Like us on Facebook

திங்கள், 30 அக்டோபர், 2017


அடிவயிறு முடிந்து, கால்கள் தொடங்கும் இடமே கவட்டை எனப்படும். இப்பகுதி மேல் தொடைகளையும் அடிவயிற்றின் முன்பகுதியின் கீழ்ப் பகுதியையும் கொண்டது, இந்தப் பகுதியில்தான் கால்கள் இணைகின்றன.
கவட்டை வலி என்பது விந்தகங்களில் ஏற்படும் வலியிலிருந்து வேறுபட்டதாகும். ஆனாலும் சில சமயம் விந்தகங்களில் ஏற்படும் வலி, கவட்டைப் பகுதி முழுதும் பரவக்கூடும்.
காரணங்கள் (Causes)

தசை, தசைநார் அல்லது தசைநாண் போன்றவை இழுபடுவதால் வலிக்கலாம்: பெரும்பாலும், கவட்டைப் பகுதியில் ஏற்படும் வலி தசைகளிலேயே (தசை, தசைநார் அல்லது தசைநாணில் ஏற்படும் இறுக்கத்தால் உண்டாகும்). குறிப்பாக கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டில் ஈடுபடும் நபர்களுக்கு இது பெரும்பாலும் உண்டாகும். அடிபட்டால் உடனடியாக இந்த வலி தெரியும் அல்லது சில சமயம் சில வாரங்கள் அல்லது மாதங்கள் செல்லச்செல்ல கொஞ்சம் கொஞ்சமாக வலி தெரியலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் மேலும் இறுக்கம் ஏற்பட்டால் வலி இன்னும் அதிகமாகலாம். வலி விந்தகப் பகுதியிலும் பரவக்கூடும்.
குடலிறக்கம் (ஹெர்னியா)
எலும்பு வலி: இடுப்பு எலும்பு சந்திப்பைப் பாதிக்கின்ற காயம் அல்லது நோயாலும் கவட்டையில் வலி ஏற்படலாம்.
கவட்டை வலிக்கான சில அறிய காரணங்கள்:
விந்து தண்டு முறுக்கப்படுதல் (விந்தகப் பகுதியில் ஏற்படும் முறுக்கம்)
சுருள் சிரைப்பிதுக்கம் (வெரிக்கோசீல், அதாவது விதைப்பையில் உள்ள இரத்த நாளங்கள் வீக்கமடைதல்)
விரைவீக்கம் (விதைப்பை வீக்கம்)
விந்தக அழற்சி (ஆர்ச்சைட்டஸ்) அல்லது எப்பிடிடிமிஸ்
விந்தகத்தில் கட்டி
நிணநீர் கணுக்கள் பெருத்தல்
சிறுநீரகக் கற்கள்
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று
சிறுகுடல் அல்லது பெருங்குடலில் அழற்சி
கவட்டை வலிக்கு உதவும் வீட்டு வைத்தியக் குறிப்புகள் (Home management of groin pain)

இறுக்கம் அல்லது உடல் திரிபின் காரணமாக கவட்டை வலி ஏற்பட்டிருந்தால், அதற்கு சுயமாக சில நிவாரண முறைகளைப் பின்பற்றினால் பலன் கிடைக்கக்கூடும்:
பாதிக்கப்பட்ட இடத்தில் 20-30 நிமிடங்களுக்கு ஐஸ் பேக் போடலாம் அல்லது ஐஸ் ஒற்றடம் கொடுக்கலாம். இவ்வாறு நாளொன்றுக்கு மூன்று நான்கு முறை செய்யலாம்.
மருந்து கடைகளில் கிடைக்கும் பாராசெட்டமால், ஐபுப்ரூஃபேன் போன்ற வலி நிவாரணி மருந்துகளும் வலியைக் குறைக்க உதவும்.
எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்? (When to contact a doctor?)

கீழ்கண்ட அறிகுறிகள் தோன்றினால் உங்களது மருத்துவரைச் சந்திக்கவும்:
எந்தக் காரணமும் இல்லாமலே தொடர்ச்சியாக கவட்டை வலி இருந்தால். .
எரிச்சலுடன் கூடிய வலி இருந்தால். .
வலி கடுமையாக இருந்தால். .
கவட்டை வலியுடன் விதைப்பையிலும் வலியும் வீக்கமும் இருந்தால். .
வீட்டு வைத்திய முறைகளால் வலி ஓரிரு நாட்களில் குறையாமல் தொடர்ந்தால். .
விந்தகம் வளர்ச்சியடைந்தால் அல்லது தோலின் நிறம் மாறினால். .
உடனடி மருத்துவ கவனிப்பு எப்போது தேவை?
கவட்டை வலியுடன் அடிவயிறு, நெஞ்சு அல்லது முதுகு வலியும் இருந்தால். .
கவட்டை வலியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒரு விந்தகத்தில் வலி இருந்தால், குறிப்பாக வலி திடீரென்று தோன்றியிருந்தால். .
விந்தகத்தில் வலியுடன் காய்ச்சலும், குளிரும் இருந்தால் அல்லது சிறுநீருடன் இரத்தம் வெளிவந்தால். .
நோய் கண்டறிதல் (Diagnosis)

உங்கள் மருத்துவர் கவட்டைப் பகுதியைப் பரிசோதித்து, உங்கள் மருத்துவ வரலாறு மற்றும் அறிகுறிகள் போன்றவை தொடர்பாக பின்வரும் கேள்விகளைக் கேட்கலாம்:
கவட்டை வலி எப்போது தொடங்கியது?
வலி ஒரே மாதிரி உள்ளதா அல்லது கடுமையாகிறதா?
தொடர்ச்சியாக வலி உள்ளதா அல்லது அவ்வப்போது வந்து வந்து போகிறதா?
வேறு ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா? அவை என்ன?
சமீபத்தில் ஏதேனும் அடிபட்டதா?
அதிக பளு ஏதேனும் தூக்கினீர்களா? அல்லது உடல் அதிக சிரமப்படும்படி கஷ்டமான செயல் ஏதேனும் செய்தீர்களா?
சிறுநீர் கழிப்பதில் சிரமம் உள்ளதா? அல்லது சிறுநீர் நிறம் மாறியுள்ளதா?
பால்வினை நோய் ஏதேனும் இருந்துள்ளதா?
பரிசோதனைகள்
பின்வரும் பரிசோதனைகள் செய்யப்படலாம்:
இரத்தத்தின் எல்லாப் பகுதிப்பொருள்களின் எண்ணிக்கை கண்டறியும் இரத்தப் சோதனை மற்றும் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் சோதனை ஆகிய இரத்தப் பரிசோதனைகள்
அல்ட்ராசவுண்ட் மற்றும் பிற ஸ்கேன்கள்
சிறுநீர் பகுப்பாய்வு
சிகிச்சை (Treatment)

கவட்டை வலிக்கான சரியான சிகிச்சை என்பது, இந்தப் பரிசோதனைகளின் இறுதி முடிவையும், அறிகுறிகள் எவ்வளவு நாட்கள் இருந்தன என்பதையும் பொறுத்ததாகும்

ஆண்களுக்கு ஏற்படும் கவட்டை வலி பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை (Groin Pain in Men)


அடிவயிறு முடிந்து, கால்கள் தொடங்கும் இடமே கவட்டை எனப்படும். இப்பகுதி மேல் தொடைகளையும் அடிவயிற்றின் முன்பகுதியின் கீழ்ப் பகுதியையும் கொண்டது, இந்தப் பகுதியில்தான் கால்கள் இணைகின்றன.
கவட்டை வலி என்பது விந்தகங்களில் ஏற்படும் வலியிலிருந்து வேறுபட்டதாகும். ஆனாலும் சில சமயம் விந்தகங்களில் ஏற்படும் வலி, கவட்டைப் பகுதி முழுதும் பரவக்கூடும்.
காரணங்கள் (Causes)

தசை, தசைநார் அல்லது தசைநாண் போன்றவை இழுபடுவதால் வலிக்கலாம்: பெரும்பாலும், கவட்டைப் பகுதியில் ஏற்படும் வலி தசைகளிலேயே (தசை, தசைநார் அல்லது தசைநாணில் ஏற்படும் இறுக்கத்தால் உண்டாகும்). குறிப்பாக கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டில் ஈடுபடும் நபர்களுக்கு இது பெரும்பாலும் உண்டாகும். அடிபட்டால் உடனடியாக இந்த வலி தெரியும் அல்லது சில சமயம் சில வாரங்கள் அல்லது மாதங்கள் செல்லச்செல்ல கொஞ்சம் கொஞ்சமாக வலி தெரியலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் மேலும் இறுக்கம் ஏற்பட்டால் வலி இன்னும் அதிகமாகலாம். வலி விந்தகப் பகுதியிலும் பரவக்கூடும்.
குடலிறக்கம் (ஹெர்னியா)
எலும்பு வலி: இடுப்பு எலும்பு சந்திப்பைப் பாதிக்கின்ற காயம் அல்லது நோயாலும் கவட்டையில் வலி ஏற்படலாம்.
கவட்டை வலிக்கான சில அறிய காரணங்கள்:
விந்து தண்டு முறுக்கப்படுதல் (விந்தகப் பகுதியில் ஏற்படும் முறுக்கம்)
சுருள் சிரைப்பிதுக்கம் (வெரிக்கோசீல், அதாவது விதைப்பையில் உள்ள இரத்த நாளங்கள் வீக்கமடைதல்)
விரைவீக்கம் (விதைப்பை வீக்கம்)
விந்தக அழற்சி (ஆர்ச்சைட்டஸ்) அல்லது எப்பிடிடிமிஸ்
விந்தகத்தில் கட்டி
நிணநீர் கணுக்கள் பெருத்தல்
சிறுநீரகக் கற்கள்
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று
சிறுகுடல் அல்லது பெருங்குடலில் அழற்சி
கவட்டை வலிக்கு உதவும் வீட்டு வைத்தியக் குறிப்புகள் (Home management of groin pain)

இறுக்கம் அல்லது உடல் திரிபின் காரணமாக கவட்டை வலி ஏற்பட்டிருந்தால், அதற்கு சுயமாக சில நிவாரண முறைகளைப் பின்பற்றினால் பலன் கிடைக்கக்கூடும்:
பாதிக்கப்பட்ட இடத்தில் 20-30 நிமிடங்களுக்கு ஐஸ் பேக் போடலாம் அல்லது ஐஸ் ஒற்றடம் கொடுக்கலாம். இவ்வாறு நாளொன்றுக்கு மூன்று நான்கு முறை செய்யலாம்.
மருந்து கடைகளில் கிடைக்கும் பாராசெட்டமால், ஐபுப்ரூஃபேன் போன்ற வலி நிவாரணி மருந்துகளும் வலியைக் குறைக்க உதவும்.
எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்? (When to contact a doctor?)

கீழ்கண்ட அறிகுறிகள் தோன்றினால் உங்களது மருத்துவரைச் சந்திக்கவும்:
எந்தக் காரணமும் இல்லாமலே தொடர்ச்சியாக கவட்டை வலி இருந்தால். .
எரிச்சலுடன் கூடிய வலி இருந்தால். .
வலி கடுமையாக இருந்தால். .
கவட்டை வலியுடன் விதைப்பையிலும் வலியும் வீக்கமும் இருந்தால். .
வீட்டு வைத்திய முறைகளால் வலி ஓரிரு நாட்களில் குறையாமல் தொடர்ந்தால். .
விந்தகம் வளர்ச்சியடைந்தால் அல்லது தோலின் நிறம் மாறினால். .
உடனடி மருத்துவ கவனிப்பு எப்போது தேவை?
கவட்டை வலியுடன் அடிவயிறு, நெஞ்சு அல்லது முதுகு வலியும் இருந்தால். .
கவட்டை வலியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒரு விந்தகத்தில் வலி இருந்தால், குறிப்பாக வலி திடீரென்று தோன்றியிருந்தால். .
விந்தகத்தில் வலியுடன் காய்ச்சலும், குளிரும் இருந்தால் அல்லது சிறுநீருடன் இரத்தம் வெளிவந்தால். .
நோய் கண்டறிதல் (Diagnosis)

உங்கள் மருத்துவர் கவட்டைப் பகுதியைப் பரிசோதித்து, உங்கள் மருத்துவ வரலாறு மற்றும் அறிகுறிகள் போன்றவை தொடர்பாக பின்வரும் கேள்விகளைக் கேட்கலாம்:
கவட்டை வலி எப்போது தொடங்கியது?
வலி ஒரே மாதிரி உள்ளதா அல்லது கடுமையாகிறதா?
தொடர்ச்சியாக வலி உள்ளதா அல்லது அவ்வப்போது வந்து வந்து போகிறதா?
வேறு ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா? அவை என்ன?
சமீபத்தில் ஏதேனும் அடிபட்டதா?
அதிக பளு ஏதேனும் தூக்கினீர்களா? அல்லது உடல் அதிக சிரமப்படும்படி கஷ்டமான செயல் ஏதேனும் செய்தீர்களா?
சிறுநீர் கழிப்பதில் சிரமம் உள்ளதா? அல்லது சிறுநீர் நிறம் மாறியுள்ளதா?
பால்வினை நோய் ஏதேனும் இருந்துள்ளதா?
பரிசோதனைகள்
பின்வரும் பரிசோதனைகள் செய்யப்படலாம்:
இரத்தத்தின் எல்லாப் பகுதிப்பொருள்களின் எண்ணிக்கை கண்டறியும் இரத்தப் சோதனை மற்றும் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் சோதனை ஆகிய இரத்தப் பரிசோதனைகள்
அல்ட்ராசவுண்ட் மற்றும் பிற ஸ்கேன்கள்
சிறுநீர் பகுப்பாய்வு
சிகிச்சை (Treatment)

