Like us on Facebook

புதன், 30 ஆகஸ்ட், 2017

ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்தால் புதுசுக்கு போலீஸ் உடனடி ஏற்பாடு


ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்தால் புதுசுக்கு போலீஸ் உடனடி ஏற்பாடு

வாகன ஓட்டிகளின், 'ஒரிஜினல் லைசென்ஸ்' உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனால், இணையதளம் வாயிலாக, மாற்று ஆவணம் பெறும் நடைமுறையை, போலீசார் எளிமைப்படுத்தி உள்ளனர்.


இது குறித்து, போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்கு ஆவணம் மற்றும் தொலைந்து போன ஆவணங்கள் குறித்து புகார் அளிக்கவும், தொலைந்து போன ஆவணங் களின் நகல் பெறவும், http:/eservices.tnpolice.gov.in என்ற போலீஸ் இணையதளத்தில், இரண்டு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர், இழப்பீடு தொகையை பெறவும், சாலை விபத் தில் இறந்தவர்களின் சட்ட பிரதிநிதிகளும், இந்த வசதியின் வாயிலாக, விரைவாக ஆவணங்களை பெறலாம். புலன் விசாரணை யின்போது, போலீசில் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண் அடிப்படையில், ஆவணங்கள் கோருவோருக்கு அனுமதி வழங்கப்படும்.
'நெட் பாங்கிங்' வசதியை பயன்படுத்த, ஒரு ஆவணத்திற்கு, 10 ரூபாய் செலுத்த வேண்டும்.
கூடுதலாக கோரப்படும் ஆவண நகல்கள், இ - மெயிலில் அனுப்பி வைக்கப்படும். அரசு இ - சேவை மையத்துடன், இந்த சேவையை ஒருங்கிணைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதனால், பாஸ்போர்ட், வாகன பதிவு சான்றிதழ், ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்கள் தொலைந்து போனது குறித்து, போலீ சில் புகார் அளிக்கும்நடைமுறையும், மாற்று ஆவணம் பெறுவதும் எளிமையாக்கப்பட்டு உள்ளது. மாற்று ஆவணங்கள் கோருவோரின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்,
ஓ.டி.பி., எனப்படும் ரகசிய எண்கள் அடிப்படையில், இதன் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படும்.பின், தேவையான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், தொலைந்த ஆவண நகல், ஒரு தனித்துவமான குறிப்பு எண்ணுடன், உடனடியாக பயனாளிக்கு அளிக்கப்படும். அதே சமயத்தில், இந்த நகல், அவரின் இ - மெயிலுக்கும் அனுப்பப்படும்.
ஆவணம் வழங்கும் அதிகாரிகள், உண்மை தன்மை யை சரிபார்க்க,இணையதளத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி, ஓட்டுனர் லைசென்ஸ் உட்பட, அரசு ஆவணங் களை, அந்தந்த துறைகளில் உடனடியாக பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய இணைய தள சேவை, இன்று முதல், சென்னையை தவிர்த்து, அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள், மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது. சென்னை மாநகருக்கான சேவை, நாளை துவங்க இருப்பதாக, காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

போலீசுக்கும் 3 மாதம் சிறை!
'ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாத, போலீசார் மீதும்
நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.நாளை முதல், வாகனங்கள் ஓட்டுவோர் கட்டாயம், 'ஒரிஜினல் லைசென்ஸ்' வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை, அமலுக்கு வருகிறது. ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவோர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்ய உள்ளனர்.
இந்த நடைமுறையை, 'தமிழக காவல் துறையில் பணிபுரியும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசாரும், கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்; மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டி னால், மூன்று மாதம் சிறை அல்லது, ரூ.500 அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து அனுபவிக்க நேரிடும். இது, பொது மக்களுக்கு மட்டுமல்ல; போலீசாருக்கும் பொருந்தும். செப்., 1 முதல், ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல், யாரும் வாகனம் ஓட்ட வேண்டாம்' என எச்சரித்துள்ளனர்

சனி, 26 ஆகஸ்ட், 2017

சொந்த தொழில், சொந்த வீடு... ஆனால் நிம்மதி இல்லையே... தடை... தடை...இந்த முட்டுக்கட்டை முழுமையாக நீங்க உங்களுக்கான வழித்தடம் இதோ... இதோ!!!

சொந்த தொழில், சொந்த வீடு... ஆனால் நிம்மதி இல்லையே... தடை... தடை...இந்த முட்டுக்கட்டை முழுமையாக நீங்க உங்களுக்கான வழித்தடம் இதோ... இதோ!!!


சென்னை :சொந்த தொழில், சொந்த வீடு... ஆனால் நிம்மதி இல்லையே... தடை... தடை... அனைத்திலும் தடை. முன்னேற்ற பாதைக்கு முட்டுக்கட்டை. இந்த முட்டுக்கட்டை முழுமையாக நீங்க உங்களுக்கான வழித்தடம் இதோ... இதோ.
இயற்கையின் அபூர்வ சக்திகளை உள்வாங்கி உங்களை சுற்றி பாஸிட்டிவ் சக்திகளை எழுப்பி தடைகளை விலக்கும் அருள் சக்தியாக விளங்குகிறது தாமரை மணிமாலை. இதை பணம ஈர்க்கும் மாலை என்று அழைக்கின்றனர்.
இந்த தாமரை மணிமாலை ஒரு இடத்தில் இருக்கிறது என்றால் அங்கு ஐஸ்வர்யம் அபரிமிதமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் தேவையில்லை. அந்தளவிற்கு அபூர்வ சக்தி கொண்டது. இந்த தாமரை மணி மாலை பணம் ஈர்க்கும் மாலையாகும். நம்பிக்கையுடன் இதை செயல்படுத்தியவர்கள் இன்று பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து உயர்வான வாழ்க்கை வாழ்கின்றனர்.
இந்த தாமரை மணிமாலையின் அபூர்வ சக்தி ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இதன் பணம் ஈர்க்கும் சக்தி குறித்து அறியப்பட்டுள்ளது. காந்தம் எவ்வாறு இரும்பை இழுக்குமோ... அதேபோல்தான் இந்த தாமரை மணிமாலையும் பணம் ஈர்க்கும் அற்புத குணம் கொண்டது. நம்பிக்கையுடன் செய்தால் நீங்களும் உயர்வான இடத்தை அடையலாம்.
இதுகுறித்து முழுமையான நம்பிக்கையுடன் செயல்பட்டால் உங்கள் கடன் பிரச்னை, குடும்ப பிரச்னை, வாழ்வில் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  1. தொடர்புக்கு : 91 98653 01050, 91 97518 57899.

