Like us on Facebook

புதன், 8 நவம்பர், 2017

துளசி, ஓமவல்லி, கொள்ளு... மழைக்கால நோய்களுக்கு மருந்தாகும் ரசங்கள்

“ரசம்... நமக்கு ஓர் இணை உணவு. வழக்கமாக நம்மில் பலருக்குத் தெரிந்தது புளி ரசமும் மிளகு ரசமும் மட்டுமே. ஆனால், மழைக்காலங்களில் ஏற்படும் சளி, ஜலதோஷம், தலைவலி, மூக்கடைப்பு, வயிற்றுப்பொருமல், வயிறு உப்புசம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது ரசம். துளசி, தூதுவளை, ஓமவல்லி, கண்டதிப்பிலி, வெற்றிலை, கொள்ளு போன்ற ரசங்கள் உடல்நலனுக்குப் பல நன்மைகளை அளிக்கக்கூடியவை’’ என்கிற இயற்கை மருத்துவர் ஜீவா சேகர், எந்த ரசத்தில் என்னென்ன மருத்துவப் பலன்கள் இருக்கின்றன என்பது குறித்து விவரிக்கிறார் இங்கே...


மிளகு ரசம்
தமிழர்களின் அன்றாடச் சமையலில் நிச்சயம் மிளகுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. மிளகு, செரிமானக் கோளாறுகளைப் போக்க உதவும். ஜலதோஷம், தும்மல், சளித்தொல்லைகளிலிருந்து நிவாரணம் தரும். உடல்வலியைத் தீர்க்கும். உணவு செரிமானம் ஆகாமல் இருந்தால் அல்லது மலச்சிக்கலால் வயிற்றுவலி ஏற்பட்டால் அவற்றை மிளகு குறைக்கும். மிளகில் ரசம் வைத்துச் சாப்பிடுவது எளிது. அதோடு இந்த மழைக்காலத்துக்கு இதம் தரும். சரி... மிளகு ரசத்தை எப்படிச் செய்வது?
தேவையானவை:மிளகு - அரை டீஸ்பூன், வெள்ளைப்பூண்டு - 3 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தக்காளி - சிறியது, புளி - நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நெய் அல்லது எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: முதலில் மிளகு, சீரகம், தனியாவை தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக்கொள்ளவும். பூண்டை நசுக்கி வைத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாயை இரண்டாகக் கிள்ளிக்கொள்ளவும். புளியைத் தண்ணீர்விட்டு நன்றாகக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பெருங்காயத்தூள், அரைத்த மிளகுக் கலவையைச் சேர்த்து வதக்கி, கரைத்துவைத்திருக்கும் புளித்தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்க்கவும். ரசம் நுரைத்து வரும்போது கொத்தமல்லித்தழை போட்டு இறக்கினால் மிளகு ரசம் தயார்.


தூதுவளை ரசம்
தூதுவளை இருமல், மூக்கில் நீர் வடிதல், சளி, இளைப்பு, ஆஸ்துமா போன்றவற்றைச் சரிசெய்யும். பெருவயிறு, மந்தம் போன்றவற்றைப் போக்கி நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும். இதை துவையல், ரசம், சூப்... எனச் செய்து சாப்பிடலாம்.
தேவையானவை: தூதுவளை இலை - இரண்டு கைப்பிடி, ரசப்பொடி - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, புளி -எலுமிச்சை அளவு, துவரம் பருப்பு - இரண்டு டீஸ்பூன், மிளகு - சீரகத் தூள் - அரை டீஸ்பூன், தக்காளி - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தூதுவளைக் கீரையைச் சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். துவரம் பருப்பை நன்றாக வேகவைத்து சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். ஊறவைத்து நன்றாகக் கரைத்த புளித்தண்ணீருடன் உப்பு, மஞ்சள் தூள், ரசப்பொடி சேர்த்து வாணலியில் ஊற்றிக் கொதிக்கவிடவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, பச்சை வாசனை போனதும் பருப்புத் தண்ணீரைச் சேர்க்கவும். இவற்றுடன் வடிகட்டி வைத்த தூதுவளைச் சாறு, மிளகு, சீரகப் பொடி சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். நுரைத்து வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். பிறகு வேறொரு வாணலியில் நெய் அல்லது எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்துக் கொட்டினால் மழைக்காலத்தில் இதமளிக்கும் தூதுவளை ரசம் தயார்.

ஓமவல்லி ரசம்
கற்பூரவல்லி அல்லது ஓமவல்லி... இது இருமல், சளி, ஜலதோஷம், நெஞ்சுச்சளி, தொண்டைப்புண், காய்ச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மைகொண்டது. இதைப் பொதுவாகவே வெறுமனே மென்று, தின்று வெந்நீர் குடிப்பது அல்லது சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிடுவது வழக்கம். இன்னும் சிலர் மாலை நேரங்களில் கடலைமாவில் தோய்த்து பஜ்ஜி செய்து சாப்பிடுவார்கள். ஆனால், ஓமவல்லியில் ரசம் செய்து சாப்பிட்டால் மழைக்கால நோய்களுக்கு நிவாரணம் தரும்.
தேவையானவை: ஓமவல்லி இலைகள் - ஒரு கைப்பிடி, புளி - எலுமிச்சை அளவு, பூண்டுப் பற்கள் - மூன்று, தக்காளி - இரண்டு, பச்சை மிளகாய் - இரண்டு, காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன்,பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், தனியா, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இந்த ரசத்தை வழக்கமான மற்ற ரசம்போலவே செய்யலாம். ஆனால் பச்சை மிளகாயுடன் ஓமவல்லி, பூண்டு சேர்த்து அரைத்து ஊற்றி இறக்கினால் தொண்டைக்கு இதம் தரும் ஓமவல்லி ரசம்.
துளசி ரசம்
துளசி... இது சளி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடலில் உள்ள நச்சுத்தன்மை உள்ளிட்டவற்றை சரிசெய்யும். துளசியை வெறுமனே மென்று சாப்பிடுவது, சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிடுவது என இருந்தாலும் இந்த மழைக்கு ரசமாக்கிச் சாப்பிடுவது பலன் தரும்.
தேவையானவை: துளசி இலைகள் - ஒரு கப், மிளகு - இரண்டு டீஸ்பூன், சீரகம், துவரம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, பெருங்காயத்தூள், கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை: முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம் பருப்பை சிறிது நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். துளசியைத் தனியாக அரைத்துக்கொள்ளவும். நன்றாக ஊறவைத்த புளியைக் கரைத்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு அரைத்த மிளகு, சீரகம் உள்ளிட்ட கலவையைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் அரைத்த துளசியைச் சேர்த்து நுரை வந்ததும் இறக்கவும். எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்துச் சேர்த்தால் கமகமக்கும் துளசி ரசம் தயார்.
கொள்ளு ரசம்
கொள்ளுப் பயறு... ஜலதோஷம், இருமல், உடல்வலி மற்றும் சோர்வை நீக்கும். கொள்ளுத் துவையல் சாப்பிடச் சுவையாக இருக்கும். அதில் ரசம் செய்து அருந்துவது மழைக்காலத்துக்கு ஏற்றது. `நீரேற்றமோடு குளிர் சுரம் போம்' என்று கொள்ளின் பயனை அகத்தியர் பாடல் எடுத்துரைக்கிறது, ஆனால் `கொள்ளு ரசம் குடிச்சா ஜலதோஷமெல்லாம் ஜகா வாங்கிடும்' என்று புதிய பழமொழி ஒன்று சொல்லப்படுகிறது. கொள்ளு ரசம் நெஞ்செரிச்சல், வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம் போன்றவற்றுக்கும் நல்ல மருந்து.
தேவையானவை: கொள்ளு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3, தனியா - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - எட்டு, பூண்டுப்பல் - மூன்று, கறிவேப்பிலை, எண்ணெய், கடுகு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொள்ளுப் பயறை குக்கரில் வைத்து மூன்று கப் தண்ணீர்விட்டு, நான்கு விசில் வரும்வரை வேகவைக்கவும். பிறகு வெந்த கொள்ளுப் பயறுடன் காய்ந்த மிளகாய், தனியா, சீரகம் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். தேவையானால் வேகவைத்த தண்ணீருடன் அரைத்த பொருள்களைச் சேர்த்து மஞ்சள்தூள் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, கொதி வந்த கலவையுடன் சேர்த்தால் கொள்ளு ரசம் தயார்.
இதேபோல் பூண்டு, வெற்றிலை, கண்டதிப்பிலி போன்றவற்றிலும் ரசம் செய்து சாப்பிடலாம். இவை மழைக்காலத்துக்கு ஏற்ற இதம் தரும் பானங்கள்!


SanDisk ultra SD card 40% offer

link:http://amzn.to/2m9aIWR

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சர்க்கரை அளவை குறைக்கும் வெந்தயம்

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க கூடியதும், தோல்நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மலச்சிக்கலை போக்க கூடியதுமான வெந்தயத்தின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.உணவுக்கு பயன்படும் வெந்தயத்தில் இரும்பு சத்து, புரதச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின்கள், மினரலை கொண்டுள்ள வெந்தயம் சர்க்கரை நோய்க்கு அற்புதமான மருந்தாகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் வெந்தயத்தை சாப்பிட்டுவர சத்துக்குறைபாடு ஈடுசெய்யப்படும். மலச்சிக்கலை சரிசெய்கிறது.
பல்வேறு நன்மைகளை கொண்ட வெந்தயம், புற்றுநோய் உண்டாக காரணமான நச்சுக்களை வெளியேற்றும். உடலுக்கு ஊட்டச்சத்து கொடுப்பதுடன் உணவுக்கு மணத்தை தருகிறது.வெந்தயத்தை பயன்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், கறிவேப்பிலை, திப்லி, மஞ்சள்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதில், ஒரு ஸ்பூன் வெந்தயப் பொடி, கறிவேப்பிலை, திப்லி பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இது, செரிமானத்தை தூண்டுகிறது. நார்ச்சத்து அதிகமுள்ள வெந்தயம், நச்சுக்களை வெளியேற்றுகிறது.
வெந்தயத்தை பயன்படுத்தி மலச்சிக்கலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், தேன்.செய்முறை: ஒரு ஸ்பூன் அளவுக்கு வெந்தயத்தை எடுக்கவும். இதை அரைமணி நேரம் ஊறவைத்து வேக வைக்கவும். பின்னர், இதனுடன் தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டுவர மலச்சிக்கல் சரியாகும். குடல் புண்கள் ஆறும்.வெந்தயத்தை பயன்படுத்தி தலையில் உள்ள பொடுகை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், பால், தேங்காய் எண்ணெய். செய்முறை: வெந்தய பொடியுடன் சிறிது பால் சேர்த்து கலக்கவும். இதனுடன், தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடு பண்ணி சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதை தலையில் தேய்த்து சுமார் 10 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யவும். இதனால், தலையில் உள்ள பொடுகுகள் விலகும். தலைமுடி கொட்டுவது நின்று முடி வளரும். தலை முடிக்கு பலம் தருகிறது. தோல்நோய்கள் குணமாகும். பல்வேறு நன்மைகள், மருத்துவ குணங்களை கொண்ட வெந்தயத்தை பயன்படுத்துவதன் மூலம் உடல் நலம் பெறலாம்.பாத வெடிப்பை சரிசெய்வது குறித்த எளிய மருத்துவத்தை பார்க்கலாம். பாத வெடிப்பால் வலி, வேதனை ஏற்படும். வெடிப்பில் இருந்து ரத்தம் கூடவெளியேறும். இப்பிரச்னைக்கு சோற்றுக் கற்றாழை அற்புதமான மருந்தாகி பயன்தருகிறது. சோற்றுக் கற்றாழை சாறை தினமும் ஓரிரு வேளை தடவிவர சில நாட்களில் பாத வெடிப்பு மறையும். கால்கள் நல்ல வழுவழுப்பு தன்மை பெறும். அழகு பெறும்.