கவட்டை வலிக்கான சரியான சிகிச்சை என்பது, இந்தப் பரிசோதனைகளின் இறுதி முடிவையும், அறிகுறிகள் எவ்வளவு நாட்கள் இருந்தன என்பதையும் பொறுத்ததாகும்

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

திருப்பதி செல்ல இயலாதவர்களும், சென்று திருவேங்கடவனை திருப்தியாய் தரிசனம் செய்யாதவர்களும் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளை அதே உருவில் மூலவராகத் தரிசனம் செய்ய உகந்த தலம் திருமலைவையாவூர்.
ராமாயண யுத்தம் நடந்த 14-ம் நாளில் ஸ்ரீ லக்ஷ்மணர் காயம்பட்டு விழ, ராமபிரானின் கட்டளைப்படி ஸ்ரீ அனுமன் சஞ்சீவி மலையை பெயர்த்து தூக்கி வந்தார், சஞ்சீவி பர்வதத்தை தனது கைகளில் சுமந்து வந்த போது சற்று இளைப்பாற எண்ணி, மலையைக் கீழே வைக்காமல் தனது ஒரு கையிலிருந்து மறுகைக்கு மலையை மாற்றிக் கொண்டு நின்றார். அச்சமயம், சஞ்சீவி பர்வதத்தின் ஒரு பகுதி சிதறி விழுந்தது. மலையை கீழே வைக்காத ஊர் என்பதே மருவி வையாவூர் ஆகி, திருமலைவையாவூர் எனப் பெயர் வழங்கத் தொடங்கியது.
முன்னையகோன் என்பவன், அந்தப்பகுதி மக்களின் தலைவனாக இருந்தான். அந்த மலை மற்றும் ஒட்டியுள்ள காட்டுப் பகுதிகளில் தினமும் பசுக்களை மேய்த்து வந்தான். ஒருநாள், அந்த மலைமீதிருந்த ஒரு பெரிய கற்பாறை அவனுக்கு தெய்வத் திருமேனியாகத் தெரிந்தது. தினமும் மாடுகளை மேய விட்டு உச்சிப்போதில் அவனுடைய மனைவி பிராட்டிகோன் கொண்டுவரும் கேழ்வரகுக் கூழை அந்தக் கல்லின் முன்னே வைத்து, நைவேத்தியம் செய்துவிட்டு, பிறகு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவனுடைய பக்தியை உலகுக்கு உணர்த்த விரும்பிய பெருமாள், புனை வேடமிட்டு அவன் முன்னே வந்தார்.
"பிருகு மகரிஷி இருக்கும் மலைக்குச் செல்லும் பாதை தெரியவில்லை. உங்களைப் பார்த்ததும் இங்கு வந்தேன்'' என்றவர், கேழ்வரகு நைவேத்தியத்தைப் பார்த்துவிட்டு "'கோன் குலத்தில் பிறந்த நீ பகவானுக்கு, பால் நைவேத்தியம் செய்யாமல், கேழ்வரகு கூழ் வைத்து நைவேத்தியம் செய்கிறாயே! இருந்தாலும் உன் உழைப்பின் மூலம் உருவான சுத்தமான, பால் நைவேத்தியம் செய்து வழிபடு'' என்று சொல்லிச் சென்றார். அன்று முதல், முன்னையகோன் தன் மனைவியுடன் வந்து, உரிய முறையில் பால் நிவேதனம் செய்து பின்னர் கூழையும் நிவேதனம் செய்து வழிபட்டு வந்தான்.
ஒருநாள், நேரில் தோன்றிய பெருமாள் "என்ன வரம் வேண்டும்?' எனக் கேட்க, அதற்கு, "தாங்கள் இங்கேயே நிரந்தரமாக இருந்து வேண்டுவோருக்கு வேண்டுவதைத் தரும் வேங்கடவனாக நித்ய வாசம் செய்ய வேண்டும். நானும் என் மனைவியும் நின் காலடிக்கீழ் கிடந்து உன் வடிவழகை சதா சேவித்துக் கொண்டிருக்கும் நிலை வேண்டும்'' என வேண்டினான். பெருமாளும் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் எனும் திருநாமத்துடன் அருள்செய்வதாகவும் இது ஆதிவராக க்ஷேத்திரம் என்பதால் அவ்வுருவிலும் தாம் அருள்வதாக வாக்களித்தார்.
காலங்கள் உருண்டோடின.. முகலாயப் பேரரசர் அக்பருடன் இருந்த ராஜா தோடர்மால் திருப்பதி திருத்தலத்துக்கு ஏராளமான திருப்பணிகள் செய்திருக்கிறார். பெருமாள் சொன்னதின் பேரில் இம்மலைக்குத் தரிசிக்க வந்த போது, முன்னையக்கோன், பிராட்டிகோன் பணியை அறிந்து கோயில் முழுவதையும் கருங்கல்லால் கட்டி பெருமாளின் திரு முன்பு அவர்கள் சதா சேவை செய்யும் வகையில் கிடத்தினான். அதோடு இந்தப் பெருமாளை தான் தினமும் வணங்கும் வகையில் தன் விக்ரகத்தைச் செய்து இறைவனை வழிபடும் வகையில் கோயிலில் நிறுத்தினான்.
ராஜாதோடர்மாலுக்கு இங்கு மட்டுமே உருவச்சிலை இருப்பதாக அறிய முடிகிறது! ஆதிவராக ஷேத்திரம் என்பதற்கு ஏற்ப, கொடி மரத்திற்கு எதிரில் லட்சுமி வராகர் சந்நிதி உள்ளது. பிரதான மூர்த்தியான இவருக்கே முதல் தீபாராதனை நடைபெறும். பிரசன்னவெங்கடேசருக்கு விழா நடக்கும் போதும் கூட, இவரது சந்நிதியில் தான் கொடி ஏற்றப்படும். மேலும் ஸ்ரீசக்கரத்தாழ்வார், வேணுகோபாலர், ராமருக்கு சந்நிதிகள் இருக்கின்றன. பெரிய நம்பியைச் சந்திக்க ஸ்ரீராமாநுஜர் மதுராந்தகம் செல்லும் வழியில் இப்பெருமாளை கண்டு வணங்கி ஆசி பெற்றுச் சென்றதாகத் தகவல்கள் இருக்கின்றன.
மூலஸ்தானத்தில் பெருமாள் செங்கோலுடன் ராஜ அலங்காரத்தில் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாளாக நின்ற திருக்கோலத்தில் சாளக்கிராம மாலை, அஷ்டலட்சுமி ஆரம், ஸ்ரீலட்சுமி ஆரம், தசாவதார திருக்கோலங்கள் கொண்ட ஆபரணத்தை மாலையாகவும் ஒட்டியாணமாகவும் அணிந்தபடி ஆதிசேஷன் குடை பிடிக்க நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இரு மார்புகளிலும் இரண்டு மகாலட்சுமிகள் என்றும் நீங்காது அருள் புரிகின்றனர். இங்கு, ஒரே வளாகத்துக்குள் தனித்தனி சந்நிதியில் பெருமாளையும் அலர்மேல்மங்கைத் தாயாரையும் தரிசிக்கலாம். நேமியோன் என்னும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் இங்கு தனிக் கோயிலில் எழுந்தருளியுள்ளார்.
மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில் வணங்குவதால் சகல ஐஸ்வரியமும் கிடைக்கும் என்பதால் மக்கள் வரத்து அதிகம்! பங்குனி உத்திரத்தில் தாயாருக்கும்; ஆடிப்பூரத்தன்று ஸ்ரீ ஆ

அந்த சமாசாரத்துக்கு முருங்கைக்காய் ஏன் தெரியுமா? ஆண்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் முருங்கைக்காயில் நாம் நினைத்தது பார்க்காத அளவுக்கு ஏராளமான சத்துக்களும், நன்மைகளும் நிறைந்துள்ளது.
முருங்கை மரத்தில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் அதிக மருத்துவக் குணங்கள் வாய்ந்ததாக இருக்கிறது.
முருங்கை காயில் இரும்புச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, விட்டமின் C போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

முருங்கை காய்

முருங்கைக் காயுடன் நெய் மற்றும் புளி சேர்த்து சமைத்து சாப்பிடுவதால், மிகுந்த சுவையுடனும், உடலுக்கு நல்ல வலிமையையும் தருகின்றது. அதிலும் பிஞ்சு முருங்கைக்காய் ஒரு பத்திய உணவாக பயன்படுகிறது.
அன்றாட வாழ்வில் நம் உணவில் முருங்கைக் காயை வேக வைத்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்துச் சாப்பிட்டால், வயிற்றுப் போக்கு, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களில் இருந்து விடுபடலாம்.
முருங்கைக் காயை மற்றும் அதன் விதைகளை தினமும் சூப் செய்து சாப்பிட்டால், மூட்டு வலியைப் போக்கி, மூளைக்கு நல்ல பலத்தை தருகின்றது.
முருங்கை இலை

முருங்கை இலையில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் இருப்பதால், இதை நறுக்கி, பின் மிளகு சேர்த்து ரசம் வைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், உடம்பின் வலிகள் அனைத்தும் காணாமல் போய்விடும்.
முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால், ரத்தம் அதிகரித்து, ரத்த சோகை வராமல் தடுக்கும். பற்கள் வலுவாகி, தோல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளின் எலும்புகள் வலிமையாக இருக்கும். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்துகிறது.
முருங்கைப் பூ

முருங்கை பூவை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால், வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் சூடு, மந்தம், கண்நோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக் கூறலாம்.
முருங்கைப் பட்டை

முருங்கைப் பட்டையில் இரும்பு சத்து அதிகமாக நிறைந்துள்ளது. எனவே முருங்கைப் பட்டையை சிறிதளவு நீர்விட்டு அரைத்து வீக்கங்கள் மற்றும் வாயு தங்கிய இடங்களில் போட்டால் உடனே நல்ல பலன் கிடைக்கும்.


மேலும் இது உணவில் உள்ள நச்சுக்களை நீக்கி, நரம்புக் கோளாறு, மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு பயனுள்ள மருந்தாகவும் பயன்படுகிறது.

சனி, 28 அக்டோபர், 2017

பிராய்லர் கோழி சாப்பிடுவதால் ஆண், பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான சில பிரச்சனைகள்



பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்
பிராய்லர் கோழி யாரும் சாப்பிடவேண்டாம். அதனை சாப்பிடுவதனால் அதிகமாக உடம்பு எடை அதிகமாகிறது.
மிக குறைந்த வயதில் பெண்கள் பருவம் அடைகின்றனர்.
மாதவிடாய் நேரங்கள் சரியாக வருவதில்லை. அதாவது குறிப்பிட்ட கால அளவுக்குள் சரியாக வருவது கிடையாது. இதனால் பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது.
மிக குறைந்த வயதில் கர்ப்பப்பை பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க வேண்டி உள்ளது.  பெண்கள் சிறு வயதிலேயே பிராய்லர் கறி கோழி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். உங்கள் உடம்புக்கு நல்லது.
உணவில் நல்ல அதிக அளவு காய்கறி எடுத்து கொள்ளுங்கள்.
கோழிகள் அதிக சதையோடு வளர்வதற்கு பல்வேறு விதமான மருந்துகளை ஊசிகளின் மூலம் கோழிகளுக்கு செலுத்துகிறார்கள். அதனால் அதை உண்ணும் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது. பெண்குழந்தைகள் பத்து பதினோரு வயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள்.
தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
இரும்பு சத்துள்ள முருங்கை கீரை, உளுந்த கஞ்சி, மாதுளம் பழம், எல்லா சத்தும் நிறைந்த பழமான கொய்யபழம் போன்றவற்றை உணவில் அதிக அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.





நவ்வாப்பழம் சாப்பிடுவதால் உடல் சூட்டை நன்றாக குறைக்கும்.

குறிக்கப்பட்டது நாள்..! பீதியை ஏற்படுத்தும் டிசம்பர் 12..! நடக்குமா

       குறிக்கப்பட்டது நாள்..! பீதியை ஏற்படுத்தும் டிசம்பர் 12..!  நடக்குமா ?