சனி, 12 ஆகஸ்ட், 2017

வாய் மற்றும் வயிற்றில் உள்ள

"வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் இயற்கை மருந்து மணத்தக்காளி கீரை!! Webdunia 12 Aug. 2017 13:54 தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தானாகவே வளர்ந்து இருக்கும் மணத்தக்காளி கீரையின் மருத்துவ பயன்களை பார்க்கலாம். மணத்தக்காளி வியர்வையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது. சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால் நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும். மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உட்சூடு, வாய்புண், முதலியவை நீங்கும். சிறுநீரை வெளியேற்றும். தேகம் குளிர்ச்சியாகும். உடல் வசீகரம் ஏற்படும். மணத்தக்காளி இலைகளை பறித்து, தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும் .பின்னர் துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும். பசுமையான இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம். இதே போல் ஒரு நாளைக்கு 5 முதல் 6 இலைகளை பச்சையாக ந்மென்று சாப்பிட்டால் வாய்புண் வேகமாக குணமாகும். மணத்தக்காளி இலை சாற்றை 5 தேக்கரண்டி அளவில் தினமும் 3 வேளைகள் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். நாக்குப்புண்,குடல்புண் குணமாக, மணத்தக்காளி இலையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு சாப்பிடும் போது அதிக காரம் சேர்க்கக்கூடாது. நாக்கு சுவையின்மை, வாந்தி உணர்வு ஆகியவற்றை போக்கும் தன்மை மணத்தக்காளி வத்தலுக்கு உள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் குறைந்த அளவில், தினமும் இந்த வத்தலை உணவுடன் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வரலாம். மார்பு சளி இளகி வெளிப்படவும், மலச்சிக்கல் குறையவும் மணத்தக்காளி வத்தல் பயன்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில் மணத்தக்காளி வத்தல் கிடைக்கும்." - வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் இயற்கை மருந்து மணத்தக்காளி கீரை!! http://tz.ucweb.com/8_YQEu

உங்களுக்கு தெரியுமா இளநீர்

"உங்களுக்கு தெரியுமா? இளநீர் ஒரு நல்ல தீக்காய நிவாரணி… தென்னையானது 56 சதவீதம் இளநீருக்காகவும், 44 சதவீதம் தேங்காய் எண்ணை மற்றும் பல்வேறு பொருட்கள் தயாரிப்பதற்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியா உஷ்ணம் மிகுந்த நாடாகும். அதிலும் குறிப்பாக மார்ச் முதல் ஜூன் வரை வெப்பம் அதிகமாக இருக்கும். வெப்பத்தினால் ஏற்படும் நோய்களை தடுப்பதுடன், உடலை குளிர்ச்சி ஆக்குவதில் முதன்மை இடம் வகிக்கின்ற இளநீர். நோய்களை தடுக்கும் இளநீர் இளநீரில் சர்க்கரை சத்து 5.5 சதவீதத்திற்கு அதிகமாகவும், சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. கோடைக்கால வியாதிகளான வயிறுக்கடுப்பு, நீர் கடுப்பு, மஞ்சள் காமாலை, அம்மைநோய், தோல் சம்பந்தமான நோய்கள் மற்றும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் இளநீருக்கு உண்டு. மற்ற இளநீரை விட செவ்விளநீரில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. சிறுநீரகம், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் தன்மையை செவ்விளநீர் பெற்றுள்ளது. இவ்வாறு பலவகைகளில் பயன்படும் தென்னையை நடும்போது இளநீருக்காக மட்டும் உள்ள தென்னை மரங்களை மட்டும் சாகுபடி செய்யாமல், இளநீர் மற்றும் தேங்காய்க்கு பயன்படும் திருவையாறு-2 என்ற ரக தென்னம்பிள்ளைகளை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்யலாம். இதன் மூலம் தென்னை விவசாயிகள் நல்ல இலாபம் பெறலாம். கோடைகால வியாதிகளை தடுக்கக்கூடிய இளநீரை நாம் பருகி நோய்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். நச்சு நீக்கி நம் உடலில் சாதாரணமாக நச்சுக்கள் தினம் சேர்கின்றன, இவையை சீர்படுத்த நம் உடல் வளம் உதவுகிறது. சற்று சோர்வாகவே எப்போதும் காணப்படுபவர்கள் தினம் இளநீரை பருகுவது நல்லது. இளநீர் உடலில் சேரும் நச்சுக்களை சீரமைக்கிறது. குறைந்த இரத்த அழுத்தம் இளநீரில் உள்ள குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிக அளவு பொட்டாசியம் இரத்த அழுத்த அளவுகளை குறைக்க வழி செய்கிறது. தீக்காய நிவாரணி தீக்காயங்கள் பட்ட இடத்தில் இளநீரை தடவலாம். இது தவிர அமிலத்தால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த இளநீர் வல்லமை பெற்றது. எடை இழப்பு இளநீரில் குறைவான கலோரிகள் உள்ளது, மேலும் சுலபமாக செலவிடக்கூடிய கொழுப்பு சத்துக்கள் இதில் உள்ளது. இது உங்கள் எடையை இழக்க ஒரு பெரிய அருப்பொருளாக உள்ளது." - உங்களுக்கு தெரியுமா? இளநீர் ஒரு நல்ல தீக்காய நிவாரணி…

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

புது வீடு கட்ட போகிறீர்களா? பூமிபூஜை

"புது வீடு கட்ட போகிறீர்களா? பூமிபூஜை செய்யும் போது இதை செய்யதால் செல்வம் வீடு தேடி வரும்...


சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும்.ஒரு சிலருக்கு அந்த ஆசை விரைவில் நடக்கும். சிலருக்கு சில காலம் எடுத்துக் கொள்ளும் அவ்வாறு வீடு கட்ட வேண்டும் என முடிவெடுத்துவிட்டால், அதற்கான பூமி பூஜை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. வருடத்தில் எட்டு முறைகள் மட்டும் தான் வாஸ்து நாள்வரும்.இந்நாளில் பூமி பூஜை செய்வது நல்லது. ஒரு வேளை பூமி பூஜை செய்வதற்கு இந்த எட்டு நாட்களையும் தவறவிட்டிருந்தால், வேறு எந்த நாட்களில் பூமி பூஜை செய்யலாம் என்பதை பார்க்கலாம் மனையின் உரிமையாளர் நட்சத்திரத்திற்கு உகந்த முகூர்த்த நாளில், வளர்பிறை சுப நேரத்தில் மனையின் பூமி பூஜை செய்யலாம். அதே சமயத்தில் பூஜை நாள் மனையின் உரிமையாளர் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம தினமாக இருக்கக்கூடாதே என்பது குறிப்பிடத்தக்கது பூமி பூஜை செய்ய உகந்த மாதங்கள் வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை, மாசி போன்ற மாதங்கள் உகந்ததாக உள்ளது நாட்கள் புதன், வெள்ளி, வளர்பிறை திங்கள்கிழமை, வியாழன் ஆகிய கிழமைகளில் பூமி பூஜை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் பூமி பூஜை செய்தால், செல்வ செழிப்போடு வாழலாம்" - புது வீடு கட்ட போகிறீர்களா? பூமிபூஜை செய்யும் போது இதை செய்யதால் செல்வம் வீடு தேடி வரும்...

எத்தனை பேருக்கு தெரியும் வெங்காயத்தின் அருமை

"எத்தனை பேருக்கு தெரியும்? வெங்காயத்தின் அருமை!!


வெங்காயம் நம் வாழ்வில் இன்றியமையாத உணவு பொருள் ஆகும். ஏறக்குறைய அனைத்து வகையான உணவு பொருள்களிலும் பயன்படுத்தப் படுகிறது. அதன் முக்கியதுவத்தை அறிவோம். பெண்களுக்கு மாதவிடாய் பொழுது அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டால் மூன்று சிறிய வெங்காயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உதிர போக்கு குறையும். தொண்டை கரகரப்புக்கு வெங்காயத்தின் சாறு குடித்தால் கரகரப்பு தீர்ந்து விடும். மேலும் குரல் தன்மையும் மாறும். 
வெங்காயச்சாறு குடித்தால் உடலில் உள்ள சூட்டை தணியும். மலச்சிக்கல் குறையும். நீரழிவு நோய்க்கு சிறந்தது வெங்காயம். பல் இடுக்கில் இருக்கும் அழுகைக் நீக்கிவிடும். வாய்புண்கள் ஏற்படும் போது வெங்காயி இதழ் அரைத்து தடவி வந்தால் வாய்புண் குணமடையும். சிறிய வெங்காயத்தை அரைத்து தடவி வந்தால் மூடி உதிர்வதை தடுத்து நன்கு தலை முடி வளர ஆரம்பிக்கும். வெங்காயம் வைட்டமின் B2 நிறைந்த ஒரு உணவாகும். இதில் 6.50 கிராம் கார்போஹைட்ரேட்டும், 0.20 கிராம் கொழுப்பு சத்தும், 1.10 கிராம் புரதச்சத்தும் உண்டு. வெங்காயத்தில் 33.00 கலோரிகள் உள்ளது" - எத்தனை பேருக்கு தெரியும்? வெங்காயத்தின் அருமை!!

புதன், 9 ஆகஸ்ட், 2017

டெங்குவை குணப்படுத்தும் பப்பாளி

"டெங்குவை குணப்படுத்தும் பப்பாளி நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள்,

இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பப்பாளியின் நன்மைகள் குறித்து காணலாம். பப்பாளியின் அனைத்து பாகங்களும் பயன் தரக்கூடியது. இதில், விட்டமின் ஏ, பி, சி, கே, இ சத்துக்கள் உள்ளன. புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது இதயத்துக்கு நலம் தரக்கூடியது. பப்பாளியில் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலை போக்குகிறது. மலக்குடலில் புற்றுவராமல் தடுக்கிறது. பப்பாளி இலைகளை பயன்படுத்தி காய்ச்சல், மூட்டுவலியை போக்கும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பப்பாளி இலை, மிளகு, சீரகம், நெல்லிவற்றல்.செய்முறை: பப்பாளி இலைகளின் காம்புகளை நீக்கிவிட்டு இலைகளை மட்டும் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மிளகுப்பொடி, அரை ஸ்பூன் சீரகப்பொடி, சிறிது நெல்லிவற்றல் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி காலை மாலை 3 நாட்கள் குடித்துவர வைரஸ் காய்ச்சல் குணமாகும். காய்ச்சலால் உண்டாகும் மூட்டுவலி, உடல்வலி சரியாகும். பப்பாளி இலை உயிர்காக்கும் மருந்தாக பயன் தருகிறது. வருகிற காலம், மழைக்காலம் என்பதால் காய்ச்சல் வரக்கூடும். இந்நிலையில், டெங்கு, சிக்குன் குனியா, டைபாய்டு காய்ச்சலை பப்பாளி இலை குணப்படுத்தும் மருந்தாகிறது. டெங்கு காய்ச்சல் வருகிறபோது ரத்த வட்டுக்களின் குறைபாடால் ஆபத்து ஏற்படும். இதற்கு பப்பாளி இலை தேனீர் மருந்தாகிறது. இது காய்ச்சலை குணப்படுத்தும். ரத்த வட்ட அணுக்களை அதிகரிக்க செய்யும். இரும்பு சத்து அதிகமாகும். உயிருக்கு பாதுகாப்பான மருந்தாக பப்பாளி விளங்குகிறது. பப்பாளி இலை சாறை பயன்படுத்தி ரத்த வட்ட அணுக்களை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பப்பாளி இலை, மஞ்சள் பொடி, தேன். செய்முறை: பப்பாளி இலை சாறு 20 மில்லி எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து சாப்பிட்டுவர ரத்த வட்ட அணுக்கள் அதிகரிக்கும். கல்லீரல், மண்ணீரல் வீக்கம் சரியாகும். பன்றி காய்ச்சல், சிக்குன் குனியா, டெங்கு, மலேரியா, டைபாய்டு காய்ச்சல் குணமாகும். பப்பாளி இலைகள் நோய் கிருமிகளை அழிக்க கூடியது. பப்பாளி பழத்தின் பசை 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகப்பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து வாரம் ஒருமுறை என 4 வாரம் சாப்பிட்டுவர வயிற்றில் உள்ள பூச்சிகள், வெளியேறும். உடலுக்கு பொலிவு தரும் மருந்தாகிறது. புறவூதா கதிர்களால் ஏற்படும் கருமையை போக்குகிறது. தலைமுடிக்கு செழுமையை தருகிறது. குடல், ஈரலுக்கு பலம் கொடுக்கிறது. அஜீரணத்தை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் திரிகடுக சூரணத்தை கால் ஸ்பூன் அளவுக்கு எடுத்து, காலையில் சுடுநீர் அல்லது தேனில் குழைத்து சாப்பிடும்போது பசியை தூண்டும். சளி, இருமலை தணிக்கும். அஜீரணம் சரியாகும். மூலக்கதை படிக்க" - டெங்குவை குணப்படுத்தும் பப்பாளி

எளிதாக கிடைக்கக்கூடிய முருங்கை கீரையின் மருத்துவ பயன்கள்...!

"எளிதாக கிடைக்கக்கூடிய முருங்கை கீரையின் மருத்துவ பயன்கள்...!





 முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளது. அத்தகையை கீரையை எப்படி சாப்பிட்டு வந்தால், அதனுடைய மருத்துவ நன்மைகளை பெறலாம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். முருங்கை கீரையின் நன்மைகள்: * முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும். முருங்கை காயை சமைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். * முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும். * முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். * பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது. * முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. வாரத்தில் இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக சாப்பிட்டால், ரத்தம் மற்றும் சிறுநீர் சுத்தம் அடைகிறது. முருங்கைக்காயை சூப் வைத்து குடித்து வந்தால் காய்ச்சல், மூட்டு வலி குணமாகும். * கர்ப்பப்பையின் குறைகளை போக்கி, கருத்தரிக்கும் திறனை ஊக்குவித்து பிரசவத்தை துரிதப்படுத்த உதவுகிறது. முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். * ஆஸ்துமா, மார்புச் சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்ற, முருங்கை இலையை வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும்." - எளிதாக கிடைக்கக்கூடிய முருங்கை கீரையின் மருத்துவ பயன்கள்...!

சனி, 5 ஆகஸ்ட், 2017

ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால் ஐந்து வருட பலன் கிடைக்கும்

"ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால் ஐந்து வருட பலன்




 பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு இவர்களெல்லாம் வணங்கி ஆசி பெறும் இத்தருணத்தில் நாமும் வணங்கி நம் துன்பங்களை அடியோடு போக்கிக் கொள்ள பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும். சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் அனைத்து கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சனி பிரதோஷத்தை முறையாக வழிபட நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி, அஷ்டமச்சனி காலக்கட்டத்தில் பலன் கொடுத்துக் கொண்டிருக்கும் சனீஸ்வர பகவானின் கோபம் தணிந்து துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷ வழிபாட்டை கடைப்பிடிக்க வேண்டும். பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன ஓம் நமசிவாய என்று ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும். ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். பலன்கள் : • பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும். • பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவன் அருள் கிடைக்கும். • சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். • பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும். • பிரதோஷ கால விரதம் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது சிறந்தது. • பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்." - ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால் ஐந்து வருட பலன்






இறந்தபின் பாலூற்றுவது எதற்காக ?

"இறந்தபின் பாலூற்றுவது எதற்காக ?


 இறப்பிற்குப் பின், மூன்றாவது நாளில் பால் அல்லது நீரை ஒருவரை புதைத்த இடத்திலோ, எரித்த இடத்திலோ அர்ப்பணிப்பது பாரம்பரியமாக நாம் செய்துவரும் சடங்காக உள்ளது. சத்குரு, ஒருவர் இறந்த மூன்றாவது நாளில், அவருக்கு பால் அல்லது நீர் ஊற்றுகிறோமே... எதற்காக? இறப்பிற்குப் பின், மூன்றாவது நாளில் பால் அல்லது நீரை ஒருவரை புதைத்த இடத்திலோ, எரித்த இடத்திலோ அர்ப்பணிப்பது பாரம்பரியமாக நாம் செய்துவரும் சடங்காக உள்ளது. அவர்கள் இறந்து விட்ட பின் உங்களால் ஏதும் செய்ய முடியாத நிலையிலும், அவர்களுக்கு உணவூட்ட வேண்டும், அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உளவியல் ரீதியான தேவை உங்களுக்கு உள்ளது. நீங்கள் நீர் ஊற்றினாலும், பால் ஊற்றினாலும் அல்லது உணவே கொடுத்தாலும் அதை நுகர்வதற்கு ஒரு உடலால் மட்டுமே முடியும். உடல்இல்லாத ஒருவரால் இவற்றை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இதுபோன்ற சடங்கு, உயிர் வாழ்பவர்களிடத்தில் ஒரு ஆழமான உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மற்றொரு விதத்தில் பார்க்கும்போது, தனது பிராரப்தகர்மவினை (வாழ்வதற்கு நிர்ணயிக்கப்பட்டகர்மவினை) தீர்ந்து போவதற்கு முன்னதாக ஒருவர் இறக்கும்போது அல்லது நிராசையுடன் அவர் மரணமடையும் போது, அந்த உயிருக்கு இதுபோன்ற அர்ப்பணிப்புகளை நாம் செய்யும்போது அவரது ஏக்கம் தணியக் கூடும். ஆனால் இது மரணமடையும் அத்தனை உயிர்களுக்கும் பொருந்தாது. சில வகை மரணங்களில் இது நிச்சயமான உண்மை. அதனால், இதனை பொதுவான ஒரு சடங்காகச் செய்து விட்டார்கள். அனைத்திற்கும் மேலாக, நீங்கள்பாசமும் பற்றும் கொண்டிருந்தவர் இறந்து விட்டபிறகும், அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றஉங்களது ஏக்கம் உளவியல் ரீதியாகத் தணிகிறது. ஒருவேளை, அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் கோபித்துக் கொண்டு, நீங்கள் அவருடன் பேசாமல் இருந்திருக்கலாம்; குடிப்பதற்கு ஒரு வாய்தண்ணீர் கேட்டபோது, கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள். நிச்சயமாக இறந்து போனவருக்கு நம்மால் ஏதாவது செய்ய இயலும். ஆனால், அதற்கு நீங்கள் தகுதியானவர் அல்ல. இறந்தவரை தன் சொந்தமாக பார்க்காமல் ஒரு உயிராக உங்களால் பார்க்க முடிந்தாலே ஒழிய அவருக்கு உங்களால் எதுவும் செய்யஇயலாது. அதனால்தான் ஈஷா யோக மையத்தில் காலபைரவ கர்மா என்னும் ஒரு செயல்முறையை தொடங்கினோம். இறந்த 14 நாட்களில் நாம் அந்தஉயிரைத் தொட முடியும். நம்மால் வேறு ஒரு பரிமாணத்தில் அந்த உயிருக்கு தேவையானதைச் செய்யமுடியும். இந்தக் கலாச்சாரத்தில் நாம் பிறப்பையும் இறப்பையும் மிகச் சரியாக புரிந்துகொண்டோம். அதனைசரியாக கையாளவும் செய்தோம். உணர்வு மேலோங்கி இருக்கும் மரணவீட்டில் உங்களால் ஒரு உயிரைசரியாக கையாள இயலுவதில்லை. இதுபோன்ற ஆன்மீக அறிவு சார்ந்த வி‌ஷயங்கள் அனைத்தும், உடல் கடந்த பரிமாணத்தில் வாழ்ந்த மனிதர்கள் அவர்களின் விழிப்புணர்வில் கண்டுணர்ந்து வழங்கிய ஒன்று. இதுபோன்ற முறைகளை உருவாக்கியவர்கள்தான் இந்தியக் கலாச்சாரத்தைக் கட்டமைத்தனர். ஆனால், ஒரு காலகட்டத்திற்கு மேல், இது போன்ற சடங்குகள் அனைத்தும் அவை கூறப்பட்டகாரணத்தின் புரிதலின்றி, திரிந்து உருமாறி விட்டது. அதுபற்றிய அறிவு இல்லாமல் மக்கள் அற்பமான செயல்களைச் செய்யத் துவங்கி விட்டனர்." -