வெண்டைக்காயை இந்த முறையில் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்

மூன்று முதல் ஐந்து வரை எண்ணிக்கையிலான பசுமையான ‘வெண்டைக்காய்களைத் தேர்ந்து எடுத்து அவற்றை நன்றாக நீரிட்டுக் கழுவி எடுத்துக் கொண்டு அதன் மெல்லிய முனைப் பகுதியில் சிறிதளவும், அதன் அடிப்பகுதியில் சிறிதளம் துண்டித்துவிட்டு வெண்டைக்காய் ஒவ்வொன்றையும் நீளவாக்கில் இரு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு 500 மி.லிட்டர் நீர் விட்டு அடுப்பேற்றி சிறு தீயில் கொதிக்கவிட்டு 3-ல் 2 பங்கு நீர் வற்றியதும் இறக்கி வைத்து ஒரு பாத்திரத்தில் மூடி இரவு முழுவதும் விட்டுவிடவும். காலையில் எழுந்ததும் அந்த காய்களைத் தின்று விட்டு நீரையும் குடித்து விடவும்.
இது ஒரு சிரமமான செயல்தான் என்றாலும் மூட்டு தேய்வு, மூட்டு வலி, வீக்கம் ஆகியவற்றினின்று விடுதலை கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகள் தினம் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை மேற்சொன்ன வகையில் சுத்திகரித்து குறுக்கே துண்டித்து ஒரு தம்ளர் நீரில் விட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் எழுந்து வெறும் வயிற்றில் நீரை மட்டும் தெரிவிறுத்திக் குடித்து விடவும். இப்படி அன்றாடம் குடித்து வரும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நாளடைவில் குறைந்து விடும்.
இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு என்ற துன்பத்துக்கு ஆளானவர்கள் வெண்டைக் காயை மேற்சொன்ன வகையில் உண்டுவர ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை (சீரம் கொலஸ்ட்ரால்) குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்துக்கு துணை நிற்கிறது

இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு துளசி தான் சிறந்த மருந்து


துளசியை நிழலில் உலர்த்திப் பின் பொடித்து எடுத்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி துளசிப் பொடியை 1தம்ளர் நீரில் இட்டுக் காய்ச்சிக் குடிப்பதால் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுபடுத்தப்படும் ஒரு நாளைக்கு மூன்று வேளை இப்படித் துளசித் தீநீர் சாப்பிட சர்க்கரை அளவு நாளடைவில் குறைந்துவிடும்.
குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி துளசிசாறும் பெரியவர்களுக்கு இரண்டு தேக்கரண்டி அளவும் தினம் இருவேளைப் பருகச் செய்வதால் இருமல், ஆரம்ப நிலை நுரையீரல் தொற்று நோய்கள், மூச்சு விடுவதில் சிரமம், மனஉளைச்சல் காரணமாகத் தோலில் ஏற்படும் நோய்கள், செரிமானமின்மை ஆகிய நோய்கள் போகும்.
1 ஸ்பூன் துளசிச் சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு, 5மிளகு ஆகிய மூன்றையும் ஒரு சேரக் கலந்து உள்ளுக்குக் குடிப்பதால் நுரையீரல் பாதிப்பால் ஏற்படும் ஆஸ்த்துமா குணமாகும். இருமல்,குத்திருமல், வறட்டு இருமல் என வந்தபோதும் துளசிச்சாறோடு தேன் கலந்து குடிப்பதால் இருமல் விரைவில் தணிந்து சுவாசப் பாதை குணம் பெறும்.
துளசி சாறை தோலின் மீது ஏற்படும் வேர்க்குரு போன்ற துன்பங்களுக்கும், பல்வேறு தோல் நோய்களுக்கும் குறிப்பாகத் தேமல் போன்றவற்றுக்கும் மேல்பூச்சு மருந்தாக பூசி வர தோல் நோயகள் தொலைந்து போகும். துளசி சாற்றினை ஓரிரு துளிகள் காதுகளில் விடுவதால் காது நோய் குணமாகும்.
புட்டாலம்மை எனப்படும் பொன்னுக்கு வீங்கி என்னும் நோய் வந்து துன்புறுகையில் காதுகள் இரண்டிலும் துளசிச் சாறு சில துளிகள் விடுவதோடு உள்ளுக்கும் ஓரிரு தேக்கரண்டி பருகச் செய்து வீக்கத்தின் மேல் துளசி சாறும் மஞ்சளும் கலந்து பூசி வருவதால் மேற்சொன்ன நோய் விரைவில் குணமாகும்.
50.மி.லி துளசிச் சாற்றுடன் 5மி.லி தேன் கலந்து அன்றாடம் ஒரு வேளை என 3 மாதங்கள் பருகி வர சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறிவிடும். சிறுநீர்பாதையும் சீர்படும். துளசி இலைச்சாறும் நீரும் கலந்து மணி நேரத்துக்கு 1முறை பருகுவதால் கடுங்காய்ச்சலும் காணாது போகும்.
துளசி இலை, பூக்கள், வேர் ஆகிய அனைத்துமான மூலச்சாறு தேள் மற்றும் பாம்புக் கடி விஷத்தைப் போக்கக் கடிய அருமருந்தாகும். துளசி இதுபோன்ற பல்வேறு இன்ன பிற நோய்களையும் போக்க வல்லது. என்பதால் இன்றே ஒவ்வொரு வீட்டிலும் துளசியை வளர்த்துத் துன்பம் தவிர்க்க வேண்டும்.

வியாழன், 2 நவம்பர், 2017

இன்று மதியம் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம்


திருவண்ணாமலை: இன்று மதியம் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி நாளை மதியம், 12:30 மணிக்கு துவங்கி, நாளை மறுநாள், காலை 11:04 மணி வரை உள்ளது. இது, பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அனைத்தும் அளிக்கும் அன்னாபிஷேகம்


தட்சனுக்கு
ஐம்பது பெண்குழந்தைகள். அவர்களில் அசுபதி தொடங்கி ரேவதி வரையிலான இருபத்தேழு பெண்களை சந்திரனுக்குத் திருமணம் செய்து தந்தான். திருமணத்தின் போதே சந்திரா! இருபத்தேழு பெண்களையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். இல்லையேல் நடப்பதே வேறு... என எச்சரித்து அனுப்பினான் ஆயினும் காலச் சூழலில் சந்திரன் கார்த்திகை, ரோகிணி ஆகிய இருவரிடத்தும் மட்டும் மிகவும் பிரியமாக நடந்துகொண்டான். அதிலும் ரோகியிடம் மட்டும் அதிக நேசம் காட்டினான். அதனாலேயே தமிழில் திங்களும், ரோகிணியும் சேர்ந்திருந்தாற் போல பழமொழி கூட நிலவுகின்றது.
மற்ற பெண்கள் எல்லோரும் சேர்ந்து தந்தையான தட்சனிடம் முறையிட்டார். தட்சன் வெகுண்டு சந்திரனை அழைத்துக் காரணம் கேட்டான். சந்திரன் செய்தறியாது திகைக்கவே இன்றிலிருந்து உனது கலைகள் ஒவ்வொன்றாகத் தேயக்கடவது என்று சாபமிட்டான். சந்திரனின் கலைகள் ஒவ்வொன்றாகத் தேயத் தொடங்கின. சந்திரனும் அபயம் தேடி அங்கும் இங்குமாக தேர்வர்கள் முதல் இந்திரன், பிரம்மா, விஷ்ணு என அனைவரிடமும் தஞ்சம் கேட்டான். காப்பாற்றச் சொல்லித் துடித்தான். தட்சனின் கோபத்திற்கு ஆளாக விரும்பாத அவர்கள் எல்லோரும் மறுத்து விட்டனர்.
இதற்கிடையில்கலைகள் ஒவ்வொன்றாகத் தேய்ந்து மூன்றாம் பிறைக்கு வந்ததது. நேராகக் கைலாசம் சென்று பரமேஸ்வரனை வணங்கித் தஞ்சம் கேட்டான். காப்பாற்ச் சொல்லித் துடித்தான். தட்சனின் கோபத்திற்கு ஆளாக விரும்பாத அவர்கள் எல்லோரும் மறுத்து விட்டனர். இதற்கிடையில் கலைகள் ஒவ்வொன்றாகத் தேய்ந்து மூன்றாம் பிறைக்கு வந்ததது. நேராகக் கைலாசம் சென்று பரமேஸவரனை வணங்கித் தஞ்சம் கேட்டான். பரமேஸ்வரனும் சந்திரனுக்கு அடைக்கலம் தந்து மூன்றாம் பிறைச்சந்திரனை தூக்கித்தன் தலைமேலே சூட்டிக் கொண்டான். சந்திரனை நோக்கி உன் தவற்றை உணர்வதற்காக இன்று முதல் உன் கலைகள் ஒவ்வொன்றாகத் தேயவும், பின் வளரவும் அருளினோம். ஆயினும் ஐப்பசி மாதப் பௌர்ணமி அன்று மட்டும் உன் பூரண பதினாறு கலைகளுடன் நீ மிளிர்வாய் என ஆசிகள் வழங்கினார்.
சந்திரன் பதினாறு கலைகளுடன் பூரணமாக மிகுந்த ஒளியுடன் காட்சி தருகின்றான். அத்தகைய ஐப்பசி மாதப் பௌர்ணமி புனித நாளினில் தான் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. எனவே அதனைக் கொண்டே ஈசனுக்கு அன்னம் செய்து அன்னாபிஷேகம் செய்கின்றோம். மேலும் ஆகாயத்திலிருந்து தோன்றிய காற்றின் உதவியுடன் நெருப்பை மூட்டி மண்ணிலிருந்து விளைந்த அரிசியினை நீரில் வேகவைத்து சாதமாக அன்னமாக உருவாக்கி அதனை அபிஷேகம் செய்வதால்8 பஞ்சபூதங்களையும் தன்வசத்தில் இயக்கும் ஈசனுக்குப் பஞ்ச பூதங்களின் உதவியுடன் செய்த அன்னத்தால் அபிஷேகம் செய்து மகிழ்கின்றோம்.
கலியுகத்தில் உணவுதான் உயிராக விளங்குகின்றது. இறைவன் நமக்களித்த உணவான அன்னத்தை நாம் இந்த ஐப்பசி பௌர்ணமி புனித நன்னாளில் இறைவனுக்கே அபிஷேகம் செய்து நன்றி செலுத்துகின்றோம். கல்லினுள் தேரைக்கும், கருப்பையில் இருக்கும் ஜீவனுக்கும் உணவளிப்பவர் ஈசன். எனவே அன்னமே உயிர்நாடி, அன்னமே பிரம்ம, விஷ்ணு, சிவ ஸ்வரூபமாக விளங்குவதாக வேதங்கள் கூறுகின்றன. அன்னை பார்வதியே அமுது படைக்கும் அன்னபூரணியாக விளங்குகின்றாள். அவளும் ஈசனும் ஒன்றாகையால் ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்து வணங்குகின்றோம்.
அன்னம் ந நிந்த்யாத் - அன்னத்தை நிந்திக்கக் கூடாது என்றும், ப்ராணோவா அன்னம் - எது உயிர் கொடுக்கின்றதோ, அது இல்லாமல் போனால் உயிர் போகின்றது என்றும், அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னம் - அன்னமே இறைவடிவம், மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவில் இருக்கின்றார் என்றும், அன்னமே தானாக இருக்கின்றேன் என்றும் வேதநாயகனான ஈசன் கூறுவதாக வேதங்களும், உபநிடதங்களும் தெரிவிக்கின்றன.
அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு 70 வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப் பெறுகின்றது. அவற்றில் சுத்த அன்னமும் ஒன்றாகும். தினசரி காலை 11.00 மணியளவில் தில்லை நடராஜப் பெருமான் திருக்கோயிலில் ஸ்படிகலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது என்பது சிறப்பான செய்தியாகும். எனவே தான் அப்பர் பெருமானும்
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலுமிப்பூமிசை
என் அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே

எனப்பாடி உருகினார்.
ஈசனை நடராஜப் பெருமானை தரிசிப்பதால் உயிர்க்கு அமுதமாகிய வீட்டின்பமும், உடலின் வளமைக்கு உரிய உணவும் கிடைக்கின்றது. மேலும் பொன்னுலக வாழ்வாகிய தேவர் வாழ்வும் சித்திக்கின்றது. இப்பூவுலகில் கண்டு இன்புறுவதற்கு உரிய திருக்காட்சியினைக் கண்டவர்களுக்கு யாவும் வசமாகும். யாவும் கைவரப் பெறும் இத்தகைய எம்பெருமானை தரிசித்தவர்களுக்கு மீண்டும் பிறவிவாய்க்குமோ? வாய்க்காது என்கிறார் அப்பர் பெருமான்.
ஐப்பசி மாதம் பௌர்ணமியன்று அசுபதி நட்சத்திரத்திற்கு உரிய அன்னத்தால் ஈசனுக்கு அபிஷேகம் செய்வதால் உலகத்திற்கே நன்மை கிடைக்கும் என சிவாகமஞ்கள் தெரிவிக்கின்றன. அபிஷேகம் செய்யப்பெறும் ஒவ்வொரு சாதப்பருக்கையும் சிவலிங்கம் ஆகும். எனவே அன்னாபிஷேகத்தன்று ஈசனை தரிசிப்பதால் கோடிலிங்க தரிசனம் செய்த பலன் கிடைக்கின்றது எனப் பெரியவர்கள் கூறுகின்றார்கள்.
வானியல் அறிவியல் சாஸ்திரப்படியும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதாகவும், அப்போது சந்திரன் மிக ஒளியுடன் காட்சி தருவதாகவும் தெரிவிக்கின்றது. எனவே இப்புனித நாட்களில் சிவாலயங்களில் சாயரட்சை எனப்பெறும் மாலை நேரப்பூஜை வேளையில் அன்னாபிஷேக தரிசனம் நிகழ்கின்றது. அன்னத்தை வடித்து ஆறவைத்து சிவலிங்கத்தின் மேலே அழகாக அலங்காரம் செய்வார்கள் மேலும் புடலங்காய் போன்ற காய்கறிகளை அவித்து மேலே சார்த்துவார்கள். உப்பில்லாமல் வடை செய்து அணிவிப்பது வழக்கம். சிறப்பான அன்னாபிஷேக அலங்கார ஈசனுக்கு சந்திரன் உதயமானவுடன் சிறப்பான பூஜைகள் தீப ஆராதனைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனத்திற்குப் பின் இரவு எட்டு மணியளவில் ஆராதனைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனத்திற்குப் பின் இரவு எட்டு மணியளவில் அன்னாபிஷேக அலங்காரம் பிரிக்கப்பெற்று, சிவலிங்கத் திருமேனிமேல் சார்த்தப்பெற்ற அன்னத்தையும், காய்கறிகளையும், வடைமாலையையும் அர்ச்சகர் தனது தலைமேல் ஒரு கூடையில் சுமந்து கொண்டு தீவட்டி, மேளதாளத்துடன், பக்தர்கள் சிவபுராணம் பாடிய வண்ணம் அல்லது அரஹர, சிவசிவ என நாமம் சொல்லிய வண்ணம் அருகில் உள்ள ஓடும் நீர் நிலைகளிலோ அல்லது ஆலயத் திருக்குளத்திலோ சென்று அதனை நீரில் கரைத்து தீபாராதனை செய்வார்கள். இதன் மூலம் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்களுக்கும் கூட இறைவன் படியளப்பதாக ஐதீகம் சிவலிங்கத் திருமேனியைச் சுற்றியுள்ள அன்னத்தை தயிர் சாதமாக்கிப் பிரசாதமாக வழங்குவார்கள் குறிப்பாக குழந்தைப் பேறு வேண்டுவோர் இந்த அன்னத்தை உண்பதன் மலம் நல்ல குழந்தைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை உண்மையும் கூட.
அன்னாபிஷேகம் செய்வதால் நல்ல மழை பெய்து நல்ல முறையில் விவசாயம் நடைபெறும் எனவும், உணவுப் பஞ்சம் ஏற்படாது எனவும் வேதங்கள் தெரிவிக்கின்றன. அனைத்து சிவ ஆலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனி கொண்ட கங்கை கொண்ட சோழபுரம், தஞ்சைப்பெரிய கோயில் பெரு ஆவுடையார் ஆகியோருக்கு
100 மூட்டைகள் சாதம் வடித்து அன்னாபிஷேகம் நடைபெறுவது உலகப்பிரசித்தமாகும்.
ஐப்பசி மாதப் பௌர்ணமி புனித நன்னாளில் (03.11.2017) சிவாலயங்களுக்கு சென்று அன்னாபிஷேக தரிசனம் செய்வோம். அனைத்து நலன்களையும் பெறுவோம்.

சக்தி வாய்ந்த வயாகரா வீட்டிலேயே தயாரிக்கலாம்!

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வு அளிக்க பயன்படுத்தப்படுவது தான் வயாகரா. இது இரத்த நாள சுவர்களை விரிவடையச் செய்து, குறிப்பிட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
அதற்காக கடைகளில் விற்கப்படும் வயாகரா மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல், இயற்கை வழிகளை நாடினால் பாலியல் பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும். அப்படியான வயாகராவை பானமாக தயாரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்:
தர்பூசணி



தர்பூசணியில் சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் ஏராளமாக உள்ளது. இது ஆண் குறியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளைத் தடுக்கும்.
தேவையான பொருட்கள்:
தர்பூசணி - 1 எலுமிச்சை - 3
தயாரிக்கும் முறை
தர்பூசணியை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட வேண்டும். குறிப்பாக தர்பூசணியில் உள்ள வெள்ளைப் பகுதியை தவறாமல் சேர்க்க வேண்டும்.
பின் அதை நன்கு அரைத்து 1 லிற்றர் அளவு ஜூஸ் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க வைத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கிளறி, கலவை பாதியானதும் இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து, குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமில்லாத இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.


உட்கொள்ளும் முறை
சக்தி வாய்ந்த இந்த வயாகராவை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூனையும், இரவில் படுக்கும் முன் 2 டேபிள் ஸ்பூனையும் சாப்பிட வேண்டும்.
குறிப்பு
இந்த நேச்சுரல் வயாகராவில் இனிப்பு இல்லை என்பதற்காக, அதில் சர்க்கரையோ அல்லது தேனையோ தப்பித்தவறியும் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால், இதன் முழு பலனையும் பெற முடியாது.
பக்கவிளைவுகள்
இந்த நேச்சுரல் வயாகரா பானத்தை இதய பிரச்சனைகள், உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம், பக்கவாதம், கண் பிரச்சனைகள், கல்லீரல் நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளோர் எவ்வித அச்சமும் இல்லாமல் உட்கொள்ளலாம். பக்கவிளைவுகள் ஏதுமற்ற இயற்கை வயாகரா பானம் இது.

சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்

சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் கூறுகின்றன. அவை,
1. சந்திரசேகரம்
சூரிய ஒளியைப் பெற்று இரவின் இருளை அகற்றும் பொருட்டு உதித்தவன் சந்திரன். அவனுக்கு தட்சன் எனும் அரசனின் சாபத்தால் தான் கற்றுணர்ந்த கலைகள் ஒவ்வொன்றும் நாள்கணக்கில் குறைந்தது. அவை அனைத்தும் தன்னை விட்டுப் போய்விடுமோ என்று அஞ்சி சிவனை சரணடைந்தான். இறைவனும் வளர்ந்து தேயும் மரணமில்லா வாழ்வை அளித்து அதன் அடையாளமாக பிறை நிலவைத் தன் தலையில் சூடிக் காட்சி அளித்த திருக்கோலம் சந்திரசேகரம்.
2. அர்த்தநாரீசுரம்
ஆணும் பெண்ணும் சரிசமம். சக்தி இல்லையேல் சிவமில்லை என்று உமையொருபாகனாகக் காட்சியளித்த அம்மையும் அப்பனுமான திருக்கோலம் அர்த்தநாரீசுரம்.
3. சக்கரபிரதானம்
ஆனந்தத் தாண்டவமாடும்போது, சிவன் தன் கால்களால் வரைந்தது சக்கர உருவம். அதைக் கைலாயத்திலிருந்து பெயர்த்தெடுத்த சலந்தரன் தன் தலைமுடியில் வைத்து சக்தி பெற எண்ணினான். முடி மீது வைத்த நொடி அச்சக்கரம் அவனை அழித்தது.
மகாவிஷ்ணு இச்சக்கரத்தைப் பெற விரும்பி, தினசரி சிவனைத் தியானித்துத் தினமும் ஆயிரம் மலர் கொண்டு பூஜித்தார். திருவிளையாடல் நிகழ்த்த எண்ணிய சிவன் ஒரு மலரை ஒரு நாள் மறைத்து விட்டார்.
மகாவிஷ்ணுக்கு ஒரு மலர் குறைந்தது தெரிய வந்ததும், தன் வலக்கண்ணைப் பிடுங்கிச் செம்மலராகக் கருதி அர்ச்சித்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் திருமாலுக்கு அந்தச் சக்கரத்தையும், இழந்த கண்ணினையும், செந்தாமரைக் கண்ணன் என்ற பெயரினையும் அளித்து அருளிய கோலம் சக்கரபிரதானம்.
4. தட்சிணாமூர்த்தம்
படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா, கலைகளின் அரசி சரஸ்வதி. இவர்களின் புத்திரர்களான சனகர், சனாதரர், சனந்தனர், சனத்குமார் ஆகிய நான்கு பேருமே மெய்நூல்களின் உண்மைப் பொருளோ, தத்துவமோ அறியவில்லை. சிவபெருமான் மௌனகுருவாய் யம திசையான தென்திசை நோக்கி அமர்ந்து அவர்களுக்கு அறிவுறுத்திய திருக்கோலம் தட்சிணாமூர்த்தம்.
5. லிங்கஸ்வரூபம்
பிறப்பு, இறப்பின்றி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகளை தன்னுள் அடக்கி ஐம்புலன்களை உணர்த்துவது லிங்கஸ்வரூபம்.
6. லிங்கோற்பவம்
பிரம்மனும், விஷ்ணுவும் தாங்களே பெரியவர் எனும் கர்வத்தில் இருந்தனர். அப்போது அக்கினிப் பிழம்பாக சிவன் தோன்றிய போது அடிமுடி காணாதவர்களாகக் கர்வம் அடங்கினர். தீப்பிழம்பு லிங்கத் தோற்றமே லிங்கோற்பவம்.
7. தட்சயக்ஞ பங்கம்
சிவபெருமானை அழைக்காமல் தட்சன் எனும் அரசன் யாகம் செய்தான். மரியாதை செய்யாத தட்சன் மீது கொண்ட கோபத்தால் அவன் வேள்வியை அழித்தும் பாடம் சொன்ன கோலம் தட்சயக்ஞ பங்கம்.
8. சந்தத நிர்த்தனம்
படைத்தல், காத்தல், அழித்தல், அழித்ததை மறையும்படி செய்தல், மறைந்ததை மீண்டும் அருளல் ஆகிய ஐந்து தொழில்களும் சரிவர நடக்கும்படி ஆடிக் கொண்டிருக்கும் நடராஜத் திருக்கோலம் சந்தத நிர்த்தனம்.
9. சண்டே சாதுக்ரகம்
தன்னை பூஜித்த சண்டேசுவர நாயனாருக்கு அருளிச் செய்த கோலம் சண்டே சாதுக்ரகம்.
10. சலந்தரவதம்

சக்கரத்தினை தனக்குடைமையாக்க முற்பட்ட சலந்திரனை வதம் செய்த திருக்கோலம் சலந்தரவதம்.
 
11. அகோராஸ்திரம்

சப்ததந்து என்ற அரசன் அனைவருக்கும் சிரமங்களைக் கொடுத்து வந்தான். அகோராஸ்திரம் என்ற கூரிய ஆயுதத்தால் அவனைக் கொன்றார். அவன் மனைவியர் மன்றாட, அவனை உயிர்த்தெழச் செய்த திருக்கோலம் அகோராஸ்திரம்.
12. ஏகபதம்
இவ்வுலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்தையும் தம்முடைய மலரடியில் தாங்கி நின்ற காட்சி ஏகபதம்.
13. அச்வாருடம்
மாணிக்கவாசகரைக் காத்தருளும் வண்ணம் நரியினை பரியாக்க அப்பரியினை ஓட்டும் சேவகராக பாண்டிய மன்னர் முன் எழுந்தருளிய கோலம் அச்வாருடம்.
14. சத்ய சதாசிவம்
சத்ய சொரூபம், பஞ்சமுகங்களாய்த் தோன்றி சத்தியஜோதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகியவற்றினைக் கொண்டு வேத ஆகமங்களைப் போதித்த திருக்கோலம் சத்ய சதாசிவம்.
15. மிக்க சதாசிவம்
இருபத்தைந்து திருமுகங்களுடன் விஸ்வரூபமாய் நின்ற கோலம் மிக்க சதாசிவம்.
16. தகுல குளேசுவரம்
உலோகங்களில் சிறந்த இலகுளத்தால் செய்யப்பட்டு மணிகள் அழகுடன் கோர்க்கப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்த கோலம் தகுல குளேசுவரம்.
17. சகஜ சுகாசனம்
ஆறு திருக்கரத்துடன் பார்வதி தேவியைத் தன் இடப்பக்கத்தில் அமர்த்திக் காட்சிதரும் கோலம் சகஜ சுகாசனம்.
18. கூர்ம சங்காரம்
பாற்கடல் கடைய விஷ்ணு ஆமை வடிவம் எடுத்துத் தேவர்களுக்கு உதவினார். கர்வமடைந்த விஷ்ணு ஆமை வடிவத்தை அகலப்படுத்திக் கொண்டே போக பாற்கடல் கரைபுரண்டது. அனைவரும் எம்பெருமானிடம் வேண்டி நிற்க ஆமையைப் பிளந்து அதன் ஓட்டை அணிந்து காட்சியளித்த கோலம் கூர்ம சங்காரம்.
19. மச்சாரி
சோமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். மகாவிஷ்ணுவிடம் முறையிட அவர் மச்சாவதாரம் (மீன்) எடுத்துக் கடலுக்குச் சென்று அசுரனை அழித்தார். திருமால் கர்வம் கொண்டு பாற்கடல் கலக்கினார். சிவன் அக்கணம் தோன்றி மீனின் கண் மலர்களைப் பிடுங்கி அணிந்த கோலம் மச்சார்.
20. வராஹரி
மகாவிஷ்ணு இரணியாட்சன் என்கிற அசுரனைப் பன்றி உருவம் கொண்டு வதைத்தார். பின்னர் கர்வத்திற்கு ஆட்பட்ட அப்பன்றி உலக மக்களைத் துன்புறுத்தியது. அப்பன்றிகள் கோரப்பல்லினைப் பிடுங்கி சிவன் அணிந்து கொண்டு காட்சியளித்த கோலம் வராஹரி.
21. சற்குரு மூர்த்தம்
மனத்தின் அறியாமை அகற்ற மாணிக்க வாசகருக்கு அருள் பொழிய குரு வடிவில் வந்த கோலம் சற்குரு மூர்த்தம்.
22. உமேசம்
பார்வதி தேவியைத் தம் இடப்பாகத்தில் இருத்து சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஜீவராசிகளைப் படைக்கப் பிரம்ம தேவனுக்கு அருளிய திருக்கோலம் உமேசம்.
23. உமாபதி
சிவன், சக்திக்கு ஐந்து தொழில்களையும் செய்து வர அருள் வழங்கிய கோலம் உமாபதி.
24. ஐயபுஜங்கத்ராசம்
பரமேசுவரனிடம் கோபம் கொண்ட முனிவர்கள் ஒரு சிலர் யாகம் செய்து தோன்றிய பாம்புகளை அவர் மீது தவவலிமையால் ஏவி விட்டனர். மரணமில்லா பெருவாழ்வு உடைய ஐயன் அப்பாம்புகளை ஆடையாக்கி அணிந்த கோலம் ஐயபுஜங்கத்ராசம்.
25. சார்த்தூரஹரி
மீண்டும் முனிவர்கள் தாருக வனத்தில் யாகத்தில் தோற்றுவித்த புலியைக் கொண்று அதன் தோலினை ஆடையாக உடுத்திய கோலம் சார்த்தூரஹரி.
26. பைரவம்
அந்தகாசுரனை சிவன் சூலத்தால் கொன்று அச்சூலத்திலேயே அவனை அணிகலன் ஆக்கினார். அங்கிருந்தபடியே அவன் சிவனைத் துதிக்க மகிழ்ந்த ஈசன் காட்சி அளித்து சிவகணங்களுள் ஒருவனாக்கி அருளிச் செய்த கோலம் பைரவம்.
27. கல்யாணசுந்தரம்
தட்சணின் புதல்வியான பார்வதி ஈசனை மணக்க வேண்டி தவம் இருந்தாள். மகிழ்ந்த சிவபெருமானும் சுந்தரரூபனாய் உமையின் திருக்கரம் பற்றி மணக்கோலத்தில் அளித்த கோலம் கல்யாண சுந்தரம்.
28. வடுகம்
துந்துபி என்ற அசுர மைந்தனான முண்டாசுரன் தேவர்களுக்கு தொல்லை அளித்ததால் அவனை சம்ஹாரம் செய்து வடுகராய்க் காட்சி அளித்த கோலம் வடுகம்.
29. கிராதம்
அரிய சிவதனுசினைப் பெற காட்டில் தவம் பண்ணினான் அர்ச்சுனன். அவன் விரும்பிய வரங்களை வழங்க வேடுவராய்க் காட்சியளித்த கோலம் கிராதம்.
30. சுந்தர விருஷப ஊர்தி
சிவனுக்கு வாகனம் நந்தி திருமாலுக்குத் தாமும் ஈசனைச் சுமந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமிருந்தது. அவர் வேண்டுகோளுக்கு இணங்க ரிஷப வாகனமான விஷ்ணு மீதமர்ந்து உலா வரும் கோலம் சுந்தர விருஷப ஊர்தி.
31. விஷாபஹரணம்
பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விசத்தினை உண்டு நீலகண்டராய்க் காட்சியளித்த கோலம் விஷாபஹரணம்.
32. சுவராபக்ஞம்
தேவர்களுக்குள் போர் நிகழ்ந்த போது கிருஷ்ண பகவான் வாணசுரன் மேல் சீதாசுரம் என்ற அஸ்திரத்தை ஏவ, சிவபெருமான் உஷ்ணாசுரம் என்ற அஸ்திரத்தால் காத்தார். அப்போது மூன்று முகம், நான்கு கைகள், ஒன்பது விழிகள், மூன்று பாதங்களுடன் காட்சி அளித்த கோலம் சுவராபக்ஞம்.
33. துகளறு க்ஷேத்திரபாலகம்
பிரளயம் நிகழ்ந்தது. அக்னி சர்வலோகங்களையும் அழித்தது. பின்பு பெருமழை பொழிய உலகமே வெள்ளக் காடாய்க் காட்சி தந்தது. ஜீவராசிகள் எல்லாமே அழிந்தன பூமியை புதுப்பித்து உயிர்களை மீண்டும் படைத்துக் காத்திட அவதரித்த திருக்கோலம் துகளறு க்ஷேத்திர பாலகம்.
34. தொல்கருடாந்திகம்
சிவன் வழிபாட்டில் மெய்மறந்து விஷ்ணு காலம் கடத்தி வந்தார். அவருடைய வாகனமான கருடன் சிவனை பழித்தது. சிவன் சினமுற்று தன் வாகனமான நந்தியின் மூச்சுக் காற்றால் கருடனை அலைக்கழித்தார். அவனுக்குப் புத்திமதி காட்டிய கோலம் தொல் கருடாந்திகம்.
35. முகலிங்கம்
சகலதேவர்களையும் அடக்கி ஐம்புலன்களையும் ஒடுக்கி லிங்கஸ்வரூபமாய்க் காட்சிதரும் சர்வேஸ்வரரின் மலர்ந்த தாமரை போல் புன்சிரிப்பு தரக் காட்சியளிக்கும் கோலம் முகலிங்கம்.