பஞ்சாங்கத்தில் ஒரு சிலர் அதிகமாக  நம்பிக்கை வைத்து இருப்பார்கள்.பலர் அதை பற்றி நினைத்து கூட  பார்க்க  மாட்டார்கள்.
இருந்த போதிலும் தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில ஆண்டிகளாகவே செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான  கால கட்டத்தில், ஏதாவது அசம்பாவிதம் நடந்து தான் வருகிறது.இந்நிலையில் இந்த  ஆண்டு  இறுதிக்குள்  என்ன நடக்கப்போகிறது என  ஆற்காடு கா.வெ.சீதாரம்மய்யர் பஞ்சாங்கம் மூலம் தெரிவித்துள்ளார்.அதில்,
ஹேவிளம்பி ஆண்டு!!!  !வடகிழக்கு பருவமழை 2017
13 காற்றழத்த தாழ்வு மண்டலம் 7 பலஹீனம் ; 6 காற்றழத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து!
திருவள்ளூர் ,நெல்லூர் ,விசாகபட்டினம், விஜயவாடா,ஒரிசா, அந்தமான், சென்னை, கடலூர், திருவாருர்,நாகப்பட்டினம்,மாயவரம்,கும்பகோணம்,கடலோர மாவட்டம்,சென்னையை தாக்கும்!!!!
22.10.17  அரபிக்கடலில் காற்றழத்த தாழ்வு மண்டலம்
30.10.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம்
8.11.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம் 1210 கி.மீ
14.11.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம்  இராமேஸ்வரம் கிழக்கே 1450 கி.மீ
20.11.2017 அந்தமான் காற்றழத்த தாழ்வு மண்டலம் 1510 கி.மீ புயல் வீசும்
28.11.2017  காற்றழத்த தாழ்வு மண்டலம்,கடலூர் 1550 கி.மீ
5.12.2017   இடியால் மலேசியா பதிப்பு- சென்னையை உலுக்கும்,மிதக்கும்,காற்றழத்த தாழ்வு ஆந்திரா கிழக்கு 1310 கி.மீ
அசாம் பாதிப்பு!!
15.12.2017 காற்றழத்த் தாழ்வு மண்டலம் பாண்டி 1625 கி.மீ.திருவண்ணாமலை பாதிப்பு
17.12.2017,26.12.2017, லேசான காற்றழத்த தாழ்வு
3.1.2018   திருப்பதியில் சோகநிகழ்ச்சி நடக்கும் !
12.1.2018  அந்தமான் மழையால் கடும் பாதிப்பு , சுறாவளியுடன் புயல் வீசும் , சுற்றுலா பயணிகள் பாதிப்பு ..
12.12.2017 சென்னை இருளில் முழ்கும் ! பிரளயம் ..!  (அரசியல் தலைவர்களுக்கு ஆபத்து !)
கணித்தவர்:          
ஆற்காடு கா.வெ.சீதாரம்மய்யர் பஞ்சாங்கம்.
இந்த பஞ்சாங்கம் படிதான் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் பஞ்சாங்கப்படி  மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது நிலவி  வருகிறது. அவர் குறிப்பிட்டுள்ள படி, அந்த  நாட்களில் என்ன நடக்கிறது என்பதை  பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 

திங்கள், 16 அக்டோபர், 2017

இனி பணம் எடுக்க கட்டணம், கட்டுப்பாடு இல்லை: எஸ்பிஐ



புதுடில்லி : வாடிக்கையாளர்கள் ஏடிஎம்.,களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டு வந்த கட்டணம் மற்றும் பணம் எடுப்பதற்கான வரையறையை திரும்பப் பெறுவதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி கிளாசிக் டெபிட் கார்டு வைத்திருப்போர் இனி நாள் ஒன்றிற்கு ரூ.40,000 வரை பணம் எடுக்கலாம். ஆன்லைன் பண பரிவர்த்தனை அளவும் ரூ.50,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கிளாசிக் டெபிட் கார்டுகளுக்கான ஆண்டு பராமரிப்பு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி உடனான ரூ.300, இனி ஜிஎஸ்டி உடன் ரூ.100 ஆக குறைக்கப்படும்.
பிரைடு மாஸ்டர் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுப்பதற்கான அளவு ரூ.1 லட்சமாகவும், ஆன்லைன் பணபரிவர்த்தனை அளவு ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்படுகிறது. இதற்கான ஆண்டு பராமரிப்பு கட்டணம் ஜிஎஸ்டி உடன் ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பிளாடினம் டெபிட் உடனான ஏடிஎம் கார்டு வைத்திருப்போர் இனி தினமும் ரூ.2 லட்சம் வரை எடுக்கலாம். ஆன்லைன் பணபரிவர்த்தனை ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்படுகிறது. ஆண்டு பராமரிப்பு கட்டணம் ஜிஎஸ்டி உடன் ரூ.350 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்கள் இனி தங்களின் தவணை தொகையை கிரெடிட் கார்ட்கள் மூலமும் செலுத்தலாம். மொபைல் டாப் அப் செய்ய, செக் புக் வாங்குவதற்கு உள்ளிட்ட தேவைகளுக்கும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எஸ்பிஐ குழுமத்திற்கு உட்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்.,களில் கட்டணம் இன்றி பண பரிவர்த்தனை செய்ய முடியும். ஒருநாளைக்கு பணம் எடுப்பதற்கான அளவு ரூ.2 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்பிஐ ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைனின் பொருட்கள் வாங்குவதற்கான அளவு ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

திங்கள், 9 அக்டோபர், 2017

உங்களுக்குத் தெரியுமா? சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள் உணவில் மிளகு சேர்ப்பது அவசியம்…

எல்லோருமே சளி, இருமலால் அடிக்கடி அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். சளி, இருமல் அந்த அளவுக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. இவற்றுக்குத் தீர்வு, நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியிலேயே இருக்கிறது.
சளி இருமல் போக்க என்ன செய்யலாம்?
** உணவில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும். சுரைக்காய், தடியங்காய் (வெள்ளைப் பூசணி), மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்றவற்றை சில வாரங்களுக்குத் தவிர்ப்பது நல்லது. கண்டிப்பாக இவற்றைச் சாப்பிடவேண்டிய சூழல் ஏற்பட்டால், மிளகுத்தூள் தூவிச் சாப்பிடலாம். இதன் மூலமாக சளி, இருமல் தவிர்க்கலாம்.
** பால், தயிர், இனிப்பு மூன்றும் நுரையீரலில் கபத்தை (சளி) சேர்க்கக் கூடியவை. இவற்றையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சாக்லேட், ஐஸ்க்ரீம் வேண்டவே வேண்டாம். பழங்களில் எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை தவிர மற்றவற்றைச் சாப்பிடலாம்.
** மிளகு ஓர் அற்புதமான மருத்துவ உணவுப்பொருள். தும்மல், அலர்ஜியால் வரும் சளி ஆஸ்துமாவில் தங்கும் சளிக்கு உடனடியாகவும் நாட்பட்ட பலனையும் அளிக்கும். சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள் ஒவ்வோர் உணவிலும் மிளகு சேர்ப்பது அவசியம்.
** குழந்தைக்கு இரவில் மட்டும் இருமல் ஏற்படுகிறதா? நான்கு மிளகை எடுத்து தூளாக்கி, ஒரு டீஸ்பூன் தேனில் கலந்து, இளஞ்சூடாக்கி, கால் டம்ளர் தண்ணீரில் உறங்குவதற்கு முன்னர் பருகக் கொடுக்கலாம். இருமல் நீங்கி, இதமான தூக்கம் கிடைக்கும். குழந்தை, வெண்பொங்கலில் இருக்கும் மிளகை பொறுக்கி எடுத்துப் போட்டால் செல்லமாக மிரட்டி சாப்பிட வைக்கலாம்.
** பாசிப் பயறு கொஞ்சம் குளிர்ச்சியானது. குளிர்காலத்தில் இரவில் தவிர்க்கவும். ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள், இரவில் வெண்பொங்கல் சாப்பிடுவதைத் தவிர்த்தால், சளி, இருமல் தவிர்க்கலாம்.
** மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மதியம் சாப்பிடும்போது, மணத்தக்காளி வற்றலை வறுத்துப்போட்டு, முதல் கவளத்தை சாப்பிட்டுவிட்டு, பிறகு குழம்பு, காய் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
** மோர் சளி தராது. எனவே, அதை தாராளமாகச் சாப்பிடலாம். தயிர்தான் நல்லதல்ல. தயிர் செரிமானத்தை மந்தப்படுத்தும். மோர் சீர்ப்படுத்தும். தயிர் கபத்தை வளர்க்கும். மோர், பித்தம் நீக்கி, கபத்தைக் குறைக்க உதவும்.
** திப்பிலியை இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து தேனில் உணவுக்கு முன்னர் 3 சிட்டிகை அளவில் கலந்து சாப்பிட்டால் சளி குறையும்.
** காலை காபிக்கு பதில் முசுமுசுக்கை மற்றும் கரிசாலை உலர்ந்த இலைகளைக் கஷாயமாக்கி, பனங்கருப்பட்டி சேர்த்துப் பருகிவந்தால், காலை வேளையில் ஏற்படும் இளைப்பு உடனடியாகக் குறையும்.
** பிரைமரி காம்ப்ளெக்ஸ் நுரையீரல் காசநோய் (Primary Complex – Pulmonary Tuberculosis) இருக்கும் குழந்தைகளுக்கு சத்துமாவு மிக அவசியம். புழுங்கல் அரிசி, பார்லி அரிசி, உளுந்து, கேழ்வரகு, நிலக்கடலை, மக்காச்சோளம், முளைகட்டிக் காயவைத்த கொண்டைக்கடலை, பாசிப்பயறு, முந்திரி, பாதாம் பருப்பு, ஏலக்காய் இவற்றை வறுத்து, மாவாகத் திரித்து சத்துமாவைச் செய்து கொள்ளலாம்.
கஞ்சி காய்ச்சிய பின் இனிப்புக்கு பனங்கருப்பட்டி அல்லது கற்கண்டு, சிறிது சுக்குத்தூள் சேர்த்து சூடாக அருந்தக் கொடுக்கவும். அசைவப் பிரியம் உள்ள குழந்தைக்கு, பால் நண்டு சமைத்துக் கொடுக்கலாம்." - உங்களுக்குத் தெரியுமா? சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள் உணவில் மிளகு சேர்ப்பது அவசியம்…

"புளிச்சக் கீரையில் அடங்கியுள்ள அற்புத மருத்துவ குணங்கள் இதோ… 


புளிச்சக் கீரை கட்டிகளை ஆற்ற கூடியதும், பித்தத்தை போக்கவல்லதும், உடல் வலி, வீக்கத்தை குணமாக்கும் தன்மை கொண்டதும், பசியை தூண்டக் கூடியது.
புளிச்ச கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சமையலில் பயன்படுத்த கூடியது இது, அற்புதமான மூலிகையாக விளங்குகிறது. மேல் பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது.
உள் உறுப்புகளுக்கு புத்துணர்வு கொடுக்க கூடியது. வலி, வீக்கத்தை போக்கும். புண்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது.புளிச்ச கீரையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. தோல், எலும்புகள் பாதிப்படைவதை தடுக்கிறது.
ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. புளிச்ச கீரையை நன்றாக அரைத்து, பூசுவதால் கட்டிகள் விரைவில் கரையும்.
புளிச்ச கீரையின் பூக்களை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம்.
பூக்களை நசுக்கி சாறு எடுக்கவும். ஒரு ஸ்பூன் சாறில், 2 சிட்டிகை மிளகுப் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட இருமல் சரியாகும். சளியை கரைத்து வெளியேற்றும். சுவாச கோளாறை போக்குகிறது.
வயிற்றில் அமிலத்தன்மை குறையும்போது பசி இல்லாமல் போகிறது. புளிச்ச கீரை பசியை தூண்டும். நோய் எதிர்ப்பு சக்தி உடையது.
புளிச்ச கீரையின் மொட்டுக்களை பயன்படுத்தி வாய் கசப்பு, வாந்திக்கான மருந்து தயாரிக்கலாம்:
இதற்கு தேவையான பொருட்கள்:
புளிச்ச கீரை மொட்டுக்கள், மிளகுப் பொடி, தேன். சுமார் 10 மொட்டுக்களை எடுத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் விட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கட்டிய பின் உப்பு, மிளகு, தேன் சேர்த்து கலந்து குடித்தால் தலைசுற்றல் சரியாகும். பித்த வாந்திக்கான மருந்தாகிறது.
பல்வேறு நன்மைகளை கொண்ட இந்த கீரை புளிப்பு சத்தை உடையது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிற்று புண்களை ஆற்றும். பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, அரிப்பு, மயக்கம் ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. பித்த சமனியாக விளங்குகிறது. புளிச்ச கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதய நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
புளிச்ச கீரையை பயன்படுத்தி சூப் தயாரிக்கலாம்:
தேவையான பொருட்கள்:
புளிச்ச கீரை, பட்டை, பூண்டு, வெங்காயம், நல்லெண்ணெய், மிளகுப்பொடி, உப்பு.
பாத்திரத்தில் நல்லெண்ணெய் காய்ந்தவுடன் ஒரு துண்டு பட்டை, 2 பல் பூண்டு தட்டி போடவும். வெங்காயம் வதங்கியவுடன் புளிச்ச கீரையை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
வடிகட்டி மிளகு பொடி சேர்த்து குடித்துவர உடல்நலம் பெறும். புளிச்ச கீரை உன்னதமான உணவு மற்றும் மருந்தாகிறது. ஊடு பயிராக பயிரிடப்படும் இது வாயு கோளாறுகளை போக்கும்.
சத்து குறைபாட்டினால் ஏற்படும் எலும்புருக்கி நோயை குணமாக்கும். வாந்தியை நிறுத்த கூடியது. மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது. சிறுநீரக கோளாறுகளை போக்கும். சிறுநீர் பெருக்கியாக உள்ளது" - புளிச்சக் கீரையில் அடங்கியுள்ள அற்புத மருத்துவ குணங்கள் இதோ…

உடலுறவுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளும் கருத்தடை மாத்திரைகள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

தேவையற்ற கர்ப்பத்தைத் தடுப்பதற்காக, உடலுறவுக்குப் பிறகு கூடிய விரைவில் எடுத்துக்கொள்ளும் அவசரநிலை கருத்தடை மாத்திரைகள் உள்ளன. கருமுட்டை வெளியிடப்படும் செயலைத் தடுப்பதன்மூலம்/தாமதிப்பதன் மூலம் இவை கருத்தடை செய்கின்றன என்று கூறப்படுகிறது. இவை மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கக்கூடியவை. ஆனாலும் இவை பற்றி பலருக்கு அதிகம் தெரிவதில்லை. இந்த அவசரநிலை கருத்தடை மாத்திரைகள் பற்றிய சில தவறான கருத்துகளைப் பற்றித் தெளிவு படுத்தவே கீழே சில தகவல்களைக் கொடுத்துள்ளோம்:


1. இவற்றை காலையில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தவறு (Not only meant for morning after)

உடலுறவுக்குப் பிறகு எவ்வளவு முடியுமோ அவ்வளவு முன்கூட்டியே இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வது சிறந்த பலன் கொடுக்கும், ஆங்கிலத்தில் இவற்றை மார்னிங்-ஆஃப்டர் பில்ஸ் என்பார்கள், அதை வைத்து இவற்றை காலையில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டாம்!
2. மற்ற முறைகளைவிட இவை அதிக பலன் கொடுப்பவை (Morning-after pills can be relatively effective)

பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு 24 மணிநேரத்திற்குள் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் அதில் 95% பலன் கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், 72 மணிநேரத்திற்குள் எடுத்துக்கொண்டால் கர்ப்பமடையும் வாய்ப்பை 89% குறைக்கிறது என்று கூறப்படுகிறது.
3. இவை தோல்வியடையாது என்பது தவறு (However, they are not fail-proof)

மாத்திரைகளுடன் வரும் வழிகாட்டித் தாளில் இருப்பவற்றைப் படிக்கத் தவற வேண்டாம்! கருத்தடை மாத்திரைகள் எப்போதும் 100% செயல்திறன் கொண்டவையல்ல. அவசர சூழ்நிலைகளில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும், தொடர்ந்து கருத்தடைக்காக அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இவை கர்ப்பமடையும் வாய்ப்பை 89% குறைக்கிறது என்று ஆய்வுகள் காண்பித்தாலும், இவை தோல்வியடைந்து கர்ப்பம் உண்டாக 11% வாய்ப்புள்ளது! பால்வினை நோய்களில் இருந்து இவை உங்களைப் பாதுகாக்காது என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
4. இவை பக்க விளைவுகள் உள்ளவை (Side effects exist)

இந்தக் கருத்தடை மாத்திரைகள் பின்வருபவை போன்ற சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்:
குமட்டல்
தலைச்சுற்றல்
அடிவயிற்றில் வலி
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த பக்க விளைவுகள் சில நாட்களுக்கு நீடிக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது, சிலசமயம் இவற்றுடன் கறைபடுதல், மாதவிடாய் தாமதமாதல், மாதவிடாய் வராமல் தவறுதல் ஆகிய பக்க விளைவுகளும் இருக்கலாம்.
5. இவை கருக்கலைப்பு மாத்திரைகளல்ல (Not an abortion pill)

புரோஜெஸ்ட்டின் மட்டும் கொண்டுள்ள அவசரநிலை கருத்தடை மாத்திரைகள் ஏற்கனவே உருவாகியிருக்கும் கருவை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை என்று சில மருத்துவ வல்லுநர்கள், தெரிவிக்கின்றனர். அதாவது, ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் பெண் கருத்தடை அவசரநிலை கருத்தடை மாத்திரையை எடுத்துக்கொண்டால், அதனால் கரு கலையாது" - உடலுறவுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளும் கருத்தடை மாத்திரைகள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை 

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் மலைப்பாதை பக்தர்கள் புதிய திட்டத்தால் அவதி


திருமலை : திருப்பதி ஏழுமலையானை மலைப்பாதை வழியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் புதிய திட்டத்தால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலைப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு சுவாமியை விரைவாக தரிசிக்கும் வகையில் திவ்ய தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. இதனால் மலைப்பாதையில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. வாரவிடுமுறை நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் பாத யாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இதனால் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்கும் வைகுண்டத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி, நாராயணகிரி தோட்டத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பக்தர்களுக்கும் தேவஸ்தான ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு போன்ற சம்பவங்கள் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் முதல் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அலிபிரி மலைப்பாதையில் வரும் பக்தர்களுக்கு 14 ஆயிரம் டிக்கெட்டுகளும், வாரி மெட்டு மலைப்பாதையில் வரும் பக்தர்களுக்கு 6 ஆயிரம் டிக்கெட்டுகளும் என ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த காலங்களில் 2 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்த பக்தர்கள், தற்போது கூட்டத்துக்கு ஏற்ப 1 மணி நேரம் முதல் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மதியம் 12 மணிக்குள் 20 ஆயிரம் டிக்கெட்டுகளும் தீர்ந்துவிடுவதால், அதன்பின்னர் வரும் பக்தர்கள் மலையடிவாரத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த கூட்டத்தை சரிசெய்வதில் அதிகாரிகளுக்கும் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. தேவஸ்தானம் நாள்தோறும் புதிய புதிய திட்டங்கள் கொண்டுவருவதால், பக்தர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ரேஷன் கடை முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை... நுகர்வோர்கள் புகார் அளிக்க தமிழக அரசின் ஆப்!

ரேஷன் கடைகள் முதல் பேருந்து பயணங்களின் போது உணவருந்தும் மோட்டல்கள் வரை, ஒவ்வோர் இடங்களிலும் நுகர்வோர்கள் படும்பாடு சொல்லிமாளாது. இதுதான் எடை, இவ்வளவுதான் விலை என அனைத்துப் பொருள்களுக்கும் சட்டப்படி அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு பொருள்களின் மீது அச்சடிக்கப்பட்டிருந்தாலும், தரம், விலை, அளவு என ஏதாவதொரு விதத்தில் நுகர்வோர்கள் ஏமாற்றுப்பட்டுக் கொண்டே வருகின்றனர். இவர்களுக்குக் கைகொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது தமிழக அரசின் TN-LMCTS மொபைல் ஆப். இதனை மொபைலில் இன்ஸ்டால் செய்துகொண்டால் போதும். எந்தப் புகார்களையும் சில நிமிடங்களில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல முடியும். தமிழக அரசின் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் சட்டமுறை எடை, அளவு பிரிவுதான் இந்த மொபைல் ஆப்-ஐ நிர்வகிக்கிறது.


எப்படி பயன்படுத்துவது?
முதலில் உங்கள் போனில் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின்னர் உங்களைப் பற்றிய விவரங்கள் கேட்கப்படும். அவற்றைக் கொடுத்த பின்னர் உங்களுடைய அலைபேசி எண் OTP மூலம் சோதிக்கப்படும். சோதனை முடிந்துவிட்டால், புகார்களுக்கு உங்கள் ஆப் தயார். உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து எப்போது வேண்டுமானாலும் லாக்-இன் செய்ய முடியும். ஆப் முழுவதுமே ஆங்கிலத்தில்தான் இருக்கிறது. அதேசமயம் பயன்படுத்துவதற்கு மிக எளிமையாகவும், பயனுள்ளதாகவும் அமைந்திருக்கிறது.
நீங்கள் செய்த புகார்களின் பட்டியல், புதிய புகார்களுக்கான ஆப்ஷன், விரைவான புகார்கள் என மூன்று மெனுக்கள் இருக்கின்றன. விரைவான புகார்களுக்கு என்ன புகார், எந்த இடம் என்பதை மட்டும் தெளிவாகக் குறிப்பிட்டு அதற்கான சாட்சிகளாகப் புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ போன்றவற்றை உடன் இணைக்க வேண்டும். புதிய புகார்கள் என்ற மெனுவில், புகார் பற்றிய குறிப்பு, புகைப்படங்கள் / வீடியோ/ ஆடியோ இணைப்பு, எது தொடர்பான புகார் என்ற விவரம், கடையின் முழு முகவரி போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். நீங்கள் புகாரினைப் பதிவு செய்துவிட்டால், அதற்கு புகார் எண் கொடுக்கப்பட்டு உங்கள் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். நீங்கள் கொடுத்த புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களும் ஆப்-ல் காட்டப்படுகின்றன.
எப்படி இருக்கிறது ஆப்?


பொருள் வாங்கியதற்கான ரசீது, கடையின் போட்டோ, பொருள் வாங்கிய வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் போன்ற ஆதாரங்களை அனுப்புவது எளிதாக இருக்கிறது. தாமதமின்றி உடனே புகார்களைப் பதிவு செய்துவிடவும் முடிகிறது. ஆனால் புதிய புகார்களைப் பதிவு செய்யும் போது, கடைகளின் தன்மை, முகவரி போன்றவற்றைக் குறிப்பிடும் போது நிறைய ஆப்ஷன்கள் இருப்பதால் சில குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க தமிழ் மொழியையும் இதில் இணைக்கலாம். ஆப் மட்டுமின்றி, இணையம் மூலமாகவும் உங்களுடைய புகார்களைப் பதிவு செய்யமுடியும். http://tnlegalmetrology.in/ என்ற முகவரியில் உங்கள் ஆப்பில் கொடுத்த மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றைக் கொடுத்து லாக்-இன் செய்யலாம். எனவே மக்கள் தங்கள் புகார்களை இணையம் மற்றும் மொபைல் மூலமாகப் பதிவு செய்யவும், நிர்வகிக்கவும் முடியும்.
ஆப் டவுன்லோட் செய்வதற்கான லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.mslabs.lmctspublic&hl=en
இந்த ஆப்-ஐ உருவாக்கி, செயல்படுத்திவரும் தமிழக தொழிலாளர்துறையின் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் இதுபற்றிக் கூறும்போது,"மார்ச் மாதம் இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. இணையம் மற்றும் ஆப் இரண்டின் மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்காகத்தான் இந்தச் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் புகார் தெரிவித்தால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். எடை அளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருள்களுக்கான விதிகள் என இரண்டு சட்டங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழ் வரும் புகார்கள் இதன் மூலம் பதிவு செய்யப்படும்.
கடைகளில் நீங்கள் வாங்கும் பொருள்களின் எடை, அளவு போன்றவற்றில் தவறு இருந்தாலோ அல்லது MRP விலையை விடவும் அதிகமாக விற்றாலோ இதில் புகார் செய்யலாம். பொட்டலப் பொருள்களுக்கான விதிகளைப் பொறுத்தவரை, ஒரு பொருள் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டால் அந்தப் பாக்கெட்டின் மீது, யார் அதைப் பாக்கெட்டில் அடைத்தார், யார் அதைத் தயாரித்தார், யார் அதை இறக்குமதி செய்தார், எப்போது பேக் செய்யப்பட்டது, அதன் எடை எவ்வளவு, அதன் அதிகபட்ச விலை, நுகர்வோர் புகார் செய்வதற்கான எண்கள் என விவரங்கள் அனைத்தும் இருக்க வேண்டும். ஒரு நுகர்வோர் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பொருள் ஒன்றை வாங்கும்போது, அதனைப் பிரித்துப்பார்த்து வாங்குவது இல்லை. எனவே அந்தப் பாக்கெட்டிற்குள் என்ன இருக்கிறது என்பது குறித்த

தமிழ் தாத்துவாம்

❇பணம் பணம் என்று
     அதன் பின்னால்
     செல்லாதே.
     வாழ்க்கை போய்
     விடும்.
     வாழ்க்கையையும்
     ரசிக்கக் கற்றுக்
     கொள்ளுங்கள்.

❇நேர்மையாக இருந்து
     என்ன சாதித்தோம்
     என்று நினைக்காதே...
     நேர்மையாக
     இருப்பதே
     ஒரு சாதனை தான்...!!

❇நேர்மையாக
     இருப்பவர்களுக்கு
     சோதனை வருவது
     தெரிந்ததே, அதற்காக
     நேர்மையை கை
     விட்டு
     விடாதே...
     அந்த நேர்மையே
     உன்னை
     காப்பாற்றும். ..!!

❇வாழ்வில் சின்ன
     சின்ன
     விஷயத்திற்கெல்லாம்
     கோபப்படாதே...
     சந்தோஷம்
     குறைவதற்கும்,
     பிரிவினைக்கும்
     இதுவே
     முதல் காரணம்...!!

❇உனக்கு உண்மையாக
     இருப்பவர்களிடம்...
     நீயும் உண்மையாய்
     இரு...!!

❇அடுத்தவர்களுக்கு
     தீங்கு
     செய்யும் போது
     இனிமையாகத் தான்
     இருக்கும்...
     அதுவே உனக்கு வரும்
     போது தான், அதன்
     வலியும் வேதனையும்
     புரியும்...!!