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

நரம்புத்தளர்ச்சி நீக்கும் தாம்பத்தியம் பலப்படுத்தும் இயற்கை. வயாகாரா

"நரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும்! இயற்கை ‘வயாகரா’ முருங்கைப்பூ முருங்கைப்பூ பால், முருங்கைப்பூ சூப், முருங்கைப்பூ சாதம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முருங்கை என்றதும் அதன் காய்களும் கீரைகளும் மட்டுமே நமக்குத் தெரியும். அதில் மருத்துவக் குணங்கள் இருப்பதாகச் சொல்லக்கேட்டு விதம்விதமாய் சமைத்து உண்டு ருசித்து ரசித்திருப்போம். ஆனால், முருங்கைப்பூவில் இருக்கும் சத்துகள் மட்டுமல்ல, அதில் இருக்கும் ரகசியங்கள் நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று! அதன் மகிமை அறிந்த ஒருவர் கவிதையாக வடித்துள்ளார். ‘அவென்யூ அழகுபெறட்டுமே என்று பூச்செடிகள் வளர்க்க... அதில் தப்பி வளர்ந்தது முருங்கை ஒன்று! அதை வெட்டவேண்டும் என சொன்னபோது பூச்சொரிந்து நின்றது. முருங்கைப்பூ பால்கூட்டும் முளைத்த பிஞ்சுக்குழம்பும் ருசியோ ருசி! பிரசவித்த அக்காவுக்கு மருந்தாகக் கொடுக்கையில் நானும் ருசித்து ரசித்தேன்!' சிலாகித்து எழுதும் அளவுக்கு முருங்கைப்பூவில் அத்தனை சத்துகள் நிறைந்திருக்கின்றன. முருங்கையின் பலன் பற்றி சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் பலன் பற்றி அறிந்ததாலேயே சித்தர்கள் முருங்கையை 'பிரம்ம விருட்சம்' என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை எங்கு பார்த்தாலும் பரவிக் காணப்படுகிறது முருங்கை! வீடுகள் மற்றும் தோட்டங்களில் முருங்கை மரங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால் நம்மில் எத்தனைபேர் முருங்கைப்பூவை சமைத்துச் சாப்பிட்டிருப்போம்..? காரணம் அந்தப் பூக்களின் மருத்துவ குணம் பற்றி தெரியாதது மட்டுமல்ல... முருங்கைப்பூவை விட முருங்கைக்காயையே நாம் அதிகம் சமையலுக்குப் பயன்படுத்திப் பழகியிருக்கிறோம். முருங்கைப்பூக்களின் பயன் அறிந்து இனிமேலாவது அவற்றைச் சமைத்து ருசிப்போமா? முருங்கைப் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி கடலூரைச் சேர்ந்த இயற்கை வைத்தியர் அன்னமேரி பாட்டி, “இன்றைக்கு பல்வேறு காரணங்களால் குழந்தையின்மைக் குறைபாடு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அந்தப் பிரச்னைக்கு மிகச் சிறந்த தீர்வாக அமைந்திருக்கிறது இந்த முருங்கைப்பூ. இதை `இயற்கையின் வயாகரா' என்று சொல்வார்கள். இன்றைய அவசர யுகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு பகலாக ஓய்வின்றி உழைப்பது, கம்ப்யூட்டரே கதி என்று மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பது போன்றவற்றால் மனஅழுத்தம், மன உளைச்சல் ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. . அதிக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக நரம்புகள் செயலிழந்து நரம்புத்தளர்ச்சி ஏற்படும். அந்த நேரங்களில் முருங்கைப்பூவை கஷாயம் வைத்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத்தளர்ச்சி சரியாகும். மேலும், பலருக்கு தாம்பத்ய உறவில் நாட்டம் இருப்பதில்லை. இதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து குடித்து வந்தால் தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும். முருங்கைப்பூவை காய வைத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து அதே ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும். முருங்கைப்பூக்களுடன் பால், பாதாம் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு விந்து முந்துதல் பிரச்னை குறையும். முருங்கைப்பூக்களை உணவாகவோ மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் தாம்பத்யம் சிறக்கும். அரைக்கீரையுடன் அரைப் பங்கு முருங்கைப்பூ சேர்த்துக் கடைந்து சோற்றுடன் சாப்பிட்டு வரலாம். முருங்கைப்பூவை துவையல் செய்தும் சாப்பிடலாம். இப்படி ஏதோ ஒரு வகையில் முருங்கைப்பூக்களை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். இதை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் சூடு தணியும். பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, மேக நோய்கள் போன்றவற்றையும் குணப்படுத்தும். மேலும், மாதவிலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, வயிற்றுவலி எனப் பல்வேறுவிதமான மனம், உடல் அவதிகளுக்கு ஆளாவார்கள். அப்போது முருங்கைப் பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் மனம் அமைதி பெறும். உடல் கோளாறுகளும் நீங்கும். பள்ளி, கல்லூரி பயிலும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் இருந்தால்தான் அவர்கள் நல்லமுறையில் தேர்ச்சி பெறமுடியும். ஆகவே