36. துங்க கங்காதரம்

கைலாயத்தில் ஆனந்தமயமான வேளையில் விளையாட்டால் உமையவள் அவர்தம் இருகண்களையும் பொத்தினாள். எங்கும் இருள் சூழ்ந்தது. பகவான் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க உலகம் உய்வுற்றது. அந்த வெப்பத்தில் உமாதேவியின் கைகளில் வியர்வை பெருக்கெடுத்து பெருவெள்ளமாய் உலகினை சூழ்ந்து வர, பெருமான் வெள்ளத்தினை எடுத்துத் தன் ஜடாமுடியில் பொருத்தித் தாங்கினார். கங்காதர மூர்த்தியாகக் காட்சியளித்த திருக்கோலம் துங்க காங்காதரம்.
37. கங்கா விசர்ஜனம்
பகீதரன் என்பவன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வர வேண்டி பிரம்மனை நோக்கி தவமிருந்தான். சிவனின் அருளால் தன் லோகத்துக்குக் கிடைத்த கங்கையின் சிறு பகுதியைப் பூமிக்கு அளித்தான் பிரம்மன். வெள்ளமெனப் பெருகி செருக்கோடு ஓடிய கங்கையை மீண்டும் தம் சடைமுடியில் கட்டிப் போட்டார் சிவபெருமான். பகீதரன் மீண்டும் வேண்டிக் கொண்டதற்கு இணங்க கங்கையை முடியிலிருந்து பூவுலகிற்குச் சென்றடைய கட்டளை இட்ட போது செய்த திருக்கோலம் கங்கா விசர்ஜனம்.
38. சுப சோமஸ்கந்தம்
சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய நெர்ப்புப் பொறிகள் ஆறும் சரவணப் பொய்கையில் விழுந்தன. அணு குழந்தைகளாகி வளர்ந்து சக்தியின் அருளால் ஒன்றாகி ஸ்கந்தனாக விளங்கி சிவனுக்கும் உமாதேவிக்கும் இடையில் அமர்ந்து காட்சி அளிக்கும் திருக்கோலம் சுப சோமஸ்கந்தம்.
39. சூரசிம்ஹாரி
மகாவிஷ்ணு நரசிம்ம வடிவம் கொண்டு தூணினைப் பிளந்து இரண்யகசிவு என்ற அரக்கனை வதம் செய்தார். அப்போது வெறி கொண்டு உலகினை அழிக்க முற்படுகையில் சரபடிவம் கொண்ட சிவன் நரசிம்மத்தின் தோலைக் கிழித்து அவருக்குத் தம்நிலை உணர்த்திய கோலம் சூரசிம்ஹாரி.
40. கமாரி
சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிய கோலம்.
41. யமாந்தகம்
பதினாறு வயதே வாழ்வாய் என வரம் பெற்ற மார்க்கண்டேயனின் உயிர் நீக்க எண்ணி எமன் அவன் மீது பாசக்கயிற்றை வீசினார். மார்க்கண்டேயனோ சிவ நாமம் ஜபித்தபடி அருகிலிருந்த சிவலிங்கத்தினை இருகைகளாலும் பற்றிக் கொண்டான். அவனைக் காத்திட சிவன், எமனை இடதுகாலால் எட்டி உதைத்து மார்க்கண்டேயனுக்கு சாகா வரமளித்த கோலம் யமகாந்தகம்.
42. சசி மாணவபாவம்
பிரம்மனின் கர்வத்தினை அடக்க எண்ணித் தன் மகன் முருகனிடமே உபதேசம் பெறச் செய்து உலகிற்கெல்லாம் ஆசான் என்ற தத்துவம் உணர்த்திய கோலம் சசி மாணவபாவம்.
43. சுபகர பிரார்த்தனை மூர்த்தம்
தாருக வனத்தில் கையில் தட்டுடன் ஐயன் வந்த போது மோகினி வடிவம் கொண்ட மகாவிஷ்ணு தம்மை ஆட்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். வேறொரு சமயம் நிறைவேற்றுவதாகச் சொன்ன கோலம் சுபகர பிரார்த்தனை மூர்த்தம்.
44. நறுந்திர புராந்தகம்
சினம் கொண்ட சிவன் முப்புரத்தையும் எரித்துச் சாம்பலாக்கிய சூரிய கோலம் நறுந்திர புராந்தகம்.
45. சுரர் பரசும் சுமுக கங்காளம்
கங்காளம் என்பதனை அணிகலனாய் அணிந்த திருக்கோலம் சுரர் பரசும் சுமுக கங்காளம்.
46. ரத்தப் பிட்சைப் பிரதானம்
ஆணவம் கொண்டிருந்த பிரம்மனின் தலையைக் கொய்து அந்தத் தலை ஓட்டில் எல்லா தேவர்களின் ரத்தத்தினையும் பிட்சையாக ஏற்ற கோலம் ரத்தப் பிட்சைப் பிரதானம்.
47. இருஞ்சுடரே சுடர் சரிதுரி வரப்பிரதம்
இவ்வுலகை காத்திட பார்வதி தேவியை ஜோதிமயமான பேரொளியுடன் கூடிய கௌரியாக அவதரிக்க வேண்டி அவருக்கு வரமளித்த கோலம் இருஞ்சுடரே சுடர் சரிதுரி வரப்பிரதம்.
48. மஹாபாசுபர சொரூபம்
அர்ச்சுனனின் தவத்தில் மகிழ்ந்து அவருக்குத் தம் பாசுபத படைதனை தந்தருளியக் கோலம் மஹாபாசுபர சொரூபம்.
49. அணிதோன்று புஜங்கலளிதம்
கருடனுக்குப் பயந்து தன்னை அடைக்கலமாயிருந்த பாம்புகளை அழைத்து அதன் அச்சம் அகற்றித் தன் திருமேனியில் அணிஅந்த கோலம் அணிதோன்று புஜங்கலளிதம்.
50. ரிஷிபாந்திகம்
விஷ்ணுவை ரிஷப வாகனமாக்கிட
அதன் மீதமர்ந்து காட்சியளித்த கோலம் ரிஷிபாந்திகம்.
51. தோமறுகஜயுத்தம்
தேவர்களை துன்பத்துக்குள்ளாக்கிய கஜாசுரனைக் காசி க்ஷேத்திரத்தில் சம்ஹாரம் செய்து, அந்த யானைத் தோலை உரித்து ஆடையாக்கிக் காட்சி அளித்த கோலம் தோமறுகஜயுத்தம்.
52. விந்தை விளம்பு கஜாந்திகம்
அசுரன் சூபரத்மனின் மகன் பானுகோபன். அவனுடன் இந்திரலோகத்து யானையான ஐராவதம் போர்புரிந்து ஐராவதத்தின் கொம்பு ஒடிந்தது. அது திருவெண்காடு சென்று சிவனை வணங்க அதன் வழிபாட்டில் மகிழ்ந்த சிவன், ஐராவதத்திற்குக் காட்சியளித்த கோலம் விந்தை விளம்பு கஜாந்திகம்.
53. வீணை தயங்கு தட்சிணாமூர்த்தம்
வீணையின் பெருமையை உலகிற்குக் கூற வீணையைக் கையிலேந்திய கோலம் வீணை தயங்கு தட்சிணா மூர்த்தம்.
54. மேதகயோக வினோதமாதாக தட்சிணாமூர்த்தம்
யோகத்தின் பெருமையை உணர்த்திய கோலம் மேதகயோக வினோதமாதாக தட்சிணாமூர்த்தம்.
55. விமல பிட்சாடனம்
தாருக வனத்தில் திருவோட்டினைக் கையிலேந்திய திருக்கோலம் விமல பிட்சாடனம்.
56. கவலை யுத்தாரணம்
ஆபத்பாந்தவனாய்த் தன்னை வந்தடையும் பக்தர்களின் துயர் நீக்கி இன்பம் சேர்க்கும் கோலம் கவலை யுத்தாரணம்.
57. வேதகணம் புகழும் விதிசிர கண்டனம்
பிரம்மனின் கர்வம் அடக்கத் தலையைத் தன் கை நகத்தால் கிள்ளிய கோலம் வேதகணம் புகழும் விதிசிர கண்டனம்.
58. கவுரி விலாசமந்விதம்

பார்வதி தேவியை மணந்து அவரோடு மீனாட்சி சோமசுந்தரேசுவரராய் விளங்கும் கோலம் கவுரி விலாசமந்விதம்.
59. எழிலரியர்த்தம்
மகாவிஷ்ணுவை ஸ்திரீ ரூபமாய்த் தன் உடலில் பாதியாக்கித் தாங்கி நிற்கும் கேசவார்த்தம் என்னும் கோலம் எழிலரியர்த்தம்.
60. வீரபத்திரம்
வீர மார்த்தாண்டன் என்ற அசுரனைக் கொன்று வீரபத்திரராக விளங்கிய கோலம் வீரபத்திரம்.
61. திரிமூர்த்தி முப்பாதம்
பிரம்மன், விஷ்ணு ருத்ரன் ஆகிய மூவரும் தன்னுள் அடக்கம் எனும் தத்துவம் உணர்த்தும் மூன்று திருவடி உடைய கோலம் திரிமூர்த்தி முப்பாதம்.
62. மகாவேதாளி நடம்
கண்டமுண்டாசுரர்களையும் வதைத்து, கோர ஸ்வரூபமான மகாகாளியுடன் ஆடிய ருத்ர தாண்டவக் கோலம் மகாவேதாளி நடம்.
63. வெருவரு மேகபதத்திருவரு
பிரம்ம விஷ்ணுக்களைத் தன்னுள் அடக்கி ஒரே திருவடியுடன் கூடிய கோலம் வெருவரு மேகபதத்திருவரு.
64. சிவலிங்கம்
ஆகம வேத முதற் பொருளானவன். மங்களமானவன். பிறப்பும் இறப்பும் இல்லாத பேரின்ப நிலையை உடையவன் என்பதை உணர்த்தும் கோலம் சிவலிங்கம்.

ஓம் நமசிவாய.