❇ஒருவன் துரோகி
      என்று தெரிந்து
      விட்டால்...
      அவனை விட்டு
      விலகியே இரு...!!

❇எல்லோரிடமும்
      நட்பாய் இரு...
      நமக்கும் நாலு
      பேர் தேவை...!!

❇நிறை குறை
      இரண்டும்
      கலந்தது தான்
      வாழ்க்கை...
      அதில் நிறையை
      மட்டும்
      நினை...
      நீ வாழ்க்கையை
      வென்று விடலாம்...!!

❇எவன் உனக்கு உதவி
      செய்கிறானோ,
      அவனுக்கு மட்டும்
      ஒரு நாளும் துரோகம்
      செய்யாதே...
      அந்த பாவத்தை நீ
      எங்கு போனாலும்
      கழுவ முடியாது...!!

❇அடுத்தவர்களைப்
      போல் வசதியாக
      வாழ முடியவில்லை
      என்று
      நினைக்காதே...
      நம்மை விட
      வசதியற்றவர்கள்
      கோடி பேர்
      இருக்கிறார்கள்
      என்பதை மனதில்
      கொள்...!!


❇பிறப்பிற்கும்
      இறப்பிற்கும்
      இடையில்,
      நீ செய்யும் பாவம்
      புண்ணியம் மட்டுமே
      உனக்கு மிஞ்சும்...
      உன்னுடன் கடைசி
      வரை வருவதும்
      இதுவே...!!

"ஒரே நாளில் வீடுகட்ட வேண்டுமா? இதோ ஒரு புதிய டெக்னாலஜி


வீட்டுக்கு அஸ்திவாரம் தோண்டியவுடனே, குறைந்த நாட்களில் வீட்டு வேலைகளை விரைவாக முடித்து, புதுமனை புகுவிழா நடத்தவே பலரும் விரும்புவார்கள். ஆனால், குறைந்த நாட்களில் வீடுகளைக் கட்டி முடிப்பது என்பது எளிதான காரியமல்ல. குறைந்தபட்சம் 5 முதல் 6 மாதங்களாவது செலவிட்டால் தான் ஒரு வீட்டைக் கட்டியெழுப்ப முடியும். ஆனால், சீனாவில் அறிமுகமான ஒரு புதிய தொழில்நுட்பத்தால் குறைந்த நாட்களிலேயே வீட்டைக் கட்டி முடித்துவிடுகிறார்கள். அப்படிக் கட்டி முடிக்கும் வீடுகளை பிரிண்டர் வீடுகள் என்று அழைக்கிறார்கள். அதென்ன பிரிண்டர் வீடு?
பொதுவாக பிரிண்டர் என்பது ஒரு கோப்பு அல்லது ஒரு படிவத்தை பிரிண்ட் எடுக்கப் பயன்படுவது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், சீன நிறுவனம் ஒன்று தயாரித்துள்ள பிரிண்டர், கோப்புகளை பிரிண்ட் எடுப்பது போல வீடுகளை உருவாக்கித் தருகிறது என்பதுதான் விந்தை. அதுவும், ஒரே நாளில் வீடுகள் தயாராகிவிடும் என்பது ஆச்சரியம் தரும். இந்தத் தொழில்நுட்பத்தில் வீட்டை பார்த்துப் பார்த்துப் பல மாதங்கள் செலவழித்து, கட்டி முடிக்க வேண்டும் என்ற தேவையெல்லாம் இல்லை.
உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில் வீட்டை மட்டுமே ஏன் பல மாதங்கள் காத்திருந்து கட்டி முடிக்க வேண்டும் என்னும் எண்ணம்தான், இந்தத் தொழில்நுட்பம் உருவாகக் காரணம். அஸ்திவாரம் அமைத்த பிறகு, என்ன அளவில், என்ன வடிவத்தில், என்ன உயரத்தில் வீடு வேண்டும் என்பதை ஆட்டோ கேட் (Auto CAD) மென்பொருள் மூலம் டிசைன் செய்தால் போதும். பிறகு, அந்த டிசைனுக்கு ஏற்ற வடிவத்தில் 3டி பிரிண்டர் இயந்திரம் சுவர்களை அமைத்துத் தருகிறது. இந்த 3 டி பிரிண்டரில் சிமெண்ட் கலவை உருவாக்கி நிரப்பிவிட்டால் போதும், மளமளவென சுவரை கட்டி ஒரே நாளில் கட்டுமானத்தை பூர்த்தி செய்துவிடுகிறது.
இதில் குறிப்பிடும்படியான அம்சம் என்னவென்றால், பிரிண்டரிலிருந்து வெளியாகும் சிமெண்ட் கலவை, அடுத்த சில நிமிடங்களிலேயே உலர்ந்து, உறுதியான சுவர்களை உருவாக்கிவிடுகிறது. அளவில் மிகப் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் அந்த 3டி பிரிண்டர் 105 அடி நீளம், 33 அடி அகலம், 22 அடி உயரம் கொண்டது. நவீன வசதிகள் கொண்ட ஒரு பங்களாவை பிரிண்டர்கள் மூலம் ஒரே நாளில்கூட வடிவமைத்துவிடலாம். ஆனால், அதற்கு நான்கு 3டி பிரிண்டர்கள் தேவைப்படும். பிரிண்டரைப் பயன்படுத்தும்போது, நீண்ட நாட்களுக்கு வீடுகளைக் கட்ட ஆகும் செலவைவிடக் குறைவான செலவிலேயே வீட்டைக் கட்டி முடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
உயரமான சுவர்கள், வீடுகளுக்குத் தேவையான மின்சார இணைப்புக்கான வழித்தடங்கள், குடிநீர்க் குழாய்களுக்கான வழித்தடங்கள், இதர வீட்டுப் பயன்பாட்டு சாதனங்கள், நீர் செல்வதற்கான வழித்தடங்கள் ஆகியவற்றைக் கட்டுமானத்தின் போதே ஆட்டோ கேட் முறையில் திட்டமிட்டு விடுவதால் சுவர்களை உருவாக்கும்போதே அவை வடிவம் பெற்று விடுகின்றன. தற்போது வரை தனித் தனி வீடுகளே 3டி பிரிண்டரில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த 3டி பிரிண்டரைக் கொண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் உருவாக்கவும் முடியுமாம். ஆனால், சீனாவில் 3டி பிரிண்டர் வடிவிலான வீடுகளுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்படும்போது 3டி பிரிண்டர் வீடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓரளவுக்குக் குறைந்த செலவில் குறைந்த நாட்களில் வீடு கட்ட விரும்புவோருக்கு இந்தத் தொழில்நுட்பம் நிச்சயம் உதவும். கட்டுமானத் துறையில் 3டி பிரிண்டர் தொழில்நுட்பத்துக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இது உலகம் முழுவதும் கவனம் பெறவும் கூடும்" - ஒரே நாளில் வீடுகட்ட வேண்டுமா? இதோ ஒரு புதிய டெக்னாலஜி

"எந்த நாட்களில் உடலுறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது?

நீங்கள் கர்ப்பமாக நினைக்கும் போது, அதற்கு வளமான நாட்கள் எதுவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக வளமான நாட்களானது மாதவிடாய் சுழற்சியின் 8 ஆவது நாளில் இருந்து, அதே சுழற்சியின் 19 ஆவது நாள் வரை இருக்கும்.
இந்த நாட்களில் பெண்கள் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும். தற்போது நிறைய தம்பதிகளால் கருத்தரிக்க கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் தங்களது வளமான நாட்களில் உடலுறவில் ஈடுபட்டால், விரைவில் கருத்தரிக்கலாம்.
மேலும் ஒவ்வொரு பெண்களுக்கும் இந்த வளமான நாட்களானது வேறுபடும். மேலும் வளமான நாட்களின் போது பெண்கள் ஒருசில உணர்வுகளைப் பெறுவார்கள். இதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஓவுலேசனை கவனியுங்கள்
ஒரு பெண்ணிற்கு ஓவுலேசன் நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பும், ஓவுலேசன் முடிந்து 2 நாட்கள் கழித்தும், உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம். இருப்பினும் ஒவ்வொரு பெண்ணிற்கும் இது வேறுபடும். உங்களது ஓவுலேசன் காலத்தைத் தெரிந்து கொள்ள, முதலில் உங்களது மாதவிடாய் சுழற்சியை குறைந்தது 2-3 மாதங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
ஒரு மாதவிடாய் சுழற்சிக்கும் அடுத்த மாதவிடாய் சுழற்சிக்கும் இடையே உள்ள நாட்களை கணக்கிட வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு இருப்பது முறையான அல்லது முறையற்ற மாதவிடாய் சுழற்சி உள்ளதா என்பதை அறிய முடியும்.
உடல் அடிப்பகுதி வெப்பநிலையை பரிசோதிக்கவும்
ஓவுலேசன் காலத்தில் பெண்களின் உடல் அடிப்பகுதி வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் உள்பதியவைத்தலுக்கு கருப்பையை தயாரித்து வருவதால், உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, அதன் காரணமாக உடலின் அடிப்பகுதி வெப்பநிலை அதிகரிக்கும்.
உடலின் அடிப்பகுதி வெப்பநிலையை கண்காணிக்க, தினமும் காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், தெர்மாமீட்டர் கொண்டு அடிப்பகுதி வெப்பநிலையை சோதியுங்கள். அப்படி சோதிக்கும் போது முதல் நாளை விட வெப்பநிலை குறைந்திருந்தால், அந்நாளில் உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
யோனி வெளியேற்றத்தை கவனியுங்கள்
உங்களுக்கு வளமான நாட்கள் இருக்கும் போது, யோனியில் இருந்து சற்று பிசுபிசுப்பான மற்றும் சற்று கெட்டியான சளி போன்று வெள்ளை திரவம் வெளிவரும். இந்நாளில் உடலுறவில் ஈடுபடும் போது, விந்தணுவால் எளிதில் கருமுட்டையுடன் இணைந்து கருவை உருவாக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
இதர அறிகுறிகள்
ஓவுலேசன் காலத்தில் மனநிலையில் கூட மாற்றங்கள் ஏற்படும். உதாரணமாக அடிவயிற்றில் ஒரு பக்கம் மட்டும் மிதமான வலியை உணர்வது, வெள்ளைப்படுதல், மார்பகங்கள் மென்மையாக இருப்பது போன்றவை. இந்த அறிகுறிகள் எல்லாமே உங்களது வளமான நாட்களைத் தான் குறிக்கிறது" - எந்த நாட்களில் உடலுறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது?

"இயற்கையை நேசிப்பவரா நீங்கள்?...மசின குடியை மிஸ் பண்ணிடாதீங்க!!





எங்கே பார்த்தாலும் மசினகுடி யாரைக்கேட்டாலும் மசினகுடி. இந்த பெயர் இளைஞர்கள் மத்தியில் அப்படி ஒரு டிரெண்ட் ஆகிருக்கு. அப்படின்னா என்னனு கேட்பவர்களுக்கு இந்த கட்டுரை.
சாகசங்களை விரும்புபவர்களா நீங்கள்? அதுவும் காடுகளில் பயணம் செய்வது என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்படியென்றால் நீங்கள் செல்லவேண்டிய இடம் இதுதான். உண்மையில் இது மாதிரி வேறு இடங்களே இல்லையா அப்படி என்ன பிரமாதம் என்று கேட்கலாம். இதுபோன்று பல இடங்கள் இருப்பினும் இன்று முடிவு செய்து நாளை கிளம்பலாம் என்றால் அது மசினகுடிதான். ஆம். தற்போது இளைஞர்கள் அதிகம் பேர் செல்வதும் செல்லவிரும்புவதும் இந்த இடத்துக்குதான். நமக்கு தெரிந்ததெல்லாம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி. ஆனால் இவ்வளவு அழகான இடத்தை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். வாங்க அந்த சொர்க்கத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.
மசினகுடி செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று - கோவா - ஊட்டி - குண்டல்பேட்டை நெடுஞ்சாலை. இது 36 கொண்டை ஊசிவளைவுகளைக் கொண்டது. முதுமலையிலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மசினகுடி.மசினகுடியும் முதுமலை காடுகளின் ஒருபகுதிதான். இந்த இடம் பறவை பிரியர்களுக்கு மிகவும் ஏற்ற இடமாகும்.7நீங்கள் செல்லும் பயணத்தின் நேர அளவுகளைப் பொறுத்து, நீங்கள் சென்றடையும் நேரம் ஒருவேளை இரவாக அமைந்தால் கவலைப் படவேண்டாம். இங்கு அருகிலேயே தங்கும் விடுதிகள் தரமானதாக அமைந்துள்ளன.
காலை விடிந்ததும் முதல் வேளையாக மசினகுடியை சுற்றிப் பார்க்கலாம். மசினகுடி, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மிக அழகான, மனிதனால் இன்னமும் சற்றும் மாசுபடுத்தப்படாத இடங்களில் ஒன்றாக திகழ்கிறது மசினகுடி. முதுமலை தேசிய பூங்காவிற்கு அருகில் அமைந்திருக்கும் இந்த ஊரானது வார இறுதி விடுமுறைகளை களித்திட அற்புதமான இடங்களில் ஒன்றாக இருக்கிறது.
தொடர் ஆக்கிரமிப்பால் பசுமை மறைந்து கான்கிரீட் காடாக மாறி வரும் ஊட்டி வார இறுதி நாட்களிலும், கோடை காலத்திலும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதால் மாசற்ற இயற்கையை ரசிக்க விரும்புகிறவர்கள் ஊட்டியில் இருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த மசினகுடிக்கு செல்லவேண்டும்.மசினகுடியில் தெப்பக்காடு யானைகள் முகாம், சபாரி, தேயிலைத் தோட்டங்கள், கோபாலசுவாமி பெட்டா கோயில், கல்லிகுடர் ரப்பர் தோட்டங்கள், முதுமலை வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்க்கலாம்
மசினகுடியில் இருக்கும் வனப்பகுதியில் அதிகாலை 6:30 - 8.30 வரையும், மாலை 3 - 6 வரையும் சபாரி செய்யலாம். இந்த சபாரி பயணத்தின் போது புள்ளிமான்கள், சிங்கவால் குரங்குகள், பலவகையான பறவைகள் போன்றவற்றை கண்டு மகிழலாம். இங்கே ஜீப்,கார் போன்ற வாகனங்களில் செல்வதை காட்டிலும் யானையின் மீது அமர்ந்து வன உயிரினங்களை கண்டு மகிழலாம்.
1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தெப்பக்காடு யானை முகாம், நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினத்தை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பார்வையாளர்கள் காண உதவுகின்றது. இந்த வளாகத்தின் உள்ளே தினந்தோறும் ஒரு ஜோடி யானைகள் விநாயகருக்கு பூஜை செய்கின்றன. காலையிலும், மாலையிலும் தெப்பக்காடு யானை முகாமில் யானை சவாரிகள் அனுமதிக்கப்படுகின்றன. மாலை நேரங்களில் யானைகள் உணவு அருந்தும் நேரத்தில் அவற்றை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள்" - இயற்கையை நேசிப்பவரா நீங்கள்?...மசின குடியை மிஸ் பண்ணிடாதீங்க!!