குழந்தைகளுக்கு நினைவாற்றல் பெருகவும் முதியோருக்கு வரக்கூடிய மறதி நோயைத் தடுக்கவும், வந்த நோயை விரட்டவும் இது நல்ல மருந்தாகிறது. கைப்பிடி அளவு முருங்கைப்பூவை அரைத்து அல்லது பாலில் கலந்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை எனக் குடித்து வந்தால் பலன் கிடைக்கும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் நாம் எல்லோருமே கண்களுக்கு அதிக வேலை கொடுக்கிறோம். கம்ப்யூட்டரில் பணியாற்றுபவர்களுக்கு 40 வயதுக்குமேல் ஆகிவிட்டால் கண்ணாடி அணியாமல் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களால் பேப்பர்கூட படிக்க முடியாது. வீடுகளில் இருப்பவர்கள் தொலைக்காட்சியே கதி என்று இருப்பதால் அவர்களுக்கும் விரைவில் கண்கள் வறண்டுபோதல், கண்ணிமைகளைச் சிமிட்டும் தன்மை குறைந்துபோவது, கண்களின்முன் மின்மினிப்பூச்சிகள் பறப்பது போன்ற தோற்றம் ஏற்படுதல், தலைவலி, பார்வை மங்கல் எனக் கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன. அத்தகைய சூழலில் முருங்கைப்பூவை நிழலில் உலர்த்தி பொடித்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பார்வைத்திறன் அதிகரிப்பதோடு கண்ணில் ஏற்படும் வெண்படலம் மாறி கண் கோளாறுகள் சரியாகும். பூக்களுடன் பசும்பால் சேர்த்துக் காய்ச்சி அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து பிரச்னைகள் நீங்கும். முருங்கைப்பூ பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முருங்கைப்பூ பால் அருந்தி வந்தால் உடல்நலக் கோளாறுகள் நீங்கும். இரண்டு கைப்பிடி முருங்கைப்பூவை 100 மி.லி பாலில் கொட்டி நன்றாக வெந்ததும் மசித்து, மூன்று ஏலக்காய், நான்கு பாதாம்பருப்பு பொடித்துப்போட்டு மேலும் 200 மி.லி பாலைச் சேர்த்து பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். முதலில் பச்சை வாசனை வீசும், குடித்துப் பழகினால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். முருங்கைப்பூ சூப் வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத்தாளிக்க வேண்டும். அத்துடன் ஒன்றாகச் சேர்த்து அரைத்த தனியா, சீரகம், மிளகு மற்றும் சுக்கு, பூண்டு,வெங்காய கலவைகளைப் போட்டு லேசாக வதக்க வேண்டும். பிறகு அதில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கலக்கி பச்சை வாசனை போகுமளவு கொதிக்க விட வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய முருங்கைப்பூக்களைச் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். பூ நன்றாக வெந்ததும் இறக்கினால் சூடான சுவையான முருங்கைப்பூ சூப் தயார். விரும்பினால் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம். அடிக்கடி இதைச் செய்து குடித்து வந்தால் சளித்தொல்லைகள் நெருங்காது. முருங்கைப்பூ சாதம் பாசுமதி அரிசியை உதிரியாக வடித்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிது நெய் சேர்த்து உதிர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கிடையே இட்லித்தட்டில் முருங்கைப்பூக்களை வைத்து அரை வேக்காடாக வேக வைக்கவும். அதன்பிறகு சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் வெட்டிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சாதம், முருங்கைப்பூ சேர்த்துக் கலக்க வேண்டும். அத்துடன் சிறிது சிறிதாக நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்தால் சுவையான முருங்கைப்பூ சாதம் தயார். இது சத்தானது மட்டுமல்ல சுவையானதும்கூட! முட்டைப் பொரியல் வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய சீரகம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். அதைத்தொடர்ந்து நறுக்கிய பச்சை மிளகாய், கிள்ளிய கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும் காம்பு நீக்கி தண்ணீரில் அலசிய முருங்கைப்பூக்களைப் போட்டுக் கிளற வேண்டும். நன்கு வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து மூடி வைக்க வேண்டும். வெந்ததும் கிளறிவிட்டு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக் கிளறினால் முருங்கைப்பூ முட்டைப் பொரியல் தயார். சாப்பிடச் சுவையாக இருக்கும். ஆண்மை அதிகரிக்கும் முருங்கைக் கீரை, முருங்கைப்பூ இரண்டையும் சம அளவு எடுத்து நறுக்கி, எண்ணெயிட்டு வதக்கி வறுத்த வேர்க்கடலையைப் பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்மைத் தன்மை அதிகரிக்கும். தாம்பத்யம் சிறக்கும். இதை வேக வைத்துக் கடைந்து குழம்பாகவும் செய்து சாப்பிடலாம்.” என்றார். இது மட்டுமல்ல... முருங்கைப்பூவின் மகிமையைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்" - நரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும்! இயற்கை ‘வயாகரா’ முருங்கைப்பூ

நரம்புத்தளர்ச்சி நீக்கும் தாம்பத்தியம் பலப்படுத்தும் இயற்கை. வயாகாரா

"நரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும்! இயற்கை ‘வயாகரா’ முருங்கைப்பூ முருங்கைப்பூ பால், முருங்கைப்பூ சூப், முருங்கைப்பூ சாதம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முருங்கை என்றதும் அதன் காய்களும் கீரைகளும் மட்டுமே நமக்குத் தெரியும். அதில் மருத்துவக் குணங்கள் இருப்பதாகச் சொல்லக்கேட்டு விதம்விதமாய் சமைத்து உண்டு ருசித்து ரசித்திருப்போம். ஆனால், முருங்கைப்பூவில் இருக்கும் சத்துகள் மட்டுமல்ல, அதில் இருக்கும் ரகசியங்கள் நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று! அதன் மகிமை அறிந்த ஒருவர் கவிதையாக வடித்துள்ளார். ‘அவென்யூ அழகுபெறட்டுமே என்று பூச்செடிகள் வளர்க்க... அதில் தப்பி வளர்ந்தது முருங்கை ஒன்று! அதை வெட்டவேண்டும் என சொன்னபோது பூச்சொரிந்து நின்றது. முருங்கைப்பூ பால்கூட்டும் முளைத்த பிஞ்சுக்குழம்பும் ருசியோ ருசி! பிரசவித்த அக்காவுக்கு மருந்தாகக் கொடுக்கையில் நானும் ருசித்து ரசித்தேன்!' சிலாகித்து எழுதும் அளவுக்கு முருங்கைப்பூவில் அத்தனை சத்துகள் நிறைந்திருக்கின்றன. முருங்கையின் பலன் பற்றி சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் பலன் பற்றி அறிந்ததாலேயே சித்தர்கள் முருங்கையை 'பிரம்ம விருட்சம்' என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை எங்கு பார்த்தாலும் பரவிக் காணப்படுகிறது முருங்கை! வீடுகள் மற்றும் தோட்டங்களில் முருங்கை மரங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால் நம்மில் எத்தனைபேர் முருங்கைப்பூவை சமைத்துச் சாப்பிட்டிருப்போம்..? காரணம் அந்தப் பூக்களின் மருத்துவ குணம் பற்றி தெரியாதது மட்டுமல்ல... முருங்கைப்பூவை விட முருங்கைக்காயையே நாம் அதிகம் சமையலுக்குப் பயன்படுத்திப் பழகியிருக்கிறோம். முருங்கைப்பூக்களின் பயன் அறிந்து இனிமேலாவது அவற்றைச் சமைத்து ருசிப்போமா? முருங்கைப் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி கடலூரைச் சேர்ந்த இயற்கை வைத்தியர் அன்னமேரி பாட்டி, “இன்றைக்கு பல்வேறு காரணங்களால் குழந்தையின்மைக் குறைபாடு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அந்தப் பிரச்னைக்கு மிகச் சிறந்த தீர்வாக அமைந்திருக்கிறது இந்த முருங்கைப்பூ. இதை `இயற்கையின் வயாகரா' என்று சொல்வார்கள். இன்றைய அவசர யுகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு பகலாக ஓய்வின்றி உழைப்பது, கம்ப்யூட்டரே கதி என்று மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பது போன்றவற்றால் மனஅழுத்தம், மன உளைச்சல் ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. . அதிக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக நரம்புகள் செயலிழந்து நரம்புத்தளர்ச்சி ஏற்படும். அந்த நேரங்களில் முருங்கைப்பூவை கஷாயம் வைத்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத்தளர்ச்சி சரியாகும். மேலும், பலருக்கு தாம்பத்ய உறவில் நாட்டம் இருப்பதில்லை. இதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து குடித்து வந்தால் தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும். முருங்கைப்பூவை காய வைத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து அதே ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும். முருங்கைப்பூக்களுடன் பால், பாதாம் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு விந்து முந்துதல் பிரச்னை குறையும். முருங்கைப்பூக்களை உணவாகவோ மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் தாம்பத்யம் சிறக்கும். அரைக்கீரையுடன் அரைப் பங்கு முருங்கைப்பூ சேர்த்துக் கடைந்து சோற்றுடன் சாப்பிட்டு வரலாம். முருங்கைப்பூவை துவையல் செய்தும் சாப்பிடலாம். இப்படி ஏதோ ஒரு வகையில் முருங்கைப்பூக்களை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். இதை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் சூடு தணியும். பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, மேக நோய்கள் போன்றவற்றையும் குணப்படுத்தும். மேலும், மாதவிலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, வயிற்றுவலி எனப் பல்வேறுவிதமான மனம், உடல் அவதிகளுக்கு ஆளாவார்கள். அப்போது முருங்கைப் பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் மனம் அமைதி பெறும். உடல் கோளாறுகளும் நீங்கும். பள்ளி, கல்லூரி பயிலும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் இருந்தால்தான் அவர்கள் நல்லமுறையில் தேர்ச்சி பெறமுடியும். ஆகவே குழந்தைகளுக்கு நினைவாற்றல் பெருகவும் முதியோருக்கு வரக்கூடிய மறதி நோயைத் தடுக்கவும், வந்த நோயை விரட்டவும் இது நல்ல மருந்தாகிறது. கைப்பிடி அளவு முருங்கைப்பூவை அரைத்து அல்லது பாலில் கலந்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை எனக் குடித்து வந்தால் பலன் கிடைக்கும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் நாம் எல்லோருமே கண்களுக்கு அதிக வேலை கொடுக்கிறோம். கம்ப்யூட்டரில் பணியாற்றுபவர்களுக்கு 40 வயதுக்குமேல் ஆகிவிட்டால் கண்ணாடி அணியாமல் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களால் பேப்பர்கூட படிக்க முடியாது. வீடுகளில் இருப்பவர்கள் தொலைக்காட்சியே கதி என்று இருப்பதால் அவர்களுக்கும் விரைவில் கண்கள் வறண்டுபோதல், கண்ணிமைகளைச் சிமிட்டும் தன்மை குறைந்துபோவது, கண்களின்முன் மின்மினிப்பூச்சிகள் பறப்பது போன்ற தோற்றம் ஏற்படுதல், தலைவலி, பார்வை மங்கல் எனக் கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன. அத்தகைய சூழலில் முருங்கைப்பூவை நிழலில் உலர்த்தி பொடித்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பார்வைத்திறன் அதிகரிப்பதோடு கண்ணில் ஏற்படும் வெண்படலம் மாறி கண் கோளாறுகள் சரியாகும். பூக்களுடன் பசும்பால் சேர்த்துக் காய்ச்சி அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து பிரச்னைகள் நீங்கும். முருங்கைப்பூ பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முருங்கைப்பூ பால் அருந்தி வந்தால் உடல்நலக் கோளாறுகள் நீங்கும். இரண்டு கைப்பிடி முருங்கைப்பூவை 100 மி.லி பாலில் கொட்டி நன்றாக வெந்ததும் மசித்து, மூன்று ஏலக்காய், நான்கு பாதாம்பருப்பு பொடித்துப்போட்டு மேலும் 200 மி.லி பாலைச் சேர்த்து பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். முதலில் பச்சை வாசனை வீசும், குடித்துப் பழகினால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். முருங்கைப்பூ சூப் வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத்தாளிக்க வேண்டும். அத்துடன் ஒன்றாகச் சேர்த்து அரைத்த தனியா, சீரகம், மிளகு மற்றும் சுக்கு, பூண்டு,வெங்காய கலவைகளைப் போட்டு லேசாக வதக்க வேண்டும். பிறகு அதில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கலக்கி பச்சை வாசனை போகுமளவு கொதிக்க விட வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய முருங்கைப்பூக்களைச் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். பூ நன்றாக வெந்ததும் இறக்கினால் சூடான சுவையான முருங்கைப்பூ சூப் தயார். விரும்பினால் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம். அடிக்கடி இதைச் செய்து குடித்து வந்தால் சளித்தொல்லைகள் நெருங்காது. முருங்கைப்பூ சாதம் பாசுமதி அரிசியை உதிரியாக வடித்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிது நெய் சேர்த்து உதிர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கிடையே இட்லித்தட்டில் முருங்கைப்பூக்களை வைத்து அரை வேக்காடாக வேக வைக்கவும். அதன்பிறகு சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் வெட்டிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சாதம், முருங்கைப்பூ சேர்த்துக் கலக்க வேண்டும். அத்துடன் சிறிது சிறிதாக நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்தால் சுவையான முருங்கைப்பூ சாதம் தயார். இது சத்தானது மட்டுமல்ல சுவையானதும்கூட! முட்டைப் பொரியல் வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய சீரகம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். அதைத்தொடர்ந்து நறுக்கிய பச்சை மிளகாய், கிள்ளிய கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும் காம்பு நீக்கி தண்ணீரில் அலசிய முருங்கைப்பூக்களைப் போட்டுக் கிளற வேண்டும். நன்கு வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து மூடி வைக்க வேண்டும். வெந்ததும் கிளறிவிட்டு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக் கிளறினால் முருங்கைப்பூ முட்டைப் பொரியல் தயார். சாப்பிடச் சுவையாக இருக்கும். ஆண்மை அதிகரிக்கும் முருங்கைக் கீரை, முருங்கைப்பூ இரண்டையும் சம அளவு எடுத்து நறுக்கி, எண்ணெயிட்டு வதக்கி வறுத்த வேர்க்கடலையைப் பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்மைத் தன்மை அதிகரிக்கும். தாம்பத்யம் சிறக்கும். இதை வேக வைத்துக் கடைந்து குழம்பாகவும் செய்து சாப்பிடலாம்.” என்றார். இது மட்டுமல்ல... முருங்கைப்பூவின் மகிமையைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்" - நரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும்! இயற்கை ‘வயாகரா’ முருங்கைப்பூ