தோஷம், பாவங்கள் தீர்க்கும், நன்மைகள் அருளும் ஐப்பசி அன்னாபிஷேகம்! #AnnaAbishekam

அனைத்து ஜீவராசிகளையும் படைத்த இறைவன், அந்த ஜீவன்கள் உண்டு உயிர் வாழ இரை என்னும் உணவையும் படைத்தான். ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டுமே, தனக்கு இறைவன் அருளிய உணவை, இறைவனுக்கு நிவேதனம் செய்த பிறகே, பிரசாதமாக உண்ணும் வழக்கத்தை மேற்கொண்டார்கள். ஆக, இறையோடு நெருங்கியத் தொடர்பு கொண்டது இரை. ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்களும் தங்கள் பகுதியில் தங்களுக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்களை இறைவனுக்கு நிவேதனம் செய்கின்றனர். இந்த உணவுதான் அன்னம் எனப்படுகிறது. அதனால்தான், அன்னம் இறைவனின் அம்சமாக விளங்குவதாக வேதங்களும் புராணங்களும் கூறுகின்றன. 'உண்ணும் உணவும், பருகும் நீரும், சுவைக்கும் வெற்றிலையும் இறைவனே' என்று அனுபவித்துப் பாடியிருப்பது அதனால்தான். அப்படி தென்னிந்தியாவில் வசிக்கும் பலருக்கும் அன்னம்தான் உணவாக இருக்கிறது. இந்த அன்னத்தின் பெருமையை இறைவனோடு தொடர்பு வைத்துக்கொண்டாடப்படும் திருநாளே ஐப்பசி அன்னாபிஷேகம்.


ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் இந்தத் திருநாளில், சுத்தமான அன்னத்தினைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். இது குறித்து மேலும் தகவல் அறிந்துகொள்ள புதுச்சேரி முத்து குருக்களிடம் கேட்டோம்.
"ஈஸ்வரன் சூரிய வடிவம், அம்பாள் சந்திர வடிவம் என்கிறது வேதம். இதனால் சந்திரனின் தானியமான நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசி, அம்பாள் அம்சம் என்றாகிறது. நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசியின் வடிவமாகத் திகழும் அம்பாள், ஈசனைச் சேரும் நாள் ஐப்பசி அன்னாபிஷேக நாளாக அமைகிறது. இந்தத் திருநாளில் ஈசனைத் தரிசிக்கும் தம்பதிகள் ஒற்றுமையாக வாழ்வார்கள். அன்னாபிஷேக வடிவில் சிவசக்தி வடிவமாக இருக்கும் இறைவனை இந்நாளில் வணங்கினால் குடும்ப ஒற்றுமை மேம்படும். அன்னாபிஷேக தினமான ஐப்பசி பௌர்ணமியில் சந்திரன் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். அதாவது ஐப்பசி மாதம் துலாம் ராசியில் இருக்கும் சூரியனுக்கு ஏழாம் இடத்தில் சந்திரனும், அதுபோலவே மேஷத்தில் இருக்கும் சந்திரனுக்கு ஏழாம் இடத்தில் சூரியனும் சஞ்சரிப்பார்கள். இதனால் இந்த நாள் விசேஷமான சிவசக்தி தினமாக போற்றப்படுகிறது.


அன்னம் ஈசனின் வடிவம். உற்றுப்பார்த்தால், ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கமாகவே காட்சி தரும். அன்னம் ஈஸ்வர ஸ்பரிசம், ஒவ்வொரு முறை அன்னத்தைத் தொடும்போதும் நீங்கள் அந்த இறைவனைத் தொடுகிறீர்கள் என்று உணருங்கள். சந்திரனை சூடிக்கொண்ட சிவபெருமான் பௌர்ணமி தினத்தில் அமிர்த கலை, அதாவது சந்திரனின் 16 கலைகளோடு கூடி பூரண மகிழ்ச்சியோடு இருப்பார். இதனாலேயே சிவபெருமானுக்கு உரிய தினமாக பௌர்ணமி உள்ளது. அதிலும் புண்ணியம் தரும் துலா மாதமான ஐப்பசியில் வரும் பௌர்ணமி தினத்தில் சிவபெருமான் ஆனந்த நிலையில் யோகத்தில் ஆழ்ந்திருப்பார். அந்த நாளில் அவருக்குச் செய்யப்படும் அன்னாபிஷேகம் அபிஷேகங்களில் எல்லாம் உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது.
இதைவிடவும் முக்கியமான ஒரு செய்தியைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அக்காலங்களில் ஐப்பசி மாதத்தில் அடைமழை பெய்து, ஊரே வெள்ளக்காடாக இருக்கும்போது, ஊர்மக்கள் எல்லோருக்கும் அடைக்கலமாகத் திகழ்ந்தது ஆலயங்கள்தான். ஊர்மக்கள் அனைவருக்கும் தேவையான உணவைச் சமைத்து, சமைத்த உணவை இறைவனுக்கு அபிஷேகமும் நிவேதனமும் செய்து, ஊர்மக்கள் பசியாறப் பரிமாறுவார்கள். அன்று ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெற்ற இந்த வழிபாடு, தற்போது பௌர்ணமி தினங்களில் மட்டும் நடைபெறுகிறது. எனவே, இந்த விழா வரலாற்றுச் சிறப்பு கொண்டதாகவும் விளங்குகிறது
ஐப்பசி பௌர்ணமி தினத்தில், நிலத்தில் அறுவடையான புது நெல்லைக் குத்தி, புடைத்து, அதை அவித்து வடித்து அன்னம் சமைப்பார்கள். இந்த அன்னத்தை சிவனுக்கு அபிஷேகம் செய்து, அன்னத்தாலும், காய்கனிகளாலும் அலங்காரம் செய்வார்கள். பின்னர், அந்த அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படும். இந்த அன்னத்தைப் புசிப்பவர்கள் சகலவித பாக்கியங்களையும் பெறுவார்கள். ஐப்பசி பௌர்ணமி தினத்தில் சகலவித திரவியங்களாலும் சிவனுக்கு அபிஷேகம் செய்த பின்னரே அன்னத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது வெற்றிலை, வேக வைத்த காய்கறிகளைக் கொண்டு அலங்கரிப்பார்கள். வெற்றிலை கொண்டு அலங்கரிப்பதால் அதைக் காண்பவர்களின் வீட்டில் சகல மங்கல நிகழ்வுகளும் நல்லபடி நடைபெறும் என்பது ஐதீகம். அதுபோல வாழைக்காய் பித்ரு தோஷங்களைத் தீர்க்கும். புடலங்காய் சர்ப்பதோஷத்தை நீக்கும். இப்படி ஒவ்வொரு காய் கனியும் ஒவ்வொரு பலன்களைத் தரும். வெண்ணெய் சேர்த்து செய்யப்படும் அலங்காரத்தால் சந்தான பிராப்தி கிட்டும் என்பதும் நம்பிக்கை.
பக்தர்கள் உண்டது போக, மீதமிருக்கும் அன்னம் அந்த ஊரில் இருக்கும் குளம், ஏரிகளில் கரைத்து விடப்படும். அந்த அன்னம் மீன்களுக்கு உணவாவது மட்டுமன்றி நீரினால் உண்டாகும் நோய்களை நீக்கி விடும் என்பதும் நம்பிக்கை. மீன்கள் பெருகினால் அந்த நீரின் மாசுக்கள் நீங்கி விடும் என்பது அறிவியலும் கூடத்தான். இப்படி மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், ஜோதிடம் என எல்லாச் சிறப்புகளையும் கொண்டது இந்த அன்னாபிஷேகத் திருவிழா. இந்த நாளில் ஈசனை வழிபாட்டு அன்னத்தினை பிரசாதமாக உட்கொண்டு நலம் பெற வேண்டுகிறோம்' என்றார்.



உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இருமல், ஜலதோஷம், தொண்டைப் புண்ணைப் போக்க இதோ உங்களுக்கான எளிய மருத்துவ குறிப்புகள்…

** இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண்களுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட நல்ல குணம் தெரியும்.
** இரண்டு சிட்டிகை சித்தரத்தைப் பொடி, கொஞ்சம் கல்கண்டு பொடி, 1 ஸ்பூன் நெய், மூன்றையும் குழைத்துச் சாப்பிட, வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது. 
** வெந்நீரில் தேன் கலந்து குடித்தால், ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் உள்ள சளி நீங்கி விடும்.
** வால்மிளகு - 10, அதிமதுரம் 2 செ.மீ, சித்தரத்தை 2 செமீ, திப்பிலி, துளசி இலை 15 போட்டு அவித்து சாறு எடுத்துக் கொண்டு பனங்கற்கண்டுடன் ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் அருந்தவும். இருமலுக்கு மிகவும் நல்லது. மூன்று சொட்டு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சிறு குழந்தைகளுக்குப் புகட்டினால் கக்குவான் இருமல் நிற்கும்.
** தாங்க முடியாத அடுக்கு இருமலுக்கு முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து உள்ளங்கையில் கசக்கவும். சிறிது சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் தடவினால் இருமல் குறையும்.
** அரிசித் திப்பிலியை கடாயில் போட்டு வறுத்துப் பொடி செய்து வைக்கவும். சதா இருமும் குழந்தைகள், பெரியவர்கள் யாரும் இதை உட்கொள்ளலாம். ஒரு டீ ஸ்பூன் பொடியில் சிறிது தேன் விட்டுக் குழைத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். இதை, காம்பு நீக்கிய வெற்றிலையின் நடுவில் அரை ஸ்பூன் வைத்து, வாயில் போட்டு வெற்றிலைச் சாறுடன் சேர்த்து சிறிது சிறிதாக சிறிது நேரம் வாயில் அடக்கிக் கொண்டு சாப்பிட்டால் இருமல் குறையும்.
** துளசிச் சாறையும் கல்கண்டையும் கலந்து சர்பத் போலக் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். வயதுக்குத் தகுந்தபடி இத் துளசிசர்ப்பத்தை சிறிதளவு எடுத்து 2 அல்லது 3 தடவைகள் சாப்பிட இருமல் குணமாகும்.
** வறட்டு இருமலால் அவதிப்படுவோர் அதிமதுர வேரினை அவ்வப்போது 1 துண்டு வாயிலிட்டு சுவைத்து வருவது நல்லது.
** கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதொடை, துளசி இவைகளின் இலை வகைக்கு 1 படி, சித்தரத்தை 1 துண்டு, இஞ்சி 1 துண்டு சேர்த்து இடித்துப் பிழிந்த சாறு 10 முதல் 20 துளி வரையில் வெண்ணையில் கலந்து காலை, மாலை கொடுத்து வர ஓயாத இருமல் நீங்கும். கபக்கட்டு, சிறுபிள்ளைகளுக்குக் காணும் கணைச்சூடு விலகும்

தாமதமாக திருமணம் நடைபெறுவது ஏன்?

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. நம்மில் பலருக்குச் சொர்க்கம் இருக்கும் திசை கிழக்கா, மேற்கா, தெற்கா, வடக்கா தெரியாது.
பெண்ணுக்கு 18ம், ஆணுக்கு 21 வயதும் திருமணம் செய்யலாம் என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனால், இவ்வயதுகளைத் தாண்டியும் நவக்கிரக நாயகர்களின் கருணை கிட்டாமல் கனவுகளோடு காத்திருப்போர் ஆயிரமாயிரம் பேர்.
ஏன் இந்த நிலை?
காரணங்கள் பல. இருக்கட்டும், சில தலைமுறைகளுக்கு முன்பு வரை பால்ய திருமணம் என்ற வழக்கம் இருந்தது. ஆணோ, பெண்ணோ சின்னஞ்சிறார்களாய் இருக்கும்போதே, இவனுக்கு இவன் என்று நிச்சயித்து வைத்துவிட்டுப் பின்னால் அதற்குரிய தகுதி பெறும் காலகட்டத்தில் திருமணம் செய்த பழக்கம் உண்டு.
இன்றோ முப்பது வயதைத் தாண்டியும் முதிர்கன்னிகளாய் இருக்கிறார்கள். நாற்பதைக் கடந்து நரை தட்டிய ஆண்களும் இருக்கிறார்கள். கல்யாணம் என்பது கானல் நீராக இருக்கிறது.
காரணமென்ன?
அன்று இருந்ததும் அதே ஒன்பது கிரகங்கள். இன்று இருப்பதும் அதே ஒன்பது கிரகங்கள். அன்று இளமைத் திருமணத்திற்கு வழிவிட்ட கிரகங்கள், இன்று நந்தி மாதிரி குறுக்கே நிற்கிறதே - ஏன்?
கேள்வி எழுகிறதா.
அன்று திருமணம் என்பது ஒரு சடங்கு. தன் சொந்த பந்தங்கள் விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காகவும், சொத்து சுகம் கைமாறி போய்விடக்கூடாது என்பதற்காகவும் பெரியவர்கள் கூடி இச்சடங்கை நடத்தினார்கள்.
பின்பும் அவர்கள் வாழ்வால் இணைந்து இல்லறத்தில் நல்லறம் கண்டார்களா? பெயர் சொல்ல வம்சம் விளங்க பிள்ளைகளை ஈன்றெடுத்தார்களா? என்பதெல்லாம் கேள்விக்குறி - போகட்டும்.
இளமைத் திருமணம் என்பது பெண்ணுக்கு 25ம், ஆணுக்கும் முப்பதிலும் நடந்தால் கூட போதுமானது.
சிலருக்குத் திருமணம் நடக்கும் பெண்ணின் தகப்பனார், ஜோதிடரிடம் ஜாதகத்தைக் கொண்டு போனால் சுக்கிரன் அங்கே பார்க்கிறான், சனி இங்கே பார்க்கிறான். ராகுவும் கேதுவும் அங்கே இருக்கிறார்கள், இங்கே இருக்கிறார்கள் என்று ஜோதிடர் சரடு விட்டுக் கொண்டிருப்பார். பெண்ணோ எதிர்த்த வீட்டுப் பையனைப் பார்த்து அழைத்துக் கொண்டு போய்விடும், காதல் என்ற பெயரில். சரி விடுங்கள்.
மனிதனின் வாழ்க்கையில் எது நடக்க வேண்டும் என்றாலும் கிரகங்களின் அனுசரணை இல்லாமல் முடியாது. ஒருவருக்குக் குறிப்பிட்ட தசா புத்தியில் கெட்டது நடக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.
பாதகத்தைச் செய்ய வேண்டிய கிரகம் நேரில் வந்து “டேய் மானிடா உன்னை என்ன செய்கிறேன் பார். ஹாஹாஹா” என்று பி.எஸ். வீரப்பா மாதிரி கர்ஜிக்கும்? அல்லவே.
அந்த நேரத்திற்கு அந்த சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி, குணாதிசயத்தோடு கூடியவரின் நட்பை நமக்கு ஏற்படுத்தித் தரும். அவர் சொல்வதே நமக்கு வேத வாக்காகத் தெரியும்.
அவர் அழைத்துச் செல்லும் பாதையில் நமக்கு விதிக்கப்பட்ட கர்மவினையின்படி நடக்க வேண்டியது, நடந்தே தீரும். இது காலத்தின் கட்டாயம்.
இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் தாமத திருமணத்திற்குரிய கிரக நிலைகளை அமையப்பெற்ற ஜாதகரை அவரின் தாய் தந்தையரை சந்தித்தால் அதற்குரிய விளக்கம் தெரிந்துவிடும்.
என் பொண்ணு டிகிரி படிச்சிருக்கு. உத்தியோகம் பார்க்கிற பையனா இருந்தா பரவாயில்லை. இப்படிச் சொல்லியே வரும் நல்ல வரன்களைத் தட்டிக் கழித்துக் கொண்டிருப்பார்.
இன்னொருவர் பொண்ணு சிகப்பா சினிமா ஸ்டார் மாதிரி இருக்கணும். 50 பவுனுக்கு மேலே நகை போடணும். என் புள்ளைக்கு என்ன சிங்கக்குட்டி என்பார்.
ஆக இந்த வசனம் எல்லாம் கிரகங்களின் கைங்கர்யம் தான். ஜாதகப்படி தான் செய்ய வேண்டிய பலனைச் செய்ய ஜாதகரின் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு நடத்தும் லீலா வினோதங்கள்.
இனி தாமதத் திருமணத்திற்கு உரிய கிரக நிலைகளை ஆராய்வோம்.
குடும்பஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் இடத்தில் நீச்சம் பெற்ற கிரகங்கள் அமரும்போது குடும்பம் அமைய தடை வரும்.
களத்திர ஸ்தானாதிபதி எனும் 7-க்குடையவன் நீச்சம் பெற்றால் மனைவி அல்லது கணவன் வர கால தாமதம் கண்டிப்பாக உண்டு.
7-ல் நீச்சம் அல்லது வக்கிரம் பெற்ற கிரகம் இருந்தாலும் முன் சொன்னதே.
களத்திரக்காரகன் சுக்கிரன் மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து அசுபர் பார்வை பெற்றால் திருமணம் தாமதமாகும்.
7-ஆம் பாவத்திற்கோ, ஏழாம் அதிபதிக்கோ சனி சேர்க்கை அல்லது பார்வை கிட்டினால் இல்லறம் அமையத் தடை.
பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆணிற்கோ, பெண்ணிற்கோ பிறந்த ஜாதகத்தில் சனி ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் இருந்தால் திருமணம் தாமதமாகும்.
சுக்கிரன் 2ல், 7ல் கெட்டால் திருமணம் தடையாகும்.
7ஆம் அதிபதியோடு ராகு கேது சேர்க்கை ஏற்பட்டாலும் தாமதத் திருமணமே.சுக்கிரன் நீச்சம் பெற்று சனி செவ்வாய் பார்வை சேர்க்கை பெற்றாலும், சனி செவ்வாய் 7ல் இருந்து சந்திரனும் சுக்கிரனும் ஒருவருக்கு ஒருவர் மறைவு பெற்றாலும் காலம் கடந்த திருமணம்.
ராகு, கேது 1, 7ல் இருந்து சுக்கிரன் சம்பந்தம் பெறுவது இல்லறத் தடை.
7ஆம் அதிபதி சூரியனோடு சேர்ந்து அஸ்தமனம் பெற்றாலும் அஃதே.
7ஆம் பாவம் பாவ கர்த்தாரி யோகம் பெறுவது குற்றம்.
சனி சந்திரன் 9ல் இருப்பதும் நல்லதல்ல.
மேஷ லக்னமாகி சுக்கிரன் அஸ்வினி நட்சத்திர சாரம் பெறுவதும் தவறு.
7ஆம் அதிபதி நவாம்சத்தில் நவாம்ச லக்னத்திற்கு 12ல் இருந்தாலும் திருமணம் தாமதமாகும்.
குருவும், சந்திரனும் 6, 8, 12ல் நீச்சம் பெற்றாலும்,
குரு, சூரியன் இணைந்து 1, 7ல் இருப்பதும்,
லக்னத்திற்கோ சந்திரனுக்கோ 7ஆம் பாவத்தை சுபர்கள் பார்க்காமல் பாவர்கள் சம்பந்தம் பெறுவதும்,
குரு, சுக்கிரன், சூரியன் இவர்களில் ஒருவர் 1ல் இருந்து சனி, 12ல் இருப்பதும் தாமத திருமணத்திற்குரிய கிரக நிலைகளே.
இங்கே சொன்ன கிரகநிலைகள் உங்களுக்கு இருப்பதாக வைத்துக்கொண்டாலும், எப்போது திருமணம் நடக்கும், எந்த திசா புத்தி அதற்கு வழிவிடும்? என்பதை அறிந்து கொள்ள நல்ல ஜோதிடரை அணுகுவது நலம்.

அதிகாலையில் எழுபவன் இன்னொரு நாளைப் பெறுகிறான்

அதிகாலையில் எழுபவன் இன்னொரு நாளைப் பெறுகிறான் என்பது முன்னோர் வாக்கு. ஆம், வெற்றியாளர்கள் பலரை உற்று நோக்கிப் பாருங்கள் எல்லோருமே அதிகாலை எழுபவர்களாகத் தான் இருப்பார்கள். அதிகாலையில் தான் தெளிவான பல சிந்தனைகள் பிறக்கிறது. எனவே அந்த நாளுக்கான எல்லா திட்டமிடல்களும் அந்த வேளையில் செய்து விட முடியும். மேலும் அதிக நேரம் கிடைப்பதால் அன்றைய நாளின் செயல்களை அதிக பதட்டம் இன்றியும் செய்ய முடியும். எனவே தான் நமது முன்னோர்கள் அதிகாலை எழுவதை வலியுறுத்தினார்கள். உஷத் காலம் எனப்படும் இந்த பொழுதில் எழுந்ததும் என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.


1. எழுந்த உடனே இறைவனை எண்ணி தியானிப்பது நல்லது. ஒரு நம்பிக்கை நமக்குள் பிறக்கும்.
2. பசுமையான அல்லது மங்களகரமான பொருட்களைப் பார்த்தவாறு எழுவது அன்றைய நாளை மகிழ்ச்சியாக வைத்திருக்க செய்யும். வண்ண சிகிச்சை முறை பசுமையானவற்றை அதிகாலையில் பார்ப்பது கண்ணுக்கு நல்லது என்கிறது. குறைவான ஒளியில் கண்விழிப்பதும் அவசியம்.
3. சிலர் உள்ளங்கையை தேய்த்து கண்ணில் ஒற்றியவாறு எழுவார்கள். இதுவும் நல்லதே கைகளை உரசுவது ஓய்வில் இருந்த உடலுக்கு இயக்க சக்தியை அளிக்க உதவும். அதிகாலையில் வீசும் தூய காற்று நல்லவை. எனவே வெளிப்புற காற்றை சுவாசிப்பதும், உடலில் படுமாறு நிற்பதும் அவசியமானது.
4. படுக்கையை விட்டு எழுந்து நின்று, தரையை தொட்டு வணங்குவது சிலரின் வழக்கம். அன்றைய நாள் முழுவதும் பூமியை மிதித்து நடக்க போகிறேன் அதற்காக பூமி அன்னை தன்னை மன்னிக்க வேண்டும் என்பதற்கான வேண்டுதல் இது. ஆனால் இது ஒரு வகை யோகாசனம் தான். இதைச் செய்வதால் பூமாதேவியை வணங்கியது போலவும் இருக்கும், உடலின் ரத்தம் தலைக்குப் பாய்ந்து மூளை சுறுசுறுப்படையவும் செய்யும்.
5. நீர் அருந்தி வயிற்றை சுத்தமாக்கிய பிறகு புதிய பாடல்களை அல்லது பாடங்களை மனனம் செய்வது நல்லது. அமைதியான அந்த சூழலில் படிக்கும் எதுவுமே எளிதாக நினைவில் நிற்கும்.
6. குளித்து முடித்தபிறகு பூஜை செய்வது நல்லது. பூஜையில் இருக்கும் தூய தீபங்கள், மலர்கள் போன்றவற்றின் நறுமணம் நம்மை உற்சாகமடைய வைக்கும். ஆரோக்கியத்தை அளிக்கும்.
7. நடைப்பயிற்சி, யோகா, தியானம், உடற்பயிற்சி என ஏதாவது ஒன்று 20 நிமிடங்கள் வரை செய்வது கட்டாயமாக இருக்க வேண்டும். இது பல நோய்களை வரவிடாமல் தடுக்கும்.
8. எடுத்த உடனே காலை உணவை உண்ணாமல் பாலோ, பழச்சாறோ எடுத்துக்கொள்வது உடல் நலனுக்கு சிறந்தது.
9. வைகறையில் சூரியனிடம் இருந்து நம்மை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி மிக்கவை. பல தாது சத்துகள் கொண்டவை. எனவே சூரியனை தரிசிக்கும் நோக்கில் சூரியக் குளியலையும் எடுத்துக்கொள்ளலாம்.
10. அமைதியான அந்த நேரத்தில் அன்றைய நாளுக்கான பணிகளின் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். அந்த செயல்கள் சிரமமின்றி நடைபெற தங்களுக்கு விருப்பமான தெய்வங்களின் ஸ்லோகங்களை பாடலாம் அல்லது கேட்கலாம்.



உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

குடும்பம், செல்வாக்கு, சொல்வாக்கை நிர்ணயிக்கும் கிரக நிலை எது?

'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட குடும்பம் ஒருவருக்கு அமைந்து விட்டால், அவர்தான் உண்மையான பாக்கியசாலி. சிலருக்கு மனைவி, மக்கள் என்று குடும்பத்துடன் அன்போடும் மகிழ்ச்சியுடனும் வாழும் அமைப்பு இருக்கும். சிலருக்குக் குடும்பத்தில் சண்டையும் சச்சரவுமாகக் கோபதாபங்களுடன் வாழும் அமைப்பு இருக்கும். இப்படி இரு வேறுபட்ட குடும்ப அமைப்புகள் எதனால் ஏற்படுகின்றன? இவற்றுக்கு உரிய பரிகாரங்கள் எவை? ஜோதிடத்தின் வாயிலாக மனமொத்த மணவாழ்வு யார் யாருக்கு அமையுமென ஜோதிட நிபுணர் சூரியநாராயணமூர்த்தியைக் கேட்டோம்.


ஒருவருக்கு இனிதான குடும்பம் அமைவதும், குடும்பத்தின் சொத்துகள், மூதாதையர்கள் வழியாகச் சேரும் பாவம் புண்ணியம், குடும்பப் பாரம்பர்யம் ஆகியவற்றைத் தீர்மானிப்பது ஒருவரது ஜாதகத்தின் இரண்டாமிடமாகும்.
வாக்கு வன்மை, பிறரை, தன் சொல்லுக்குக் கட்டுப்பட வைப்பது. கணீர் குரலில் பேசுவது, எதிரும் புதிருமாகப் பேசுவது ஆகியவற்றுக்கு ஜாதகக் கட்டத்தின் 2 -ம் இடமே காரகத்துவம் பெறுகிறது.
முன்னோர்கள் சேர்த்துவைத்த செல்வம், தான் உழைத்துச் சேர்த்த செல்வம், கற்ற கல்வியால் பெற்ற செல்வம், இவை யாவற்றுக்கும் 2 - ம் இடம் மற்றும் அங்கு நிற்கும் கிரகங்களைக்கொண்டு தெரிந்துகொள்ளலாம். இதனால்தான் இரண்டாம் பாவத்தை 'தனம்' 'குடும்பம்', 'வாக்கு'ஸ்தானம் என்பார்கள்.
ஜாதகத்தில் 2 - ம் பாவம் மற்றும் அந்த இடத்தில்
நிற்கும் கிரகங்களின் பலன்கள்:
* 2 - ம் பாவத்தில் சுபகிரகங்களான சந்திரன், குரு, புதன், சுக்கிரன் நின்று இருந்தால், குடும்பத்தில் சந்தோஷத்துக்குக் குறைவு இருக்காது. அதிலும் இந்தக் கிரகங்கள், ஆட்சி, உச்சம், நட்பு, சமம் என்ற நிலையில் நின்றுயிருந்தால், தெய்விகக் குடும்பம் போல் காட்சி தரும். மற்றவர்களுக்கு இவர்கள் நல்ல முன்மாதிரியாக இருப்பார்கள். குடும்பத்தில் குதூகலம் எப்போதும் நிறைந்திருக்கும்.
* 2 - ம் பாவத்தில் சூரியன், செவ்வாய் நின்று இருந்தால், கணவன் மனைவிக்குள் விவாதங்கள் அதிகமாக இருக்கும். அதிலும், இந்தக் கிரகங்கள் ஆட்சி, உச்சம், நட்பு, சமம் என்ற நிலையில் இருந்தால், சிறு சிறு சச்சரவுகள் இருந்தாலும், குடும்ப கெளரவம் கருதி, ஒற்றுமையாக இருப்பார்கள்.


பரிகாரம்: குடும்பத்தில் சுபிட்சம் நிலவ வேண்டுமென்றால், ஜாதகக் கட்டத்தில் 2-ம் இடத்தில் சூரியன் இருந்தால், தஞ்சை மாவட்டம், திருவிடை மருதூர் அருகே இருக்கும் 'சூரியனார்கோயில்' சென்று வழிபட்டு வந்தால், குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். ஜாதகத்தில் 2 - ம் இடத்தில் செவ்வாய் இருப்பவர்கள், நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமியை வணங்கி வந்தால், செவ்வாய் அனுக்கிரகம் கிடைத்து குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.


* 2- ம் பாவத்தில் சனி, ராகு, கேது நின்று இருந்தால், குடும்பத்தில் மன நிம்மதி குறையும். பணக்கஷ்டம் இருக்கும். இதனால் மகிழ்ச்சி இருக்காது. ஜாதகத்தின் நிலையை உணர்ந்து, சகிப்புத்தன்மையுடனும் விட்டுக்கொடுத்தும் வாழ்வது நல்லது. இத்தகைய ஜாதகர்களுக்கு வரன் பார்க்கும்போது, இதே அமைப்புள்ள ஜாதகரையே இணைக்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது மற்ற கிரகங்களின் வலிமையையும் ஆய்வுசெய்து சேர்த்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
பரிகாரம்: ஜாதகத்தில் 2 - ம் இடத்தில் சனி உள்ளவர்கள் திருநள்ளாறு சென்று பூஜை செய்து சனீஸ்வர பகவானை வழிபட்டால், நல்ல மாற்றங்கள் நிகழும். மேலும் சனிக்கிழமை தோறும் காகங்களுக்குச் சாதம் வைத்து விட்டு உணவருந்தினால் உடனடி பலன் கிடைக்கும்.
ஜாதகத்தில் 2 - ம் இடத்தில் ராகு இருப்பவர்கள் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்துவந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்கை வழிபாடுசெய்தால், குடும்பத்தில் அமைதி நிலவும்.
ஜாதகத்தில் 2 - ம் இடத்தில் கேது இருப்பவர்கள், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்பெரும்பள்ளத்தில் இருக்கும் நாகநாத சுவாமிக் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தால், குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும்.


ஆண்டுக்கு ஒரு முறை நவகிரக ஸ்தலங்களுக்குச் சென்று வருவது நல்லது. இப்படிச் செல்லமுடியாதவர்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் சிவன் கோயிலில் இடம்பெற்றிருக்கும் நவகிரகங்களை இதயசுத்தியுடன் வழிபட்டு வந்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

மந்திர உச்சரிப்பின் முழு பலனை அடையும் வழி...!

ஓம் என்ற பிரணவ மந்திரம் சொல்லியே அனைத்துக் காரியங்களையும் ஆரம்பிக்க வேண்டும். தால்ப்ய பரிசிஷ்டம் என்ற நூலில் ஓம்காரத்தைச் சொல்லாமல் கூறும் சகல மந்திரங்களும் சித்தியைக் கொடுக்க மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.


ஆகவே தான் லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஒவ்வொரு நாமாவுக்கு முன்னரும் பின்னரும் ஸ்வாமிகள் ஓம்காரத்தைச் சேர்த்துச் சொல்ல வேண்டும்.
முதலில் சொல்லாவிட்டால் மந்திரம் ஒழுகி விடுமென்றும் கடைசியில் சொல்லாவிட்டால் மந்திரம் பொங்கி வழிந்து விடும் என்றும் காளிகா புராணம் போன்றவற்றில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மந்திரம் சொல்லும் விதத்தையும் ஆசார்யர் மூலமாகவே கற்றுத் தெளிந்து உச்சரிக்க வேண்டும். சஹஸ்ர நாமம் சொல்லும் முன்னும் பின்னும் ஓம் என்பதை சேர்த்து சொல்ல வேண்டும். அவ்வாறு செய்வதால் மந்திரத்தின் முழுப்பலனையும் பெறலாம்

வாரத்துககு மூன்று முட்டை!

நன்றி குங்குமம் டாக்டர்

‘‘நம் அன்றாட உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துமிக்க ஓர் உணவுப்பொருள்தான் முட்டை. நமது ஒரு நாள் தேவையில் 6 சதவீதம் வைட்டமின் ஏ, 5 சதவீதம் ஃபோலேட், வைட்டமின் B5 - 7 சதவீதம், வைட்டமின் B12 - 9 சதவீதம், வைட்டமின் B2 - 15 சதவீதம், பாஸ்பரஸ் 9 சதவீதம் மற்றும் செலினியம் 22 சதவீதம் ஆகியவற்றைத் தருகிறது’’ என்று முட்டையின் பெருமைகளை அடுக்குகிறார் உணவியல் நிபுணர் வித்யா பாலகிருஷ்ணன்.
‘‘முட்டை ஒரு முழுமையான உணவு. ஏனெனில், முட்டையில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. குறிப்பாக, முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் A, D, E, K, B12, ஃபோலேட், Lutein மற்றும் Zeaxanthin போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸும் உள்ளது. அதனால், மஞ்சள் கருவைத் தவிர்ப்பது முட்டையின் சத்துக்களை இழப்பதே ஆகும். மேலும், இதில் மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத Cholin என்ற வைட்டமின் பி சத்தும் உள்ளது. இது முட்டையின் தனித்தன்மையாகும். முட்டையில் நமக்கு தேவையான முக்கியமான அமினோ அமிலங்கள் சரியான விகிதத்தில் உள்ளது.
Cholin மூளை வளர்ச்சிக்கு உதவுவதோடு Zeaxanthin antioxidant கண் நோய்கள் வராமலும் தடுக்கிறது. முட்டையில் செலினியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல நுண் ஊட்டச்சத்துக்களும் உள்ளது. முட்டை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது
புரதம்தான். அதற்குக் காரணம் அமினோ அமிலங்களின் சரியான விகிதாச்சாரம் முட்டையில் அமைந்ததாகும். முட்டை மருத்துவ ரீதியில் அல்புமினுக்கு பெயர் பெற்றது. ரத்தத்தில் அல்புமின் குறைவாக உள்ளவர்கள் முட்டையின் வெள்ளைக் கருவினை சாப்பிடலாம்.
முக்கியமாக, செயற்கை சிறுநீர் சுத்திகரிப்பு(Dialysis) மற்றும் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்களுக்கு அல்புமின் குறைவாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. முட்டையின் வெள்ளைக்கரு அல்புமின் நிறைந்துள்ளதால் அவர்கள் தாராளமாக வேகவைத்து வெள்ளைக்கருவை மட்டும்
சாப்பிடலாம். ஒரு முட்டையில் 212 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. இது நமது ஒரு நாளின் தேவைக்கு போதுமானதாக இருக்கிறது. அது மட்டும் அல்ல; முட்டையின் மஞ்சள் கருவில்தான் கொலஸ்ட்ரால் அதிகம். அதனால் முட்டை சாப்பிடும்போது மஞ்சள் கருவோடு சேர்த்து சாப்பிடுவது நல்லது. அதைத் தவிர்க்கக் கூடாது.
வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டையை வேகவைத்து சாப்பிடுவது அவர்கள் வளர்ச்சியை சீராக்கும். முட்டை மஞ்சள் கருவை பிறந்த 6- 7 மாதம் ஆன குழந்தைகளுக்கு அரை தேக்கரண்டி கொடுக்கலாம். குழந்தை அதை ஏற்றுக்கொண்டால், பின்னர் சிறிது சிறிதாக அதிகப்படுத்தலாம். ஏதும் ஒவ்வாமை ஏற்பட்டால் 10 மாதங்களுக்குப் பிறகு கொடுக்க ஆரம்பிக்கலாம். அதன் பிறகு, முழு முட்டையை மிருதுவாக வேகவைத்துக் கொடுக்கலாம். கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் வேகவைத்த முட்டையை தினமும் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக வாரத்துக்கு 3 முட்டைகளாவது ஒருவர் சாப்பிடுவது நல்லது.
கொலஸ்ட்ரால் இருப்பதால் இதயநோய் உள்ளவர்கள் சாப்பிடலாமா? என்ற சந்தேகம் எழலாம். பல ஆராய்ச்சிகள் இதற்கு சொல்லும் பதில் ‘சாப்பிடலாம்’ என்பதுதான். பலரும் நினைப்பது போல, முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதால் இதய நோய்கள் வராது என்றும் ரத்தத்தில் எல்.டி.எல் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள் மட்டும் குறைவாக சாப்பிட வேண்டும் என்றுதான் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. முட்டையை பச்சையாக சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். ஏனெனில், வெ்ள்ளைக்கருவில் உள்ள அவிடின் நமது உடலில் உள்ள பயோட்டின் உடன் சேர்ந்து அதை உடலுக்குக் கிடைக்கவிடாமல் செய்துவிடும்.
அதுவே, வேகவைத்துவிட்டால் அபிடின் பயோட்டினுடன் சேராது. மேலும் முட்டை நுண்கிருமிகள் வளர்வதற்கான ஓர் எளிதான ஊடகமாகவும் இருப்பதால், முட்டையை வேகவைக்காமல் சாப்பிடுவதால் நுண்கிருமிகள் உடல் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். மிக முக்கியமாக சால்மோனெல்லா டைஃபி டைபாய்டு காய்ச்சலை உருவாக்கும். எனவே, முட்டையை சரியான பதத்தில் வேகவைத்தே சாப்பிட வேண்டும். மஞ்சள் கருவை அதிகம் வேகவைப்பதால் அதில் இருக்கும் சத்துக்கள் ஆக்ஸிடேஷன் ஆகிவிடும்.
அதிக நேரமோ, அரை வேக்காட்டிலோ வேகவைக்ககூடாது. முட்டையை பொரித்தோ வறுத்தோ சாப்பிடுவதாலும் அதில் உள்ள சத்துக்கள் குறைந்துவிடும். மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பதும் தவறு. முட்டையின் பல ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கிறது. முட்டை சாப்பிடுவதால் வாயுக்கோளாறு, ஏதேனும் அலர்ஜி ஏற்பட்டால் அவர்கள் உடனே மருத்துவரை அணுகி, அலர்ஜிக்கான காரணத்தை அறிந்து முட்டையை எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாக முடிந்தவரை நாட்டுக்கோழி முட்டை சாப்பிடுவதே சிறந்தது

வியாழக்கிழமையில் இவற்றைச் செய்தால் செல்வம் கொட்டுமாம்?

நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமானவர் குருபகவான். ஒருவருடைய ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்தால், அந்த நபர் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பவராக இருப்பார்.
குருபகவான் முழுமையான சுபக்கிரகம் என்று அழைக்கப்படுவர். எந்த விஷயத்தைப் பார்ப்பதாக இருந்தாலும் குருபகவானுடைய அனுக்கிரகம் அந்த ஜாதகருக்கு இருக்கிறதா...உதாரணமாக ஒருவருக்கு திருமணம் ஆக வேண்டும் என்றால் குருபலன் வந்துவிட்டதா, வியாழ நோக்கம் வந்துவிட்டதா, குரு பார்வை இருக்கிறதா என்பதைத் தான் முதலில் பார்ப்போம்.
குருப் பகவானை வைத்து தான் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களை ஒருவருடைய ஜாதகத்தில் கணிக்கப்படும். தனகாரகன், சந்தானகாரகன், சுபகாரகன் இது போன்ற பெயர்கள் குருபகவானுக்கு உண்டு.
இத்தகைய குருவிற்கு உகந்த நாள் வியாழன். இந்த நாளில் குறிப்பிட்ட விஷயங்களைச் செய்து வந்தால், வீட்டில் செல்வம் அதிகரிக்கும். வியாழக்கிழமை என்ன செய்தால் செல்வம் அதிகரிக்கும் எனப் பார்ப்போம்...!
வியாழன் அன்று குருவை வணங்கி விரதம் இருக்கலாம். அன்றைய தினம் குருபகவானுக்கு உகந்த மஞ்சள் நிற மலர் அல்லது முல்லை மலரை வாங்கிச் சாற்றலாம். குருவுக்கு உகந்த கொண்டை கடலையை மாலையாகக் கட்டி போடலாம். மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து குருபகவானுக்குரிய ஸ்லோகங்களை சொல்லி வரலாம். இவ்வாறு ஒவ்வொரு வியாழனன்றும் தவறாது செய்து வருவோர் வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று வாழ்வர் என்பது நிச்சயம்.
வேறு என்னென்ன செய்யலாம்?
சிவபெருமானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் லட்டுவை படைத்து வணங்கி வந்தால், அதிர்ஷ்டமும், செல்வமும் வந்து சேரும்.
வியாழக்கிழமைகளில் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்த பின், விளக்கேற்றி விஷ்ணு பகவானை வணங்க வேண்டும். அன்றைய தினம் மஞ்சள் நிற பொருட்களை தானம் வழங்கினால்,
செல்வமும், அதிர்ஷ்டமும் கொட்டும்.
வாழை மரத்திற்கு மஞ்சள் நிற இனிப்பு பலகாரம் எதையேனும் படைத்து வணங்கி, மஞ்சள் நிற உடைகளைத் தானமாக வழங்கினால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாழனன்று இதைச் செய்ய வேண்டும்.
வியாழக்கிழமையில் வாழைப்பழத்தை தானம் வழங்கி வந்தால், அது ஒருவரது வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும்.
அன்றைய தினம், மஞ்சள் நிற சாமந்திப் பூ மாலையை விஷ்ணுவுக்குப் படைத்தால், விஷ்ணு பகவான் மகிழ்ந்து, வீட்டில் செல்வம் பெருகச் செய்வார்.
வியாழக்கிழமைகளில் 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தை மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள். இதனால் வீட்டில் தரித்திரம் நீங்கும். செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் போன்றவை அதிகரிக்கும்

உங்களுக்குத் தெரியுமா? சிறுநீரகக் கற்களை உடைத்துக் கரைத்துவிடும் சக்தி படைத்தது ஆப்பிள் சாறு…

நம்முடைய சிறுநீரகங்கள் திரவக் கழிவுகளை வடிகட்டி சிறுநீராக மாற்றி வெளியேற்றுகின்றன. வடிகட்டும்போது கழிவுகளில் உள்ள இரசாயனப் பொருட்களும், உப்புகளும் சிறுநீரகங்களில் தங்கிவிடுகின்றன. இவையே ஒன்று சேர்ந்து கல்லாக சிறுநீர்க் குழாய்களை வந்தடைகின்றன.
அப்போது சிறுநீர் கழிக்க முடியாமல் எரிச்சல் ஏற்படுகிறது. கற்கள் பெரிதாக இருந்தால் அடி முதுகு, அடிவயிற்றில் சுரீரென்று வலி ஏற்படக்கூடும்.
சிலருக்குக் கற்கள் அமைதியாக இருந்து திடீரென்று சிறுநீர் கழிக்க முடியாமல் வேதனை தரும்.
சிறுநீர் கழிக்க எரிச்சலாக இருந்தாலும் சரி. அடிக்கடி அடி முதுகில் வலி மற்றும் விலாவில் திடீரென்று வலி ஏற்பட்டாலும் சரி, உடனே மருத்துவர் மூலம் சிகிச்சை பெறவேண்டும்.
மருத்துவச் சிகிச்சையுடன் உணவு மருத்துவத்தையும் பின்பற்றினால் சிறுநீரகக் கற்களையும், கோளாறுகளையும் முற்றிலும் குணப்படுத்த முடியும்.
சிறுநீரகக் கற்களை உடைத்துக் கரைத்துவிடும் சக்தி படைத்தது ஆப்பிள் சாறு. காலையில் பழத்தை நன்கு கழுவி தோலைச் சீவாமல் கடித்தோ அல்லது சாறாகவோ அருந்தவும்.
கடுமையான வலியைக் குறைத்து கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டது திராட்சை சாறு.
மாதுளம் பழச்சாறும் கற்களைக் கரைக்கும். மாதுளம் பழ விதைகளை ஒரு தேக்கரண்டி அளவு அரைக்கவும். இதை வாயில் போட்டுக்கொண்டு ஒரு டம்ளர் கொள்ளு ரசமும் அருந்தி வர வேண்டும்.
வாழைப்பழத்தில் புரதம் குறைவு, மாவுச்சத்து அதிகம். இதனால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் பாதுகாப்பாக வாழலாம். தினமும் இரண்டு மூன்று வாழைப்பழங்கள் சாப்பிடவும்.
சிறுநீரகங்கள் சிறப்பாக இயங்க அன்னாசிப்பழச்சாறு, கற்களும் பிரச்னைகளும் இருந்தால் ஆப்பிள், திராட்சை, மாதுளை என்று பழ உணவிற்கு முன்னுரிமை கொடுத்து சாப்பிட்டு வரவும்.
நாவல்பழம், இலங்தைப்பழம், பீச் போன்றவையும் சிறுநீரகக் கோளாறுகளையும், கற்களைக் கரைத்து வலியையும் குணமாக்கும் தன்மை கொண்டவை.
எலுமிச்சம் பழ சர்பத் சிறுநீரகங்களில் தங்கியுள்ள உப்புக்களை கரைத்து சிறுநீர் நன்கு பிரியச் செய்யும்.
சிறுநீர் கழிக்க எரிச்சலாகவும், கஷ்டமாகவும் இருந்தால் பரங்கிக்காய், மணத்தக்காளிப்பழம், வெள்ளரிக்காய் முதலியவற்றை உடனடியாக உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் சிறுநீர் வலியின்றி உடனுக்குடன் பிரியும்

புதன், 1 நவம்பர், 2017

வயிற்று கோளாறுகளை போக்கும் ஓம

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடை சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வாயு தொல்லையை போக்க கூடியதும், செரிமானத்தை தூண்டவல்லதும், வலி வீக்கத்தை குறைக்க கூடியதும், வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்ய கூடியதுமான ஓமத்தின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
அற்புத மருத்துவ குணங்களை கொண்டது ஓமம். இது, சிறுநீரை பெருக்கும் கூடிய தன்மை கொண்டது. வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றும். செரிமானத்தை தூண்டும். இதய நாளத்துக்கு பலம் தருகிறது. வயிற்று புண்களை ஆற்றும். உடலுக்கும், மனதுக்கும் இதம் தருவதாக ஓமம் விளங்குகிறது. ஓமத்தை பயன்படுத்தி வீக்கம், வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஓமம், விளக்கெண்ணெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதனுடன் வறுத்து பொடி செய்த ஓமத்தை சேர்க்கவும். இதை நன்றாக வேகவைத்த பின்னர் களி பதம் வந்தவுடன் சிறிது விளக்கெண்ணெய் சேர்க்கவும். இதை மேல் பூச்சாக பயன்படுத்தினால் மூட்டு மற்றும் தசைகளில் ஏற்படும் வீக்கம், வலி குறையும். அடிபட்ட காயங்கள், அதனால் உண்டாகும் வீக்கம் விலகி போகும். ஓமம் வீக்கத்தை வற்றச் செய்யும் தன்மை உடையது. புண்களை விரைவில் ஆற்ற கூடியது.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட ஓமத்தை பயன்படுத்தி வாயு தொல்லையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஓமம், மோர், உப்பு. செய்முறை: சிறிது மோர் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் ஓமம், சிறிது உப்பு சேர்த்து கலந்து குடித்துவர வாயு தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகள் நீங்கும். வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் மருந்தாக இது விளங்குகிறது. வயிற்றில் ஏற்படும் வலியை போக்கும். ஓமத்தை பயன்படுத்தி செரிமானத்தை தூண்டும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், பணங்கற்கண்டு. செய்முறை: சிறிது சுக்கு, 10 மிளகு, திப்பிலி, ஒரு ஏலக்காய், சிறிது ஓமம் சேர்த்து நசுக்கி எடுக்கவும். இந்த கலவையை நீரில் போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வயிற்று கோளாறுகள் சரியாகும். செரிமானத்தை தூண்டும். வயிற்றுப்போக்கு, காலரா போன்றவற்றுக்கு ஓமம் மருந்தாகிறது.
உமிழ்நீரை சுரக்கும் தன்மை உடையது. இதன் காரணமாக செரிமானம் நன்றாக இருக்கும். ஓமம் உள் மருந்தாகி வயிற்று கோளாறுகளை போக்கும். வெளி மருந்தாகி வீக்கத்தை வற்றச்செய்யும். புண்களை விரைவில் ஆற்றும். விட்டுவிட்டு வரும் காய்ச்சலை குணப்படுத்தும் எளிய மருந்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ஆடாதோடை, சீரகம், வெட்டிவேர், பனங்கற்கண்டு. செய்முறை: ஆடாதோடையோடு வெட்டிவேர், சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து நீரில் இட்டு காய்ச்சி குடித்துவர விட்டுவிட்டு வரும் காய்ச்சல் குணமாகும்.

கண்பார்வை மற்றும் சர்க்கரை நோய்க்கு நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய் சாறு நமக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு நன்மைகளை வாரி வழங்குகிறது. அந்த நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொண்டால் நீங்கள் அதை விரும்பிப் பருகத் தொடங்குவீர்கள். நீங்கள் இதன் சாற்றை குடிக்கும் போது மின்னும் சருமத்திலிருந்து ஆரோக்கியமான உடல்நிலை வரை ஆம்லா வரிசையாக பல அற்புதமான நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது.

விட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து நிரம்பிய நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதால், பல ஆபத்தான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், இது நம் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகிறது.

கண்பார்வை அதிகரிக்கும்
நீண்ட காலத்திற்கு தினமும் நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதால் ஒருவருடைய கண்பார்வை திறன் வெகுவாக மேம்படுகிறது. நெல்லிக்காயில் இயற்பண்பாக விட்டமின் சி நிறைந்துள்ள காரணத்தினால் இது பார்வையை பழுதுபடாமல் பாதுகாப்பதோடு கண் தசைகளை வலிமைப்படுத்துகிறது.

இதயத்திற்கு நல்லது
வழக்கமாக நெல்லிக்காய் சாற்றை பருகுவது உண்மையில் இதயத்திற்கு மிகவும் நல்லது. இந்த ஜூஸ் கெட்ட கொழுப்பு நிலைகளை அடக்குவதால் இதயத்தில் அடைப்புகள் ஏற்படாமல் முன்கூட்டி தடுக்கப்படுகின்றது. மேலும், இந்த ஜூஸில் நிறைந்திருக்கும் அமினோ அமிலங்களும் ஆன்டி ஆக்ஸிடன்டுகளும் இதயத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு உதவுகிறது இதனால் பல இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது
சர்க்கரை நோய் இருந்தால் உங்களை காப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் என்னும் சக்தி வாய்ந்த இயற்கையான உதவி இருக்கும் போது, நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

நெல்லிக்காயிலுள்ள குரோமியம் என்றழைக்கப்படும் மூலக்கூறு இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்களிக்கிறது மேலும் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. நீரிழிவு நோயின் மீது நேர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு இந்தச் சாற்றுடன் மஞ்சளையும் தேனையும் கலந்து பருக வேண்டும்

மன அழுத்தத்தை போக்கும் ஜாதிமல்லி

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மனஅழுத்தத்தை போக்க கூடியதும், தோல்நோய்களை குணப்படுத்தும் தன்மை உடையதுமான ஜாதிமல்லியின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் நாம் காணலாம். ஜாதிமல்லியின் பூக்கள், இலைகள், வேர் ஆகியவை மருத்துவ பயன்களை மிகுதியாக கொண்டவை. இந்த பூக்கள் மிகுந்த மணம் உடையது.
மனக் குழப்பத்தை போக்கும் மணத்தை தருகிறது. இதை தேனீராக பருகும்போது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். காய்ச்சலை தணிக்கும். வலி, வீக்கத்தை போக்கும். இதன் இலைகள் காது வலி, கண் வலி, வாய்ப்புண், ஈறுகளில் ஏற்படும் நச்சுகளை போக்கும் மருந்தாகிறது. ஜாதிமல்லி பூக்களை பயன்படுத்தி மன அழுத்தத்தை போக்கி நல்ல தூக்கத்தை வரவழைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஜாதிமல்லி பூ, பால், தேன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதில், 15 முதல் 20 ஜாதிமல்லி பூக்களை போடவும்.
இதை கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது பால், தேன் சேர்த்து கலந்து குடித்துவர நல்ல தூக்கம் வரும். மன அழுத்தம் விலகும். காய்ச்சல் தணியும். குமட்டல், வாந்தியை தடுக்கிறது. தொடர் இருமலை தணிக்கிறது. மனதுக்கு இதமான சூழலை தருகிறது. மன உளைச்சலை போக்கும். ஜாதிமல்லி பூக்களை கொண்டு தோலில் உண்டாகும் சுருக்கங்களை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், ஜாதிமல்லி. செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
இதனுடன் நீர்விடாமல் அரைத்து வைத்திருக்கும் ஜாதிமல்லி பூக்களை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி தோலின் மீது பூசிவர தோல் சுருக்கங்கள் மறையும். நச்சுக்களை வெளியேற்றும். நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்கும். தோலில் ஏற்படும் நிறமாற்றத்தை தடுக்கிறது. சுருக்கங்களை போக்கி தோலுக்கு பளபளப்பு, மென்மை, அழகை தருகிறது. ஜாதிமல்லி இலைகளை பயன்படுத்தி பூஞ்சை காளான் தொற்று, சிவப்பு தன்மை, அரிப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய், ஜாதிமல்லி பூ. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். இதனுடன், நீர்விடாமல் அரைத்து வைத்திருக்கும் ஜாதிமல்லி இலைகளை சேர்த்து தைலப்பதமாக காய்ச்சி எடுக்கவும். பொடுகுக்கான மேல் பூச்சாக இந்த தைலத்தை பயன்படுத்தலாம். தலையில் 10 நிமிடம் ஊறவைத்து வாரம் ஒருமுறை குளித்துவர பொடுகு சரியாகும். சொரியாசிஸ் உள்ளவர்கள் இதை மேல் பூச்சு தைலமாக பயன்படுத்தலாம். பூஞ்சை காளான்களால் ஏற்படும் தொற்று நீங்கும்.
காதில் சீல் வடியும் நிலையில் ஓரிரு சொட்டுகள் விட்டுவர காது பிரச்னை சரியாகும். இலைகளை அரைத்து கால் ஆணி மீது பூசி வர கால் ஆணி மறையும். அதிகமான காய்ச்சலால் உதடுகளை சுற்றி ஏற்படும் கொப்புளங்கள், புண்களை ஆற்றும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். சீரகத்தை நன்கு பொடியாக அறைத்து பசு வெண்ணெய் சேர்த்து கலந்து பூசிவர கொப்புளங்கள், புண்கள் குணமாகும்