சனி, 7 அக்டோபர், 2017

திருப்பதிக்கு செல்ல இயலாதவர்கள் இங்குச் செல்லலாம்!


திருப்பதி செல்ல இயலாதவர்களும், சென்று திருவேங்கடவனை திருப்தியாய் தரிசனம் செய்யாதவர்களும் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளை அதே உருவில் மூலவராகத் தரிசனம் செய்ய உகந்த தலம் திருமலைவையாவூர்.
ராமாயண யுத்தம் நடந்த 14-ம் நாளில் ஸ்ரீ லக்ஷ்மணர் காயம்பட்டு விழ, ராமபிரானின் கட்டளைப்படி ஸ்ரீ அனுமன் சஞ்சீவி மலையை பெயர்த்து தூக்கி வந்தார், சஞ்சீவி பர்வதத்தை தனது கைகளில் சுமந்து வந்த போது சற்று இளைப்பாற எண்ணி, மலையைக் கீழே வைக்காமல் தனது ஒரு கையிலிருந்து மறுகைக்கு மலையை மாற்றிக் கொண்டு நின்றார். அச்சமயம், சஞ்சீவி பர்வதத்தின் ஒரு பகுதி சிதறி விழுந்தது. மலையை கீழே வைக்காத ஊர் என்பதே மருவி வையாவூர் ஆகி, திருமலைவையாவூர் எனப் பெயர் வழங்கத் தொடங்கியது.
முன்னையகோன் என்பவன், அந்தப்பகுதி மக்களின் தலைவனாக இருந்தான். அந்த மலை மற்றும் ஒட்டியுள்ள காட்டுப் பகுதிகளில் தினமும் பசுக்களை மேய்த்து வந்தான். ஒருநாள், அந்த மலைமீதிருந்த ஒரு பெரிய கற்பாறை அவனுக்கு தெய்வத் திருமேனியாகத் தெரிந்தது. தினமும் மாடுகளை மேய விட்டு உச்சிப்போதில் அவனுடைய மனைவி பிராட்டிகோன் கொண்டுவரும் கேழ்வரகுக் கூழை அந்தக் கல்லின் முன்னே வைத்து, நைவேத்தியம் செய்துவிட்டு, பிறகு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவனுடைய பக்தியை உலகுக்கு உணர்த்த விரும்பிய பெருமாள், புனை வேடமிட்டு அவன் முன்னே வந்தார்.
"பிருகு மகரிஷி இருக்கும் மலைக்குச் செல்லும் பாதை தெரியவில்லை. உங்களைப் பார்த்ததும் இங்கு வந்தேன்'' என்றவர், கேழ்வரகு நைவேத்தியத்தைப் பார்த்துவிட்டு "'கோன் குலத்தில் பிறந்த நீ பகவானுக்கு, பால் நைவேத்தியம் செய்யாமல், கேழ்வரகு கூழ் வைத்து நைவேத்தியம் செய்கிறாயே! இருந்தாலும் உன் உழைப்பின் மூலம் உருவான சுத்தமான, பால் நைவேத்தியம் செய்து வழிபடு'' என்று சொல்லிச் சென்றார். அன்று முதல், முன்னையகோன் தன் மனைவியுடன் வந்து, உரிய முறையில் பால் நிவேதனம் செய்து பின்னர் கூழையும் நிவேதனம் செய்து வழிபட்டு வந்தான்.
ஒருநாள், நேரில் தோன்றிய பெருமாள் "என்ன வரம் வேண்டும்?' எனக் கேட்க, அதற்கு, "தாங்கள் இங்கேயே நிரந்தரமாக இருந்து வேண்டுவோருக்கு வேண்டுவதைத் தரும் வேங்கடவனாக நித்ய வாசம் செய்ய வேண்டும். நானும் என் மனைவியும் நின் காலடிக்கீழ் கிடந்து உன் வடிவழகை சதா சேவித்துக் கொண்டிருக்கும் நிலை வேண்டும்'' என வேண்டினான். பெருமாளும் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் எனும் திருநாமத்துடன் அருள்செய்வதாகவும் இது ஆதிவராக க்ஷேத்திரம் என்பதால் அவ்வுருவிலும் தாம் அருள்வதாக வாக்களித்தார்.
காலங்கள் உருண்டோடின.. முகலாயப் பேரரசர் அக்பருடன் இருந்த ராஜா தோடர்மால் திருப்பதி திருத்தலத்துக்கு ஏராளமான திருப்பணிகள் செய்திருக்கிறார். பெருமாள் சொன்னதின் பேரில் இம்மலைக்குத் தரிசிக்க வந்த போது, முன்னையக்கோன், பிராட்டிகோன் பணியை அறிந்து கோயில் முழுவதையும் கருங்கல்லால் கட்டி பெருமாளின் திரு முன்பு அவர்கள் சதா சேவை செய்யும் வகையில் கிடத்தினான். அதோடு இந்தப் பெருமாளை தான் தினமும் வணங்கும் வகையில் தன் விக்ரகத்தைச் செய்து இறைவனை வழிபடும் வகையில் கோயிலில் நிறுத்தினான்.
ராஜாதோடர்மாலுக்கு இங்கு மட்டுமே உருவச்சிலை இருப்பதாக அறிய முடிகிறது! ஆதிவராக ஷேத்திரம் என்பதற்கு ஏற்ப, கொடி மரத்திற்கு எதிரில் லட்சுமி வராகர் சந்நிதி உள்ளது. பிரதான மூர்த்தியான இவருக்கே முதல் தீபாராதனை நடைபெறும். பிரசன்னவெங்கடேசருக்கு விழா நடக்கும் போதும் கூட, இவரது சந்நிதியில் தான் கொடி ஏற்றப்படும். மேலும் ஸ்ரீசக்கரத்தாழ்வார், வேணுகோபாலர், ராமருக்கு சந்நிதிகள் இருக்கின்றன. பெரிய நம்பியைச் சந்திக்க ஸ்ரீராமாநுஜர் மதுராந்தகம் செல்லும் வழியில் இப்பெருமாளை கண்டு வணங்கி ஆசி பெற்றுச் சென்றதாகத் தகவல்கள் இருக்கின்றன.
மூலஸ்தானத்தில் பெருமாள் செங்கோலுடன் ராஜ அலங்காரத்தில் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாளாக நின்ற திருக்கோலத்தில் சாளக்கிராம மாலை, அஷ்டலட்சுமி ஆரம், ஸ்ரீலட்சுமி ஆரம், தசாவதார திருக்கோலங்கள் கொண்ட ஆபரணத்தை மாலையாகவும் ஒட்டியாணமாகவும் அணிந்தபடி ஆதிசேஷன் குடை பிடிக்க நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இரு மார்புகளிலும் இரண்டு மகாலட்சுமிகள் என்றும் நீங்காது அருள் புரிகின்றனர். இங்கு, ஒரே வளாகத்துக்குள் தனித்தனி சந்நிதியில் பெருமாளையும் அலர்மேல்மங்கைத் தாயாரையும் தரிசிக்கலாம். நேமியோன் என்னும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் இங்கு தனிக் கோயிலில் எழுந்தருளியுள்ளார்.
மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில் வணங்குவதால் சகல ஐஸ்வரியமும் கிடைக்கும் என்பதால் மக்கள் வரத்து அதிகம்! பங்குனி உத்திரத்தில் தாயாருக்கும்; ஆடிப்பூரத்தன்று  ஸ்ரீ ஆண்டாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் சிறப்புற நடைபெறுகிறது. கலந்து கொள்ளும் கன்னிகளுக்குத் திருமணம் கைகூடுகிறது. புரட்டாசி திருவோண நட்சத்திர நாளில், இங்கே நடைபெறும் திருப்பாவாடை உற்சவம் சிறப்பானது. சித்திரை மற்றும் புரட்டாசியில் இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறும். புரட்டாசி பிரம்மோத்சவம் துவங்கியதும் திருப்பதி போலவே ஐந்தாம் நாள், கருடசேவை நடைபெறும்.
ஆதிசேஷன் பல்வேறு தலங்களில் ஆசனமாகவும் படுக்கையாகவும் இருந்து திருமாலுக்கு சேவை செய்வார். இத்தலத்தில் பிரசன்னமாகி நின்ற கோலத்தில் அருளுவதால் இத்தலம் தென் திருப்பதி எனப்படுகிறது.
ஆதிசேஷன் இம்மூலவருக்குக் குடைபோல் கவிழ்ந்து காட்சி தருகிறார். அதனால் இத்திருக்கோயிலில் எங்கும் இல்லாத சிறப்பாக வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், பெருமாள் குடையுடன் நடந்து வந்து புரட்டாசி சனிக்கிழமைகளில் தரிசனம் செய்துவிட்டுச் செல்லும் வழக்கம் உண்டு.
கோயில் அமைவிடம்: திருமலைவையாவூர், செங்கல்பட்டு- படாளம் கூட்டுரோடு வழியாக வேடந்தாங்கல் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.
தொடர்புக்கு 94432 39005/ 99940 95187 - செங்கை .பி. அமுதா

வெள்ளி, 6 அக்டோபர், 2017

வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு தோலைத் தூர வீசுபவரா நீங்கள்? அப்படியானால் இதைப் படியுங்கள்


