Like us on Facebook

செவ்வாய், 28 ஜூலை, 2015

திருமணம் குறித்து அப்துல் கலாம்

திருமணம் குறித்து அப்துல் கலாம் கருத்து கருத்துகள் 0 வாசிக்கப்பட்டது 61 பிரதி மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஜூலை 28,2015, 4:24 PM IST பதிவு செய்த நாள்: செவ்வாய், ஜூலை 28,2015, 4:24 PM IST 1. கலாம் வீடு ராமேசுவரத்தில் அப்துல்கலாம் பிறந்து வளர்ந்த பழைய வீட்டை படத்தில் காணலாம். 2. சிறு குழந்தையுடன் அப்துல் கலாம். 3. குழந்தைகளுடன் கலாம் மும்பையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் அப்துல் கலாம். 4. அண்ணன் மற்றும் குடும்பத்தினருடன் அப்துல் கலாம். அப்துல்கலாம், திருமணமாகாத, தேசத்துக்காக வாழ்க்கையை அர்ப்பரித்த பிரமச்சாரி என்பது எல்லோருக்கும் தெரியும். திருமணம் செய்து கொள்ளாததற்கு அவர் சொன்ன பதில்:- ’ ”திருமணம் குறித்து என்னை நோக்கி 50 ஆண்டுகளாக கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் என் திருமணத்தை பற்றி கேட்ட கேள்விகள் கணக்கில் அடங்காதவை. நான் ஒரு கூட்டு குடும்பத்தில் பிறந்தவன். எனது குடும்பம் பல தலைமுறையாக இருந்து கொண்டு இருக்கிறது. நிறைய வாரிசுகள் இருக்கிறார்கள். அவ்வளவு பெரிய குடும்பத்தில் இருந்து ஒருவர் கல்யாணம் ஆகாமல் இருப்பது பெரிய கேள்விக்குரிய விஷயமில்லை”. என்று கூறினார். 5. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீணை வாசிப்பதிலும் கை தேர்ந்தவர். 6. கலாம் ரசனை ஜனாதிபதியாக இருந்தபோது, ஜனாதிபதி மாளிகையில் உள்ள மொகலாய தோட்டத்தில் பூக்களின் அழகை ரசித்தபடி அப்துல் கலாம் உலவிய காட்சி. 7. பேராசிரியருடன் கலாம் அப்துல்கலாம் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், நாட்டின் ஜனாதிபதியாகவும் மிகஉயர்ந்த பதவிகளில் இருந்தபோதிலும், தனது ஆசிரியர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். கடந்த 18–ந்தேதி திண்டுக்கல் வந்த அவர், அங்கு தனது பேராசிரியர் சின்னதுரையை சந்தித்து பேசினார். அப்போது பேராசிரியரை கைத்தாங்கலாக கலாம் அழைத்துவந்த காட்சி. செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் நேசம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவரிடமும் அன்பாக பழகும் பண்பாளர். அவருக்கு செருப்பு தைக்கும் தொழிலாளியும் தோழராக இருந்திருக்கிறார். திருவனந்தபுரம் அருகே காந்தாரியம்மன் கோவில் பகுதியில் செருப்பு தைப்பவர் ஜார்ஜ். அவரிடம் அப்துல்கலாம் நேசமுடன் பழகி வந்தார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு ஒருமுறை திருவனந்தபுரத்துக்கு அப்துல்கலாம் வந்தார். அப்போது அவருக்கு ஜார்ஜ் ஞாபகம் வந்தது. அவருடைய அங்க அடையாளங்களை கூறி, அவர் எங்கிருந்தாலும் உடனே அழைத்து வருமாறு டி.ஐ.ஜி. பத்மகுமாரிடம் அப்துல் கலாம் கேட்டுக்கொண்டார். உடனே போலீசார் அழுக்கு உடையுடன் இருந்த ஜார்ஜை தேடி கண்டுபிடித்து ஆளுநர் மாளிகைக்கு அழைத்து வந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகும் தன்னை ஞாபகம் வைத்து அழைத்து வரும்படி கூறிய அப்துல் கலாமை பார்த்ததும் ஜார்ஜ் மனம் நெகிழ்ந்து போனார். அவரிடம் அப்துல்கலாம் கேட்ட முதல் கேள்வி: ’சாப்பிட்டீங்களா?’ என்பதுதான். தன்னுடன் பழகியவர்களிடம் எப்போதும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் அப்துல் கலாம். மண்டேலாவுடன் கலாம் தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுடன் அப்துல் கலாம். ‘பாரத ரத்னா’ விருது பெற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று காலமானார். மேகலாயா மாநிலத்தில் கல்லூரி விழாவில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணம் அடைந்தார். கலாம் பதவி ஏற்பு 25–7–2002 அன்று ஜனாதிபதியாக அப்துல் கலாம் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது எடுத்த படம். கலாம்–பி.முகர்ஜி - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் அப்துல் கலாம். 13. கலாம்–ஒபாமா கடந்த ஜனவரி மாதம் டெல்லி வந்திருந்தபோது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை, அப்துல் கலாம் சந்தித்த காட்சி. மோடி–கலாம் - பிரதமர் நரேந்திர மோடியுடன் அப்துல் கலாம். 15. சோனியாவுடன் கலாம் - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் அப்துல் கலாம். 16. ஜெயலலிதாவுடன் கலாம் - முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுடன் அப்துல் கலாம்.

Related Posts:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக