா கஜானா காசை பாக்கெட்டில் போடாத பக்தவத்சலத்தால் வர்ணிக்கப்பட்ட நாள்!
அந்த மாபெரும் எளிய மனிதன்
காமராஜை அவருடைய சொந்த ஊரிலேயே தோற்கடித்து, தமிழன் தன்னுடைய நன்றியைக் காட்டிய நாள்! ஆம்! 1967- பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள்!
அன்று "தமிழ் அன்னை" பொங்கி எழுந்தாள் ! ஆம் பொங்கி எழுந்த தமிழ் அன்னை கழகங்களின் தயவால் இன்று "டாஸ்மாக்" வாசலில் தன் பிள்ளைகளை தேடும் நிலையை அடைய அச்சாரம் போட்ட நாள்!
தமிழன் தன் தலையில் மண் அள்ளி போட்டு 50வருடம் ஆகி விட்டது இன்னும் திருந்தவில்லை

வியாழன், 7 செப்டம்பர், 2017

தினமும் நீங்கள் அருந்தும் தேநீரை ஆரோக்கிய பானமாக்க சில அருமையான குறிப்புகள் (Amazing tips to make your tea healthier)


பலருக்கு, ஒரு கப் தேநீர் அருந்துவது மிகவும் முக்கியமானது. இன்னும் சிலருக்கு, டீ பேக் தேர்வு செய்வது முக்கியம், இன்னும் சிலருக்கு கச்சிதமாக ப்ரியூ (நன்கு ஊறிய) மசாலா தேநீர் தான் பிடிக்கும்!மசாலா பொருள்களைச் சேர்த்தோ அல்லது அவ்வப்போது கொதிக்க வைப்பதன் மூலமாகவோ உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உங்கள் தேநீரின் சுவையை மாற்றிக்கொள்ளலாம். பின்வருபவற்றைச் சேர்ப்பதன் மூலம் தேநீரை ஆரோக்கியமான பானமாக்கலாம்:
இஞ்சி, எலுமிச்சை, தேன் மற்றும் துளசி (Ginger, Lemon, Honey and Tulsi)
இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நீங்கள் வானிலையால் உங்களுக்கு அசௌகரியமாக இருந்தால், அதற்கும் இவை உதவும்.


செய்முறை: நசுக்கிய சில இஞ்சித் துண்டுகளையும், ஒரு கைப்பிடி துளசி இலைகளையும் (வழிபடும் துளசி) கொதிக்கும் நீரில் போடவும்.அதில் தேயிலை சேர்த்து, நீரை நன்கு கொதிக்க விடவும். தேநீர் அருந்தும் கோப்பையில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றையும் ஒரு டீஸ்பூன் தேனையும் சேர்க்கவும். கொதிக்கும் தேநீரை கோப்பையில் ஊற்றவும்.
டெர்மினாலியா அர்ஜுனா பவுடர் (Terminalia arjuna Powder)
தேயிலைக்குள் ஆன்டிஆக்சிடன்ட்டுகள் உள்ளன, இவை கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. அர்ஜுனா பவுடரும் இந்தப் பண்புகளைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.
செய்முறை: தேயிலை நீரில் கொதிக்கும்போது, ஒரு சிட்டிகை அர்ஜுனா பவுடரை சேர்க்கவும்.
இலவங்கப்பட்டை மற்றும் துளசி இலைகள் (Cinnamon and Tulsi Leaves)
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தேநீர் அருந்துவது நல்லது.
செய்முறை: நீரைக் கொதிக்க வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டைப் பொடியைச் சேர்க்கவும், அத்துடன் சில துளசி இலைகளையும் தேயிலைகளையும் சேர்க்கவும்.சுமார் 10 நிமிடங்களுக்கு நீரைக் கொதிக்க விட்டால், உங்கள் ஆரோக்கிய தேநீர் தயாராகிவிடும்.
பால், கருப்பு ஏலக்காய்ப் பொடி, இஞ்சி மற்றும் பச்சை ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும் (Milk, Black Cardamom Powder, Ginger and Green Cardamom Powder)
மழை நாட்களில் அருந்த மிகவும் ஏற்ற, சுவையான மசாலா தேநீரைத் தயாரிக்க பல வழிகள் உள்ளன:
செய்முறை: பாலையும் நீரையும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.அதில் தேயிலை, சர்க்கரை ஒரு டீஸ்பூன், ஏலக்காய் பொடிகள், இஞ்சி ஆகியவற்றைச் சேர்க்கவும். இது பாதியாகக் குறையும் வரை நன்கு கொதிக்க விடவும். இதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக்கொள்ளுங்கள், மசாலா தேநீர் தயார்!
புதினாவும் எலுமிச்சையும் (Mint and Lemon)



புலன்களுக்குப் புத்துணர்ச்சியளிக்க புதினா மிகவும் சிறந்தது, ஜலதோஷம், தொண்டைப்புண் போன்றவற்றுக்கு மிகவும் சிறந்தது. எலுமிச்சை உங்கள் ஆற்றலை அதிகரித்து, செரிமானத்திற்கும் உதவுகிறது.
செய்முறை: நீரைக் கொதிக்க வைத்து, சிறிதளவு தேயிலைப் பொடியைச் சேர்க்கவும்.ஒரு டம்ளரில், புதினா இலைகளைப் போட்டு எலுமிச்சைச் சாற்றையும் ஊற்றவும். கொதிக்க வைத்த தேநீரை இதில் வடிகட்டிச் சேர்க்கவும். வேண்டுமென்றால் தேன் சேர்த்துக்கொள்ளலாம்.
தினமும் நாம் அருந்தும் சாதாரண தேநீரை ஆரோக்கியத்தையும் அளிக்கின்ற நல்ல பானமாக மாற்றுவது எப்படி என்று தெயர்ந்துகொண்டீர்கள்! உங்கள் மனநிலைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப எது வேண்டுமோ அதைத் தயார் செய்து அருந்தி மகிழுங்கள்! சில மூலிகைகளையும் சில மசாலா பொருள்களையும் சேர்ப்பதன் மூலம் அதனை மருத்துவப் பயனுள்ள பானமாக மாற்றிக்கொள்ளுங்கள், அவை இருமல், ஜலதோஷம், செரிமானப் பிரச்சனை என இன்னும் பல பிரச்சனைகளைத் தீர்க்க உதவும்