"உலக மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழ வகைகளில் ஒன்று வாழைப்பழம். உலகில் வாழைப்பழம் உண்ணாத மக்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு உலகின் எந்த மூலையிலும் மலிவாகக் கிடைக்கக் கூடிய பழம் வாழைப்பழம். அதில் பல வகைகள் உண்டு. நாட்டுக்கு நாடு வாழைப்பழத்தின் வகைகள் மாறுபட்டாலும் அதனால் விளையும் பயன்கள் சற்றேறக்குறைய ஒன்றே! உலகின் மற்றெல்லா பழ வகைகளைக் காட்டிலும் கைக்குழந்தைகளுக்கும் கூட கொடுத்துப் பழக்கக் கூடிய அளவுக்கு எளிதில் செரிமானம் ஆகக் கூடியது வாழைப்பழம் ஒன்றே. எனவே தான் வாழைப்பழம் நம் வாழ்வின் தவிர்க்க முடியாத அன்றாட அம்சங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பொதுவாக வாழைப்பழம் சாப்பிடும் போது, நாம் வழக்கமாக என்ன செய்வோம்? பழைத்தை உரித்துச் சாப்பிட்டு விட்டு, தோலை தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டு விடுவோம். இது காலம், காலமாக நாம் பின்பற்றி வரும் பழக்கம். ஆனால் பல ஆண்டுகளாகவே தாவரவியல் விஞ்ஞானிகளும் மக்களிடம் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்று என்ன தெரியுமா? வாழைப்பழத்தில் இருக்கும் சத்துக்களுக்கு சற்றும் குறையாது அதன் தோலிலும் கூட மனித உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்யத்துக்கும் தேவையான அத்தனை சத்துக்களும் உள்ளன. எனவே, வாழையைப் பொருத்தவரை அதன் தோலையும் சேர்த்து உண்பதே நல்லது. என்பது தான். உண்மையிலேயே தங்களது உடல் ஆரோக்யத்தில் அக்கறையுள்ள பல மனிதர்கள், வாழைப்பழம் உண்ணும் போது தோலையும் சேர்த்து உண்பதை நாம் எங்கேனும் அகஸ்மாத்தாய் கண்டிருக்கலாம். ஆனால் அப்போதெல்லாம் நாம் அந்தச் செயலில் இருக்கும் நிஜத்தை ஆராயாமல், அப்படி உண்பவர்களை ‘இத்தனை கஞ்சத் தனமா? பாருங்கள் பழத்தோடு சேர்த்து தோலைக் கூட விடாமல் உண்கிறார்களே! என்று கேலி செய்து சிரித்திருப்போம். அது தவறு. அவர்கள் உண்பது தான் சரியான முறை என்கிறார்கள் விஞ்ஞானிகளும் உணவியல் வல்லுனர்களும். அடப்போங்க சார்... வாழைப்பழத்தோலை எல்லாம் உண்ண முடியாது என்பீர்களானால், தோலை உண்ணக்கூட வேண்டாம், அதில் அதைக் காட்டிலும் மேலான விளைவுகள் கிடைக்கக் கூடுமெனில் அதைத் தவிர்ப்பானேன்! அதையாவது முயற்சி செய்து பார்க்கலாமில்லையா? அது எப்படி என்கிறீர்களா? இதோ இப்படித்தான்; வாழைப்பழத்தோலை எதற்கெல்லாம் உபயோகப் படுத்தலாம் என்று நீங்களும் தெரிந்து கொண்டால் அது உங்களுக்கே எளிதாகப் புரியும். பற்களை வெண்மையாக்க... வாழைப்பழத் தோலை சிறு துண்டுகளாக்கி குறைந்த பட்சம் இரண்டு வாரங்களுக்கு உங்கள் பற்களில் தேய்த்துக் கழுவி வாருங்கள். வெகு விரைவிலேயே உங்கள் பற்கள் முன்பை விட வெண்மையாக மாறுவதை நீங்களே கண்கூடாகக் காண முடியும். ஏனெனில் வாழைப்பழத்தோல் மிகச்சிறந்த ஒயிட்னராக (வெண்மையாக்கி) செயல்படக்கூடியது. சருமத்திலுள்ள மருக்களைப் போக்க... வாழைப்பழத் தோலை தொடர்ந்து சருமத்தில் மருக்கள், பருக்கள், சுருக்கங்கள் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் வெகு விரைவிலேயே அவையெல்லாம் மறைந்து சருமம் பளபளப்பாக மாறி விடும். அதோடு மட்டுமல்ல மீண்டும் அந்த இடங்களில் மருக்களோ, பருக்களோ, சுருக்கங்களோ வராமல் தடுக்கவும் வாழைப்பழத்தோல் உதவுகிறது. வாழைப்பழம் எப்போதுமே மனித உடலின் உள்ளுறுப்புகளின் ஆரோக்யத்தில் மட்டுமல்ல சரும ஆரோக்யத்திலும் கூடப் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. சருமத்தில் பிரச்னை உள்ள இடங்களில் வாழைப்பழத்தோலைத் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து மென்மையாகக் கழுவித் துடைக்க வேண்டும். சீக்கிரமே சருமம் நாம் விரும்பும் வண்ணம் மாறத் தொடங்கும், அது வரை தொடர்ந்து மேற்சொன்ன வழிமுறையைத் தொடர வேண்டும். தினம் தோறும் அதைச் செய்து வரும் போது சீக்கிரமே நீங்கள் விரும்பும் பலனை அடையலாம். சருமம் வறண்டு போகாமல் தடுக்க... அது மட்டுமல்ல; வாழைப்பழத்தோலை முட்டையின் மஞ்சள் கருவுடன் சேர்த்து நன்கு அரைத்து முகத்தில் தேய்த்து 5 நிமிடம் ஊற வைத்துக் கழுவினால் முகச் சருமம் விரைவில் வறண்டு போகாமல் தவிர்க்கலாம். சொரியாசிஸ்க்கு சிறந்த நிவாரணம்... வாழைப்பழத்தோலுக்கு ஈரத்தன்மையைத் தக்க வைத்துக்கொள்ளும் திறன் உண்டென்பதால் சொரியாசிஸ் உள்ளிட்ட சருமவியாதியால் அவதிப் படுபவர்களின் சிரமத்தைக் குறைக்க உதவுகிறது. வாழைப்பழத்தோலை அரைத்து சொரியாசிஸ் பாதிப்புள்ள சருமப் பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஆற விட்டால் அந்தப் பகுதியில் அரிப்பு நீங்கி நிவாரணம் கிடைக்கும். புற ஊதாக் கதிர்களிலிருந்து காக்க... கண்களை புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து காக்க வாழைப்பழத்தோல் உதவுகிறது. சூரிய ஒளியில் சில நிமிடங்கள் வைத்து எடுத்த வாழைப்பழத்தோலை எடுத்து கண் இமைகளின் மேல் தேய்த்தால் கண் புரை நோய் பாதிப்பைத் தவிர்க்கலாம் என்பது மருத்துவ ஆய்வில் முன்பே நிரூபணமானதாகக் கூறப்படுகிறது. வாழைப்பழம் குறித்த சில முக்கிய டிப்ஸ்கள்... மேற்கண்ட வழிமுறைகளில் எல்லாம் சிறப்பான விளைவுகள் கிடைக்க புதிதாக வாங்கிய ஃப்ரெஷ்ஷான வாழைப்பழத் தோலையே பயன்படுத்த வேண்டும். வாழைப்பழம் பிற பழங்களைப் போல வாரம் முழுக்க வைத்திருந்து பயன்படுத்தத் தோதானது இல்லை. சரியான பதத்தில் பழுத்த பழங்களை வாங்கி உடனடியாகச் சாப்பிட்டு விட்டால் அதில் கிடைக்கும் பலன்கள் அதிகம். அதே போல உரித்த வாழைப்பழத்தை நெடுநேரம் சாப்பிடாமலும் வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் உரித்த பழத்தை சாப்பிடாமல் வைத்து நெடுநேரம் கழித்துச் சாப்பிட்டால் அதில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்த்தாக்கம் இருக்கும். வாழைப்பழங்களை வைத்துப் பராமரிக்க சிறந்த இடம் குளுமையும், உலர்ந்த இடங்களே! மாறாக வீட்டில் சூரிய வெளிச்சத்தின் தாக்கம் அதிகமுள்ள இடங்களிலோ அல்லது வெப்பம் அதிகமுள்ள இடங்களிலோ அவற்றை வைத்துப் பராமரிக்கக் கூடாது. வாழைப்பழங்களை மட்டுமல்ல வாழைப்பழத்தோலையும் கூட குளிர்சாதனப் பெட்டியில் சேமிப்பது கூடாது. எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் வாழைப்பழங்களை வீட்டில் அடுக்கும் போது திறந்த காற்றுப் புக வசதியுள்ள நார்க்கூடைகளையோ அல்லது சில்வர் வலைக்கும்பாக்களையோ பயன்படுத்தலாமே தவிர பாலீத்தீன் பைகளில் போட்டு மூடி வைக்க மட்டும் கூடவே கூடாது. ஏனெனில் வாழைப்பழத்தோலில் இருந்து கசியும் எத்தலீன், பாலித்தீனுடன் வினை புரிந்து வாழைப்பழத்தோலை கருக்கச் செய்து பழம் சாப்பிடும் ஆசையையே கெடுத்து விடும். அதோடு பழமும் சீக்கிரமே அழுகி விடும் வாய்ப்பும் உண்டு" - வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு தோலைத் தூர வீசுபவரா நீங்கள்? அப்படியானால் இதைப் படியுங்கள்! http://tz.ucweb.com/10_16P6L

திருவாலீஸ்வரம் : சிற்பக் கலையும் சோழப்பேரரசும்



பொன்னியின் செல்வன் புதினத்தை வாசித்து அருள்மொழிவர்மரின் வீரச் செயல்களை வியந்து சோழர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவர்கள் நம்மில் பலர். பொதுவாகவே ராஜராஜன் என்றால் உடனே நம் மனதில் நினைவுக்கு வருவது அவன் கட்டுவித்த ராஜராஜேச்சுவரம் தான். இதுவே தஞ்சை பெருவுடையார் கோயில் என்றும், பேச்சு வழக்கில் தஞ்சை பெருங்கோயில் என்றும் வழங்கப்படுகின்றது. இந்தக் கோயிலை மாமன்னன் ராஜராஜன் கட்டுவதற்கு முன்னர் அவன் கட்டிய கோயில் சோழ நாட்டில் இல்லை. மாறாகப் பாண்டிய நாட்டில் அம்பாசமுத்திரத்திற்கு அருகே பிரமதேசம் என்ற சிற்றூரில் கடனா நதியின் தென்கரையில் அமைந்திருக்கின்றது திருவாலீஸ்வரம். இக்கோயிலின் சிற்பங்கள் அற்புதமான வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. கருங்கல்லினால் எழுப்பப்பட்ட இக்கோயில் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு முன் மாதிரியாக அமைக்கப்பட்ட கோயில் என்பதுடன் இக்கோயிலின் சுற்றுச் சுவர்கள் அனைத்திலும் ஏராளமான கல்வெட்டுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் ராஜராஜன் காலத்து அரசியல் நிகழ்வுகளின் ஆவணங்களாக அமைந்து தன் ஆட்சியில் ராஜராஜன் செயல்படுத்திய நீர்மேலாண்மை, நில மேலாண்மை, வரிவசூலிப்பு, தானங்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கிய தகவல் பெட்டகமாக அமைந்திருக்கின்றது.

ராஜராஜ சோழன் இளவரசராக நெடுங்காலம் பல போர்களில் பங்கெடுத்து அரசாட்சி பற்றிய பயிற்சி பெற்று அரியணையில் ஏறியவன். இரண்டாம் சுந்தர சோழனுக்கும் அவனது பட்டத்தரசியான வானவன் மாதேவிக்கும் பிறந்தவன். சோழர் வரலாற்றில் ராஜராஜன் அரியணையில் ஏறிய நாள் முதல் அடுத்த 100 ஆண்டுகள் என்பவை சோழ மன்னர் பரம்பரையினரின் பொற்காலம் என கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தமது சோழர்கள் எனும் நூலில் குறிப்பிடுகின்றார். ராஜராஜனின் முதலாம் மகன் ராஜேந்திரன் தன் ஆட்சிக் காலத்தில், சோழ ராஜ்ஜியத்தை இலங்கை மட்டுமன்றி சுவர்ணபூமியாகிய கடாரத்தையும் கைப்பற்றி சோழர்களின் ராஜ்ஜியத்தை விரிவாக்கினான்.

ராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பெயர் பெற்றவன் என்பது இவனுக்கு அமைந்த தனிச்சிறப்பு. இவனது போர் பற்றிய வெற்றிச் செய்திகளை தெளிவாகக் கூறும் செப்பேடு திருவாலங்காட்டுச் செப்பேடு.

பாண்டிய மன்னர்களும். பல்லவ மன்னர்களும் தாம் பிறருக்கு அளித்த தானங்களைப் பற்றிய ஆவணக்குறிப்புக்களைச் செப்பேடுகளில் பொறித்தனர். அதில் தமது முன்னோர் வரலாற்றினையும் எழுத வைத்தனர். அந்த வகையில் சோழப்பாரம்பரியத்தில், தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து அதனை விளக்கும் மெய்க்கீர்த்திகளைத் தமிழில் செய்திக்கு முன் தொடக்கத்தில் கல்வெட்டுக்களில் பொறிக்கும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியவன் ராஜராஜன். ராஜராஜனின் அதே முறையையே ஏனைய பிற சோழ மன்னர்களும் தமது கல்வெட்டுக்களில் பின்பற்றினர். இந்த மெய்க்கீர்த்திகள் வரலாற்றுச் செய்திகளையும் அக்காலத்தில் அம்மன்னனின் ஆட்சியில் நிகழ்ந்த போர் பற்றிய செய்தியையும் உட்படுத்திய வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இவையே இன்று இம்மன்னர்களின் காலத்தில் நிகழ்ந்த முக்கிய அரசியல் மற்றும் போர் தொடர்பான செய்திகளை ஆராய்ந்து அறிய உதவுவனவாக உள்ளன.

ராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த படைபெடுப்பு போர் நிகழ்வுகள் பற்றி சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. ஈழத்தைக் கைப்பற்றிய ராஜராஜன் சிவனுக்கு அங்கு ஒரு கற்றளியை அமைத்தான். பொலன்னறுவை நகரில் இன்றும் இக்கோயில் இருக்கின்றது. ராஜராஜனின் அரசியல் நிர்வாகத்திறன் இன்றும் வரலாற்றறிஞர்களால் சிறப்பித்துக் கூறப்படுகின்றது.

நிலவரியை ஏற்படுத்தி, அதற்காக நாடெங்கிலும் நிலங்களை அளந்து , நிலத்திற்கேற்ப வரி அமைத்து நிர்வாகத்தை நடத்தினான். நிர்வாகத்தை வலுவாக்கி, மத்திய அரசின் பிரதிநிதிகளை மேற்பார்வைக்காக அமைத்து கிராம சபைகளை அமைத்தான், தனது நிலப்படையையும், கடற்படையையும் வலுவாக்கினான்.