வியாழன், 3 ஆகஸ்ட், 2017


ஆடிப்பெருக்கு தினமான இன்று விரதருந்து வீட்டில் பூஜை செய்வது எப்படி?


இன்று ஆடி பெருக்கு தினத்தன்று மறக்காமல் விரதமிருந்து வீட்டிலும் பூஜை செய்யப்பட வேண்டும். அந்த பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

இன்று ஆடி பெருக்கு தினத்தன்று மறக்காமல் விரதமிருந்து வீட்டிலும் பூஜை செய்யப்பட வேண்டும். வீட்டில் நாம் செய்யும் பூஜை செல்வத்தையும் அமைதியையும் பன்மடங்கு பெருக அருள்புரியும். பெரிய பொருட் செலவில் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்பதில்லை. பூஜையை வீட்டில் எளிய முறையில் செய்யலாம்.

அந்த பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்ற விபரம் வருமாறு:-

நிறைகுடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சேர்க்க வேண்டும். இந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைத்து, சர்க்கரை பொங்கல் படைக்க வேண்டும். பூக்கள் தூவி அம்மனுக்குரிய போற்றி அர்ச்சனை சொல்ல வேண்டும்.
பிறகு தீபாராதனை செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய நதிகளை மனதார நினைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்த பிறகு தீர்த்தத்தை மரம், செடிகள் உள்ள இடத்தில் ஊற்ற வேண்டும்.

பூஜை செய்வது எப்படி?

ஆடிப்பெருக்கு அன்று காவிரி கரையோரங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு, பல்வேறு விதமான வழிபாடுகள் செய்கிறார்கள். சுமங்கலி பூஜையும் நடக்கிறது.
வாழை இலையை விரித்து அதில் விளக்கேற்றி, பூஜைக்குரிய பொருட்களை வைத்து, புது மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், சட்டைத் துணி போன்ற மங்கலப் பொருட்களையும் வைத்து காவிரி அன்னையை பெண்கள் வழிபடுவார்கள்.

வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண் ஒருவர் சுமங்கலிப் பூஜை நடத்துவார். அதன்பிறகு, அந்த பெண், தனது வீட்டு சுமங்கலிப் பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.

திருமணம் ஆகாத பெண்களும் தாலி சரடு போன்ற மஞ்சள் கயிற்றை அப்போது காவிரி அன்னையை வணங்கி கட்டிக் கொள்வார்கள். அப்படிச் செய்வதால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. பார்வதி தேவி தன் திருமணத்துக்கு முன்பு அகத்தியரிடம் கொடுத்த பெண்தான் காணியாக ஓடுவதால், அவளை வழிபட்டால் தங்களுக்கு திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையும் ஐதீகமும் ஏற்பட்டது" -