இந்தப்பதிவில்

  • கோயிலில் உள்ள வட்டெழுத்துக்கள், தமிழ் எழுத்துக்கள்.. 
  • ராஜராஜ பாண்டியமண்டலம் என ராஜராஜன் தான் வெற்றி கொண்ட பகுதிக்குப் பெயர் சூட்டி பாண்டி நாட்டு மக்கள் நன்கறிந்த வட்டெழுத்திலேயே தனது கோயிலின் கல்வெட்டுக்களை அமைந்த விபரங்கள், அதன் காரணம் 
  • அந்தணர்களுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுத்து அவர்கள் அந்த நிலத்தினை வரிகளுடனோ அல்லது வரிகளே இல்லாமல் அதனை அனுபவிக்கலாம் என்ற வகையில் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் 
  • ஒரே காலகட்டத்தில் இரண்டு எழுத்துருக்கள் மக்கள் புழக்கத்தில் இருந்தமைக்கான காரணம் 
  • வட்டெழுத்து கல்வெட்டுக்களைத் தமிழ் எழுத்தில் படியெடுத்து சிதிலமடைந்த கோயிலின் தகவலை புதுப்பித்து தமிழ் கல்வெட்டுக்களைச் செதுக்கிய செய்தி 
  • வட்டெழுத்தின் தொடர்ச்சியாக மலையாள லிபியின் பரிணாம வளர்ச்சி 
  • சிற்பங்கள் உருவாக்கப்படும் அறிவியல் 
  • சோழவந்தான் என்ற ஊரின் பெயர்க்காரணம் 

..
இப்படிப்பட்ட தகவல்கள் வழங்கப்படுகின்றன.

ஜப்பானில் நடைபெற்ற பனிச்சிற்ப கண்காட்சியில் உலக அளவில் 2ம் இடத்தைப் பிடித்த ஒரே இந்தியர். இலங்கையில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கிடையேயான கண்காட்சியில் தம் கலைத்திறனுக்காக முதல் இடத்தைப் பிடித்தார்..
எழுத்தாளர், கவிஞர், ஓவியர் சிற்பி, பேராசிரியர்..இந்தியா முழுதும் கோயில்கள், கலைக்கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த பெருமைக்குரியவராகிய ஓவியர் சந்துரு அவர்களும், தமிழக தொல்லியல் துறையின் கல்வெட்டியல் அறிஞர் டாக்டர். பத்மாவதி அவர்களும், பாண்டிய நாட்டில் ராஜராஜன் அமைத்த இக்கோயிலைப் பற்றிய பல செய்திகளை இப்பதிவில் வழங்குகின்றனர்.



விழியப் பதிவைக் காண:  ​ 
யூடியூபில் காண:   

இப்பதிவினைச் செய்வதில் உதவிகளை வழங்கிய முன்னாள் நெல்லை மாவட்ட ஆட்சியர் டாக்டர். கருணாகரன், சகோதரர் விஜய், நெல்லை மாவட்ட அரசு தாசில்தார், திரு.கௌதம சன்னா  ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

திருச்சி திருஆனைக்கா - சிவப்புச்சேலை தாய்தெய்வ வழிபாடு

வணக்கம்


​திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவிலாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர்.  தேவார திருப்பதிகங்களைப் பாடிய அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரோடு அருணகிரிநாதர், தாயுமானவர்,   ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புடன் விளங்கும் கோயில் இது. இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது என்றும் சைவ சமயத்தைப் பின்பற்றுவோரால் வணங்கப்படுகின்றது.

இன்று முக்கிய சிவாலயங்களில் ஒன்றாக அறியப்படும் இக்கோயில் தாய்தெய்வ வழிபாட்டுக் கோயிலாக இருந்த கோயில்களில் ஒன்று என்பதற்கான சில சான்றுகள் இக்கோயிலில் கிடைக்கின்றன. இக்கோயிலில் அமைந்திருக்கும் அம்பிகைப்பற்றிய பழமையான செய்திகள் இன்று நமக்குக் கிடைப்பது அரிதாகிவிட்ட போதிலும் இக்கோயிலில் இன்றும் தொடரும் ஒரு சடங்கு சிவப்புச்சேலை மதிய பூசை. இப்பூசை இக்கோயில்  தாய்தெய்வக் கோயில் என்பதை வலியுறுத்தும் வண்ணம் அமைந்திருக்கின்றது.

இதனை வலியுறுத்தும் கருத்துக்களை தனது தெய்வம் என்பதோர்.. என்ற நூலில் முன் வைக்கின்றார் பேரா.முனைவர்.தொ.பரமசிவன் அவர்கள்.

தமிழ்நாட்டுத் தாய்த்தெய்வம் பற்றிய குறிப்புகள் பெரும்பாலும் இலக்கியங்களில் இருந்துதான் நமக்குக் கிடைக்கின்றன. வடக்கு நோக்கி அமர்ந்திருத்தல், கையில் ஆயுதம் ஏந்தியிருத்தல், தலையில் பெரும்பாலும் அக்கினி (தீச்சுவாலை) மகுடம் கொண்டிருத்தல், கழுத்தில் காறையும் பொட்டும் அணிந்திருத்தல், நிமிர்ந்த முகம் ஆகியவை தாய்த் தெய்வத்தின் தனி அடையாளங்களாகும். வழிபாட்டு முறைகளில் பொங்கலும் முளைப்பாரியும் சாமியாட்டமும் இரத்தப் பலியும் தாய்த்தெய்வத்தை அடையாளம் காட்டும் தனிக்கூறுகளாகும்.

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு தாய்த்தெய்வம் திருஆனைக்கா அகிலாண்டேசுவரி ஆகும். இக்கோயில் மதிற் சுவர்களில், இக்கோயிலில் தன் தலையைத் தானே அரிந்து (நவகண்டம்) கொடுக்கும் வழக்கம் இருப்பதைக் காட்டும் சிற்பச் சான்றுகள் உள்ளன. (இவ்வகைச் சான்றுகள் தொல்லெச்சங்களாகத் தமிழ்நாட்டில் பல கோயில்களில் காணக்கிடைக்கின்றன) இக்கோயிலில் நண்பகல் ஒரு வேளையில் ஆண் பூசாரி சேலையைத் தன் உடம்பில் சுற்றிக் கொண்டு தான் பெண்ணாக மாறியதாகப் பாவனை செய்து கொண்டு  பூசை செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதன் பொருள் இக்கோயில், ஒரு காலத்தில் நரபலி பெறும் உக்கிரமான தாய்த்தெய்வக் கோயிலாகத் தோன்றியிருக்க வேண்டும் என்பதுதான். இக்கோயிலை வைதீகமயப்படுத்தி பிற்காலத்தில் தந்தை தெய்வக் கோயிலாக ஆக்கியுள்ளார்கள். வைதீகமயப்படுத்தும் முறைகளில் ஒன்று ஸ்ரீஸக்கர பிரதிஷ்டை செய்தல் (தெய்வத்தின் அடங்கா சினத்தைக் குறைக்கும் மந்திரங்களைச் செப்புத்தகட்டில் எழுதி தலைவாசலில் பதித்தல்) ஆகும்.  
- தொ.பரமசிவன்



இப்பதிவினைச் செய்வதில் உதவிய பேரா.சூசை, பேரா.முனைவர்.விஜயராணி  ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

இனி கவலையின்றி கடலை சாப்பிடலாம்

இனி கவலையின்றி கடலை சாப்பிடலாம்

சிலருக்கு நிலக்கடலை சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்னை தலைதூக்கும். இந்தச் சிக்கலுக்கு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தீர்வு கண்டு பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முர்டாக் சிறுவர் ஆய்வுமைய (Murdoch Children's Research Institute) விஞ்ஞானிகள். புரோபயாடிக் என்றழைக்கப்படும் நமக்கு நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகளைக் கொண்டும், நமது நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்டுவதன் மூலமும் (probiotic with peanut oral immunotherapy- - PPOIT) இந்த ஒவ்வாமை பிரச்னையை நிரந்தரமாகச் சரிசெய்ய முடியும் என்பதை நிறுவியுள்ளனர்.

அபிராமி அம்மன் கோவில் கொலு மண்டபம் (திண்டுக்கல்) நவராத்திரி சிறப்புகள்

                                              திண்டுக்கல் மாநகருக்கே  சிறப்பு சேர்க்கும்  அபிராமி அம்மன் கோவிலுக்கு நவராத்திரியின் போது சென்றிருந்தோம். நவராத்திரி ஒன்பது நாளும்  பாட்டு கச்சேரி, வீணை கச்சேரி, நாட்டியம் என பலவித நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி விழா பக்தர்களை கவர்ந்திழுத்தது. பல வருடங்களாக திண்டுக்கல்லின் மையப்பகுதியான கடை வீதியில் அபிராமி அம்மன் காளஹத்திஸ்வரருடன் அருள் பாலிக்கிறார். இக்கோயில் சமீபத்தில்தான் அதே இடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.


                                                   கொலு மண்டபத்தில் நடராஜர் 

                                                   கோவிலில் நாயன்மார்கள் வரிசைக்கு பக்கமாக உள்ள இடத்தில் இந்த வருடம் கொலு மண்டபம் அலங்கரிக்கப்பட்டது. அழகிய நடராஜருக்கு தனியாக மேடை அமைக்கப்பட்டு அருள் பாலிக்கிறார் .


                                             கலைமகள் அலங்காரத்தில் அம்மன் 

                                                            இருபுறமும் கொலு படிக்கட்டுகளுக்கு நடுவே அம்மன் வீணா அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்து ஞான நெறியை நம்மில் ஊட்டுகிறார்.


                                                                கொலு அலங்காரம் 

                                                              கொலு படிக்கட்டுகளில் திருப்பதி ஏழுமலையான் ஆரம்பித்து வரிசையாக பகவான் விஷ்னுவின் அவதார சொரூபங்களும்,  சிவ லிங்கமும், அம்பிகைகளும் அருள் காட்சியருளிகின்றனர்.


                                                   கொலு அலங்காரம் காட்சி -2



                                                            கொலு படிக்கட்டுகளுக்கு கீழே நாட்டிய பொம்மைகள், பூரண கும்பம், காய்கறிகள் என அழகு செய்யப்பட்டுள்ளன.


                                                   கொலு அலங்காரம் காட்சி -3

                                                                       கொலு படிக்கட்டுகளுக்கு இடப்புறத்தே அம்மன், நந்தி தேவர் முதலான விக்ரகங்கள் ஒரு சிறு மேடையில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. நாங்கள் 4.30 மணிக்கே கோவிலுக்கு சென்றதால், விளக்கு வெளிச்சத்துக்கு முன்னதான கொலு படிக்கட்டுகளையும் சேர்த்து காட்சிக்கு பதிவு செய்தோம்.


                                                    கொலு அலங்காரம் காட்சி -4

                                                             கொலு படிக்கட்டுகளுக்கு இடப்புறம் நந்தி தேவர் முதலான விக்கிரகங்களுக்கு சற்றுத் தள்ளி மற்றைய ஏனைய உயிரினங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


                                                    கொலு அலங்காரம் காட்சி -5

                                                           கொலுவில் வீற்றிருக்கும் அம்மனையும், நடராஜரையும் , கொலுவுக்கு அலங்கரிக்கும் ஐயர்கள்.

                                                     கொலு அலங்காரம் காட்சி -6

                                            சீரியல் பல்புகள் அலங்கார வெளிச்சத்தில் மின்னும் கொலு விக்கிரகங்கள்.

                                                      கொலு அலங்காரம் காட்சி -7

                                                       கொலு அலங்காரம் காட்சி -8

                                                                    வீணை கோலம் 

                                                      கொலு படிக்கட்டுகளுக்கு முன் புறத்தே போடப்பட்டுள்ள வீணை கோலம். இது போல் தினமும் ஒரு கோலம் வரையப்பட்டு கொலுவிற்கு அழகு சேர்த்தது.

                                                                           மாலைகள் 

                                                              அம்மனுக்கு அலங்காரம் செய்ய பல நிற மலர்களால் தொடுக்கப்பட்டு காத்திருக்கும் மாலைகள். 



                                                       கொலு அலங்காரம் காட்சி -9

                                                               இரண்டு கொலு படிக்கட்டுகளுக்கும் நடுவே ராதா கிருஷ்ணரும், சுற்றிலும் சிறிய அளவில் கிருஷ்ணர் மற்ற பொம்மைகளும் அழகாக காட்சிப் படுத்தப்பட்டு பார்த்துக் கொண்டேயிருக்க தூண்டுகிறது. பலரும் கொலுவை பார்த்து ரசித்ததோடு, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டிருந்தனர். 
                                                                     நவராத்திரி முடிந்து பத்தாவது நாள் கோவிலில் நிறைவாக சண்டி ஹோமம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு யாகத்தில் எழும் புகை நம் மீது படுவது சகல நன்மைகளையும் கொண்டு தரும் என்பர்.

                                                                      

                                                          மூன்று தேவியர்கள் 

                                                                அபிராமி அம்மன் கோவிலுக்கு சற்றுத் தள்ளி உள்ள வாசவி மஹாலிலும் கொலு பார்க்க சென்றோம். அங்கு சரஸ்வதி முதலான மூன்று தேவியர்களும் சர்வாலங்காரத்துடன் அருள் காட்சியளித்தனர். அவர்களை வணங்கி விட்டு அருகே பொங்கல், புளியோதரை பிரசாதத்தை வாங்கி சுவைத்து விட்டு வீட்டுக்கு திரும்பினோம்.